Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூது கவ்விய வாழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூது கவ்விய வாழ்வு

By சோம. தர்மசேனன்

First Published : 24 September 2015 01:22 AM IST

அண்மையில் தாய் ஒருத்தி தன் மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றார் என்ற செய்தி வெளி வந்தது. அதனை எளிமையான, சிக்கலற்ற வாழ்வை அமைத்துக்கொண்டுள்ள நம்மில் பலரால் கற்பனை செய்யக்கூட இயலவில்லை. அது எப்படிச் சாத்தியமாகும் என்பதே அதிர்ச்சியடைந்தவர்களின் கேள்வி.
 பெற்ற மகளைக் கொலை செய்தவரின் மனநிலையை, அவரை அதற்கு இட்டுச் சென்ற வாழ்வியல் சிந்தனையைப் புரிந்துகொள்ள முயற்சித்தால் அது எவ்வாறு மனிதனை தன்நிலை இழக்க வைத்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
 

நம் நாட்டில் நமது வாழ்வின் மூல்யங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை நம்மைக் காப்பாற்றி, வழிகாட்டியாகத் திகழ்கிறது. இந்த நம்பிக்கையை, நமக்குள் பொதிந்திருக்கும் பாரம்பரியமும், கலாசாரமும் நமக்குக் கொடுக்கிறது.
 நமது வாழ்வியலுக்கான நம்பிக்கையும், தெளிவும், புரிதலும் வாழையடி வாழையாக நம் முன்னோரிடமிருந்து நம்மிடம் வந்தடைந்துள்ளது.
 அதாவது நாம், அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்று கூறும் வாழ்வை பல ஆயிரம் ஆண்டுகளாகப் பேணி வந்தோம்.

 அறம் சார்ந்து பொருள் தேடுதல். அதனைக் கொண்டு அறம் சார்ந்து இன்பத்தை அடைதல். இவ்வாறு அறம் சார்ந்த செயல்கள் மூலம் நாம் அடையும் வாழ்வுதான் மோட்சம் என்ற பாரம்பரியம் கொண்டவர்கள் நாம்.
 மேலும், மேற்கத்தியத் தாக்கத்தின் விளைவாக "தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' என்ற உலகின் ஒட்டுமொத்த ஜனத்திரளுக்கும் விரோதமான மேற்கத்தியக் கொள்கை, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க நமது மக்களின் மனதில் தப்பிப் பிழைக்க இயலாதோ என்ற அவநம்பிக்கையை விதைத்து விட்டதோ?
 இந்நிலையில், தப்பிப் பிழைப்பதே வாழ்வின் அடிப்படை நோக்கமாக மாறிவிட்ட பிறகு வாழ்வதற்காக செய்யும் எதுவும் தவறாகி விடாது என்று தவறு குறித்த சிந்தனையில் மாற்றத்தை நம்மிடம் அனுமதித்துள்ளோம்.
 குற்ற உணர்ச்சி கொள்ளாமல், வழுவிய பாதையில் செல்வதில் தயக்கமடையாத மனோபாவத்தை, இக்கொள்கை ஒட்டு மொத்த மனித சமுதாயத்திடமும் உருவாக்கியுள்ளது.
 நான், எனது, எனக்கு, தனிப்பட்ட, அந்தரங்கம் என்று நம்மைச் சுற்றியுள்ள உறவுகளைத் தொலைத்துவிட்டு, சுதந்திரம், கட்டற்ற சுதந்திரம், எல்லைகளற்ற சுதந்திரம், பொறுப்பற்ற சுதந்திரம் என்று திரிந்து இன்பம் துய்ப்பதை இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கி விட்டோம்..
 

முறையான வழிவகைகளில் செல்வம் தேட வேண்டும். மேலும், கூடுதலாக திறமையின் பேரில் வசதியாக வாழ்வதற்குக் கொஞ்சம் கூடுதல் செல்வம் தேடலாம். இந்தத் தேடல் அறம் சார்ந்து இருக்க வேண்டும்.
 தேவையுள்ளதோ, இல்லையோ அளவுக்கதிகமான செல்வத்தை வழிவகை பற்றிய அக்கறையின்றி சேர்க்கின்றனர். செல்வம் சார்ந்த செல்வாக்கு அவர்களுக்கு உருவாகி இருப்பதாகவும் நம்பத் தொடங்குகின்றனர்.
 எனவே, செல்வத்தின் மீது மேலும் பற்றுகொள்கின்றனர். இவ்வாறான கட்டுக்கடங்காத செல்வமும், செல்வாக்கும் மனிதனின் கண்களை மறைக்கிறது. செல்வாக்கும் செல்வமும் போதை. அந்தப் போதை உருவாக்கும் மாயை நம் கண்ணைக் கட்டிவிடுகிறது.
 

மேலும், அதே நேரம் இவையனைத்தும் தொலைந்து விடுமோ என்ற நிச்சயமற்ற தன்மையை, சுற்றியுள்ள அனைத்தின் மீதும் அவநம்பிக்கையை, அந்தக் கொள்கை உருவாக்குகிறது.
 இந்நிலையில், அதற்கு ஏதும் குறுக்கீடு வந்தால் அவர்களின் அவநம்பிக்கை வெளிப்பட்டு, பல்வேறு வழிவகைகளில் கட்டமைத்த வாழ்வு தொலைந்து போய் விடுமோ என்று உணர்ச்சிக் குவியலாகி விடுகிறார்.
 இருந்தபோதிலும், வாழ்வு தொலைந்துவிடுமோ என்ற மனநிலையானது தாய்மை உணர்ச்சியைக் கட்டிப்போட்டு விட்டதா என்ன? நம்மால் புரிந்துகொள்ள இயலவில்லையே? நமது பாரம்பரிய கண்ணோட்டத்தினால் இதைப் புரிந்துகொள்ள இயலாது.
 

ஆனால் "தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்' கொள்கை, அதன் குழந்தைகளை எதனையும் செய்ய வைக்கும். அதுதான் தன் வாழ்வு, மகளால் பறிபோய்விடுமோ என்ற பதற்றம், பல்வேறு வழிகளில் அடைந்த இந்த செல்வமும் செல்வாக்கும் பறிபோய்விடுமோ என்ற அவநம்பிக்கை அந்தத் தாயின் கண்களைக் கட்டி, மகளைக் கொலை செய்யவைத்துள்ளது.
 மனிதன் ஒரு பகுத்தறியும் மிருகம் என்றார் சாக்ரட்டீஸ். தற்போது மனிதன் மிருகம் மட்டுமே. பகுத்தறிவு தப்பிப் பிழைக்க மட்டுமே செயல்படுகிறது.
 தகுதியுள்ளவை தப்பிப் பிழைப்பதோடு நில்லாமல் தான் வாழ பிறரை உறிஞ்சுவது தவறில்லை என்றிருந்தது, அடுத்து, தான் வாழ பிறரை அழிப்பது தவறில்லை என்ற மாறி, தற்போது தனக்குப் பிறந்ததைக் கொல்வது தவறில்லை என்ற மனநிலையை உருவாக்கியிருக்கிறது. அதற்கு அந்தக் கொள்கையில் இடமிருக்கிறது.
 

எல்லோருக்கும் நம் வாழ்வில் இடம் உண்டு என்ற சிந்தனை மரபினை நாம் முழுவதுமே இழந்து விட்டோம்.
 சாமர்த்தியமுள்ளவை, தகுதியுள்ளவை மட்டுமே தப்பிப் பிழைக்கும், தன்னை நிலை நிறுத்திக்கொள்ள எதைச் செய்தாலும் நியாயம் என்று உலகம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான மனிதர்களை நம்பவைத்துள்ளது "சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்' கொள்கை.

http://www.dinamani.com/editorial_articles/2015/09/24/சூது-கவ்விய-வாழ்வு/article3044157.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.