Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

3 இயந்திரங்களுடன் 21 மணி நேரம் எண்ணப்பட்ட பெருந்தொகை ஊழல் பணம்

Featured Replies

3 இயந்திரங்களுடன் 21 மணி நேரம் எண்ணப்பட்ட பெருந்தொகை ஊழல் பணம்

  • பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
    Reuters பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
  • மேலும் தேடுதல் நடைபெறும் எனக் காவல்துறையினர் தகவல்
    Reuters மேலும் தேடுதல் நடைபெறும் எனக் காவல்துறையினர் தகவல்

இந்தியாவில் கொல்கத்தா நகரில் கையூட்டு பெற்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணி முடிக்க 21 மணிநேரம் எடுத்ததாக காவல்துறை கூறுகின்றது

இந்தியாவின் கொல்கத்தா நகரில் கையூட்டு பெற்றார் என்ற குற்றச்சாட்டில் அதிகாரி ஒருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணத்தை 3 இயந்திரங்களுடன் எண்ணி முடிக்க 21 மணிநேரம் எடுத்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

 

கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி அளிக்கும் பொறுப்பில் இருந்த உள்ளூர் கவுன்சில் அதிகாரி ஒருவரிடமிருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த அதிகாரி தனியாக செயல்பட்டிருக்க முடியாது எனவும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

இந்திய ரூபாயில் கைப்பற்றப்பட்டுள்ள இந்தப் பணத்தின் மதிப்பு 3.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவானது என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பணம் மட்டுமன்றி, அந்த அதிகாரியின் வீட்டிலிருந்து தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. அவை வீட்டிலுள்ள ஆசனங்களிலுள்ள பஞ்சுக்கு கீழே, சுவர்கள், குளியல் அறைகள், குளிர்சாதனப் பெட்டிகள், படுக்கைகளின் உள்ளே என பல இடங்களில் இருந்தன என்றும் லஞ்ச ஒழிப்பு போலிசார் தெரிவித்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு மூன்று இயந்திரங்களை அதிகாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தத் தேடுதல் மற்றும் பணம் நடவடிக்கைக்குப் பின்னர் களைத்துப்போன காவல்துறையினர், அந்த அதிகாரி பயன்படுத்திய மற்ற இடங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரை தம்மால் ஒரே தேடுதல் வேட்டையில் கைப்பற்றப்பட்டுள்ள ஊழல் பணத்தில் இதுவே மிகவும் பெரிய தொகை எனவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான வகையில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதியளிப்பதில் ஒரு பெரிய கும்பல் செயல்படுகிறது என்று தாங்கள் சந்தேகிப்பதாகவும், அதை முறியடிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/bbc-tamil/3-இயந்திரங்களுடன்-21-மணி-நேரம்-எண்ணப்பட்ட-பெருந்தொகை-ஊழல்-பணம்/article7547047.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு அரசும் ஐரோப்பிய யூனியன் செய்வது மாதிரி வங்கிகளை மெல்ல மெல்ல தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டுவரவேண்டும். அப்போதுதான் சமதர்ம காற்று  வீசும்.

சட்டப்படி கையில் ஒரு குறிப்பிட்ட தொகையோடு மீதி வங்கியில் வைத்திருக்கும் பணம் மட்டுமே பணமாக கருதப்படூம். மற்றதெல்லாம் குப்பை என்றொரு சட்டம் வருகின்றது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.