Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 ஆம் பதிவு - மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம் ....

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவையம்

13-ஆம் பதிவு

நாள்: 19.10.2015

 

     பெருந்தச்சு நிழல் நாள் காட்டியின்படி இவ்வாண்டின் 10-வது முழு நிலவு கடந்த 27.09.2015 அன்று முறை முற்றாமல் தோன்றியது. கவலையோடு எதிர்பார்த்தபடியும் கடந்த ஆண்டைப் போலவும் அது தோற்றது.

     30-ஆம் நாளில் முற்றாமல் 29-ம் நாளில் முற்றிச் சரியாக மாலை 06.15-க்குத் தோன்றியது. அன்று அது ஆடுதலையாகத் தெற்கு நோக்கி விலகிச் சென்ற எல்லையே அந்த வளர்பிறைப் போக்கின் எல்லையாகவும் அமைந்தது.

     முறையான 30-ஆம் நாளில் மாலை 07.15-க்குத் தோன்றிய நிலவு மங்கலாகவும் சிவந்தும் வடக்கில் நன்றாகத் திரும்பியும் தோன்றியது. (அந்த நாளில் மட்டும் நிலவு தனது இயல்பான தொலைவில் இருந்து 24,000 கி.மீ உலக உருண்டையை நோக்கி நெருங்கி வந்ததாகச் செய்திகள் வெளிவந்தன.)

     இவ்வாண்டின் 4-வது முழுநிலவை அதன் முன்னிரவில் அரவு தீண்டியதைப் போல 10-வது முழுநிலவின் விடிகாலையில் அரவு தீண்டியதாகவும் செய்திகள் வெளியாகின. 4-வது முழு நிலவை அரவு தீண்டியதைத் தொடர்ந்து அடுத்த முழுநிலவின் நாள் குறைவுற்றதைப் போல 10-வது முழுநிலவை அரவு தீண்டியபிறகு மீண்டும் ஒருநாள் குறைவுற்று 29 நாள் 28-ஆக அமையுமா? அல்லது 29 நீடிக்குமா? அல்லது 30 நாள் மீளூமா? என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

     தமிழர் மரபில் நிலவை அரவு தீண்டுவதே தவறு என்று செய்திகள் உள்ள நிலையில் ஓராண்டில் இரண்டு முறை அரவு தீண்டப்பட்டுள்ளது உற்று நோக்கத்தக்கது.

 

திருத்த முயற்சி இல்லை:-

     இலக்கியங்கள் குறிப்பிடும் கோத்தொழில் இன்று இல்லை. மாந்த முயற்சி அல்லது வேறு உயிர்களின் முயற்சியால் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறதா என்று தற்போது உறுதி செய்ய இயலாது. பிழை எதனால் நேர்கிறது என்று தெரிந்து கொள்ளவே ஆய்வு தேவைப்படுகிறது. இதில் உடனடியாக எதுவும் நிகழ்ந்துவிடப் போவதில்லை எனினும், அறிவு எனும் பெரு நெருப்பு உண்மையினை நொடியில் விளங்கச் செய்யும் ஆற்றல் உடையது.

     உலகின் எங்கோ ஒரு பகுதியில் யாரோ ஒருவர் உண்மையை உணர்ந்தாலும் அந்தப் புரிதல் அனைத்து உயிர்களுக்கும் நுண்ணறிவுப் புலன்களின் ஊடாகப் பகிர்ந்து கொள்ளப்படும் என்ற நம்பிக்கையைப் புறக்கணிக்க இயலாது.

 

அன்று திருமகள் இன்று தெருமகள்:-

     ஆண்டு வரைவு விளங்கிக் கொள்ளப்பட்ட பழந்தமிழர் மரபில் திருமகள் என்று போற்றப்பட்ட நிலம் இன்று முற்றாகப் பாழ்பட்டது, அறிவும் மழுங்கியது ஆயினும் தமிழ் மழுங்கவில்லை. அதனால் திருமகளை மீட்கத் தமிழே கருவியும் கருவில்லமும் ஆகும் என்று நம்பலாம்.

 

தென்பாண்டியர்களின் நிலையான ஏற்பாடு:

     நிலவுகளை ஒழுங்கு படுத்தும் முயற்சியில் தென்பாண்டியர்களின் நிலையான ஏற்பாடு ஒன்று இன்றும் செயல்பாட்டில் உள்ளதாக இலக்கியச் சான்றுகளின் வழியே நம்பும் நிலை உள்ளது.

     முத்து, சாந்தம், மணி இவற்றின் குளிர்ச்சிக்கு நிகராக தமிழைத் தண் தமிழாகக் காவல் செய்யும் தமிழ் முன்னோர்களின் மொய்ம்புற்ற உயிராற்றல், சில உணர்வுகளைத் தூண்ட வல்லது சில உணர்வுகளை வெளிப்படுத்த வல்லது. சில உணர்வுகளை நுகர வல்லது என்று வகைப்படுத்திட இயலும்.

     அதாவது ஆண்டு வரைவு செய்யும் முன்னோன் ஆகிய அரசனை உள்ளீடு செய்யும் ஆன்றோரது நினைவலைகளும், தென்புலத்தார் ஆற்றலும், அவுணர் கடுவிசையும், சான்றோரின் உற்றறிவும் ஓராண்டின் முதல் முழுநிலவாகிய தைப்பூச முழு நிலவைக் கட்டிக் காப்பாற்றும் நோன்பின் வலிமையுடையன என்று நம்பப் படுகிறது.

     அதனால் தைப்பூச நிலவுக்கு 12 நாள்கள் முன்னதாக அமையும் சதையம் ஆண்டின் முதல்நாள் என்று சத்தியம் செய்து சொல்லலாம்.

     இது சத்தியத்திற்கு கட்டுப்பட்டது என்ற வழக்கு மொழி இது சதையத்திற்குக் கட்டுப்பட்டது என்ற பொருள் உடையதாக ஒரு வேளை இருந்திருக்கலாம்.

 

நாள் காட்டியில் உள்ள புதிய செய்திகள்:

தைத்திங்களின் முழுநிலவு தைப் பூசம் என்ற மக்களின் நம்பிக்கையும்

மாசி முழுநிலவு மாசி மகம் என்ற நம்பிக்கையும்

பங்குனி முழுநிலவு பங்குனி உத்தரம் என்ற நம்பிக்கையும்

சித்திரை முழுநிலவு சித்திரைச் சித்திரை என்ற நம்பிக்கையும்

வைகாசி முழுநிலவு வைகாசி விசாகம் என்ற நம்பிக்கையும்

ஆனி முழுநிலவு ஆனிக் கேட்டை என்ற நம்பிக்கையும்

ஆடி முழுநிலவு ஆடிப் பூராடம் என்ற நம்பிக்கையும்

ஆவணி முழுநிலவு ஆவணித் திருவோணம் என்ற நம்பிக்கையும்

புரட்டாசி முழுநிலவு புரட்டாசி உத்தரட்டாதி என்ற நம்பிக்கையும்

ஐப்பசி முழுநிலவு ஐப்பசி அசுவதி என்ற நம்பிக்கையும்

கார்த்திகை முழுநிலவு கார்த்திகைக் கார்த்திகை என்ற நம்பிக்கையும்

மார்கழி முழுநிலவு மார்கழி மிருகசீரிடம் என்ற நம்பிக்கையும்

 

பெருந்தச்சு நிழல் நாள்காட்டியில் பொருந்தி அமைந்திருப்பது ஓரிரு திருத்தங்களை மேற்கொண்டதன் விளைவாக அமைந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

பிழை திருத்தம்:-

     வார நாட்களின் எண்ணிக்கையை வரைவு செய்து 6 நாட்கள் என்று மட்டுப்படுத்தியதும், சனிக்கிழமையை முற்றாக நீக்கியதும், அவிட்டம் என்ற ஊடறுப்பு நட்சத்திரத்தை நீக்கியதும் தான் பெருந்தச்சு நிழல் நாள் காட்டியை மீட்டுத் தந்திருக்கிறது.

     இவற்றை நீக்கும் உத்தி என்பது ‘துப்பு’ வகையைச் சேர்ந்தது. அது ஆசான் மாணாக்கன் வழியிலான மரபறிவு. பெருந்தச்சு மரபுக்கு அந்த ஆற்றல் இருக்கிறது. பெருந்தச்சர்கள் கோத்தொழிலாளர்களிலிருந்து வேறுபட்டவர்கள். ‘காணா மரபு’ வகையைச் சேர்ந்த இந்த அறிவு புதைந்து பூக்கும் மாநூல் மரபினது.

     நட்சத்திரம் என்பது வானத்து மீன் இல்லை. ஒரு குறிப்பிட்ட நாளின் இரவும் பகலும் உலகைச் சுற்றும் வளிமண்டல ஆளுமையைக் குறிக்கும் ஒரு குறியீட்டுச் சொல். தைப்பூச முழுநிலவிலும் புரட்டாசியின் உத்திரட்டாதியின் முழுநிலவிலும் மட்டுமே முழுநிலவு நாள்களில் நட்சத்திரம் அமையும் என்பதும் பிற அனைத்து முழுநிலவு நாள்களுக்கும் அதன் முதல் நாளில் தொட்டு நிற்கும் நட்சத்திரமே ஏற்றிக் காட்டப்படும் என்பதும் 4-8-4-8 என்ற அக்க வாய்ப்பாட்டுக்கு கட்டுப்பட்டது.

 

இன்றைய நிலை:-

     இரண்டு முழுநிலவுகளைத் தென்பாண்டியர்கள் காப்பாற்றி வருகிறார்கள். நான்கு முழுநிலவுகளை மரம், செடி, கொடி, பிற உயிர்கள் இவற்றோடு சில நல்லவர்கள் காப்பாற்றி வருகிறார்கள். 6 முழு நிலவுகளை ஆளும் அரசுகள் சிதைத்து வருகின்றன. 12-க்கு 12-ம் காப்பாற்றப்பட்டால் அறம் நிமிரும். மறுதலையாக அறம் நிமிர்ந்தால் 12 முழு நிலவுகளும் காப்பாற்றப்படும். தமிழர்களின் அரசுருவாக்கம் அறத்தோடு சேர்ந்தே நிமிரும்.

 

 

நெருங்கி வரும் தமிழ்ப்புத்தாண்டு:-

     பெருந்தச்சு நிழல் காட்டியின்படி இவ்வாண்டின் 10-வது முழுநிலவு 27.09.2015-ல் கடந்து விட்ட நிலையில் அடுத்த 11-வது முழு நிலவு 30-ம் நாளில் 27.10.2015-ல் அமைந்திட வேண்டும். ஆனால் 26.10.2015-ல் அது தோற்றுப் போகும் வாய்ப்பு உள்ளது. அதுவரை காத்திருந்து அந்த நாளைத் தவிர்த்து அடுத்த 12-வது முழுநிலவையும் கணித்துப் பதினெட்டு நாட்களைக் கூட்டி ஆண்டுக் கணக்கினை முடித்திடவும் அடுத்த புத்தாண்டினை வரவேற்கவும் உளவியலாக அணியமாக வேண்டியது தமிழர்களின் கடமை.

 

தமிழக அரசு பொருட்படுத்தப் போவதில்லை:-

     எப்படியும் ‘தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு’ என்று இன்றையத் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளப் போவது இல்லை.

     ஏதோ பார்த்துச் செய்யுங்கள் என்று தமிழர் யாரும் கூனிக் குனிந்து கோரிக்கை வைக்கப் போவதும் இல்லை, வைக்கவும் கூடாது. ஏனெனில் தமிழ்ப் புத்தாண்டு பணியா மரபு வகையைச் சேர்ந்த்து.

     தமிழக அரசு அதட்டிக் கொண்டு இருப்பதால் தமிழறிஞர்கள் தையென்று வாயைத் தைத்துக் கொள்வார்களே தவிரத் தவறியும் அரசுக்கு எடுத்துச் சொல்ல முன்வர மாட்டார்கள். அது தேவையும் இல்லை.

 

மனமாற்றம் மக்களிடம்:

     இம்மென்று ஒலியெழுப்பும் வண்டு கூடத் தெற்கே சென்று திரும்பும் போது தெத்தே என்று வாய்திறக்கிறது என்று திருவிசைப்பா பாடுகிறது. அப்படி இருக்க, மக்கள் அடங்க மாட்டார்கள். முட்டாளைப் பயிற்றுவித்து அறிவாளியாக்கி விடலாம். அறிவாளியை முட்டாளாக்க முடியாது.

     தமிழ்ப் புத்தாண்டு பற்றிய புரிதல் என்பது தமிழர்களை இந்த உலகிற்கு அறிவாளிகளாக அடையாளம் காட்டும். தமிழர்களைக் கொடி வழி இனமாகக் கட்டமைக்கும்.

 

எதிர்காலத்தில் தமிழர்கள்:

     இன்று இருக்கும் மயக்கமும் தயக்கமும் இப்படியே நீளும் என்று அஞ்சி ஒருவரும் மனம் தளர்ந்து விடக் கூடாது. இன்றைய அறிவியலில் உள்ள சில இருட்டறைகளில் தமிழர் மரபறிவு வெளிச்சத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தால் இந்த உலகம் தமிழை விரும்பி வரவேற்கும். இந்த உலகிற்குத் தமிழைக் கற்றுக் கொடுத்தே எதிர் காலத்தில் தமிழர்கள் பிழைத்துக் கொள்ளலாம்.

 

 

தென்செலவின் திருப்பம்:

     தென்செலவின் திருப்பத்தை ஒட்டித் தமிழ்ப் புத்தாண்டு இந்த உலகிற்கு உணர்த்தும் புதிய உண்மைகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம் பெறும்.

 

இசுலாமியர்களின் புத்தாண்டு:-

     15.10.2015 அன்று இசுலாமியர்கள் தமது ‘ஹிஜ்ரி’ ஆண்டுக் கணக்கை ஆர்ப்பாட்டம் இன்றித் தொடங்குகிறார்கள். வானவியல் அடிப்படையில் அல்ல எனினும், நபிகள் கூற்றுப்படி அதனை அறிவிக்கும் துப்பு இசுலாமியர்களிடம் இருக்கிறது. அவர்கள் கடந்த 14-ஆம் தேதி தோன்றிய பிறை நாட்களை கணக்கிட்டு அதனுடன் 10 நாட்களைக் கூட்டி வருகிற 24-ஆம் தேதி முகரம் என்ற மாதம் தொடங்குவதாக அறிவிக்கிறார்கள். அரசு ஹாஜி கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழக அரசு விடுமுறை நாளைத் திருத்தி 24-ஆம் தேதி என்று அறிவிக்கிறது.

திருக்குரானில் குறிப்பிட்டவாறு 354 நாட்களில் 12 முழுநிலவுகளும் 12 மறைநிலவுகளும் ஆக ஆண்டு சுருண்டு விட்டது என்று நன்கு அறிந்தும், வானத்தையும், பூமியையும் படைத்த அல்லாஹ் ஆண்டு நாட்களை 354 என்று கட்டுப்படுத்தினார் என்று கூறாமல், நீங்கள் காத்திருந்து, நோன்பிருந்து, கூடிப் பேசி முடிவு செய்து, ஒருவர் அறிவுப்புச் செய்ய மற்றவர் பின்பற்றுங்கள் என்று கூறிச் சென்றுள்ள தகைமையை உற்று நோக்கினால் தமிழ்ப் புத்தாண்டின் இன்றியமையாமை நன்கு விளங்கும்.

இசுலாமியர்கள் கோத்தொழில் செய்யவில்லை. அவர்களிடம் தமிழ் இல்லை. தமிழ்ப் புத்தாண்டு இசுலாத்தைச் சார்ந்திருக்கவில்லை. ஆனால் இன்றும் அதே 354 நாட்களில் 12 முழுநிலவுகளும் 12 மறைநிலவுகளும் வருகின்றன. பசப்பும் பஞ்சாங்கம் பச்சைத் துரோகம் செய்ததன் விளைவாகக் கோத்தொழிலைப் பறிகொடுத்து தமிழையும் பறிகொடுத்து இடையில் 360 நாட்களில் நிலவுகளை ஒழுங்கு செய்த மன்னன் இராஜராஜனின் புகழையும் பறிகொடுத்து ஏமாந்து நிற்கும் தமிழர்கள் புரிந்து கொண்டால் போதும்.

 

___...---000 அ அ அ 000---...___

 

 

(இது மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவைய வெளியீடு © 2015)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.