Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீருடையணிதல், கொடியேற்றல், ஒன்றுகூடல்,நிதிசேகரித்தல் கூட்டத்திற்கு அழைப்புவிடுதல் தண்டனைக்குரிய குற்றம் அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

சீருடையணிதல், கொடியேற்றல், ஒன்றுகூடல்,நிதிசேகரித்தல் கூட்டத்திற்கு அழைப்புவிடுதல் தண்டனைக்குரிய குற்றம் அரசாங்கம் அறிவிப்பு [Thursday December 07 2006 06:43:42 AM GMT] [யாழ் வாணன்]

அரசாங்கமானது சமாதானத்தை அடைதல் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணுதல் சமூக வாழ்வுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளையும் வழங்கல்களையும் பேணுவதற்கான அதன் கொள்கையுடன் இணைந்த வகையில் எந்தவொரு நபர் அல்லது குழுக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான பரந்த செயல் விளைவுடைய நடவடிக்கைகளை அறிமுகப் படுத்தவுள்ளது என அரசாங்கம் விடுத்துள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தற்போதைய பாதுகாப்பு நிலைமை, பிரிவுக்கான அச்சுறுத்தல், சமாதான செயற்பாடுகளின் முன்னேற்றம் போன்றவற்றை அமைச்சரவை அமைச்சர்கள் மீளாய்வு செய்த இன்றைய (டிசம்பர் 06) அமைச்சரவைக் கூட்டத்தில் பொதுப்பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டம் என்பவற்றின் கீழ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் தனிநபர்கள் மற்றும் குழுக்களினால் மேற்கொள்ளப்படும் பயங்கரவாதம், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளை தடுப்பதற்கான ஒழுங்குவிதிகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும்வகையில் பிரகடனப்படுத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

புதிய ஒழுங்குவிதிகள் நபரொருவர், பல நபர்களைக் கொண்ட ஒரு குழு அல்லது நிறுவனம் பயங்கரவாதம், ஏதாவது குறிப்பான பயங்கரவாத நடவடிக்கை அல்லது ஏதாவது பயங்கரவாதச் செயற்பாட்டுக்குத் துணைபோகக்கூடிய ஏதாவது நடவடிக்கை அல்லது குறிப்பான பயங்கரவாதச் செயற்பாட்டில் ஈடுபடுவதை விட்டும் தடை செய்கிறது.

இந்த ஒழுங்குவிதிகளானது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தீர்மானம் உள்ளிட்ட பயங்கரவாதத்தைத் தடுத்தல் மற்றும் அடக்குதலுடன் தொடர்புடைய சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய சர்வதேச சட்ட கருவிகளினால் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்ட கடப்பாடுகளுக்கு வலுவூட்டி, பயங்கரவாதத்தைத் தடுத்து, அடக்கி அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பதற்கு அதைக் கட்டாயப்படுத்துகிறது.

பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதச் செயற்பாட்டுடன் தொடர்புடைய ஏதாவது சீருடை, உடை, அடையாளம், சின்னம் என்பவற்றை அணிதல், காட்சிக்கு வைத்தல், கொடியேற்றல் அல்லது வைத்திருத்தல் என்பவற்றையும் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடைய கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்தல், ஒன்றுகூடுதல், நடத்துதல் அல்லது பங்கேற்றல் போன்றவற்றையும் பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு அமைப்பின் ஓர் உறுப்பினர் அல்லது அங்கத்தவருக்கு புகலிடமளித்தல், மறைத்துவைத்தல் அல்லது உதவுதல் போன்றவற்றையும் பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஏதாவது செயற்பாட்டில் பங்கேற்றலையும் அவை தடைசெய்கிறது.

கொடுக்கல் வாங்கல்கள் தடை செய்யப்பட்டுள்ளன.புதிய ஒழுங்குவிதிகளின் கீழான தடைகளில் பயங்கரவாதம் அல்லது ஏதாவது பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடையவற்றில் ஈடுபட்டுள்ள எவராவது நபர், குழு, நிறுவனம் உறுப்பினருக்கு பொருள் ரீதியாக அல்லது வேறு வழிகளில் பங்களிப்புச்செய்தல், நன்கொடை வழங்குதல், விற்பனை செய்தல், வாங்குதல், கூலிக்குக் கொடுத்தல், குத்தகைக்கு விடுதல், பெற்றுக்கொள்ளுதல், கிடைக்கப்பெறச் செய்தல், நிதியளித்தல், விநியோகித்தல் அல்லது கடனுக்குக்கொடுத்தல் போன்றனவும் உள்ளடங்குகின்றன.

அமைதியான அரசியல் தீர்வொன்றை விருத்தி செய்தல், பயங்கரவாதத்தை அல்லது குறிப்பான பயங்கரவாதச் செயற்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், சமூக வாழ்க்கைக்கான அத்தியாவசிய சேவைகளையும் வழங்கல்களையும் பராமரித்தல் அல்லது எந்தவொரு இலங்கையராலும் சர்வதேச அரசாங்க அல்லது அரசசார்பற்ற நிறுவனத்தினாலும் வேறு ஏதாவது சட்டரீதியான நோக்கத்திற்காகவும் இந்த நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரியின் எழுத்துமூல அனுமதியுடனும் நல்ல நோக்கத்துடனும் செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு வசதியளிக்கும் நோக்கத்திற்கும் ஒழுங்குவிதிகளின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்களைச் செய்வதற்கு புதிய நடவடிக்øககள் ஏற்பாடு செய்கின்றன.

பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக அறியப்படும் அல்லது ஈடுபட்ட நபரொருவர் அல்லது ஏதாவது குழுவுக்கு தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அல்லது பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஏதாவது தகவல்களை வழங்குவதும் இந்த ஒழுங்குவிதிகளின் கீழ் தடை செய்யப்பட்டவைகளாக உள்ளன. ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட தகுதிவாய்ந்த அதிகாரியொருவரின் கீழ் இந்த ஒழுங்குவிதிகளின் அமுல்படுத்துகை கொண்டுவரப்படும். தகுதிவாய்ந்த அதிகாரியின் தீர்மானமொன்றினால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபருக்கும் அத்தகைய தீர்மானத்திற்கெதிராக அத்தகைய நோக்கத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குரலெழுப்புகை நீதிமன்றமொன்றுக்கு மேன்முறையீடு செய்வதற்கும் இந்த ஒழுங்கு விதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

virakesari.lk

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப்பற்றி நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் இங்கே யாரடைய சின்னம் கொடி யாருக்கு நிதி சேகரித்தல் தண்டனைக்குறியது என்று கூறப்படவில்லையே அத்துடன் சிறிலங்காவில் எந்த அமைப்புக்களும் தடைசெய்யப்படவும் இல்லை.

ஒரு வேளை இவர்கள் விடுதலைப்புலிகளை இவர்கள் கருதுவார்களானால் தப்பித்தவறி ஒரு பேச்சுவார்த்தை என்று வந்து விடுதலைப்புலி உறுப்பினர்னளின் பிரயானத்திர்க்கு விமானப்படை உதவிசெய்தால் படைகளிர்க்கு பொறுப்பாக உள்ள மகிந்த மாத்தையா 10 20 வருடம் kampi எண்ணவேண்டியது தான். :unsure::o:D

Edited by Vasan

இது கருணா குழுவுக்கும் பொருந்துமா??????????????????????????

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 1979 ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. சாதாரணச் சட்டங்களின் படி, இலங்கையில் எவரும் இராணுவம் அல்லது போலீசாரின் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்தால், அது நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது என்றாலும், இந்த பயங்கரவாத தடைச் சட்டம், அத்தகைய வாக்குமூலத்திற்க்கு சட்ட மதிப்பை அளிக்கிறது எனக் கூறுகிறார் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் சட்டத்தரணி கே.எஸ்.இரத்தினவேல். இந்தச் சட்டத்தின் மூலம் போலீசாரோ, இராணுவமோ ஒருவரை துன்பப்படுத்தி, சித்திரவதைச் செய்து ஒருவரிடமிருந்து வாக்குமூலம் பெற வழி வகுக்கும் எனவும் இவர் மேலும் கூறுகிறார். எனவே இந்தச் சட்டம் போலீசாருக்கும் அதிகார வர்கத்தினருக்கும், படையினருக்கும் வலிமையைக் கொடுத்துள்ளது எனக் கூறும் இரத்தினவேல், இது சாதாரண மக்களுக்கு சட்டத்தின் மூலம் கிடைக்கக் கூடியப் பாதுகாப்பை முற்றிலுமாக அழித்தொழித்துவிடும் எனவும் தெரிவிக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.