Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2017 இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC Champions Trophy போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளின் இறுதிப் பட்டியலை இன்று ICC அறிவித்திருக்கிறது.

Featured Replies

2017 இல் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ICC Champions Trophy போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளின் இறுதிப் பட்டியலை இன்று ICC அறிவித்திருக்கிறது.

செப்டெம்பர் 30 ம் திகதியான இன்றைய நாள் வரையில் தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடித்திருக்கின்ற அணிகள் இதற்கு தேர்வாகியிருக்கின்றன.

மேற்கிந்திய தீவுகள் வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது.

Rank Team Points

1 Australia 127

2 India 115

3 South Africa 110

4 New Zealand 109

5 Sri Lanka 103

6 England 100

7 Bangladesh 96

8 Pakistan 90

9 West Indies 88

10 Ireland  49

11 Zimbabwe 45

12  Afghanistan 41

http://www.icc-cricket.com/news/2015/media-releases/89911/teams-confirmed-for-icc-champions-trophy-2017

  • தொடங்கியவர்

2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: மே.இ.தீவுகள் தகுதி பெறவில்லை

 
2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு வங்கதேசம் தகுதி. மே.இ.தீவுகள் வெளியே...| கோப்புப் படம்.
2017 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு வங்கதேசம் தகுதி. மே.இ.தீவுகள் வெளியே...| கோப்புப் படம்.

2017-ம் ஆண்டு நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் ஒருநாள் போட்டித் தொடருக்கு மேற்கிந்திய அணி தகுதி பெறவில்லை. வங்கதேச அணி தகுதி பெற்றது.

இங்கிலாந்தில் 2017 ஜூன் 1 முதல் 18 வரை நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் 8 அணிகளை ஐசிசி உறுதி செய்தது.

இதில் 2006-ம் ஆண்டுக்குப் பிறகு வங்கதேச அணி தகுதி பெற்றுள்ளது. டாப்-8-லிருந்து மே.இ.தீவுகள் வெளியேறியதால் சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெறவில்லை.

2015 உலகக் கோப்பையில் இங்கிலாந்தை வெளியேற்றி வங்கதேசம் காலிறுதிக்கு தகுதி பெற்றதிலிருந்து அந்த அணி ஒருநாள் போட்டிகளில் கடுமையாக மேம்பாடு அடைந்து ஆட்கொள்ளப்பட வேண்டிய ஒரு சக்தியாக எழுச்சி பெற்றுள்ளது.

2017 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அணிகள் விவரம்: ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் வங்கதேசம்.

முதலில் பாகிஸ்தான் பங்கேற்பதே கடினம் என்றே தெரிந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தரவரிசையில் 9-ம் இடத்துக்கு தாழ்ந்த பாகிஸ்தான் அதன் பிறகு ஜிம்பாப்வே, இலங்கை அணிகளுக்கு எதிராக இழந்த மரியாதையை மீட்டதால் சாம்பியன்ஸ் டிராபிக்குத் தகுதி பெற்றது.

மே.இ.தீவுகள் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் மொத்தம் 15 போட்டிகள் நடைபெறும். 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பிரிவு அளவிலான போட்டிகளில் அந்தந்தப் பிரிவில் டாப் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கு இது சோகமான ஒரு தினமாகும்.

http://tamil.thehindu.com/sports/2017-ஐசிசி-சாம்பியன்ஸ்-டிராபி-கிரிக்கெட்-மேஇதீவுகள்-தகுதி-பெறவில்லை/article7707795.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.