Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை!

Featured Replies

ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உள்பட 36 பேர் விடுதலை!

 

புதுடெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா உள்பட 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
 

Sreesanth,%20Chavan%20ankit%20Ajay%20Cha

6வது ஐபிஎல் போட்டியில், லஞ்சம் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட ஓவரில் ரன்களை வழங்க சம்மதம் தெரிவித்த குற்றச்சாட்டுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோர் கடந்த மே 16ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். மேலும், 11 சூதாட்டத் தரகர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது.

இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா மற்றும் அங்கீத் சவாண் உள்பட 36 பேரை விடுதலை செய்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

குற்றச்சாட்டுகளை காவல்துறையால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறிய நீதிமன்றம், 36 பேர் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளது.

அஜித் சண்டிலா

இந்நிலையில் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து அஜித் சண்டிலா கூறுகையில், ''ஐ.பி.எல் சூதாட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. என் மீது சூதாட்ட வழக்கு தொடரப்பட்டது மோசமான கனவு'' என்றார்.

ஸ்ரீசாந்த்

ஸ்ரீசாந்த் கூறுகையில், ''என் மீதான குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், கிரிக்கெட் பயிற்சியை மீண்டும் தொடங்க விருப்பமாக இருக்கிறேன். அதற்கு பி.சி.சி.ஐ அனுமதி அளிக்கும் என்றும் நம்புகிறேன்'' என்றார்.

அங்கீத் சவான்

அங்கீத் சவாண், ''ஐ.பி.எல் வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவால் ஏற்கனவே இருந்த பதற்றமும், அதிருப்தியும் முடிவுக்கு வந்திருக்கிறது. மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்குவேன்'' என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=50068

 

  • தொடங்கியவர்

ஸ்ரீசாந்த், சவான் மீதான ஆயுள் தடை நீடிக்கும்: பிசிசிஐ

 
ஸ்ரீசாந்த். | படம்: ஏ.பி.
AP2013 ஸ்ரீசாந்த். | படம்: ஏ.பி.

2013-ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கிலிருந்து ஸ்ரீசாந்த், சந்திலா, சவான் ஆகியோர் விடுவிக்கப்பட்டதையடுத்து பிசிசிஐ ஆயுள் தடை குறித்து திட்டவட்டமான கருத்தை வெளியிட்டுள்ளது.

ஸ்ரீசாந்த் உடனடியாக கிரிக்கெட்டுக்குட் திரும்புவேன் என்று தீர்ப்புக்குப் பிறகு உற்சாகமாகக் கூறினாலும் அவர் மற்றும் சவான் மீதான ஆயுள் தடை மீதான முடிவு சிறிது காலத்துக்கு எடுக்கப்படாது என்றே தெரிகிறது.

இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:

"குற்ற நடைமுறைகள் மீதான நீதிமன்ற தீர்ப்பு பிசிசிஐயின் தனிப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை பாதிக்காது. பிசிசிஐ இது குறித்து மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கையில் மாற்றமிருக்காது" என்று கூறியுள்ளது.

ஸ்ரீசாந்த், சவான் மீதான ஆயுள் தடை இன்னும் சிலகாலம் நீடிக்கும் என்றே இப்போதைக்கு தெரிகிறது. சந்திலா மீதான ஒழுங்கு கமிட்டி விசாரணை நிலுவையில் உள்ளது.

மஹாராஷ்டிர மாநில அரசின் ஆர்கனைஸ்டு கிரைம் பிரிவில் இவர்கள் மீது டெல்லி போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்தக் குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் போது நீக்கமற, ஐயத்துக்கிடமின்றி குற்றங்களை நிரூபிக்கும் சாட்சியங்கள் தேவை, இதை டெல்லி போலீஸ் செய்ய தவறிவிட்டது. ஆகவே விசாரணை நீதிமன்றம் இவர்களுக்கு விடுதலை அளித்துள்ளது.

ஆனால் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் குற்றச்சாட்டுகள் மீதான சமூக விளைவுகளை எதிர்கொண்டாக வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/ஸ்ரீசாந்த்-சவான்-மீதான-ஆயுள்-தடை-நீடிக்கும்-பிசிசிஐ/article7464641.ece

  • தொடங்கியவர்

''கூகுளில் என்னைத் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் வருவேன் ''!- ஸ்ரீசாந்த் வேதனை

 

ன் மகள் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் என்னை உணரவேண்டும். ஒரு தீவிரவாதியாக என்னை அடையாளம் கண்டு கொள்ள கூடாது என்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

sree.jpg

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. நேற்று மாலை 4.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மதியமே நீதிமன்ற வளாகத்துக்க ஸ்ரீசாந்த் வந்து விட்டார். கறுப்பு நிற சட்டை அணிந்து சாந்தமே உருவாக நீதிமன்றத்தில் அவர் அமர்ந்திருந்தார்.

மாலையில் நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா, இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று தெரிவித்த போது ஸ்ரீசாந்த் மனம் உடைந்து போய் அழத் தொடங்கி விட்டார். முகத்தை கையால் முடிக்கொண்டு குலு குலுங்கி ஸ்ரீசாந்த் அழுவதை பார்த்த இதே போல குற்றச்சாட்டுக்குள்ளான அங்கித் சவானும், அஜீத் சண்டிலாவும் ஸ்ரீசாந்திடம் வந்து ஆறுதல் வார்த்தைகள் கூறினர்.தொடர்ந்து ஸ்ரீசாந்தின் நண்பர்கள் அவருக்கு வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

sahnt.jpg

தீர்ப்புக்கு பின் ஸ்ரீசாந்த் கூறுகையில்,'' எனக்கு தேவதை பிறந்த நேரத்தில் இந்த நல்ல தீர்ப்பு வந்துள்ளது. ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் என்று கூகுளில் தேடினால் தாவுத் இப்ராஹிமுடன் சேர்ந்து எனது படமும் வரும். இதனை கண்டு நான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எனது மகள் வளரும் போது கூகுளில் என்னை தேடினால் ஒரு கிரிக்கெட் வீரராகத்தான் அறிய வேண்டும். ஒரு தீவிரவாதியாக என்னை அவள் அறிந்து கொள்ள கூடாது .

தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்து விட்டேன் . பல நேரங்களில் என்னை கிரிக்கெட் மைதானங்களுக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர். அவமதித்துள்ளனர், அவமானப்படுத்தியுள்ளனர்.  கடந்த 2 வருடங்கள் என் வாழ்க்கையில் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை .இந்திய அணிக்காக மீண்டும் விளையாட ஆசைப்படுகிறேன். அதற்கான அனுமதியை பி.சி.சி.ஐ அளிக்க வேண்டும். ''  என்றார்.

bcci%281%29.jpg

இந்த தீர்ப்பு வந்த பிறகு பி.சி.சி.ஐ துணைத் தலைவரும் கேரள கிரிக்கெட் சங்கத் தலைவருமான டி. சி.மேத்யூ கூறுகையில், ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்க பி.சி.சி.ஐ.யிடம் வலியுறுத்துவேன் என்றார்.கேரள ரஞ்சி அணியின் பயிற்சியாளர் பாலச்சந்திரன், ஸ்ரீசாந்தை திறந்த மனதுடன் வரவேற்கிறேன் என கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=50078

  • தொடங்கியவர்

''காதலும் நம்பிக்கையும்தான்அவரை திருமணம் செய்ய வைத்தது ''!- அங்கித் சவானின் மனைவி

 

ங்களுக்கு நல்ல காலம் பொறந்துடுச்சு என்று சூதாட்ட விவகாரத்தில் சிக்கிய அங்கித் சவானின் மனைவி தெரிவித்துள்ளார்.

ankeeth.jpg

ஐ.பி.எல்.  சூதாட்டத்தில் சிக்கிய அங்கித் சவான் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு  ஜுன் 2ஆம் தேதி தனது நீண்ட கால தோழியான நேகாவை அவர் திருமணம் செய்தார். சிறையில் இருந்து வெளியே வந்துதான் அவர் நேகாவை திருமணம் செய்தார். கடந்த  இரு வருடங்களான அங்கித் சவானின் குடும்பம் சமூகத்தில் இக்கட்டான சூழலை சந்தித்து வந்த நிலையில்தான் பாட்டியாலா நீதிமன்றம் அவரை சூதாட்டத்தில் இருந்து விடுவித்தது.

anki.jpg

தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அங்கித் சவானின் மனைவி நேகா, ''தற்போதுதான் எங்களுக்கு  நல்ல காலம் பிறந்துள்ளது. எல்லா கஷ்டங்களும் தீர்ந்து விட்டது. இனிமேல் நாங்கள் சாதாரண வாழ்க்கையை வாழ்வோம். கடவுளை நம்பினோம். தினமும் இந்த கஷ்டத்தில் இருந்து எங்களை விடுவித்து விடு என்று வேண்டுவோம். அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடவேண்டும். கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து விட்டாலேயே அங்கித் சகஜமாகி விடுவார்'' என்றார்.

இக்கட்டான தருணத்தில் அங்கித் சவானை திருமணம் செய்ய எடுத்த முடிவு குறித்து அவர் கூறுகையில், ''காதலும் நம்பிக்கையும்தான் என்னை இந்த முடிவுஎடுக்க வைத்தது'' என்றார். கடந்த 10 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். அவர் தப்பு செய்திருக்கமாட்டார் என்று நான் தீர்க்கமாக நம்பினேன்'' என்றார்.

அங்கித் விடுவிக்கப்பட்ட செய்தி வெளிவந்ததும் நேகா சுற்றியிருந்தவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

http://www.vikatan.com/news/article.php?aid=50086

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.