Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை ஒடுக்க அரசு உறுதி "தரகர்கள்' விடயத்திலும் தீர்க்கமான முடிவு.

Featured Replies

விடுதலைப் புலிகளை ஒடுக்க அரசு உறுதி

"தரகர்கள்' விடயத்திலும் தீர்க்கமான முடிவு.

நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிவிப்பு

விடுதலைப் புலி களைப் பூண்டோடு அழிக்கவும், சமா தானத் தூதர்கள் எனக் கூறிக்கொண்டு ஒரு தரப்புக்கு மட் டும் சார்பாகச் செயற்படும் வெளிநாட்டுத் தரகர்கள் விடயத்தில் தீர்க்கமான நடவடிக் கைகளை எடுக்கவும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

பிரதமரும், பிரதிப் பாதுகாப்பு அமைச் சருமான ரட்ணசிறி விக்கிரம நாயக்க, நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக் கீட்டு விவாதத்தில் பேசும்போது இவ் வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து பேசும்போது கூறிய தாவது:

""அரசு பொறுமையின் எல்லையை அடைந்துவிட்டது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களைக் கடுமையாக்கிப் பயங்கரவாதிகளை அடக்கி ஒடுக்க அரசு தீவிரமாகச் சிந்தித்து வருகின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் தடை செய்வது குறித்தும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

நாட்டுக்கு யுத்த நிறுத்தம் தேவையா?

இலங்கையர்கள் எனத் தம்மைக் கூறிக் கொண்டு பயங்கரவாதிகளுக்குத் துணை போகும் சிலர், பயங்கர வாதிகளுக்குத் துணை போகும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு ஆதரவாகப் பேசுவதுடன் அவர்களுக்குத் துணை போகின்றனர். இந்த நாட்டுக்கு யுத்த நிறுத் தம் தேவையா எனச் சிந்தித்துப் பார்க்கின் றோம். இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பயன்படுத்தி சமாதானத் தூதுவர் களாக வெளிநாட்டினர் இந்த நாட்டில் செயற் பட வேண்டுமா எனச் சிந்திக்கின்றோம். ஒரு தரப்புக்கு மாத்திரம் சார்பாகச் செயற்படும் இந்த வெளிநாட்டுச் சக்திகள் எமக்குத் தேவையா?

இலங்கையின் இறைமைக்குப் பங்கம் ஏற்படுத்த எந்த நாட்டுக்கும் உரிமை கிடை யாது. நாம் வறிய நாடு என்பதற்காக வெளிநாடுகளிடம் அடிபணிய மாட்டோம். இரு பது ஆண்டுகளாகப் புலிகள் எம்முடன் விளையாடியது போதும். இவர் களைப் பூண்டோடு ஒழிக்க அரசு ஆலோசித்து வரு கிறது. ஆனால், இந்த நடவடிக்கை தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. விடுதலைப் புலி களின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் அப் பாவித் தமிழ் மக்களை மீட்கும் போராட்ட மாகும்.

ஆயுதங்களைக் கைவிட்டு

பேச்சுக்கு வரவேண்டும்

இந்நாட்டின் அமைதியையும், கௌர வத்தையும் கடந்த 20 வருடங்களாக விடு தலைப் புலிகள் சீர்குலைத்து வருகின்றனர். நாகரிகமடைந்த ஒரு நாட்டில் எவரும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு அர சுக்கு எதிராகச் செயற்பட அனுமதிக்க முடி யாது.

திம்பு முதல் ஜெனிவா வரை நாம் புலி களுடன் பேச்சுகளில் ஈடுபட்டோம். புலி கள் சமாதானம் பேசிக் கொண்டு மறுபுறம் படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். எனவே, புலிகள் தமது வன்முறைகளைக் கைவிட்டு ஆயுதங்களைக் களைந்து விட்டு பேச்சு நடத்த இந்த இறுதிச் சந்தர்ப்பத்திலாவது முன் வர வேண் டும்'' என்றார் பிரதமர்.

www.uthayan.com

நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்காக மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல முடிவுகளை எடுத்து நடைமுறைப்படுத்துவதற்கு சிறிலங்காவில் ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகளுக்கு ஏன் முடியவில்லை. இனப்பிரச்சினை என்று ஒன்று உண்டு என்பதை ஏற்றுக்கொண்டால் அதற்கு நியாயமான தீர்வுத்திட்டம் ஒன்று எப்போதோ வழங்கப்பட்டிருக்கவேண்டும். நாட்டிலுள்ள இதர பிரச்சினைகளைத் தீர்ப்பது போலவே இதுவும் செயல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதைவிட்டு அரசு போரைத் தொடர்வதிலும் அதன் மூலம் தமிழினத்துக்கு அழிவை ஏற்படுத்துவதிலும் தான் அக்கறை காட்டுகிறது. இதை ஒரு மக்கள் பிரச்சினையாகக் காட்டிக்கொண்டு சிங்கள அரசியல்வாதிகள் தமது சொந்தப்பிரச்சினை போன்று செயல்படுகிறார்கள். இனப்பிரச்சினை அரசியல்வாதிகளுக்கும் உயர்நிலை இராணுவ அதிகாரிகளுக்கும் நல்ல வியாபார மூலதனம். இனப்பிரச்சினை இருக்கும்வரை அவர்களின் கல்லாப்பெட்டி நிறைந்தபடிதான் இருக்கும். பயங்கரவாதத்திற்கெதிரான போரை நிகழ்த்துவதாகக் கூறிக்கொண்டு ஆதிக்க வெறிப்போரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நாடுகளின் அணியில் சிறிலங்காவும் ஒட்டிக்கொள்ள துடிக்கிறது. தனது தமிழினவேட்டையை உலகநாடுகள் தட்டிக்கேட்க முடியாதபடி இனஅழிப்புக்கு உலக அங்கீகாரம் கேட்டு மண்டியிட்டு நிற்கிறது. எமது இனத்தின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த அரசியல்வாதிகளையும் ஊடகவியலாளர்களையும் கொன்று குவிக்கிறது. இது தமிழனின் விதியுமல்ல வாழ்க்கையுமல்ல - இந்த நிலை நீடிக்காமல் ஆவன செய்ய அனைத்து தமிழ்மக்களும் ஒன்று சேரவேண்டும்.

:icon_idea: புரட்சி உள்ளம் உள்ளவரை புலிகளை யாரும் வெல்வதில்லை....

மெய்யாய் ஒரு தழிழீழம் மலர கையாய் இருப்பான் நம் தலைவனவன்......

தண்ணீர் கூட அருந்தாமல் விண்ணை அடைந்த எம் தலைவனின் திலீபனைப்பார்....

செந்நீர் ஆடி மகிழ்ந்தபடி எம் தலைவனின் கொள்கைக்காக கண்ணை மூடிய சீலனைப்பார்.....

சாவு வரும் கணம் அறிந்திருந்தும் சரித்திரம் படைத்த மில்லரைப் பார்.....

உறுதியும் உண்மையும் உள்ளவரை புலிகளை யாரும் வெல்வதில்லை.... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.