Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 எண்றதுக்குள்ள

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ என்ற பிரமாண்ட ஹிட்டிற்கு பிறகு இனி தன் ரசிகர்களை காக்க வைக்க கூடாது என்று விக்ரம் களத்தில் இறங்கியுள்ள படம் தான் 10 எண்றதுக்குள்ள. 4 சிறுவர்களை மட்டும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸை கலக்கிய ‘கோலிசோடா’ புகழ் விஜய் மில்டன் இந்த முறை கோலிசோடா பேக்ட்டரி அளவிற்கு ஒரு பிரமாண்ட படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கு யானை பலம் சேர்க்கும் அளவிற்கு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ் இப்படத்தை தயாரிக்க, படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது. இன்று இப்படம் உலகம் முழுவதும் பல திரையங்குகளில் வெளிவந்துள்ளது.

கதை:

இந்தியாவின் ஒதுக்கப்பட்ட வடகிழக்கு மாநிலத்தில் இன்றும் சாதி கொடுமைகள் நடந்து வருகின்றது. அந்த வகையில் உத்ரகாண்ட் மாநிலத்தில் கீழ் சாதியினர் அத்து மீறி கோவிலுக்குள் நுழைந்ததால் 40 பேரை வெட்டி கொல்கின்றனர்.

அங்கிருந்து கதை சென்னை நகர்கிறது. விக்ரம் 10 எண்றதுக்குள்ள யார் என்ன சொன்னாலும் செய்து முடிக்கும் திறமைசாலி. அந்த வகையில் பசுபதி கேங்கிற்கு வரவிருக்கும் பொருளை விக்ரம் அந்தரத்தில் காரில் பாய்ந்து அலேக்காக தூக்கி செல்கிறார்.

அதே நேரத்தில் ஒரு ட்ரைவிங் ஸ்கூல் டீச்சராகவும் விக்ரம் தன் வாழ்க்கையை பயணிக்க. அந்த ட்ரைவிங் ஸ்கூலில் குறும்பு பெண்ணான சமந்தா மாணவியாக சேர்ந்து விக்ரமை டார்ச்சர் செய்கிறார்.

பசுபதி கொடுக்கும் வேலைகளை எல்லாம் விக்ரம் அசால்டாக முடிக்கிறார். இதற்கிடையில் வட இந்திய கூலிப்படை ஒன்று சமந்தாவை கடத்த சொல்லி பசுபதிக்கு வேலை கொடுக்கிறது. அவர்களும் சமந்தாவை கடத்த, அவர்கள் வரும் வண்டியை போலிஸ் பிடிக்கின்றது. போலிஸிடம் இருந்து வண்டியை மீட்டெடுக்க விக்ரம் உதவியை நாடுகிறது பசுபதி குரூப்.

அவரும் காரில் பறந்து வந்து பல்டி அடித்து காரை மீட்டெடுக்க, அவரையே அந்த காரை வில்லன் குரூப்பிடம் ஒப்படைக்க சொல்கிறார் பசுபதி. ஆனால் வண்டியில் சமந்தா இருப்பது விக்ரமிற்குமே தெரியாது, பின்பு சமந்தா வண்டியில் இருப்பது சில பிரச்சனைகளால் அவருக்கு தெரிய வர, பிறகு பையா ஸ்டைலில் வட இந்தியா வை நோக்கி பயணம் போகிறது.

விக்ரம் கடைசி வரை கார் தான் ஒப்படைக்க வேண்டும் என நினைக்க பிறகு தான் தெரிகின்றது சமந்தாவிற்காக தான் அந்த கும்பல் அழைகின்றது என, சமந்தா அவர்களுக்கு எதற்கு வேண்டும்? என்பது ஒரு டுவிஸ்ட்டுடன் தெரிய வர, எப்படி அந்த கும்பலிடம் இருந்து சமந்தாவை விக்ரம் காப்பாற்றினார் என்பதை 1000 எண்றதுக்குள்ள கூறியிருக்கிறார் விஜய் மில்டன்.

படத்தை பற்றிய அலசல்

நீங்க என்ன கதாபாத்திரம் வேண்டுமானாலும் கொண்டு வாங்க நான் ரெடி என்பது போல, பாத்திரத்திற்கு ஏற்ற நீராக மாறிவிடுகிறார் விக்ரம், இதிலும் அதேபோல் தான் காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் என புகுந்து விளையாடுகிறார். ஆனால், பல இடங்களில் விக்ரமின் நடிப்பு வீணாகின்றது.

சமந்தா பார்க்க அழகாக இருந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவர் கொஞ்சி கொஞ்சி பேசுவது சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா ரகம். படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கின்றது என்றே தெரியவில்லை, பையா ஸ்டைலில் கதை இருந்தாலும், அதில் இரண்டு பேருக்கும் ஆபத்து என்ற ஒரு முடிச்சு அவிழும்.

இதில் அப்படி ஏதும் இல்லை, ஸ்டண்ட் காட்சிகள் பல இடங்களில் கிராபிக்ஸ் வெளிப்படையாக தெரிகின்றது. இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால், வட கிழக்கு பகுதிகளை இந்தியாவில் இப்படியெல்லாம் அழகான இடம் இருக்கிறது என்று கேட்கும் அளவிற்கு அழகாக படம்பிடித்துள்ளார். டி.இமான் இசை ஒப்பனிங் பாடல் மட்டுமே ரசிக்க வைக்கின்றது. பின்னணி இசை ஒரு ஆக்‌ஷன் சேஸிங் படத்திற்கு எப்படி இருக்க வேண்டும், இமான் சார் என கேட்கத்தோன்றுகிறது. கிளைமேக்ஸ் டுவிஸ்ட் சண்டைக்காட்சிகள் மட்டுமே ஆறுதல்.

க்ளாப்ஸ்

  • விக்ரம் எந்த கதைக்கு நான் ரெடி என்பது போல் இதிலும் கலக்கியுள்ளார்
  • பசுபதியின் பரிதவிப்பு ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்டுகிறது, அவர் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றது..
  • கிளைமேக்ஸில் வரும் டுவிஸ்ட், அதன் பின் வரும் காட்சிகள்

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி எதை நோக்கி செல்கிறது என்று யாருக்குமே தெரியவில்லை....திரைக்கதையில் அத்தனை தடுமாற்றம்..விக்ரமின் ப்ளாஷ் பேக் காட்சியில் எந்த ஒரு அழுத்தமும் இல்லை

சமந்தாவின் ஓவர் ஆக்டிங் கொஞ்சம் பொறுமையை சோதிக்கின்றது...

மொத்தத்தில் 10 எண்றதுக்குள்ள டைட்டிலுக்கு ஏற்ற விறுவிறுப்பு எங்கே என்று கேட்க தோன்றுகின்றது

 

 

 

 

 

 

 

 

 

 

ரேட்டிங்- 2.5

 

 

 

 

 

 http://www.cineulagam.com/tamil/reviews-tamil/movie/100536/

10ekreview_2594334f.jpg
 

டிரைவிங் ஸ்கூல் பயிற்சியாளரான விக்ரம், கார் ஓட்டுவதில் அசகாய சூரர். டிரைவிங் ஸ்கூல் அவருக்குப் பகுதி நேர வேலைதான். உண்மையான வேலை, நிழல் உலக சமாச்சாரங்களுக்கு உதவும் தனி நபர் படை அவர். இவரது ‘திறமை’யைப் பார்த்துவிட்டு நிறைய ‘வேலை’களைக் கொடுக்கிறார் தாஸ் (பசுபதி) என்கிற தாதா. டிரைவிங் ஸ்கூலில் விக்ரமிடம் பயிற்சிபெற வருகிறார் ஷகிலா (சமந்தா).

இன்னொரு பக்கம் உத்தராகண்ட் மாநிலத்தில் ஒரு ஊரில் ஒடுக்கப்பட்ட ஜாதியைச் சேர்ந்த 40 பேர் ஆதிக்கச் சாதி யினரால் கொல்லப்படுகிறார்கள். இந்த ஊருக்கு ‘பிரசாதம்’ மறைத்து வைக்கப் பட்ட கார் ஒன்றை ஓட்டிச்சென்று டெலிவரி செய்யும் வேலையை விக்ரமுக்குக் கொடுக்கிறார் பசுபதி. காரில் ‘பிரசாதமாக’ சமந்தா அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியாமலேயே விக்ரம் பறக்கிறார். சமந்தா இருப்பதும் அவர் கடத்திச் செல்லப் படுவதும் ஒரு கட்டத்தில் விக்ரமுக்குத் தெரியவருகிறது. சமந்தா முசோரிக்கு ஏன் கடத்தப்பட்டார், அங்கு என்ன நடக்கிறது ஆகிய கேள்விகளுக்கான பதில்தான் ‘10 எண்றதுக்குள்ள’.

ஹாலிவுட்டின் ‘ஸ்பீட்’, ‘கான் இன் சிக்ஸ்டி செகண்ட்ஸ்’, ‘ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்’ போன்ற ஆக்‌ஷன் த்ரில்லர் வகைப் படத்தைத் தமிழில் தர வேண்டும் என எண்ணி திரைக்கதையும் காட்சிகளை யும் அமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன். காட்சியமைப்புகள் பிரமாண்ட மாகவும், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் காணப்படும் ஆக்‌ஷன் காட்சிகளின் சாயலி லும் அமைக்கப்பட்டிருப்பது பார்வை யாளர்களை வாய் பிளக்க வைக்கிறது. ஆனால் இந்த அக்கறையைத் திரைக் கதையில் காட்டவில்லை. பெரிய நட்சத் திரமும் பிரமிக்க வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளும் போதும் என்று நினைத்து விட்டார் போலும். சமந்தா கடத்தப்பட்டதும் வேகமெடுக்கும் திரைக்கதை, ஆந்திரா, அஸ்ஸாம் என்று வழிநெடுகிலும் ஓய்வெடுக்கிறது. ஆங்காங்கே எதிர்பாராத திருப்பங்கள் இருந்தாலும் அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகள் பொறுமையைச் சோதிக்கின்றன.

இடைவேளை நெருங்கும் சமயத்தில் தான் படம் தொடங்கவே செய்கிறது. அது வரை ஏகப்பட்ட ‘பில்ட்-அப்’ காட்சிகள். விக்ரம் அசகாய சூரர் என்பதைக் காட்ட எத்தனை காட்சிகள்! அது போதாதென்று மசாலா பட சட்டப்படி ஹீரோவின் மகிமையைச் சொல்ல ஒரு பாட்டு. ஒரு வழியாகக் கார் கிளம்பி ஆந்திரா போன பிறகு, விக்ரமுக்குத் தெரியாமலேயே காரில் இருக்கும் சமந்தா உள்ளூர் ரவுடிகளால் கடத்தப்படும்போது படம் வேகமெடுக்கும் என்று பார்த்தால் சாவகாசமாகக் குத்தாட்டம் போட்டுப் பொறுமையைச் சோதிக்கிறார்கள். இடை வேளைக்குப் பிறகும் இந்த சாவகாசம் தொடர்கிறது.

சமந்தாவையும் உத்தராகண்டில் நடக்கும் சாதியக் கொலைகளையும் கச்சித மாகத் தொடர்புபடுத்தும் இயக்குநர், சாதியக் கொலைகளின் பின்னணிக் காரணத்தை அழுத்தமாகச் சொல்லியிருக் கலாம். பிரதான வில்லனைக் காட்டிலும் அவர் கொடுக்கும் வேலைகளைச் செய்யும் இரண்டாம் நிலை வில்லன்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் ஒரு பெண்ணைக் கடத்தி வைத்து சித்ரவதை செய்கிறார். அவரையும் அழைத்துக் கொண்டு முசோரி வரும் அவர், அந்தப் பெண்ணை ஏன் கடத்தினார் என்ற பின்னணியை அப்படியே விட்டுவிடுகிறார் இயக்குநர். இப்படிப் பல காட்சிகளும் பாடல்களும் திரைக்கதைக்கு வெளியே துருத்திக்கொண்டு நிற்கின்றன. படத்தொகுப்பாளரின் கணினியில் டெலிட் பட்டன் வேலைசெய்யவில்லையா?

திருப்பங்கள் எதிலும் அழுத்தமோ நம்பகத்தன்மையோ இல்லை. அறிமுகக் காட்சியில் விக்ரம் காரில் பறந்து வருவதை மன்னித்துவிடலாம். ஆனால் டோல்கேட்டில் தப்பிக்கும் விதம், எந்த ஆயுதமும் இல்லாமல் ஒண்டி ஆளாக மாபெரும் படையை முறியடிப்பது, ஓடும் ரயிலிலிருந்து சமந்தாவைக் கச்சிதமாக ஜீப்பில் தூக்கிப் போடுவது என்று சரம் சரமாகப் பூ சுற்றுகிறார்கள். படு பயங்கர வில்லனாகக் காட்டப்படும் ராகுல் தேவ், விக்ரமின் நோக்கம் தெரிந்த பிறகும் அவரை உயிரோடு விட்டுவைப்பது ஏன் என்று தெரியவில்லை. கடைசிக் காட்சியில் கையில் இயந்திரத் துப்பாக்கியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அவர் முழிப்பதைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது.

விக்ரம் உற்சாகமும் ஆக்‌ஷன் பரபரப்பு மாய் சாகச நாயகனாக வலம் வருகிறார். ஸ்டைலான தோற்றம், அநாயாசமான செயல்பாடுகள், நடனம், சண்டை என எல்லாவற்றிலும் அசத்துகிறார். விக்ரமுக்கு இணையான பாத்திரம் சமந்தாவுக்கு. லூசுப் பெண்ணாக வந்தாலும் உணர்ச்சி களைக் கொட்ட வேண்டிய இடங்களில் நன்றாக நடிக்கிறார். காதலுக்காக உருகு வது, சண்டையில் தூள் பரத்துவது என்று மிரட்டுகிறார். பசுபதி, ராகுல் சிங் ஆகி யோருக்குப் பெரிதாக வேலை இல்லை.

பிடிப்பில்லாத திரைக்கதையைச் சகித்துக்கொள்ள வைத்துவிடுகின்றன ஆக்‌ஷன், சேஸிங் காட்சிகள். பாஸ்கரனின் ஒளிப்பதிவு அபாரம். டி. இமானின் இசை ரசிக்கும்படி இருக்கிறது என்றாலும் பாடல் கள் திரைக்கதையில் ஒட்டவே இல்லை.

தேவையற்ற துருத்தல்களைச் சரி செய்து நம்பகத்தன்மையைக் கூட்டியிருந் தால் விறுவிறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர் கிடைத்திருக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.