Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

7 தமிழரை ஏன் விடுதலை செய்யக் கூடாது? மத்திய அரசின் வாதம் தெளிவில்லை - உச்சநீதிமன்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 தமிழரை ஏன் விடுதலை செய்யக் கூடாது? மத்திய அரசின் வாதம் தெளிவில்லை - உச்சநீதிமன்றம்
 
sc.jpg
 
டெல்லி : "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது ?" என்பதற்கான வாதங்கள் மத்திய அரசிடம் தெளிவாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி (முருகனின் மனைவி), ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்திருந்தது.
 
இந்த மனு மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிஃபுல்லா, பினாகி சந்திர கோஷ், அபய் மனோகர் சாப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஆஜராகி வாதிட்டு வருகிறார். இன்று மத்திய அரசின் வாதம் நடைபெற்றது. அப்போது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான வாதங்களை மத்திய அரசு தெளிவாக விளக்கவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை நாளைக்கு (புதன்கிழமை) ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது? என்பதற்கான வாதங்கள் மத்திய அரசிடம் தெளிவாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது.

தமிழக அரசின் முடிவையே மத்திய அரசு எதிர்ப்பது எப்படி என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு

AUG 11, 2015 | 16:33by இந்தியச் செய்தியாளர்in செய்திகள்

murugan-santhan-aruvuராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்குத் தொடர்பாக இந்திய மத்திய அரசிடம் சரமாரியாக கேள்விகளை  எழுப்பியுள்ள இந்திய உச்சநீதிமன்றம், 7 பேரை ஏன் விடுவிக்கக் கூடாது என்பதற்கான மத்திய அரசின் வாதங்கள் தெளிவாக இல்லை என்றும் கூறியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்யும் முடிவை எடுத்துள்ளது.

இந்தநிலையில் அவர்களை விடுவிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லையென மத்திய அரசு கருதுகிறதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அப்படி தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லையென்று கருதினால் அதனை தமிழ்நாடு அரசுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்த கருத்தை தமிழ்நாடு அரசிடம் தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்தை அணுகியது ஏன் எனவும், உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வு கேள்வி எழுப்பியது.

மேலும் மாநில அரசுகளின் உத்தரவை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த வழக்கில் வாதிட்ட, இந்திய மத்திய அரசின் சட்டவாளர், ரஞ்சித் குமார் தமது அதிகாரத்தை பயன்படுத்துவதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக உள்ளதாக கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு செயற்படவில்லை என்றும், தமது அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மத்திய அரசு தயாராக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் மத்திய அரசு சட்டவாளர் நாளைக்குள் வாதத்தை முடிக்க வேண்டும் என்றும், வாதத்தை தொடர்ந்து நீடிக்க கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, இந்த வழக்கில் இன்று முருகன் தரப்பில் முன்னிலையான, சட்டவாளர் ராம் ஜெத்மலானி, ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தனது வாதத்தை முன் வைத்தார்.

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததுடன் உச்சநீதிமன்றத்தின் கடமை முடிந்து விட்டது. ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது பற்றி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் உள்ளன.

தமிழ்நாடு சிறைத்துறை விதிமுறைகளின்படி தான் 7 பேரையும் விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று ராம் ஜெத்மலானி வாதிட்டார்.

இந்த வாதங்களை அடுத்து. வழக்கை நாளைக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/08/11/news/8616

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் இந்திய மத்திய அரசின் வாதங்கள் பிசுபிசுப்பு

     ....

மேலும் மாநில அரசுகளின் உத்தரவை தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லையென்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

    ....

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததுடன் உச்சநீதிமன்றத்தின் கடமை முடிந்து விட்டது.  ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பது பற்றி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான விதிமுறைகள் உள்ளன.

தமிழ்நாடு சிறைத்துறை விதிமுறைகளின்படி தான் 7 பேரையும் விடுவிப்பது குறித்து மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று ராம் ஜெத்மலானி வாதிட்டார்.

....

http://www.puthinappalakai.net/2015/08/11/news/8616

நல்ல கேள்வியும்பதிலும்! :):grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.