Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தாஜூதீனின் மரணத்துக்கு யோசித்த பொறுப்பு: ஜனாதிபதி மாளிகை வாகனமே சென்றது: கடத்தப்பட்டோர் மின்னேரியா முகாமில் : மேர்வின் அம்பலம்

Featured Replies

வஸீம் தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகன் மாலக்க சில்வாவின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா தெரிவித்தார்.marvin-silva-yositha-rajapaksha--Wasim-T

மேலும் அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக எழுதுபவர்கள் கடத்தப்பட்டு மின்னேரியா முகாமில் இடப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

மஹிந்த ராஜபக் ஷ இன்று எதுவுமே தெரியாதது போல் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறார். ஹிட்லரின் ஆட்சியை புத்தகத்தில் படித்துள்ளோம். மஹிந்த அவரது சகோதரர்களான கோத்தபாய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ ஆகியோர் ஒரு புறத்தில் திருடினார்கள். 

மறுபுறத்தில் வெள்ளை வேன் கலாசாரத்தை ஏற்படுத்தினார்கள். அதாவது கதைத்தல் எழுதுதல் உட்பட சகல உரிமைகளையும் பறித்துக்கொண்டார்கள். அவர்களுக்கு எதிராக சுதந்திரமாக எழுதினால் அவர்களை கடத்தி மின்னேரியா முகாமில் ஒப்படைப்பார்கள். இதற்கு நான் இராணுவத்தை குறை கூறவில்லை. மேஜர் திஸ்ஸ என்பவரையே அவர்கள் இதற்காக தேர்ந்தெடுத்திருந்தனர்.

மேலும் எனது மகனை தாக்குவதற்கு திஸ்ஸவை கொண்டு வந்தது. ஜனாதிபதி மாளிகை வாகனம் அதேபோன்று வஸீம் தாஜூதீனுக்கும் வந்தது. ஜனாதிபதி மாளிகைக்கு சொந்தமான வாகனம் என்னுடைய மகனை கடத்தி கொலைசெய்ய முற்பட்டனர். என்றாலும் எனது மகன் அவர்களை தாக்கிவிட்டு தப்பி வந்தார்.

தாஜூதீனும் எனது மகனும் ஒரே பாடசாலையில் படித்தவர்கள். காதல் முரண்பாட்டினால் தான் தாஜூதீன் கொலை செய்யப்பட்டார். அதாவது யோசித்த ராஜபக் ஷ காதலித்து வந்த பெண் பிள்ளையும் தாஜூதீனுடன் நண்பர்களாக பழகி வந்தனர் இவர்களது நட்பில் ஏற்பட்ட சந்தேகத்திலே திஸ்ஸவை  வாடகைக்கு அழைத்து வந்து தாஜூதீனை கொலை செய்தனர். எனவே தாஜூதீனின் மரணத்துக்கும் எனது மகனின் கடத்தலுக்கும் யோசித்த ராஜபக் ஷவே பொறுப்பு கூறவேண்டும். மஹிந்த ராஜபக் ஷ இன்னும் ஐந்து வருடங்கள் இருந்திருந்தால் நாடு அழிந்திருக்கும் என்றார்.

http://www.virakesari.lk/articles/2015/08/15/தாஜூதீனின்-மரணத்துக்கு-யோசித்த-பொறுப்பு-ஜனாதிபதி-மாளிகை-வாகனமே-சென்றது

 

தாஜுதீன் கொலையில் சம்பந்தப்பட்ட பெண் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலங்கள்

[ சனிக்கிழமை, 15 ஓகஸ்ட் 2015, 01:21.06 AM GMT ]
roitha-yasara.jpg
மகிந்தவின் மகனான ரோகிதவின் காதலிகளில் ஒருத்தியும் வசீம் தாஜுதீனின் நெருங்கிய நண்பியுமான யசாரா, வசீம் தாஜு தொடர்பில் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட்டு சில மாதங்களின் பின் தனது நெருங்கிய நண்பியும் அழகுக்கலை நிறுவனம் நடாத்தும் ஒரு யுவதிக்கு தனது மனக்குமுறலை வெளியிட்டிருந்தாள்.

இவள் வெளியிட்ட தகவல்கள் வெளியே வந்தவுடன் குறித்த அழகுக்கலை யுவதியும் ரோகிதவின் முன்னாள் காதலியும் நாட்டை விட்டு கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டனர். அவர்களுக்கு வெளிநாடுகளில் வேறு வேலை கொடுப்பதாகத் தெரிவித்தே அகற்றப்பட்டனர்.

தற்போது ரோகிவின் காதலியின் நெருங்கிய நண்பியான குறித்த அழகுக்கலை யுவதி இத்தாலியில் வசிப்பதாகத் தெரியவருகின்றது. அவள் முன்னர் வெளியிட்ட தகவல்களை சிங்கள இணையத்தளம் முழுமையாக வெளிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோகிதவின் காதலி தெரிவித்த தகவல்கள் அப்படியே தரப்பட்டுள்ளன.

மகிந்தவின் மகன் ரோகித ஒருகாமக் கொடூரன். அவன் என்னைக் காணும் முன் நானும் வசீம் தாஜுதீனும் நல்ல நண்பர்களாக இருந்தோம். ரோகித என்னுடன் தொடர்புபட்டபின் வசீம் தாஜுதீன் என்னை விட்டு விலகிவிட்டார்.

அவர் சிறந்த விளையாட்டு வீரர். ரோகிதவுடன் நான் தொர்பில் இருந்த போது என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி என்னை பாலியல் ரீதியில் பெரும் சித்திரவதை செய்தான். எனது அந்தரங்கங்களை வெறி கொண்டு பல தடவை கடித்த போது நான் அவனது தொடர்பில் இருந்து விலகத் தொடங்கினேன்.

ரகர் விளையாட்டில் வசீம் தாஜுதீன் மிகவும் பிரபலமானவர். அத்துடன் ரோகிதவிடவும் மென்மையான போக்கும் ஆண்மையானவரும் கூட. நகைச்சுவையும் அவருக்கு நன்றாக வரும். ”ரோகித ஒழுங்காக ரகரும் சரியாக விளையாடமாட்டான், பிகரையும் சரியாக கையாளமாட்டான்” என்று எனக்கு சொல்லிச் சிரித்துள்ளான்.

ரோகித ஒருதடவை என்னை கட்டாயப்படுத்தி பாலியலுறவு கொண்ட போது இந்த நகைச்சுவையை நான் ரோகிதவுக்கு சொன்ன போது ரோகித கடும் கோபம் கொண்டு என்னைத் தாக்கினான்.

எனது வயிற்றுப் பகுதியில் தாக்கிய போது நான் மயங்கிவிட்டேன். என்னை அறைக்குள் விட்டுவிட்டு வெளியேறிவிட்டான். அதன் பின்னர் நான் ரோகிதவுடன் கதைக்கவில்லை. அதன் பின்னர் ஒரு வாரம் கழித்து நள்ளிரவில் ரோகிதவிடம் இருந்து அழைப்பு வந்தது.

அந்த அழைப்பை நான் எடுத்த போது யாரோ அலறுவது கேட்டது. அதன் பின்னர் என்னுடன் கதைத்த ரோகித ”உன்ர கள்ளக் காதலனுக்கு என்ன நடக்குது என்று கேள்” என கூறியபடி வசீம் தாஜுதீனை சித்திரவதை செய்யத் தொடங்கினான்.

ரோகிதவுடன் இன்னும் சிலர் இருப்பது எனக்கு தொலைபேசி சத்தங்கள் ஊடாகப் புரிந்தது. வசீம் தாஜுதீனுக்கு நடக்கும் சித்திரவதைகளை நேரடி வர்ணனைகள் போல எனக்கு கூறிக் கொண்டிருந்தான் ரோகித.

நான் அலறினேன். வேண்டாம் விட்டுவிடுங்கள் என கெஞ்சினேன். ஆனால் ரோகித இன்னும் கொலை வெறியாக இருந்தான்.

அதன் பின்னர் வசீம் தாஜுதீனை என்னுடன் கதைக்க வைத்தான். அவன் இரு வார்த்தைகள் கதைப்பதற்கு இடையில் அவனது ஆண்குறி அறுக்கப்பட்டதாக ரோகித தெரிவித்த போது தொலைபேசியில் பெரும் அலறல் சத்தம் கேட்டது. அத்துடன் அந்த உறுப்புக்கு அசிற் ஊற்றுவதாகவும் எனக்குத் தெரிவித்த போது நான் தொலைபேசியை அணைத்துவிட்டு கத்தினேன்.

அதன் பின்னர் நான் நேரிடையாக அன்ரிக்கு (மகிந்தவின் மனைவி )தொலைபேசியில் தொடர்பு எடுத்தேன். ஆனால் என்னுடன் அவர் தொடர்பு கொள்ளவில்லை. ரோகித மீண்டும் மீண்டும் தொலைபேசியில் எனக்கு தொடர்பு எடுத்த போதும் நான் எடுக்கவில்லை.

அதன் பின்னர் எனக்கு ஒரு தகவல் அனுப்பினான். உனது உடம்பை தொட்டு அனுபவித்தவன் தற்போது காருக்குள் கருகிக் கிடக்கிறான் போய்ப் பார்” என்று வந்தது, நான் அப்படியே மயங்கி விட்டேன். அதன் பின்னர் காலையில் எனது நண்பி எனக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து காருக்குள் சடலம் கிடப்பதாகத் தெரிவித்த போது துக்கம் தாளாது அழுதேன்.

இவ்வாறு தனது நெருங்கிய நண்பிக்கு தெரிவித்துள்ளாள் மகிந்த மகன் ரோகிதவின் முன்னாள் காதலி யசாரா!!

http://www.tamilwin.com/show-RUmtyISZSVlr3H.html

 

yasara-01.jpg

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

படுபாவிகள் :shocked:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.