Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒன்பது படங்களில் இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த ராஜமெளலி- பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

Featured Replies

புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனர் ராஜமெளலி. இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1973 ல் பிறந்தார்.

இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, 2001  இல் வெளியானது. இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றிப் படமாகும்.

Rajamouli.jpg

தமிழில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று இல்லாத காலத்தில், சத்யராஜ் மகன் சிபிராஜ்   நடிப்பில், ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. 

ராஜமெளலியின் இரண்டாவது படம்,  2003 இல் வெளியான இந்தப்படத்திலும்  ஜுனியர் என்டிஆர் தான் கதாநாயகன். சிம்மாத்திரி படம்தான் விஜயகாந்த் நடிப்பில் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. 

2004 இல் ஷை படத்தை இயக்கினார். அடுத்து 2005 இல் பிரபாஸ் நாயகனாக நடித்த சத்ரபதி படத்தை எடுத்தார். இந்தப்படம், இந்தி, மலையாளம்,  வங்காள மொழிகளில் வெளியானது. இந்தப் படத்தைத் தமிழில் எடுக்கவில்லை.

2006 ஆம் ஆண்டு. விக்ரமார்குடு என்ற பெயரில் இவர் இயக்கிய படம்தான்  தமிழில் சிறுத்தை என மீண்டும் படமாக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டு மீண்டும் ஜுனியர் என்.டி.ஆர் நடித்த யமதொங்கா படத்தை இயக்கினார்.  அதன்பின் இவர் இயக்கிய பிரமாண்ட படம் மகதீரா.சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் கதாநாயகனாக நடித்த அந்தப்படம், மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

அவ்வளவு பெரிய பிரமாண்ட படத்தை எடுத்துவிட்டு அது மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் எல்லாக் கதாநாயகர்களும் அவருடைய இயக்கத்தில் நடிக்கத் தயாராக இருந்த நேரத்தில், நகைச்சுவைநடிகர்  சுனிலை வைத்து மரியாதைராமண்ணா என்ற படத்தை எடுத்தார்

 

 
2010 இல் அந்தப்படமும் பெரிய வெற்றி. இங்கு சந்தானம் கதாநாயகானாக நடித்து வெளியான வல்லவனுக்குப்புல்லும் ஆயுதம் , இந்தப்படத்தின் மொழிமாற்றுதான்.
 
2012 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான, நான் ஈ படம் , நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கியதாகும். அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய பாகுபலி படம் பெற்ற மிகப்பெரிய வரவேற்பை எல்லோரும் அறிவர். அந்தப்படத்துக்குப் பிறகு அவரை தமிழ்ப்பட இயக்குநர் போலவே தமிழ் ரசிகர்கள் நினைக்கத்தொடங்கிவிட்டார்கள். 
 
இவருடைய பெரும்பாலான படங்களுக்குக் கதை இவருடைய அப்பா விஜயேந்திர பிரசாத், இசை மரகதமணி,  ஒளிப்பதிவு கே.கே.செந்தில்குமார், படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஆவார்கள். இப்போது பாகுபலி படத்தின் இரண்டாம்பாகத்தை இந்தியாவே எதிர்பார்க்கிறது

 

http://www.vikatan.com/cinema/article.php?aid=53531

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.