Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம்

Featured Replies

ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம்
ரவிராஜ் படுகொலையின் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரங் களைத் தாக்கல் செய்வதற்கு  நடவடிக்கை எடுக்கு மாறு சட்டமா அதிபர், பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த வழக்கு நேற்று கொழும்பு நீதவான் நீதி மன்றத்தில் அழைக்கப் பட்டபோது, குற்றப்புலனாய்வுத்  திணைக்களத்தின் அதிகாரிகள் இதனை அறிவித்ததாகச் சந்தேக நபர்கள் தரப்பு சட்டத்தரணி ஸ்ரீலால் தன் தெனிய தெரிவித்தார்.இதன்போது, ரவிராஜ்கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கடற்படை சிப்பாய்கள் 6 பேர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இவர்களில் ஒரு சந்தேகநபரை அரசதரப்பு சாட்சியாக நியமிப்ப தற்கு சட்டமா அதிபர் தீர்மானித் துள்ளதாக, பொலிஸார் நீதிமன் றத்திற்கு அறிவித்தனர்.

இதன்படி, ஏனைய 5 சந்தேக நபர் களுக்கு எதிராகவும் குற்றப்பத் திரங்களை தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் தங்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். அத்துடன் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் முச்சக்கர வண்டியும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனையடுத்து, வழக்கை எதிர்வரும் 03 திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரைக் கைது செய்வதற்கு இலங்கை பொலிஸார், சுவிற்சர்லாந்து அரசின் உதவியை நாடியுள்ளனர்.

ரவிராஜ் படுகொலையின் முக்கிய சந்தேக நபரான சேரன் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இவர் இலங்கையை விட்டுத் தப்பிச் சென்று சுவிற்சர்லாந்தில் வசித்து வருகிறார். இவர், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்துடன் ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, இராணுவ அதிகாரி ஒருவரால் வழங்கப்பட்டுள்ளது. இந்த இராணுவ அதிகாரி, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவம் தொடர்பாக தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அந்த இராணுவ அதிகாரி, வழங்கியுள்ள தகவலின் படி, பிள்ளையானிடம் கொடுக்கப்பட்ட அந்த துப்பாக்கி, அவர் மூலம் சேரனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் விசாரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கடந்த 2006 ஆம் ஆண்டு கொழும்பு நாராஹேன்பிட்டி பகுதியில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

http://onlineuthayan.com/news/1595

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.