Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் பங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னர் ஒருமுறை ஊடகமொன்றில் ஆங்கில மூலத்தில் வந்திருந்த முள்ளிவாய்க்கால்ப் படுகொலை தொடர்பான கட்டுரை. 

 

சர்வதேச விசாரணைகள் என்பது தேவையில்லை, சாத்தியமற்றது, இதை இந்தியா ஒருபோதுமே அனுமதிக்காது எனப் பல செய்திகள் வந்திருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கட்டுரையை மீண்டும் தூசி தட்டி இங்கே இணைப்பது சாலப் பொறுத்தம் என்று நினைக்கிறேன்.

 

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாகவும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் கொழும்பை விடவும் தில்லியே அதிக திகிலடைந்திருக்கிறது

 

2009 மேயில் இலங்கையில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதன் முழுச் சூத்திரதாரி அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்றால் அது மிகையாகாது. இதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் தனது ராஜதந்திரச் சூழ்ச்சியின் மூலம் தான் புரிந்துவந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தியாவை மவுனிக்கச் செய்ததோடு முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான ரோ சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களை நிரந்தரமாகவே பூட்டி வைக்கச் செய்ததும்தான்.

 

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் தில்லியின் பங்குபற்றிய விபரங்கள் இப்போது வெளிக்கிளம்ப ஆரம்பித்திருந்தாலும் கூடஇலங்கை புரிந்த போர்க்குற்றங்களுக்கெதிரான சர்வதேச மட்டத்தில் கொண்டுவரப்பட்ட  விசாரணைகளை இந்தியா தடுத்தி நிறுத்தியிருக்கிறது. ஆனாலும் வேறு தரப்புக்களிலிருந்து வெளிவரும் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை நோக்கும் போது இந்தியாவினது போரை இலங்கை நடத்தியதாகவே தோன்றுகிறது.

 

நாராயணனும், சிவ் ஷங்கர் மேனனும் சொன்னதற்கேற்ப இலங்கை தனது இறுதிக்கால தாக்குதலை நடத்தியிருந்தாலும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் செய்மதிப் பட ஆதாரங்களைக் காட்டி இந்தியா இலங்கையை மிரட்டிய சம்பவத்தால் கோத்தபாய கடும் சீற்றமமடைந்தது விளங்கிக்கொள்ளக் கூடியதுதான். தனது செய்மதிப் படங்களின் மூலம் புலிகள் உயர்மட்டத் தலமைப் பீடம் பொதுமக்கள் செறிவாகத் தஞ்சமடைந்திருந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலைகொண்டிருப்பதை அறிந்து கொண்ட ரோ, இதை நாராயனன்சிவ் ஷங்கர் மேனன் கூட்டுக்குச் சொல்ல அவர்களும் பொதுமக்கள்  தஞ்சமடைந்திருந்த முள்ளிவாய்கால் " பாதுகாப்புப் பிரதேசம்" மீதான இலங்கைப் படைகளின் இறுதியான தாக்குதலுக்கு உத்தரவிட்டனர்

முள்ளிவாய்க்கால் எனும் பிரதேசம் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியென்பதால், அங்கு நடைபெறப்போகும் எந்தப் போர்க்குற்றங்களும் ஆதாரங்கள் இல்லாமல் மறைக்கப்பட முடியும் என்பது நாராயணன் அவர்களின் தனிப்பட்ட எண்ணகருவாகும். பெருமளவிலான பொதுமக்கள் இழப்புகளைத் தவிர்க்கும் முகமாக தமது இறுதித் தாக்குதலை ஆகஸ்ட் மாதம் வரையிலும் இலங்கையின் ராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா தள்ளிப்போட்டிருந்தாலும்கூட, சோனியாவின் பொம்மைகளான நாராயணனும் - சிவ் ஷங்கர் மேனனும் தாக்குதல் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்ததுடன், அமெரிக்கா தலமையில் முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் பொதுமக்களையும், புலிகளின் தலமையையும் வெளியேற்றும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட முன்னர் அவர்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்றும் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். அதன் விளைவு ஒரு முற்றான இனப்படுகொலைக்கு முன்னுதாரணமாக காட்டக்கூடிய வகையில் தில்லி - கொழும்பு கூட்டுத் திகழ்ந்ததுடன் ஒரு போராட்டத்தை அதன் வேரோடு சாய்க்கும்போது அதனோடிணைந்து ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் அழிப்பையும் சரியென்று வாதிடும் ஒரு புதிய நடைமுறையையும் சொல்லியிருக்கிறது. இனக்கொலைக்கான மொத்தப் பொறுப்பும் கோத்தபாயவுக்குறியதல்ல, அவர் சோனியாவின் போரையே மறைமுகமாக இங்கே நடத்தியிருக்கிறார்.

 

தனது உளவு அமைப்பின் செய்மதிப் படங்களை ஆதாரமாக வைத்து முள்ளிவாய்க்காலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதையிட்டு இந்தியா பிழையான விதத்தில் இலங்கையைக் கேள்வி கேட்கத் தொடங்கியதிலிருந்துநடந்தேறிய இனக்கொலையின் விபரங்கள் மெல்ல வெளிவரத் தொடங்கின. இதனால் கொதிப்படைந்த இலங்கை மேற்கொண்ட அதிரடி நகர்வு இந்தியாவை மவுனிக்கச் செய்ததுடன், போர்க்குற்றங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் இந்தியா மறைக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டது. இது இலங்கையால் இந்தியா மீது மிகவும் வெற்றிகரமாகப் பிரயோகிக்கப்பட்ட ஒரு ராஜதந்திர நகர்வு என்று கணிக்கப்படுகிறது.

இந்திய உளவுப் பிரிவான ரோவின் சவுத் புளொக்கில் இருந்த அதிகாரிகள் செய்மதிப்படங்களின் மூலம் புலிகளின் நகர்வுகளை அவதானித்து போர்முனையிலிருந்த இலங்கை - இந்தியக் கூட்டுபடைகளுக்கு தகவல் வழங்கியதன் மூலம் தமிழ்ப் போராளிகள் மீதான இலங்கைப் படைகளின் வெற்றிக்கு வழிவகுத்தனர். முள்ளிவாய்க்காளில் நடைபெற்ற போர் அழிவுகளின் முழுமையான ஆதாரங்களை செய்மதிமூலம் சேகரிக்கும் நிலமையில் ரோ அன்று இருந்தது. ரோவினால் எடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனக்கொலையின் செய்மதிப் படங்கள் இலங்கைக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதியதால், புலிகளுக்குப் பின்னான காலங்களில் இலங்கையை தம் வழிக்குக் கொண்டுவர அவை உதவக்கூடும் என்று நம்பியது. ஆனால் அதன் எதிர்பார்ப்பிற்கு முற்றும் எதிராகவே அனைத்தும் நடந்தன.

 

இந்தியாவின் இந்த நகர்வினால் கொதிப்படைந்த கோத்தபாய அவர்கள் இலங்கை போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படும் பட்சத்தில் இனக்கொலையில் சவுத் புளொக்கின் ஊடாக இந்தியா வகித்த பங்கு அம்பலமாக்கப்படும் என்று எச்சரித்ததன் மூலம் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்தார். கோத்தபாயவின் திடீர் அச்சுறுத்தலினால் கலங்கிப்போன இந்தியா அதிரடித் திருப்பமாக இலங்கைய சாந்தப்படுத்தும் நோக்கில், அதற்கெதிராக மே 2009 இல் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமைப்பினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்னின்று எதிர்த்து நிர்மூலமாக்கியது. இந்தியாவை நீண்ட காலத்திற்கு தனது கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய முக்கியமான  துரும்புச் சீட்டு இன்று இலங்கையிடம் இருக்கிறது.

 

பரவலான தமிழகத்துத் தமிழர்களின் கோபத்திற்கு மத்தியிலும்கூட, தில்லியை முற்றான மவுனத்திற்குள் வைத்திருந்ததன் மூலம், இலங்கைத் தொடர்ந்தும் தனது இனவழிப்பில் ஆக்ரோஷமாகச் செயற்படவும்இனச் சுத்திகரிப்பை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தவும் வழிசமைத்துக்கொடுத்ததன் மூலம் சவுத் புளொக் தமிழ் நாட்டுத் தமிழரை மேலும் அந்நியப்படுத்தியது. தனது மத்திய அரசின் பங்காளியான தி. மு. கா வை தனது தமிழின எதிர்ப்பு - சிங்கள ஆதரவுக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்க நிர்ப்பந்தித்தன் மூலம் தில்லியானது  " தமிழினக் காவலாளி" எனும் தி.மு. வின் பட்டத்தை சிறுகச் சிறுக அழித்தது. அதுமட்டுமில்லாமல் சி. பி. ஊடாக ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கிளரியதன் மூலம் தி. மு. கவை அது மேலும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

 

இந்தியாவுக்கெதிரான பலமான துரும்புச் சீட்டை இலங்கை வைத்திருந்ததன் மூலம் மேலும் தீவிரப் படுத்தப்பட்ட பன்முக இனவழிப்பிற்கெதிராக இந்தியாவை மவுனிக்கச் செய்தது மட்டுமல்லாமல் வடக்கில் தமிழரின் வாழ்விடங்களிலிருந்து அவர்களை விரட்டியும், கொடுமைப்படுத்தியும்  தான்  நடத்திவரும் முற்றான ராணுவ மயமாக்கலுக்குத் தேவையான நிதியையும் அது தில்லியிடமிருந்து பெற்றுக்கொண்டது. இந்துத்துவ இந்தியாவின் தலைவியான சோனியா காந்தியின் ஆசீருடன் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இந்துக்கோவில்களில் மணியடிக்கக் கூடாது என்று சிங்களப் படைகள் போட்ட கட்டளையை இந்தியாவின் இந்துக்களும் தமிழர்களும் எப்படி நோக்குகிறார்கள் ?

 

இலங்கை புரிந்த போர்க்குற்றங்களுக்கெதிராக சர்வதேசம் செயற்படத் தொடங்கும்போது இனவழிப்பில் இலங்கையின் பங்காளியான இந்தியா செய்த மாபெறும் அரக்கத்தனம் சர்வதேச ரீதியில் அதன் தார்மிக நம்பகத்தனமையை உயர்த்துவதற்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை. . நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறத் துடிக்கும் ஒரு நாடு, இனவழிப்பில் பெயர்போன காட்டுமிராண்டி அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பதும், அது செய்த இனவழிப்பிற்கான செய்மதி ஆதாரங்களை மறைத்துவைத்து, இனக்கொலை நடந்தேறியபோது மவுனித்திருந்ததும் எப்படி சாத்தியம்? இந்தியாவின் இந்தச் செய்கை குற்றத்தின்பாலானது. உலகின் ஏனைய மனித உரிமை மீறல்களைப் புரியும் நாடுகளின்  செயலினை ஒத்தது. இனவழிப்பின்போது மவுனமாயிருந்ததன் மூலம் "தனது அயல் நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களில் இந்தியா கவனமெடுப்பதில்லை" என்கிற ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கும் அது ஆளானது.

 

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களின் மேல் இனித் தனது போரை ஆரம்பிக்கப்போவதாக இலங்கை வெளிப்படையாக அறிவித்திருப்பதானது அந்நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்திருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தனது தூதுவராலயங்களில் புலநாய்வு அதிகாரிகளை அமர்த்தியிருப்பதன் மூலம், புலம்பெயர் தமிழர்க்கெதிரான புலநாய்வுப் போரையும் அது முடுக்கி விட்டிருக்கிறது. இலங்கையில் விஜயத்தை மேற்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களும் அவர்களது  தாயகத்து உறவுகளும் இந்த புலநாய்வுத் தகவல்களினடிப்படையில் கைதுசெய்யப்பட்டுக் காணாமல்ப் போவதும், கப்பம் கேட்டுக் கடத்தப்படுவதும், சிலவேளைகளில் கொல்லப்படுவதும் நடக்கிறது. அரச ஆதரவு வெள்ளை வான் கும்பல்கள் இந்த கைங்கரியத்தை நடத்தி வருகின்றன. ஊக்கம்பெற்றுவரும் புலம்பெயர் தமிழர்களின் போர்க்குற்ற விசாரணைகளுக்கான  அழைப்பானது இனிமேல்த் தடுக்கமுடியாமல்ப் போகப் போகிறது. உலகிற்கு நண்மை பயக்க வேண்டுமானால் மனித குலத்திற்கெதிரான குற்றங்களைப் புரிந்த இந்தக் கயவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவதோடு, இனிமேல் இவ்வாறான சிறுபான்மையினருக்கெதிரான இனவழிப்புகள் உலகில் வேறெங்கிலும் நடைபெறாவண்ணம் செயல்த்திட்டங்கள் வகுப்பதும் அவசியம்.

 

தில்லி தலமையிலான மனிதவுரிமை மீறல்க் குற்றவாளிகள் 2009 இல் . நா மனிதவுரிமைக் கவுன்சிலின் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான செயற்பாடுகளை முடக்கியிருந்தாலும்கூட, உலகில்  மனிதவுரிமையப் பேணும் பல்வேறு நாடுகள் தம் மக்களில் எவர்க்காவது மனிதவுரிமை மீறல்கள் நடந்திருப்பின் அவற்றை விசாரிக்க ஆவன செய்வது மனதிற்கு அமைதியளிக்கிறது. அக்குற்றங்கள் அந்நாடுகளில் அல்லாது வேறெங்கு நடந்திருப்பினும் கூட அந்நாட்டுச் சட்டங்கள் விசாரணைகளை நடத்துவதற்கு ஆவன செய்கின்றன. அணமையில் மகிந்தவின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக் உரை ரத்துச் செய்யப்பட்டதும், அவருடன் பயணம் செய்த போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரியொருவர் தனி விமானத்தில் தப்பி ஓடியதும் குற்றங்களைப் புரிந்த அரசுகளின் தலைவர்கள் எதிர்நோக்கிவரும் சிக்கல்களைக் காட்டுகிறது. இவை அனைத்தும் தன்னலமின்றிச் செயற்பட்டுவரும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியினால் கிடைத்த பலாபலன்களே அன்றி வேறில்லை. இவர்களின் இந்தச் செயற்பாடுகள் இனவழிப்பிற்கு ஆளான தமது சமூகத்திற்கு நீதி தேடுவதுடன் வேறு சமூகங்களுக்கும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் முன்மாதிரியாக அமைகிறது.

 

சிங்கள இனக்கொலையாளர்கள் தாம் போகுமிடங்களில் எதிர்நோக்கும் அசவுகரியம் அந்நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு நீதி கேட்கும் செயற்பாடுகளின் தீவிரத்தைக் காட்டுகிறது. " கொடிதாங்கிய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் புலிகளால் இனிப் புலம்பெயர் நாடுகளில் திரட்ட முடியுமா? அந்தக் காலம் மலையேறிவிட்டது" என்று டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் மை காயுமுன்னரே இங்கிலாந்தில் 50,000 தமிழர்கள் உணர்வுடன் ஒன்றிணைந்து இனக்கொலையாளர்களை கைதுசெய்யும்படி உரக்கக் கூவியது நடந்து முடிந்திருக்கிறது. அருவருக்கத்தக்க டி. பி. எஸ். ஜெயராஜின் கட்டுரைக்கும் , பிரஸ்ஸல்ஸில் இருக்கும் இலங்கைத் தூதுவரான ரவினாத் ஆரியசிங்க எழுதிய "புலிகளின் பிரச்சாரத்தை முறியடித்தல்" என்ற "டெயிலி நியூஸ்" கட்டுரைக்கும் அதிக வேறுபாடில்லை. இவை இரண்டுமே இலங்கைப் புலநாய்வுப் பிரிவின் அலுவலகத்திலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

 

இவ்வாறான தெருப் பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் வாசகர்களின் சரியான பதிலைப் பெறவும் தவறுவதில்லை. இப்படியான சிங்களப் பத்தி எழுத்தாளர்களின் ஆக்கங்கள் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும் நகைப்பிற்கும் உள்ளாவதோடு, சர்வதேச புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்களின் கடுமையான கண்டணங்களையும் சம்பாதித்துக்கொள்கின்றன.

 

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியப் புலநாய்வு மற்றும் சர்வதேச விவகார மட்டத்தில்  அண்மையில் சில நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் நடந்திருக்கிறது. கடந்த நவம்பர் 17 இல் சென்னையில் நடந்து முடிந்த இந்த அமர்வு ஈழத்தைப் பொறுத்தவரையிலும் எந்தவித முன்னேற்றத்தையும் கொண்டிராதபோதும், சில அதிகாரிகள் ஈழத்தில் நடந்தேறிய இனக்கொலைக்கு தென்னிந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த குறிப்பிட்ட இரு சமூகங்கள் இந்திய வெளியுறவுக்கொள்கையில் கொண்டிருக்கும் செல்வாக்கே காரணம் என்று கருதுகின்றனர். தமது தவறான வழிநடத்தலின் மூலம் சீனாவைத் தமது புறக்கதவு வரை அழைத்து வந்திருக்கும் இவர்கள் இப்போது என்ன செய்யலாம் என்று சிந்திக்கின்றனர். தமது தவறுகளை மறைப்பதற்கு இன்னும் ஏதாவது தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகளின் மூலம் இலங்கையை தம்பக்கம் இழுக்கலாமா என்று பார்க்கின்றனர். இந்தியா ஒருபோதும்  ,நா தலையீட்டை விரும்பப்போவதில்லை. யுத்தக்குற்ற விசாரணைகளை நடத்தவும் விடப்போவதில்லை.. இந்தியா காஷ்மீரில் எதிர்கொள்வதும் இதே குற்றச்சாட்டுக்களைத்தான்.

காஷ்மீரில் தானும் இதேவைகையான குற்றச்சாட்டை எதிர்கொள்வதனால்த்தான் இலங்கை புரிந்த இனக்கொலைக்கு தனது ஆதரவை இந்தியா வழங்கியது என்பது தர்க்கரீதியில் சாத்தியமானதா?? அப்படியானல் முள்ளிவாய்க்காலில் சிங்களம் கொன்றுதள்ளிய ஆயிரமாயிரம் மக்களைப் போல இந்தியாவும் காஷ்மீரில் இனக்கொலை புரிகிறது என்பதை அது ஏற்றுக்கொள்கிறதா? இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் இந்த நியாயப்படுத்தல் நகைப்பிற்கிடமானது. கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் பிராமா செல்லனியைத் தவிர  மற்ற அனைவருமே எதிர்மறையான கருத்துக்களைக் கொண்டவர்கள். " சிறிலங்காவின் ரத்தக் குளியலுக்குப் பின்னால்" என்கிற தலைப்பில் அவர் கடந்த அக்டோபர் 24 இல் மெயின்ஸ்ட்ரீம் வீக்லி" எனும் பத்திரிக்கையில் அருமையான கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். ஆனால் அவர் இன்று அங்கம் வகிக்கும் இந்திய அதிகாரவர்க்கம்தான் இலங்கைக்கு ஆயுத மற்றும் தார்மீக உதவி வழங்கி தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதும் உண்மை. ஆனாலும் அது இறுதியில் இலங்கையிடம் தனது கட்டுப்பாட்டை இழந்து பிடிகொடுத்து மாட்டுப்பட்டதுதான் நடந்தது.

 

1987 இல் இருந்து இந்திய வெளியுறவுக் கொள்கையென்பது நீண்டகால நலன்களின் அடிப்படையிலன்றி அவ்வப்போது ஆட்சிக்கு வரும் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளிலேயே தங்கியிருக்கிறது.  அதில் முக்கியமானது 2004 இல் ஆட்சிக்கு வந்த கட்சித்தலமை ஒரு பழிவாங்கல் நடவடிக்கைக்காக பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரைப் பறித்தது. இது அதுவரையிலும் இருந்துவந்த போலியான  "தலையிடாக் கொள்கை" என்பதிலிருந்து முற்றாக விலகி முற்றான ஈடுபாட்டுடன் நடந்தேறிய இனக்கொலை என்றால் அது மிகையாகாது.

 

அண்மையில் நடந்து முடிந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் சோனியா - ராகுல் கூட்டின் பலவீனத்தைக் காட்டுவதோடு விரைவில் இவர்களின் எதோச்சதிகாரம் தில்லியிலிருந்து அகற்றப்பட்டு தமிழர்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்க்கும் 2004 இற்கு முன்னரான காலத்தை ஒத்த சூழ்நிலை உருவாகி தமிழர்களுக்கு நீதிவழங்குவதற்கு இன்றிருக்கும் பெரும் தடைக்கல் அகலும் என்றும் எதிர்பார்க்கலாம்.

 

கிறவுண்ட் ரிப்போட்டிற்காக வி. எஸ். சுப்ரமணியம்

 

தமிழில் ரகுனாதன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.