Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆளுநர் அனுமதிக்கு காத்திருக்கும் வடமாகாண சபை நியதிச் சட்டங்கள்

Featured Replies

ஆளுநர் அனுமதிக்கு காத்திருக்கும் வடமாகாண சபை நியதிச் சட்டங்கள்
ஆளுநர் அனுமதிக்கு காத்திருக்கும் வடமாகாண சபை நியதிச் சட்டங்கள்

வடக்கு மாகாண சபையால் இது வரை நான்கு நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இரண்டு நியதிச் சட்டங்களுக்கு மாத்திரமே ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வடக்கு மாகாண ஆளுநராக பளிகக்கார நியமிக்கப்பட்ட பின்னர் நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்கள் இரண்டுக்குமே இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை.

வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. மாகாணசபை நியதிச் சட்டங்கள் நிறைவேற்றப்படுவதன் ஊடாகவே அதிகாரசபைகள், திணைக்களங்கள் உருவாக்க முடியும். மாகாண சபையால் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதலாவது நியதிச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி நியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம், முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் என்பனவே இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. மூன்று நியதிச் சட்டங்களும் மாகாண சபையில் நிறை வேற்றப்பட்டிருந்தாலும், அப்போதைய ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி நிதி நியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றல் நியதிச் சட்டம் இரண்டுக்கும் அனுமதி வழங்கியிருந்தார். முதலமைச்சர் நிதிய நியதிச் சட்டம் உருவாக்குவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆளுநரால் அனுமதி வழங்கப்பட்டதற்கு அமைய வடக்கு மாகாண வருமான வரித் திணைக்களம் உருவாக்கப்பட்டு செயற்பட ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக பளிகக்கார பதவியேற்ற பின்னர், கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி வடக்கு மாகாண சபையில் வடக்கு மாகாண சுகாதார நியதிச் சட்டமும், ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வடக்கு மாகாண கல்வி நியதிச் சட்டம், வடக்கு மாகாண முன்பள்ளி நியதிச் சட்டம் என்பனவும் நிறைவேற்றப்பட்டிருந்தன.

குறித்த நியதிச் சட்டங்களில் வடக்கு மாகாண சுகாதார நியதிச் சட்டம், வடக்கு மாகாண கல்வி நியதிச் சட்டம் ஆகியவை ஆளுநரின் அனுமதிக்காக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனுப்பி வைக்கப்பட்டி ருந்தது. வடக்கு மாகாண முன்பள்ளி நியதிச் சட்டத்தில் இணைப்புக்கள் சில தேவைப்படுவதால் அவற்றைச் சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களால் குறித்த இணைப்புக்கள் இன்னமும் வழங்கப்படவில்லை என்று அவைத் தலைவர் குறிப்பிட்டார்.

ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட நியதிச் சட்டங்களுக்கு நான்கு மாதங்கள் கடந்தும் ஆளுநர் பளிகக் கார அனுமதி வழங்காமைக்கான காரணம் தொடர்பில், ஆளுநரின் செயலாளர் இளங்கோவனிடம் கேட்ட போது, குறித்த நியதிச் சட்டங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிலுள்ள சில திருத்தங்கள் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் நேரடியாக குறித்த அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து வருகின்றது  என்றார்.      

http://onlineuthayan.com/news/648

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.