Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்க தீர்மானத்தை மேலும் மென்மையாக்க இலங்கை தீவிர முயற்சி

Featured Replies

அமெரிக்க தீர்மானத்தை மேலும் மென்மையாக்க இலங்கை தீவிர முயற்சி
அமெரிக்க தீர்மானத்தை மேலும் மென்மையாக்க இலங்கை தீவிர முயற்சி

இலங்கையில் இறுதிப்போரின் போது இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற் றங்கள் தொடர்பாக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் இறுதி வரைவு இன்று ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், அந்தத் தீர்மானத்தை மேலும் மென்மையாக்க,வலுவிழக்கச் செய்ய இலங்கை அரசு ஜெனிவாவில் நேற்று முதல் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

இதற்காக இலங்கை அரசின் மூத்த இராஜதந்திரிகள் பலர் ஜெனிவாவில் உள்ள அமெரிக்கப் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியான சந்திப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஏற்கனவே கலப்பு நீதிமன்றம் என்ற பதம் அந்த அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டு பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய உள்நாட்டுப் பொறிமுறையை இலங்கை அமைக்க வேண்டும் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதற்கும் மேலதிகமாக மேலும் பல திருத்தங்களை மேற்கொண்டு அதனை மேலும் முன்மையாக இலங்கை தீவிரமாக முயன்று வருவதாக ஜெனிவா அரசியல் வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, அது குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகள் என்பன இன்று புதன்கிழமை மனித உரிமைகள் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

இதில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வழங்கப்பட்ட கலப்பு நீதிமன்றம் உருவாக்கும் பரிந்துரை அடங்கிய 16 பக்கங்களைக் கொண்ட பரிந்துரைகள் அறிக்கையும், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக நிபுணர்களின் 261 பக்கங்களைக் கொண்ட விசாரணை அறிக்கையும் இன்று விவாதத்துக்கு வருகின்றன.

இலங்கை இறுதிப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட  261 பக்கங்களைக் கொண்ட அறிக்கை கடந்த 16 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹுசைன் வெளியிட்டிருந்தார். 

அத்துடன் இந்த விசாரணை அறிக்கையில் இலங்கையில் கண்டறியப்பட்ட மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்காகச் சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பரிந்துரைத்திருந்தார். இது தொடர்பில் 16 பக்கங்களைக் கொண்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையும் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.

இந்த இரண்டு அறிக்கைகளும் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 30 ஆவது அமர்வில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்த விவாதத்தில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கப் பிராந்திய நாடுகளும் விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை இலங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வலியுறுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியன இலங்கைக்குச் சார்பாக வாதாடுமென கூறப்படுகிறது.

அத்துடன் ஐ.நா ஆணையாளரின் பரிந்துரைகளில் இலங்கை நீதித்துறையை வலுப்படுத்தல், சாட்சிகளுக்குப் பாதுகாப்பு வழங்கல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்ற அவசியமான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பங்காளர் நாடுகள் வலியுறுத்தும்.

அத்துடன் பொதுநலவாய நீதிபதிகள் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள்,வழக்கறிஞர்கள் உள்ளடக்கிய இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைக்குப் பரிந்துரைக்கும் அமெரிக்காவின் இறுதித் தீர்மானமும் இன்று மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இந்த இறுதித் தீர்மானத்தில் பல பரிந்துரைகளை நீக்கி பலமிழக்கச் செய்யும் நடவடிக்கையில் இலங்கை, இந்திய இராஜதந்திரிகள் முனைப்புக் காட்டி வருவதாக ஜெனிவாச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் இன்று சமர்ப்பிக்கப்படும் அறிக்கை விவாதத்துக்குப் பின்னர் நாளையே வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற இலங்கை கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருவதாக அந்தத் தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா முன்வைத்துள்ள யோசனையில் சிக்கிக் கொள்ளவேண்டாம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அரசைக் கோரியுள்ளது.

கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மகிந்த ஆதரவு தரப்பின் ஒன்றிணைந்த எதிர்கட்சி  நேற்று ஊடகவியலாளர் மாநாட்டை நேற்று நடத்தியது. இதன்போதே மேற்கொண்ட கோரிக்கையை அவர்கள் முன் வைத்துள்ளனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளதாவது:d

குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு உள்நாட்டு கட்டமைப்பொன்றை உருவாக்கப் போவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளது பொய். உண்மையில், சர்வதேச நீதிபதிகள், வழக்கறிஞர்களைக் கொண்ட குழுவொன்றின் மூலமே சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்படவுள்ளது.

இந்த விசாரணை இலங்கை அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயல். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் இது குறித்து, மக்களின் அனுமதியை பெறுவதற்கு பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்படுவது அவசியமென்று கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினே­ குணவர்த்தன, அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தின் மூலம் இலங்கையின் சுதந்திரம் பறிக்கப்படுமென்று குற்றம்சாட்டினார்.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாகவும் தினே­ குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியக்கூடாது என புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

http://onlineuthayan.com/news/713

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.