Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைந்த சுற்றுக்காவல் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு.

Featured Replies

இணைந்த சுற்றுக்காவல் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு.

இலங்கை-இந்திய கடல் எல்லைகளில் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்திய அரசு நிராகரித்துள்ளதாக தெரிகிறது.

இந்தியாவுக்கு சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக புதுடில்லியின் முக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய கடற்படை தமது கடல் எல்லைகளை வழமைபோல் கண்காணிக்கும். ஆயினும் சிறிலங்கா அரசுடன் இணைந்து கடல் கண்காணிப்புக்களையும் சுற்றுக்காவல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.

அத்துடன் தாக்குதல் ஆயுதங்களை சிறிலங்காவுக்கு வழங்க மறுத்துள்ள இந்திய அரசு, தற்பாதுகாப்பிற்கான ஆயுதங்களை வழங்குவதற்கு இணங்கியுள்ளது.

மேலும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இராணுவ தீர்வை நாடவேண்டாம் என்றும் அதிகாரப்பகிர்வின் மூலமான தீர்வுப் பொதியொன்றை மிகவும் விரைவாக முன்வைத்து அந்த அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் இந்தியப் பிரதமரால் மகிந்தவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.puthinam.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாக்குதல் ஆயுதம் தற்காப்பு ஆயுதம் இரண்டுக்கும் வித்தியாசம் என்னெண்டு இந்த புலிகேசிக்கே விளங்குதில்ல. யாராவது விளக்குவீங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாக்குதல் ஆயுதம் தற்காப்பு ஆயுதம் இரண்டுக்கும் வித்தியாசம் என்னெண்டு இந்த புலிகேசிக்கே விளங்குதில்ல. யாராவது விளக்குவீங்களா?

அமெரிக்காவிற்கும் ஈராக்கிற்கும் இடையேயான வித்தியாசம் போன்று.

தாக்குதல் ஆயுதம் தற்காப்பு ஆயுதம் இரண்டுக்கும் வித்தியாசம் என்னெண்டு இந்த புலிகேசிக்கே விளங்குதில்ல. யாராவது விளக்குவீங்களா?

காதில பூ சுத்துவது( மூட்டை மூட்டையாக), முக்கியமா தமிழ்நாட்டு தமிழரின் காதுகலில்.

எனக்கு தெரிந்து ஒரு வித்தியாசமும் இல்லை, என்ன ஆயுதத்தை குடுத்தாலும் ஆமிக்காரன் பெடியள் அடிக்கேக்க போட்டுட்டுத்தான் ஓடுவான் ;)

:o:o தலைவர் ஒரு தடவை அடிச்சா 1000 தடவை அடிச்ச மாதிரி....இனி வந்தா மவுன துன்ட கானோம் துனியை கானோம் கதைதான்....ககககக :lol::lol::lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆயுதங்களை பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் மகிழ்ச்சியடைகிறதோ இல்லையோ இயக்கம் கட்டாயமாக மகிழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கலாம்.. அப்பதான் ஆயுதங்களை பறிச்சு தமிழீழ இராணுவத்தை கட்டியெழுப்பலாம்.. பெரிய ஆயுதங்களை தமிழீழத்திற்குள் கொண்டுவர ஒரே வழி இதுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரிப்பத்திரிகை இப்படிச் சொல்கிறது

இலங்கைக்கு இராணுவ உதவி கிடையாது இந்திய மத்திய அரசு உறுதி

இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி வழங்காது என உறுதியுடன் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு ஐந்து நாள் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்தியாவின் பல அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.

இந்திய இலங்கை கடற்பரப்பில் கூட்டு ரோந்து நடவடிக்கையில் இந்திய இணக்கம் தெரிவிக்க மறுத்துள்ளது. அத்துடன் ராணுவ உதவிகள் வழங்க மாட்டாது எனவும் தெரிவித்துள்ளது.

என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எதுவித இராணுவ உதவிகளையும் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்க வேண்டாம் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று இந்திய பிரதமரை சந்தித்த போது இலங்கை இனப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்ப்பட்டது.

தமிழருக்கு அதிகார பகிர்வு தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி அது டிசெம்பர் மாத இறுதியில் தயாராகி விடும் என தெரித்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்திய இலங்கை பொருளாதார ஒத்துழைப்புகள் அதிகரிப்பு தொடர்பாக ஆராயப்பட்டது.அத்துடன் இந்த சந்திப்பின் போது புதிதாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பவில்லை. ஆனால் அமைதி சூழ்நிலை ஏற்பபட்டு நிரந்தர தீர்வு காணப்பவேண்டும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளதாகவும் இலங்கை பிரச்சினை தொடர்பான தாக்கங்கள் அதிகரித்துள்ளதையடுத்து. சந்திப்பின் முழு விபரங்கள் வெளியிடப்படவில்லை என அந்த செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த சந்திப்பின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் பிராணாப் முகர்ஜி செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் கலந்துக்கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தன்வினை தன்னைச் சுடும்...!

இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அந்த நாட்டு அரசிடம் விடுத்திருந்த முக்கிய கோரிக்கைகளில் ஒன்றான ஆயுத உதவியை வழங்கமுடியாது என்று அவரிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசு அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதிலேயே தாமும் தமது அரசும் அக்கறை கொண்டுள்ளதாக மஹிந்தர் வெளிஉலகத்திற்கு சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டாலும், இராணுவத் தீர்வே அவரதும், அரசினதும் உள்ளக்கிடக்கை என்பது இப்போது வெளிச்சமாகி உள்ளது.

அரசியல் தீர்வு ஒன்றை விரைந்து கண்டு, நாட்டில்சமாதானச் சூழ்நிலையை உருவாக்கி, அதனூடு அதனை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லவேண்டும் என்ற மனமார்ந்த நோக்கும் இலக்கும் இருப்பின் ஆயுதங்களுக்குக் கையேந்த வேண்டிய தேவை ஏது?

இந்தப் பத்தியில் அடிக்கடி சுட்டிக்காட்டப்படுவது போன்று, அரசின் சமாதான முயற்சி என்பது அது போட்டுள்ள போலி வேடம். உலக நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கான கவர்ச்சி வர்ணப் போர்வை என்பது இப்போது நிரூபணமாகி உள்ளது.

இந்தியா போட்ட அழுத்தத்தின் மத்தியிலேயே மஹிந்தர் ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றார் என்பது பரவலான தகவல்.

இங்கு தமிழ்ப் பிரதேசங்களில் நடைபெறும் இராணுவ மோதல்களினாலும் படைத் தரப்புகளின் அடக்குமுறைக் கொலைகளினாலும் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் அயலில் உள்ள தமிழகத்துக்கு அகதிகளாகக் செல்கின்றார்கள்.

2002 ஆம் ஆண்டில் கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர், இந்த வருடத்தில் மட்டும் அப்பாவிப் பொதுமக்கள் உட்பட மூவாயிரம் பேர் கொலையுண்டனர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையிலேயே தமது உயிருக்கு அஞ்சி ஈழத்தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாகப் போய்ச் சேருகின்றனர்.

இது, இந்திய மத்திய அரசுக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்து "புத்திமதி' கூறவேண்டிய தேவையை, நிர்ப்பந்தத்தை உருவாக்கியது. தமிழகத்தில் ஈழத் தமிழர்களின் கொலைகளுக்கு எதிராக எழுந்த உணர்வலைகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் உண்டாகியது.

அதன் விளைவே, ஜனாதிபதி ராஜபக்ஷ அங்கு அழைக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அழைக்கப்பட்டார்.

இராணுவத் தீர்வு காணும் நோக்கத்தைக் கைவிட்டு அரசியல் தீர்வு ஒன்றை நேர்மையுடன் காணுமாறு இடித்துரைப்பதற்கே இவர்கள் இருவரும் அழைக்கப்பட்டனர் என்பதில் வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

ஆனால், மஹிந்தரோ ஏடாகூடமாகச் செயற்பட்டிருக்கிறார். இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிர்மõறாக, அதனிடமே இராணுவத் உதவி ஆயுத உதவி கேட்டிக்கிறார்.

அது மட்டுமன்றி

விடுதலைப் புலிகளின் கடற்படையான கடற்புலிகள் சக்திமிக்க படையாகி விட்டதால், இலங்கைக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்தல் தோன்றியிருப்பதாக பூதாகரமாகக் காட்டி, இந்தியாவின் மனதை வெல்லும் ஒரு தந்திரமான, காய் நகர்த்தலுக்கு ஜனாதிபதி முயன்றிருக்கிறார். இரண்டு நாடுகளும் கூட்டுக் கடல் ரோந்தில் ஈடுபட வேண்டும் என்பதே அந்த யோசனை.

அவரது இரண்டு கோரிக்கைகளையும் இந்திய மத்திய அரசு நிராகரித்து விட்டது. வேண்டுமானால் உயிராபத்து விளைவிக்காத இராணுவ உபகரணங்களை வழங்கலாம் என்று கூறியிருக்கிறது. அது மட்டுமன்றி பிரச்சினைக்கான தீர்வின் உத்தேச அடிப்படை எது என்பதனை விரைவில் அறிவித்து பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வேண் டும் என்றும் இடித்துரைத்திருக்கிறது.

இதற்குப் பதிலளித்த ஜனõதிபதி ராஜபக்ஷ, இம்மாத நடுப் பகுதியில் தீர்வுக்கான யோசனையைத் தமது அரசாங்கத்தால் முன்வைக்க முடியும் என்று பதிலளித்திருக்கிறார்

அந்த யோசனை, இந்தியாவின் பஞ்சாயத்துமுறை தழுவிய ஒற்றையாட்சிக்கு உட்பட்ட கூடுதல் அதிகாரப் பகிர்வாகத் தானிருக்கும்!

உத்தராஞ்சல் மாநிலத்தில் நடைபெற்ற ஆசிய மேயர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்த ""அரிய திட்டம்''அது!

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பொறுத்த வரையில் அவரது "" அரிய திட்டம்'' யானைப் பசிக்குச் சோளம் பொரியாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை! அது வேறு.

கூட்டுக் கடல் ரோந்து யோசனையும் இந்தியாவினால் அடியோடு நிராகரிக்கப்பட்டு விட்டது. இராணுவ உள்நோக்கத்துடனேயே அந்த திட்டம் முன் வைக்கப்பட்டது என்பதனை இந்தியா புரிந்து கொள்ளதிருக்குமா என்ன?

இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் இருந்து அகதிகள் தமிழ் நாட்டுக்குத் தொடர்ந்து சென்று கொண்டிருக்டிகையில், கூட்டுக்கடல் ரோந்து யோசனை மட்டுமன்றி,பாதுகாப்பு ஒப்பந்தம் என்பது குறித்தும் நினைத்தும் பார்க்க முடியாது என்று இந்தியா வெட்டு ஒன்று துண்டு இரண்டாகக் கூறியதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

மொத்தத்தில் இந்தியாவுடனான மஹிந்தாவின் காய் நகர்த்தல்கள் வெற்றி தரவில்லை என்பது ஒரு புறம். அவரது இராணுவ முகமூடி துலக்கமாக சர்வதேசத்துக்கு தெரியும் வாய்ப்பை அவரே உண்டாக்கி விட்டார் என்பது மறுபுறம்.

தமது அரசியல் மற்றும் இராணுவ ஆலோசகர்களின் யோசனைகளை அப்படியே " விழுங்கிக் கொள்வதால்'' ஏற்படக்கூடிய விளைவுகளை இப்போதாவது ஜனாதிபதி புரிந்து கொள்வாரோ, என்னவோ!

தன்வினை தன்னைச் சுடும்...!

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.