Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மேற்குலகின் இலங்கை மீதான ஈடுபாடு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலகின் இலங்கை மீதான ஈடுபாடு.

சீனாவின் மடியில் இருந்து இலங்கை மீட்கப் பட்டு உள்ளது. அண்மைய தேர்தலில் ராஜபக்சே, ஜனநாயக ரீதியில் மண் கவ்வ வைக்க, பின்புலத்தில் மேற்கின் கடும் உழைப்பு இருந்தது அவதானிக்கப் பட்டு உள்ளது.

ராஜபக்சேவின் வெற்றியானது, நாட்டினை மீண்டும் சீனாவின் கைக்கு கொண்டு செல்லும் நிலைமை கொண்டதாக இருந்தாலும், மைத்திரி எனும், அதிகார மையத்தினை சரியாக கையாண்டு அவரது தோல்வி உறுதிப் படுத்தப் பட்டு உள்ளது.

அடுத்து என்ன?

இந்திய நிலைப்பாடு 

இந்தியாவிலும் பார்க்க வேகமாக அமரிக்கா செயல்படுவது தெளிவாக தெரிகின்றது. சிலர் அமெரிக்க ஈடுபாடு, இந்தியாவிற்கு பிடிக்காவிடினும், சீனாவிலும் பார்க்க, அமெரிக்கா, பரவாயில்லை என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ் நாட்டில், அமெரிக்கா, சிங்களவர்களுக்கு சார்பாக நிலை எடுத்து விட்டது என்று குரல்கள் எழுகின்றன.

எனினும் இந்திய, மத்திய அரச நிலைப்பாடானது வழைமை போல தெளிவு இல்லாமல் உள்ளது.

சிங்களவர் நிலைப் பாடு

ஜெனிவாவினை இலக்கு வைத்து, அவசரமாக வெளிநாடு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் மீள் குடி அமர்வு, புனர்வாழ்வு அமைச்சு பதவிகள் நிரப்பப் பட்டு உள்ளன. 

அமெரிக்க உயர் அதிகாரிகள் வந்து போனார்கள். 

உள்நாட்டு விசாரணைக்கு, அமெரிக்காவின் ஆதரவு, ஜெனிவாவில், பெரும் ராஜதந்திர வெற்றி என கொண்டாடுகின்றனர். 

உள்நாட்டு விசாரணைகள் வெளி நாடுகளினால் கண்காணிக்கப் படும் என்பதனை அவர்கள் கவனித்தார்களோ என்னவோ, சில வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப் பட்டு வருகின்றன.

பிரகீத் எக்னலிகொட வழக்கு, இராணுவத்தின் எதிர்ப்பினையும் மீறி, வழக்கு வேகமாக முன்னேருவதனையும், கைதான இராணுவத்தினர் மேல் தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப் பட்டு உள்ளதை கவனிக்க கூடியதாக உள்ளது. 

இது இலங்கை வரலாறில் ஒரு போதும் நிகழாதது. சிங்கள மக்களிடையேயான JVP வன்முறை காலத்து இராணுவ அத்து மீறல்கள் கூட விசாரிக்கப் பட வில்லை என்பது கவனிக்கப் பட வேண்டும்.

விரைவில், வாசிம் தாஜுதீன், ரவிராஜ், லசாந்த, பரராஜசிங்கம் போன்றோர் வழக்குகளும், மூதூர் 17, திருமலை 5 மாணவர் கொலை வழக்குகளும் கிளறப் படலாம்.

அதாவது தமது நீதித்துறை சிறப்பாக இயங்கும் என காட்ட முயல்வார்கள்.

தமிழர் நிலைப்பாடு

புலர் பெயர் அமைப்புகள், உள்நாட்டு விசாரணை ஆதரவு எனும் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு எதிரப்பு தெரிவிகின்றன.

தமிழர் கூட்டமைப்பின் சுமந்திரனோ, உள்நாட்டு விசாரணை ஆயின் வெளி நாட்டு கண்காணிப்பு தேவை என்கிறார்.

தமிழ் மக்கள் என்ன சொல்கிறார்கள்.

மக்களில் பலர் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

உள்நாட்டு விசாரணையோ, வெளிநாட்டு விசாரணையோ இது கிலுகிலுப்பை, நமக்கு பணியாரம் தான் தேவை என்பது பலரது நிலைப்பாடு.

நடந்து முடிந்த கொடுமைக்கு தண்டனை கொடுப்பது வேறு, தமது சிதைந்து போன  வாழ்வினை கட்டி எழுப்புவது வேறு என லண்டன் வந்துள்ள யாழ் பிரபல கோவில் குருக்கள் ஐயா குறிப்பிட்டார். தமிழருக்கு இரண்டாவதே முக்கியமானது இப்போது என்கிறார் அவர்.

முக்கியமாக பலரும் குறிப்பிடுவது, அமெரிக்காவின் ஈடுபாடானது, இந்தியாவினது நம்பகத் தன்மை இல்லா ஈடுபாட்டிலும் பார்க்க நல்லது என்பதனை. அதாவது, தமிழர்களது உரிமையினை அமரிக்காவின் அழுத்தம் பிரயோகிக்கக் கூடிய பலம் மூலமாக உறுதிப் படுத்திக் கொள்ளலாம் என்பதனை.

முன்னரே ஒரு கட்டுரையில், மகிந்தவின் இரும்புப் பிடியில் நாடு இருந்த போது  குறிப்பிட்டிருந்தேன்: ஹாங்காங் கினை சீனாவிடம் இழந்த மேற்குலகு, ஆசியாவில் ஒரு நம்பிகையான பொருளாதார தளம் தேடுகின்றது. 

தைவான் சீனாவின் கையில். சிங்கப்பூர் சீனர்களைப் பெரும் பான்மையாகக் கொண்டது. மலேசியா, இந்தோனேசியா அவர்களது மத நிலைபாடுகளால் மேற்குலக நம்பிக்கைக்கு உகந்தது அல்ல. தாய்லாந்து அரசியல் உறுதிப் பாடு இல்லாத நாடு. 

இந்த தளம் இலங்கை, குறிப்பாக வடக்கு கிழக்கு. காரணம் அந்த பிரதேசங்களின், புலம் பெயர்ந்த மக்கள் பொருளாதார பலம் கொண்ட மேற்குலக பிரசைகள். 

இன்னும் தெளிவாக சொல்லப் போனால், தமது பிரசைகளை, மீள் குடியேற வைத்து அவர்களை நம்புவதும், அவர்களை தம்மை நம்ம வைக்குமாறு நடந்து கொள்வதும் அவர்களது நீண்ட கால நலன்களுக்கு சிறப்பானது.

இது மத்திய கிழக்கில் இஸ்ரேலின் மீதான மேற்குலக நம்பிக்கை போன்றதாக அமையப் போகின்றது. ஏனெனில் இஸ்ரேலின் பெரும்பாலானோர் மேற்குலக பிரசைகள். இதுவே இஸ்ரேல், மேற்குலக தொப்புள் கொடி தொடர்பு. 

எனவே, இந்தியாவின் நம்பிக்கை வைக்க முடியாத மதியஸ்தத்திலும் பார்க்க அமெரிக்காவின் மதியஸ்தத்தில் நம்பிக்கை கொண்டோராக இயங்கி எமது உரிமைகளை வென்றெடுப்பதே உசிலமானதாக படுகின்றது. 

சீன அல்லது இந்திய நிகழ்ச்சி நிரலிலும் பார்க்க, மேற்குலக நிகழ்ச்சி நிரலுடன் எம்மை ஒருங்கிணைப்பதே சிறப்பானது என்பதே எனது கருத்து. 

போர்க் குற்ற விசாரணை? 

உள்நாடோ, வெளிநாடோ, அதை, அந்த கிளுகிளுபையை ஆர்வமாக ஓரத்தில் இருந்து கவனிப்போம்.  

ஆனால் எமக்கு பணியாரம் தான் முக்கியம் என்பதை நினைவில் கொள்வோம்.

யாழுக்காக நாதமுனி

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.