Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ் எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

 
பங்களாதேஷ் தொடரிலிருந்து பற் கம்மின்ஸ் வெளியேற்றம்
 
 

article_1443103803-TACummins.jpgஅடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு பயணமாகும் அவுஸ்திரேலிய அணியிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் பற் கம்மின்ஸ் விலகியுள்ளார். மறுபடியும் முதுகுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பாரிய காயம் காரணமாகவே இவர் விலகியுள்ளார்.

இவருக்கு பதிலாக சகலதுறை வீரர் ஜேம்ஸ் போக்னர் அவுஸ்திரேலியக் குழாமில் இடம்பெற்றுள்ளார். போக்னர் இதுவரையில் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிதாக ஏற்பட்டுள்ள காயம் கம்மின்சுக்கு பாரிய பின்னடைவாக காணப்படுகிறது. 2011ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிராக 18 வயதில் டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டபோதும், அதன் பின் முதுகு மற்றும் கால் காயங்களால் அவதிப்படும் கம்மின்ஸ் அதற்கு பிறகு எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

இங்கிலாந்துடான இறுதி ஒருநாள் சர்வதேசப்போட்டியிலேயே பற் கம்மின்ஸ் கீழ் முதுகுப் பகுதியில் நோவை உணர்ந்ததாகவும், அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிய பின் இது தொடர்ந்ததாகவும், புதன்கிழமை (23) மேற்கொள்ளப்பட்ட எம்.ஆர்.ஐ. ஸ்கானில், கீழ் முதுகுப் பகுதியில் உள்ள என்பில் ஆரம்பக்கட்ட முறிவு இருப்பது தெரியவந்ததாக கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் உடற்கூற்று நிபுணர் டேவிட் பீக்லி தெரிவித்தார். இதனால் பங்களாதேஷ் தொடரில் பங்கேற்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் நீண்ட கால மீள் வருகைக்கான செயற்பாடுகளில் உள் நுழைவதாகவும் தெரிவித்தார்.

கம்மின்ஸ், 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும், நவம்பர் 2012, மறுபடியும் தொடர்ச்சியாக ஓகஸ்ட் 2013 இலும் இதே வகையான காயத்தால் பாதிக்கப்பட்டு நீண்ட காலம் போட்டிகளில் பங்கேற்கமுடியாமலிருந்தார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/154994/பங-கள-த-ஷ-த-டர-ல-ர-ந-த-பற-கம-ம-ன-ஸ-வ-ள-ய-ற-றம-#sthash.epdTMhFb.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வங்கதேசப் பயணத்தில் தாமதம்

 

பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்கதேசத்திற்கான தமது பயணத்தை தாமதப்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக வங்கதேசத்திற்கான தமது பயணத்தை தாமதப்படுத்தியுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தெரிவித்துள்ளது.

 

ஆஸ்திரேலிய அணி ஆட உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில், முதலாவது போட்டி அக்டோபர் 9 ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இதற்கான பயிற்சிப் போட்டிகள் இன்னும் ஒரு வாரத்தில் ஆரம்பமாக இருந்ததால், ஆஸி. அணியினர் திங்கட்கிழமை அங்கு செல்லவிருந்தனர்.

இந்த நிலையில், வங்கதேசத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை இனம் கண்டிருப்பதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மாற்றப்பட்ட புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

http://tamil.thehindu.com/bbc-tamil/ஆஸ்திரேலிய-கிரிக்கெட்-அணியின்-வங்கதேசப்-பயணத்தில்-தாமதம்/article7692855.ece

  • தொடங்கியவர்
தொடர் கைவிடப்படுவது ஓரளவு உறுதி
 

article_1443630796-TABCB.jpgபாதுகாப்பு காரணங்களுக்காக அவுஸ்திரேலிய அணியின் பங்களாதேஷுக்கான டெஸ்ட் தொடர் இரத்தாவது ஓரளவுக்கு உறுதியாகியுள்ள நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் வீரர்கள், அவர்களது மாநில அணிகளுக்கான குழாமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இருந்தபோதும் கிரிக்கெட் அவுஸ்திரேலியா இன்றே உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்ற நிலையில், அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள மடடோர் ஒருநாள் தொடருக்கு தயாராகும் வரையில், மாநில குழாம்களுடன் பயிற்சியை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.

பங்களாதேஷில் உள்ள அவுஸ்திரேலியர்களின் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகமிருப்பதாக அவுஸ்திரேலிய அரசாங்கம், கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்கியதையடுத்தே, அட்டவனையின்படி திங்கட்கிழமை (28) புறப்படவிருந்த வீரர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு தலைமையதிகாரி சீன் கரோல், அணி முகாமையாளர் கவின் டோவி, அணியின் பாதுகாப்பு முகாமையாளர் பிராங்க் டிமசி ஆகியோர் பங்களாதேஷுக்கு சென்று அதிகாரிகளையும், பங்களாதேஷின் அவுஸ்திரேலிய  தூதுவரையும் சந்தித்து நிலமைகளை ஆராய்ந்தபோது பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தொடர் பெரும்பாலும் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

எனினும் அதைத் தொடர்ந்து டாக்கா இராஜதந்திர வலயத்தில் இத்தாலியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து நிலைமை மாறியிருப்பதை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைத் தலைவர் நஸ்முல் ஹசன் ஒத்துக்கொண்டுள்ள நிலையிலும், வீரர்கள் மாநில அணிகளுக்கு அனுபப்பட்டுள்ள நிலையிலும், தொடர் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவடைந்துள்ளது. 

- See more at: http://www.tamilmirror.lk/155454#sthash.XgOjoiJV.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.