Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து- 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் சரணடைய வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி!!

Featured Replies

தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து- 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் சரணடைய வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி!!
 
 
சென்னை: பிஎஸ்என்எல் சட்ட விரோத இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ரத்து செய்துள்ளது. அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் தயாநிதி மாறன் சரணடையவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தயாநிதி மாறன் சி.பி.ஐ.யால் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
 
சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் (700 இணைப்புகள்) வைத்திருந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்ட புகார் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணை செய்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லியில் உள்ள தலைமையகத்தில் ஆஜராகுமாறு தயாநிதி மாறனுக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.

 

 இதையடுத்து, தன்னை சிபிஐ கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி தயாநிதி மாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரை ஆறு வார காலத்துக்கு கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 30-ஆம் தேதி உத்தரவிட்டது. அப்போது, விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைக்காவிட்டால் மீண்டும் சிபிஐ முறையிடலாம் எனவும் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, தயாநிதி மாறனிடம் கடந்த ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

 

அப்போது அவர் அளித்த விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று சிபிஐ தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து தயாநிதி மாறனைக் கைது செய்து காவலில் வைத்து விசாரிக்கும் வாய்ப்பை சிபிஐ பரிசீலித்து வருகிறது. அதற்கு ஏதுவாக, தயாநிதி மாறனுக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதி மாறன் தரப்பு வழக்கறிஞர்கள், தயாநிதி மாறன் 300-க்கும் மேற்பட்ட இணைப்புகளை வைத்திருக்கவில்லை என்றும், ஒரே ஒரு இணைப்பை மட்டுமே அவர் வைத்திருந்தாகவும் கூறினர்.

 

இதுதவிர, சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக இணைப்புகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டியதற்கான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்றும் தெரிவித்தனர். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் பொது மேலாளர் பெயரில் நூற்றுக்கணக்கான இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்திய தயாநிதி மாறனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான் பல உண்மைகள் தெரியவரும் என்றும், எனவே, மனுதாரரின் இடைக்கால முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுத் தரப்பு வலியுறுத்தியது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைத்தியநாதன் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் எனக் கூறியிருந்தார். இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன், தயாநிதி மாறனுக்கு அளிக்கப்பட்டிருந்த முன் ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் தயாநிதி மாறன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐ.யிடம் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தயாநிதியின் முன் ஜாமீன் ரத்தான உத்தரவு நகல் இன்று மாலைக்குள் சி.பி.ஐ.க்கு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் இந்த வழக்கில் தயாநிதி மாறன் கைது செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தயாநிதி மாறனின் முன் ஜாமீன் ரத்து- 3 நாட்களுக்குள் சி.பி.ஐயிடம் சரணடைய வேண்டும்: ஹைகோர்ட் அதிரடி!!
என்னப்பா!!!!  இந்தப்பெரிய தயாநிதிமாறனை கொள்ளைக்கூட்ட தலைவனை  கூப்பிட்ட மாதிரி கூப்பிடுறாங்கள்? :grin:
  • தொடங்கியவர்

முன்ஜாமீன் ரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மனு

 
 
தயாநிதி மாறன் (நடுவில்) | கோப்புப் படம்: வி.சுதர்சன்
தயாநிதி மாறன் (நடுவில்) | கோப்புப் படம்: வி.சுதர்சன்

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தனக்கு வழங்கியிருந்த இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு முன்னர் மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மாறனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. எனவே, மாறன் இடைக்கால ஜாமீன் ரத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இந்த மனு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) பி.எஸ்.என்.எல். தயாநிதி மாறனுக்கு வழங்கியிருந்த இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அவரை 3 நாட்களில் சிபிஐயிடம் சரணடைய உத்தரவிட்டது.

வழக்கு பின்னணி:

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தயா நிதி மாறனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்து தயாநிதி மாறனுக்கு 6 வார காலத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, வழக்கின் புலன் விசாரணை அதிகாரி ராஜேஷ் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் திங்கள்கிழமை தீர்ப்பை கூறுவதாக தெரிவித்தார். அதன்படி, நீதிபதி வைத்தியநாதன் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

‘‘மனுதாரர், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் மினி தொலைபேசி இணைப் பகங்களை சட்டவிரோதமாக மனு தாரர் நிறுவியுள்ளார். இதன்மூலம், அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில் கூறியுள்ளார்.

இதனால் அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப் படுகிறது. மனுதாரர் சரணடைய அவகாசம் வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, மனுதாரர் சரணடைய 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. வரும் 13-ம் தேதி மாலை 4.30 மணிக்குள் மனுதாரர் சரணடைய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு வழங்கியிருந்த இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தயாநிதி மாறன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

http://tamil.thehindu.com/india/முன்ஜாமீன்-ரத்துக்கு-எதிராக-உச்ச-நீதிமன்றத்தில்-தயாநிதி-மனு/article7525618.ece?homepage=true

  • தொடங்கியவர்
தப்பினார் தயாநிதி மாறன்...செப்.14 வரை சி.பி.ஐ.கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!!
 
 
டெல்லி: சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அடுத்த மாதம் 14-ந் தேதி வரை சி.பி.ஐ.கைது செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தற்காலிகமாக தப்பியிருக்கிறார் தயாநிதி மாறன்.
 
700க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் மூலம் சட்டவிரோதமாக இணைப்பகத்தில் தன் வீட்டில் வைத்திருந்தார் தயாநிதி மாறன் என்பது சி.பி.ஐ. வழக்கு. இந்த சட்டவிரோத தொலைபேசி இணைப்பகங்கள் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன் நடத்தும் சன் டிவி குழுமம் ஆதாயம் அடைந்தது என்பதும் குற்றச்சாட்டு.

 

இந்த வழக்கில் தயாநிதி மாறனுக்கு 6 வார இடைக்கால முன் ஜாமீன் வழங்கியிருந்தது சென்னை உயர்நீதிமன்றம். ஆனால் சி.பி.ஐ. விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காத காரணத்தால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. முறையிட்டது. இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தயாநிதி மாறனுக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்தது;

அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. முன் சரணடையவும் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தயாநிதி மாறன் மனு உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தமது மனுவை அவசரமாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் டி.எஸ். தாக்கூர், வி. கோபால கௌடா, ஆர். பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அபிஷேக் மனு சிங்வி கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, தயாநிதி மாறனை செப்டம்பர் 14-ந் தேதி வரை சி.பி.ஐ.கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

  • தொடங்கியவர்
ரூ.1 கோடி போன் பில் பெண்டிங்குக்காக தயாநிதியை கைது செய்தாக வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
 
 
 டெல்லி: ரூ. 1 கோடி போன் பில் பெண்டிங்குக்காக முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறனை கைது செய்துதான் ஆக வேண்டுமா என்று உச்சநீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. சட்டவிரோதமான தமது வீட்டில் தொலைபேசி இணைப்பகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் ஏற்படுத்தியிருந்தார்; இதன் மூலம் தமது சகோதரர் கலாநிதியின் சன் டிவி குழுமம் ஆதாயம் அடைந்தது என்பது சி.பி.ஐ. குற்றச்சாட்டு. இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் ரூ.1 கோடி அளவுக்கு தயாநிதி மாறனால் இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.
 
மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு தயாநிதி மாறன் ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்தது. இதை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் தயாநிதி மாறனுக்கு அளித்த 6 வார இடைக்கால ஜாமீனை ரத்து செய்தது. அத்துடன் 3 நாட்களுக்குள் சி.பி.ஐ. முன் தயாநிதி சரணடையவும் உத்தரவிட்டது. 
 
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் இன்று விசாரணை நடத்தியது. அப்போது தயாநிதி மாறன் தரப்பில், சி.பி.ஐ.யின் முதல் தகவல் அறிக்கையின் படி ரூ1 கோடியே 20 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. அந்தத் தொகையை நாங்கள் செலுத்த தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.
 
இதனைத் தொடர்ந்து நீதிபதி தாக்கூர் எழுப்பிய கேள்விகள்:
 
ரூ.1 கோடி தொலைபேசி கட்டணத்தை பாக்கி வைத்த காரணத்தாக ஒருவரை கைது செய்ய வேண்டுமா?
 
2013ஆம் ஆண்டு இந்த வழக்கில் எப்.ஐ.ஆர். போடப்பட்டு இதுவரை யாரும் ஏன் கைது செய்யப்படவில்லை?
 
கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
 
உத்தரப்பிரதேசத்தில் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் ரூ800 கோடி பொதுமக்கள் பணத்தை ஊழல் செய்திருக்கிறார்கள்.. அதில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
 
ஆனால் ரூ.1 கோடி போன் பில் பெண்டிங்குக்காக ஒருவரை கைது செய்ய துடிக்கிறீர்களே?
 
சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பு அமைத்திருந்தால் அது தொடர்பாக விசாரணை நடத்துங்கள்..
 
பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் விசாரணை நடத்துங்கள்.. தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி கண்டறியுங்கள்..
 
எதற்காக தயாநிதி மாறனை கைது செய்ய வேண்டும்?
 
தயாநிதியை கைது செய்வது சி.பி.ஐ.க்கு கவுரவ பிரச்சனையா? ஒரு வழக்கின் விசாரணையில் முன்னேற்றத்தை உருவாக்க கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமே தவிர..அரசியல் பழிவாங்கல் விளையாட்டுகளுக்கெல்லாம் கைது நடவடிக்கை கூடாது...
 
தயாநிதியை கைது செய்ய வேண்டும் என்பதில் அரசியல் பழிவாங்கல் இருக்கிறதா? தயாநிதி மாறனை கைது செய்தாக வேண்டும் என்பதற்கு சி.பி.ஐ. தெரிவிக்கும் ஆதாரங்கள் போதுமானதாக இல்லை.
 
இது தொடர்பாக 2 வாரத்துக்குள் சி.பி.ஐ. பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டம்பர் 14-ந் தேதி நடைபெறும். அதுவரை தயாநிதி மாறனை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி தாக்கூர் கேள்வி எழுப்பி உத்தரவு பிறப்பித்தார்.

Read more at: http://tamil.oneindia.com/news/india/sc-stays-hc-order-cancelling-dayanidhi-maran-s-bail-233179.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.