Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளமை புதுமை பல்சுவை

Featured Replies

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 30
 

1762: ஈராக்கின் பாக்தாத் நகரம் ஸ்தாபிக்கப்பட்டது.

1629: இத்தாலியில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 10,000 பேர் பலி.

1966: உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் இங்கிலாந்து வென்றது.

1962: உலகின் மிக நீளமான நெடுஞ்சாலையான ட்ரான்ஸ் கனடா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

1971: ஜப்பானிய பயணிகள் விமானமொன்றும் விமானப்படை விமானமொன்றும் ஜப்பானின் மொரியோகா நகரில் மோதிக்கொண்டதால் 162 பேர் பலி.

1987: இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, கொழும்பில் இலங்கைக் கடற்படையினரின் அணிவகுப்பு மரியாதை பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கியால் தாக்கப்பட்டார்.

http://www.tamilmirror.lk

  • Replies 11.3k
  • Views 1.5m
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

18 லட்சம் ரூபாய்க்கு விலைப்போனது டிரம்ப் வரைந்த ஓவியம்

 
டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் 29,184 டாலருக்கு விற்பனைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் 29,184 டாலருக்கு விற்பனை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரைந்த ஓவியம் ஒன்று ஏலத்தில் 29,184 டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.

மான்ஹாட்டனில் உள்ள வானுயர கட்டடங்களை குறிக்கும் டிரம்பின் படைப்பில் டிரம்புக்கு சொந்தமான டிரம்ப் டவர் கட்டடத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் தொண்டு நிறுவனத்திற்காக நடத்தப்பட்ட ஏலம் ஒன்றிற்காக இந்த ஓவியம் உண்மையில் வரையப்பட்டது. ஆனால், இதன் வெற்றியாளர் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸை மையமாக கொண்டு இயங்கும் நேட் டி சாண்டர்ஸ் என்ற ஏல நிறுவனத்திடம் டிரம்பின் படைப்பை கைமாற்றியுள்ளார்.

ஏலத்தின்போது டிரம்பின் ஓவியத்திற்கு வழக்கத்தைவிட ஐந்து மடங்கு அதிகமாக ஆர்வம் இருந்ததாக ஏலத்தை விடுக்கும் மைக்கல் கிர்க் தெரிவித்தார்.

29,184 டாலருக்கு விலைப்போன டிரம்பின் கலைபடைப்புபடத்தின் காப்புரிமைHANDOUT Image caption29,184 டாலருக்கு விலைப்போன டிரம்பின் கலைபடைப்பு

''இந்த கலை படைப்பு வெறும் டிரம்பின் பின் தொடர்பாளர்களை மட்டும் ஈர்க்கவில்லை, அதிபர்களின் நினைவு பொருட்களை சேகரிக்கும் சேகரிப்பாளர்களையும் ஈர்த்துள்ளது,'' என்றார் அவர்.

9,000 டாலர்களில் தொடங்கிய ஏலத்தில், 11 விலைகள் முன்வைக்கப்பட்டன. இறுதியாக, 29,184 டாலர்களுக்கு விற்கப்பட்டது.

டொனால்ட் டிரம்பிக்கு தொடர்புடைய பொருள் ஒன்று ஏலத்தில் விற்கப்படுவதற்கு முதன்முறையல்ல. இதற்குமுன்பு, டிரம்ப் பயன்படுத்திய ஃபெரராரி கார் ஒன்றும், கோல்ஃப் கிளப்பின் ஒரு தொகுப்பும், டிரம்ப் கையெழுத்திட்ட விஸ்கி பாட்டில் ஒன்றும் ஏலத்தில் விற்கப்பட்டுள்ளன.

http://www.bbc.com

  • தொடங்கியவர்

வலைபாயுதே

சைபர் ஸ்பைடர்

 

twitter.com/BoopatyMurugesh 

நாம அரசியல் பேசிட்டுருந்தோம்,
கமல் வந்து பிக்பாஸைப் பற்றிப் பேசினாரு.
இப்ப நாம பிக்பாஸைப் பற்றிப் பேசிட்டுருக்கோம், கமல் அரசியல் பேசிட்டுருக்காரு.

twitter.com/withkaran 

வீட்ல தெரியாத்தனமா நீயும் ஜூலி மாதிரி பண்ணாதன்னு சொல்லிப்புட்டேன். தட்டு பறக்குது.

p108a.jpg

twitter.com/SKtwtz

புதுச் சட்டையில இருக்கிற குண்டூசியைக் கண்டுபிடிக்கிறது சினிமாவில ஹீரோ மறைச்சு வெச்சுருக்கிற வெடிகுண்டைக் கண்டுபிடிக்கிறதுக்குச் சமம்.

twitter.com/sajayravee

‘எலிமினேட்’ ஆக வேண்டியவர்கள், ‘நாமினேட்’ கூட ஆகாமல் இருப்பது தான் சமகால அரசியல்.

twitter.com/amuduarattai

பசி,தூக்கம் மறந்து ஓடி ஓடிப் பணம் சம்பாதியுங்கள். பிற்காலத்தில் ஏதேனும் ஒரு மருத்துவருக்குக் கொடுக்க அது பயன்படும்.

twitter.com/jebz4

ஐன்ஸ்டீனே படிச்சு முடிச்சிட்டு இரண்டு வருஷம் வேலை தேடி அலைந்தாராம். ஐன்ஸ்டீனை மதிக்காத சமூகமா நம்மை மதித்துவிடப் போகிறது.

twitter.com/MrElani

பத்து பேர் நிற்கிற கியூவுல ஆறு பேர் செல்போனை நோண்டிக்கிட்டுருக்காங்க, மிச்ச நாலு பேர் அந்த ஆறு பேரோட போனை  எட்டிப்பாத்துக்கிட்ருக்காங்க.

twitter.com/yugarajesh2

மெட்ராஸ் தமிழ்,நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ் மாதிரி தமிழ்நாட்டுல கமல் தமிழ்னு ஒண்ணு தனியா இருக்கும் போல!

p108b.jpg

twitter.com/urs_priya 

இளமையில் பேச நேரமில்லாமல் வாழ்ந்தவர்கள் முதுமையில் பேச மனிதர்கள் இல்லாமல் வாழ்கிறார்கள்!

twitter.com/Kozhiyaar

ஃப்ரெஷ் ஜூஸ்கள் போடுவதெல்லாம் பழைய பழங்களிலேயே!

twitter.com/udanpirappe 

ராம்குமாருக்கு கரன்ட் கம்பியைத் தரும் இந்தியச் சிறை நிர்வாகம்தான்,சசிகலாவுக்கு ஷாப்பிங் போக, பேக் கொடுத்து அழகு பார்க்கிறது!


ட்ரெண்டிங்

#56,700

வார்த்தைகளெல்லாம் வைரலாகிக் கொண்டிருக்க, இந்த வாரம் ட்ரெண்ட் அடித்தது எண்கள். அதென்ன 56,700? NCEF எனப்படும் தேசிய தூய்மை ஆற்றல் நிதியின் கீழ், வசூல் செய்யப்பட்ட உள்வரியான 56,700 கோடி குறிப்பிட்ட பணிக்கு செலவு செய்யப்படாமல், அப்படியே இருந்தது. அந்த நிதியை ஜி.எஸ்.டியை செயல்படுத்த திருப்பி விட்டிருக்கிறது மத்திய அரசு. நிலக்கரி உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங் களிடமிருந்து, ‘தூய்மை ஆற்றல்’ என்ற பெயரில் வசூலிக்கப்பட்ட இந்தத் தொகையை முறையாக,  காலநிலை மாற்றங்களை மேம்படுத்தத் தான் பயன்படுத்த வேண்டும். அப்படி இருக்க, எப்படி இப்படிச் செய்யலாம் என்று RTI-ல் கேட்டு நச்சரித்துக் கொண்டிருக்கி றார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

விதவிதமான காபி மேசைகள்!

 

 
29chgowcoffee%20table3

வீ

ட்டில் அதிகமான நேரத்தை வரவேற்பறையில்தான் நாம் செலவிடுகிறோம். விருந்தாளிகளுடன் அமர்ந்து பேசுவதற்கு, குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கு, தொலைக்காட்சி பார்ப்பதற்கு, வாரயிறுதிகளில் ஓய்வெடுப்பதற்கு எனப் பலவகைகளில் வரவேற்பறையைப் பயன்படுத்துகிறோம்.

அதனால், வரவேற்பறையின் மையத்திலிருக்கும் காபி மேசை அலங்கரிப்பதற்கு இயல்பாகவே முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். காபி மேசையின் மீது வைக்கப்படும் பொருட்களை வைத்தே வரவேற்பறையின் தோற்றத்தை விருப்பப்படி மாற்றிக்கொள்ளலாம்.

29chgowcoffee%20table9

வரவேற்பறையில் நுழைந்தவுடன் காபி மேசை, சோஃபா என்ற இரண்டு விஷயங்கள்தான் கவனத்தை ஈர்க்கும். காபி மேசை அறையின் மையத்தில் அமைந்திருப்பதால் அதைக் கூடுதல் கவனம் செலுத்தி அலங்கரிப்பது அவசியமாகிறது. காபி மேசையை அலங்கரிப்பதற்கான ஆலோசனைகள்...

 

காதல் காபி மேசை அலங்காரம்

இந்த அலங்காரம் மரத்தாலான மேசைகள், மென்மையான வண்ணங்களைக் கொண்ட மேசைகளுக்குப் பொருந்தும். மெழுகுவர்த்திகள், மெழுகுவர்த்தி பிடிப்பான்களை விதவிதமான வடிவங்களிலும் அளவுகளிலும் பயன்படுத்தலாம்.

இதற்கு மத்தியில் ஒரு வெள்ளைநிறப் பூ அலங்காரத்தைச் செய்யலாம். ஒரு பெரிய தட்டில் மெழுகுவர்த்திகள், பூ அலங்காரம் என எல்லாவற்றையும் அடுக்கி வையுங்கள். இந்தத் தட்டை காபி மேசையின்மீது வைக்கவும். இந்த அலங்காரம் காதல் பொங்கிவழியும் காபி மேசையை உருவாக்கும்.

 

29chgowcoffee%20table7

‘நார்டிக்’ காபி மேசை அலங்காரம்

‘நார்டிக்’ பாணி காபி மேசை அலங்காரத்தில் நவீன காபி மேசைகள், குறைவான பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இந்த காபி மேசையில் மூன்றிலிருந்து ஆறு நவீன அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.

மேசையை அலங்கரிக்க கறுப்பு, வெள்ளை, சாம்பல், மரம் போன்ற நிறங்களை உபயோகிக்கலாம். மேசையின்மீது பூக்கள், சிறிய செடிகள் போன்றவற்றை வைக்கலாம். அடர்த்தியான வண்ண அட்டைகளையும் பெரிய எழுத்துகளையும் கொண்ட புத்தகங்களை காபி மேசைமீது வைக்கலாம்.

 

தங்க நிற காபி மேசை அலங்காரம்

தங்க நிறத்தில் காபி மேசையை அலங்கரிக்கும்போது வரவேற்பறையின் தோற்றத்தையே அது மாற்றிவிடும். தங்க நிறக் கால்களைக் கொண்ட காபி மேசைகளை வாங்கலாம். அதன் மேற்பகுதி வெள்ளை, பளிங்கு அல்லது கண்ணாடியில் அமைந்திருப்பது பொருத்தமாக இருக்கும். ஒன்றிலிருந்து மூன்று தங்க நிறத்தாலான பொருட்களை வைத்து இந்த மேசையை அலங்கரிக்கலாம். மெல்லிய மெழுகுவர்த்திகள், வண்ண மலர்களையும் இந்த காபி மேசையின்மீது வைத்து அலங்கரிக்கலாம்.

 

29chgowcoffee%20table10
‘போஹோ’ காபி மேசை அலங்காரம்

வண்ணங்கள், பேட்டர்ன்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்துவது ‘போஹோ’ பாணியிலான நாடோடி அலங்காரம். இந்த அலங்காரத்தில் காபி மேசையைப் பல வண்ணங்களையும் கலந்து அலங்கரிக்கலாம்.

வண்ணங்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதனால் அலங்காரத்தை மேலும் சிறப்பானதாக மாற்றலாம். அலங்கரிக்க பெரிய செடிகளையும் பயன்படுத்தலாம். ‘மிக்ஸ் அண்ட் மேட்ச்’ பாணி இந்த அலங்காரத்துக்குப் பொருத்தமாக இருக்கும்.

 

பாரம்பரிய காபி மேசை அலங்காரம்

மரம், உலோகம் என இரண்டிலும் பாரம்பரியமான காபி மேசையை உருவாக்கலாம். மரம், உலோகத்தில் நேர்கோடுகள் இருக்கும் மேசைகளை இந்த அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். உலோகம், இரும்பு என இரண்டு வகையான அலங்காரப் பொருட்களை இந்த மேசையில் வைக்கலாம். செடிகள், வண்ணப் புத்தகங்களை இந்த அலங்காரத்திலும் பயன்படுத்தலாம்.

 

நவீன காபி மேசை அலங்காரம்

நவீன காபி மேசை அலங்காரத்தில் எளிமையான அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தலாம். சாம்பல், பச்சை போன்ற நிறங்களை இந்த காபி மேசைக்குப் பயன்படுத்தலாம். சிறிய செடிகளையும் வித்தியாசமான உயரத்தில் இருக்கும் அலங்காரப் பொருட்களை இதற்குப் பயன்படுத்தலாம்.

 

29chgowcoffee%20table6
தாமிர காபி மேசை அலங்காரம்

தங்கத்தைப் போலவே தாமிரமும் இப்போது பிரபலமான வீட்டு அலங்காரப் பொருளாக மாறியிருக்கிறது.

மரம், கண்ணாடி, வெள்ளை என எல்லாவகையான காபி மேசைகளிலும் தாமிர அலங்காரப் பொருட்களைப் பயன்படுத்தலாம். தாமிரத்துடன் வெள்ளை நிறத்தை இணைத்துப் பயன்படுத்தும்போது கூடுதல் பொலிவைத் தரும்.

மெழுகுவர்த்திப் பிடிப்பான்கள், பூஞ்சாடிகள், கிண்ணங்கள், தட்டுகள் என காபி மேசையில் பயன்படுத்தும் அனைத்திலும் தாமிரத்தைப் பயன்படுத்தலாம்.

http://tamil.thehindu.com

  • தொடங்கியவர்

ஆற்றில் 'டகோபா' மூழ்கும் காட்சி (காணொளி)

மியான்மரில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்தியிலுள்ள பௌத்த தேவாலயம் ஒன்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலகைச் சுற்றும் பெண் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!!

 
உலகைச் சுற்றும் பெண் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!!
 

ஆப்கான் நாட்டின் தேசிய விமான சேவையைச் சேர்ந்த பெண் வானோடி Shaesta Waiz உலகத்தை சுற்றி வருகிறார். ஒரேயொரு இயந்திரத்தைப் பூட்டிய விமானத்தின் மூலமே இவர் இந்த உலகம் சுற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இவர் திடீரென்று கட்டு நாயக்க விமான நிலையத்தில் தனது விமானத்தைத் தறையிறங்கியுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

இவரது தரையிறக்கப் பட்டியலில் இலங்கை உள்ளடங்காதபோதிலும் வானில் நிலவிவரும் சீரற்ற கால நிலையே இந்த தரையிறக்கத்துக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது. இதுவரை பதினெட்டு நாடுகளில் தரையிறங்கியுள்ள இவர், Beechcraft Bonanza A36 என்ற விமானம் மூலமே உலகைச் சுற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

22-2.jpg

விமானம் ஓட்டும் சேவையில் பெண்களும் பங்களிப்புச் செலுத்தவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆப்கானைச் சேர்ந்த இவர் அமெரிக்க நாட்டில் விமானக் கற்கை நெறியை முடித்துள்ளார்.

அவரை வரவேற்கும் நிகழ்வொன்று கட்டு நாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

http://uthayandaily.com/

  • தொடங்கியவர்

கால்பந்து போட்டியில் முதல் உலககோப்பையை வென்ற உருகுவே (30-7-1930)

 

பீபாவின் முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி உருகுவேயில் நடந்தது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட தென்அமெரிக்கா ( 7 நாடுகள்), ஐரோப்பியா (4 நாடுகள்), வடஅமெரிக்கா (2 நாடுகள்) 13 அணிகள் கலந்து கொண்டன. அரை இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, அமெரிக்கா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் தகுதிப் பெற்றது. இறுதி போட்டியில் உருகுவே- அர்ஜென்டினா மோதின. இதில் உருகுவே 4-2 என்ற கோல்கணக்கில்

 
கால்பந்து போட்டியில் முதல் உலககோப்பையை வென்ற உருகுவே (30-7-1930)
 
பீபாவின் முதல் உலகக்கோப்பை கால்பந்து போட்டி உருகுவேயில் நடந்தது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா, உருகுவே உள்ளிட்ட தென்அமெரிக்கா ( 7 நாடுகள்), ஐரோப்பியா (4 நாடுகள்), வடஅமெரிக்கா (2 நாடுகள்)  13 அணிகள் கலந்து கொண்டன.

அரை இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, அமெரிக்கா, யுகோஸ்லாவியா ஆகிய நாடுகள் தகுதிப் பெற்றது. இறுதி போட்டியில் உருகுவே- அர்ஜென்டினா மோதின. இதில் உருகுவே 4-2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று முதல் உலககோப்பையை வென்ற நாடு என்ற பெருமை பெற்றது.

இந்த போட்டியை 93 ஆயிரம் ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். இந்த தொடரில் மொத்தம் 70 கோல்கள் அடிக்கப்பட்டன. அர்ஜென்டினாவைச் சேர்ந்த கில்லர்மோ ஸ்டேபிள் 8 கோல் அடித்தார்.

http://www.maalaimalar.com/

  • தொடங்கியவர்
சாரதியின்றி இயங்கும் முச்சக்கரவண்டி
 

image_a6ec10689d.jpg

எஸ்.கணேசன்

முச்சக்கரவண்டியொன்றை, சாரதியின்றி இயக்கும் முறையொன்றை, நுவரெலியாவைச் சேர்ந்த இளைஞனொருவர் கண்டுபிடித்துள்ளார்.

நுவரெலியா, களுகெல்ல பகுதியைச் சேர்ந்த, சமிந்த ருவான் குமார என்ற 31 வயதுடைய இளைஞனே இதனைக் கண்டுபிடித்துள்ளார்.

முச்சக்கரவண்டியொன்றை, தொலையியக்கியின் மூலம் (Remote Controller) இவர் கட்டுப்படுத்துகின்றார். இதற்கு, அவருக்கு ஐந்து நாட்கள் மாத்திரமே எடுத்ததாக அவர் கூறினார்.

இயந்திரவியல் தொழில் ஈடுப்பட்டுள்ள இந்த நபர், எரிபொருளின் மூலம் ஓடும் முச்சக்கரவண்டியை தொலையியக்கின் மூலம் இயங்கவைப்பதற்கு எடுத்த முயற்சி, பலனளிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட முச்சக்கரவண்டியை பார்வையிடுவதற்கு, பெருந்திரளான மக்கள், தலவாக்கலை நகரசபை மைதானத்தில் கூடியிருந்தனர்.

தன்னிடமிலுள்ள திறமைகளைப் பயன்படுத்தி, எதிர்காலத்தில், மேலும் சில தொலையியக்கி சாதனங்களைக் கண்டுபிடிக்கவுள்ளதாக குறித்த நபர் கூறியுள்ளார். எனினும், அதற்கான பொருளாதார உதவிகளை செய்யுமிடத்து, தொழில்நுட்ப ரீதியான செயற்பாடுகளை தன்னால் மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

image_d43d7d2e4c.jpgimage_67cee5e22f.jpgimage_338853798f.jpg

  •  

http://www.tamilmirror.lk/

 

  • தொடங்கியவர்

இத்தனை பாம்புகளை ஒரே இடத்தில் பார்த்திருக்கிறீர்களா? #SnakeFestival

 

பாம்புகளை

பாம்பு, மனிதர்கள் அதிகம் பயப்படும் ஓர் உயிரினம். எல்லோரும் பயப்படுகிற ஓர் உயிரினத்தை ஒருவர்  லாவகமாக கையாளும் போது நின்று  வேடிக்கை பார்க்கத்தான் செய்வோம். கடந்த சில தினங்களுக்கு முன்பு  இணையத்தில் ஒரு வீடியோவை  பார்க்க நேரிட்டது. 100க்கும் மேற்பட்ட ஆண்கள்  கைகளில் பாம்புகளை வைத்துக் கொண்டு ஊர்வலம் போய்  கொண்டிருக்கிறார்கள். சாலையின் இரு  புறமும் நின்று மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  எந்தவித அச்சமும் இன்றி ஊர்வலத்தில் செல்வோரின்  கைகளிலும் கழுத்திலும் பாம்புகள் சர்வ சாதாரணமாக  பின்னி இருக்கின்றன. பார்க்கவே பக்கென்று இருக்கிற ஒரு நிமிட வீடியோ அது. அத்தனை பெரிய கூட்டத்தில் பாம்புகள் மிரண்டு போய் ஒருவரை கூடவா கடித்து விடாது?

இது குறித்த செய்திகளையும், காணொளிகளையும் இணையத்தில் தேடி பார்த்ததில் ஒவ்வொரு காணொளிகளும் திக், திக் ரகமாக இருக்கின்றன. பாம்புகள் குறித்த பயம் இருப்போர்  இக்காணொளிகளை தவிர்ப்பது நலம். காணொளியில் சிலர்  பாம்பு கூடையை கைகளில் வைத்திருக்கிறார்கள். பின்னணியில் பாரம்பர்ய இசை இசைக்கப்படுகிறது. இசைக்கேற்ற நடனம் ஆடுகிறார்கள். கூடையில் இருக்கிற ஒரு நாக பாம்பிடம் கைகளை காட்டி ஒருவர் பேசுகிறார். இன்னொருவர்  இசைக்கேற்ப ஆடிக்கொண்டே பாம்பை கூடையில் இருந்து எடுக்கிறார். சீறிக் கொண்டு ஒரு பாம்பு வெளியே வருகிறது. ஒருவர் ஒன்றுக்கு இரண்டு பாம்புகளை தோளில்  போட்டுக் கொண்டு போஸ் கொடுக்கிறார். அவர்கள் பாம்புகளை  கையாள்வதை பார்க்கும் போது  கணினி திரையையே ஐந்தடி தள்ளி நின்றுதான்  பார்க்க வேண்டி இருக்கிறது. அவர்கள் விளையாடுகிற ஒவ்வொரு பாம்பும் அதீத விஷம் கொண்ட பாம்பாகவே  இருக்கின்றது. யார் இவர்கள்? எங்கே இருக்கிறார்கள்? எதற்காக பாம்பு ஊர்வலம்?

இந்தியா முழுவதிலும் பாம்புகளை வைத்து பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அதில் முக்கியமான விழாக்கள் நாகபஞ்சமி மற்றும் ஜாபான். மேற்கு வங்க மாநிலத்தின் பிஷ்ணுபூர் மக்களின் முக்கிய விழாவாக ஜாபான்  கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் பாம்புகளை வைத்து சில நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.  பாம்புகளை வைத்து வழிபடுவது பிஷ்ணுபூர் மக்களின் வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டமாகவே கருதப்படுகிறது.

பிஷ்ணுபூர் கிராமத்தில் இருக்கிற மக்கள் மானஸா என்கிற தெய்வத்தை வணங்கி வருகிறார்கள். சிவபெருமானின் மகளாக கருதப்படும் மானசா தேவி என்பவருக்காக கொண்டாடப்படுகிற விழாவாக இவ்விழா  இருக்கிறது. மானசா தேவியை பாம்புகளின் கடவுளாக மக்கள் வழிப்படுகின்றனர் .

 

ஜாபான் விழா இரண்டு நாள்களுக்கு நடக்கிறது. முதல் நாள் மானசா தேவி சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்கின்றனர். மூங்கிலில் செய்த கூடைகளிலும் மண் பானைகளிலும் பாம்புகளை வைத்து ஊர்வலம் வருகிறார்கள். சிலர் வெறும் கைகளில் பாம்புகளை வைத்துக் கொண்டு தெருக்களில் ஊர்வலம் வருகிறார்கள். பாரம்பர்ய இசை இசைக்கப்படுகிறது. நடனமாடிக் கொண்டே வருகிறார்கள். குறிப்பிட்ட இடத்தில் பாம்புகள் இருக்கிற கூடைகளை வைத்து நாட்டுப்புறப்  பாடல்களையும் பாரம்பர்ய இசையையும் இசைகிறார்கள். அப்போது கூடைகளுக்குள் இருக்கிற பாம்புகள் வெளியே வருகின்றன. பாம்புகளோடு சேர்ந்து நடனமாடுவதுடன் அன்றைய விழா நிறைவு பெறுகிறது.

இரண்டாம் நாளில் மதிய வேலையில்  சங்கரி பஜார் என்கிற இடத்தில் பாம்பாட்டிகள் எல்லோரும் ஒரு குழுவாக  கூடுகிறார்கள். தேவி மானசா மகிமையை சொல்லுகிற பாடல்களை பாடுகிறார்கள். பாம்பாட்டி குழுக்கள் பாம்புகளை வைத்து  தந்திரங்களை  செய்ய ஆரம்பிக்கிறார்கள். கூடையில் இருக்கிற பாம்புகளை எடுத்து அவர்களது தாய்மொழியில் பாட ஆரம்பிக்கிறார்கள். பின் பாம்பின் முகத்தில் முத்தமிடுகிறார்கள். சுற்றி வேடிக்கை பார்க்கிற மக்களை பாம்புகளை தொட அழைக்கிறார்கள். விழாவிற்கு வருகிற எல்லோருக்கும் பாம்புகளை வைத்து ஆசீர்வாதம் செய்து அனுப்புகிறார்கள். அதோடு விழா நிறைவடைகிறது.  

எல்லோருடைய வீடுகளிலும் பாம்பு வளர்ப்பதாகவும் அப்பாம்புகள் அவர்களை எதுவும் செய்வதில்லை எனவும் கூறப்படுகிறது. மானசா தெய்வத்தின் ஆசி பாம்புகளோடு அவர்களுக்கு நல்ல நட்பை  ஏற்படுத்தித்  தருவதாக சொல்கிறார்கள். மழைக்காகவும், தங்கள் நிலத்தின் வளத்தை மேம்படுத்துவதற்காகவும் மக்கள் பாம்புகளை வைத்து வழிபடுவதாகவும் சொல்லப்படுகிறது.

இது குறித்து  வன அலுவலர் ஒருவரிடம் பேசியதில் “நானும் பார்த்தேன் அந்த நிகழ்வை திருவிழாவாக பார்க்க முடியவில்லை. வீடியோவை பார்க்கும்போது  பாம்புகளை வைத்து போராட்டம் நடப்பது போலத்தான் தெரிகிறது. மக்கள் கூடி இருக்கிற ஒரு பகுதியில் பாம்புகளை ஊர்வலமாக எடுத்து செல்வதற்கு அந்த பகுதி வன அலுவலர்கள் காவல்துறையினர்  எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை. வன உயிரினங்களுக்கு எதிரான நடவடிக்கையாகத்தான் இதைப் பார்க்க வேண்டி இருக்கிறது. பாம்புகளை பிடிப்பதும், அவற்றை வைத்து வேடிக்கை காட்டுவதும் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972-ன்படி குற்றமாகும். பாம்பாட்டிகள் யாரும் தற்போது இந்த தொழில் இல்லை. பாம்பாட்டிகள் என்ற பெயரில் சிலர்  பாம்பு கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்கிறார்.

 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

பிரித்தானியாவிலேயே ஆபத்தான வீடு இது தான்

 

லண்டனில் உள்ள வீடொன்று சரியாக பராமரிக்கப்படாத காரணத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு லண்டனின் Leyton மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு வீடு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.

வீடானது தார்பாய்கள், தகரம் போன்றவைகளால் மூடப்பட்டுள்ளது, ஆங்காங்கே ஏணிகளும் உள்ளன.

இதோடு வீட்டின் வெளிப்புறத்தில் தெரியும்படி பல பொருட்கள் அதிகளவில் மூட்டை கட்டி வைக்கப்பட்டுள்ளன.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

அந்த பக்கமாக செல்வோர் மீது அந்த கனமான பொருட்கள் விழலாம் என்ற சூழலே உள்ளது.

மக்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் இந்த வீட்டை சீரமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும் வீட்டு உரிமையாளர் அதை செய்யாமல் உள்ளார். கடந்த 9 வருடங்களாகவே வீடு இந்த நிலையில் தான் உள்ளது.

வீடு இருக்கும் பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் கூறுகையில், இந்த ஆபத்தான வீட்டில் நபர் ஒருவர் வசிக்கிறார், இது அவரின் சொந்த வீடாகும்.

வீட்டின் மேல்பக்கத்தில் அதிகளவு பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அதிகளவு எலி தொல்லை உள்ளது.

வீட்டு உரிமையாளர் வீட்டின் உள்ளே ஏணி மூலமாக தான் செல்வார், பார்க்கவே திகிலாக இருக்கும் என கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்னர் அரசு லொறி மூலம் இந்த வீடு சுத்தப்படுத்தப்பட்டு பொருட்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

ஆனால் மீண்டும் சில வாரங்களில் பழையபடி உரிமையாளர் வீட்டை அசுத்தமாக மாற்றியுள்ளார்.

இந்த வீட்டின் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ள Richard Brock (52) கூறுகையில், வீட்டின் மேலே அடுக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்கள் யார் மீதாவது விழுந்தால் நிச்சயம் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள் என எச்சரித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உறுப்பினர் Cllr Clyde Loakes கூறுகையில், பல முறை வீட்டை சரி செய்ய அரசு சார்பில் கூறியும் உரிமையாளர் அதை செய்யவில்லை.

எப்படியிருந்தாலும் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என கூறியுள்ளார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90.jpg

 

http://news.lankasri.com

  • தொடங்கியவர்

பாலூட்டும் படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய அதிபரின் மகள்

 

பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு விவாதத்தைக் கிளப்பிய கிர்கிஸ்தான் அதிபரின் மகள்

அலியா ஷகீயேவா பெண்ணின் உடலை அதீதமாகப் பாலியல்தன்மையுடன் சித்தரிக்கும் கலாசாரத்தின் விளைவே இப்பிரச்னைக்குக் காரணம் என்கிறார்

உள்ளாடைகளை அணிந்துகொண்டு தன் குழந்தைக்குப் பாலூட்டும் கிர்கிஸ்தான் நாட்டு அதிபரின் இளைய மகளின் புகைப்படம், குழந்தைகளுக்கு பாலூட்டுதல் மற்றும் பாலியல் ஆகியவற்றைப்பற்றிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், அலியா ஷகீயேவா "என் குழந்தைக்கு எங்கெல்லாம், எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் நான் பாலூட்டுவேன்," என்னும் வாசகத்துடன் சமூக ஊடகத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக விமர்சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து அவர் அப்பதிவை நீக்கினார். பிபிசிக்கு வழங்கிய ஒரு பிரத்யேகப் பேட்டியில், பெண்ணின் உடலை அதீதமாகப் பாலியல் தன்மையுடன் சித்தரிக்கும் கலாசாரத்தின் விளைவே இப்பிரச்னைக்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

"எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த உடல் கொச்சையானதல்ல. இது நன்று செயல்படக்கூடியது. இதன் நோக்கம் என் குழந்தையில் உடலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியது. இது போகப் பொருளல்ல," என்று பிபிசி கிர்கிஸிடம் தெரிவித்தார்.

சில சமூக ஊடகப் பயனாளிகள் மட்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. அவரின் பெற்றோரான அதிபர் அல்மாஸ்பியேக் அடாம்பாயேஃப் மனைவி ரைசா ஆகியோரும் இச்சம்பவத்தால் மகிழ்ச்சியடையவில்லை.

"அவர்கள் உண்மையாகவே இதை விரும்பவில்லை. இளைய தலைமுறையினர் தங்கள் பெற்றோரை விடவும் குறைவாகவே பழமைவாதிகளாக உள்ளனர் என்பதால் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது," என்று கிர்கிஸ்தான் தலைநகர் பிஸ்கெக்கின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் ஷகீயேவா கூறினார்.

தன்னுடைய கலைப் படைப்புகள், அவரால் நுணுக்கமாக வரையப்பட்ட, பெரும்பாலும் திறந்தவெளி நிலப்பரப்புக்களை பின்புலமாகக்கொண்ட, தன்னுடைய மற்றும் தன் குழந்தை மற்றும் கணவரின் உருவப்படங்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு ஷகீயேவா சமூக வலைதளத்தில் தீவிரமாக இயங்கக்கூடியவர்.

பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு விவாதத்தைக் கிளப்பிய கிர்கிஸ்தான் அதிபரின் மகள்

பெரும்பாலான ஷகீயேவாவின் புகைப்படங்கள் கிர்கிஸ்தானின் பரந்த நிலப்பரப்புகளை பின்புலமாகக் கொண்டுள்ளன.

"நான் குழந்தைக்குப் பாலூட்டும்போது, என்னால் செய்ய முடிந்த சிறப்பான செயலைச் செய்வதாக உணர்கிறேன். என் குழந்தையைப் பராமரிப்பதும், அவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் பிறர் என்னைப்பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை விட எனக்கு முக்கியமானது," என்கிறார் ஷகீயேவா.

யார் இந்த அலியா ஷகீயேவா?

குல்னாரா கஸ்மம்பெடோவா, பிபிசி கிர்கிஸ்

தன் குழந்தை மற்றும் கணவருடன் அவர் வசிக்கும் பிஷ்கெக்கில் உள்ள ஒரு மதிப்பிற்குரிய குடியிருப்பில் அவர் நம்முடன் பேசினார்.

அவர் வரைந்த ஓவியங்களும், எடுத்த புகைப்படங்களும் அவர் வீட்டுச் சுவர்களில் தொங்குகின்றன. அவர் வீட்டின் பூந்தொட்டிகளில் மூலிகைச் செடிகள் வளர்கின்றன. பாரம்பரியமாக இறைச்சி உண்ணும் அந்த நாட்டில், அந்த இணையர் சைவ உணவே உட்கொள்கின்றனர்.

சோவியத்துக்குப் பிந்தைய இஸ்லாமியச் சூழலில் அலியா மிகவும் துணிந்தவராகவும் , மாறுபட்டவராகவும் இருக்கிறார். மனம் விட்டுப் பேசும் அலியா, மிகவும் பணிச்சுமை நிரைந்த பெற்றோரின் குழந்தையாக, தன் குழந்தைப்பருவத்தில் தனிமையை அனுபவத்தை விவரிக்கிறார்.

தலைமுறை இடைவெளியைப் பற்றியும், அதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும், தன் பெற்றோருடன் அதில் சமரசம் செய்து கொள்வதையும்பற்றிப் பேசும் அவர், "என் அம்மா அவரின் 'நண்பர்களிடம்' இருந்து என்னைப்பற்றி சில குறுஞ்செய்திகளைப் பெற்றுள்ளார். இப்போது நானே ஒரு தாயாகி இருப்பதால், என்னை ஆளாக்கும்போது அவர் எப்படி உணர்ந்திருப்பார்," என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார்.

டௌன் சின்ட்ரோம் (Downs syndrome) உள்ள குழந்தைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் விலங்குகள் உரிமை ஆகியவற்றை ஆதரித்து செயல்பட்டுவரும் அலியாவுக்கு வெளிப்படையான அரசியல் ஆசைகள் எதுவும் இல்லை.

பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டு விவாதத்தைக் கிளப்பிய கிர்கிஸ்தான் அதிபரின் மகள்

புகைப்படக்கலை, ஓவியம் வரைதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டுள்ளார் அலியா

சமீபத்தில் இரண்டு கிர்கிஸ்தான் அதிபர்களின் வாரிசுகள் அரசியலிலும், அரசின் செயல்பாட்டிலும் தலையிட்டதை அந்நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. அவர்கள் இருவருமே பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் தற்போது பதவியில் இருக்கும் அதிபர் தன் பிள்ளைகள் அரசியலில் தலையிட மாட்டார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

முன்னாள் சோவியத் நாடான கிர்கிஸ்தான், பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் குடியரசு நாடாகும். அதன் சமூகம் பழமைவாதம் நிரம்பியாதாக இருந்தாலும், பொது இடங்களில் பாலூட்டுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

பொது இடங்களிலும் பூங்காக்களிலும் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டினாலும், ஒரு துணியை வைத்துத் தங்கள் மார்புகளை மூடிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

ஷகீயேவாவின் படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதும், இந்த நெருக்கமான தருணத்தைப் பகிர்ந்திருக்கத் தேவையில்லை என்று சிலர் கருதினார்கள். ஆனால் அவர் அடக்கமாக நடந்துகொள்ளவில்லை என்று சிலர் கண்டித்தனர்.

அவர் பாலூட்டும் புகைப்படம் கிர்கிஸ்தானுக்கு வெளியிலும் கவனத்தை ஈர்த்தது. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள செய்தித்தாள்களும், இணையதளங்களும் அதைப் பிரசுரித்தன. பெண்களின் உடல் குறித்து காலம் காலமாக நிலவும் கருத்தை உடைத்ததற்காக பலரும் அவரைச் சமூக ஊடகத்தில் பாராட்டினர்.

பொது இடங்களில் பாலூட்டுதல் இன்னும் பல நாடுகளில் விவாதத்திற்குரிய பொருளாகவே உள்ளது. லண்டனில் உள்ள புகழ்பெற்ற கிளாரிட்ஜஸ் ஹோட்டல் என்னும் உணவகத்தில், ஒரு பெண் தன் குழந்தைக்குப் பாலூட்டும்போது, மார்புகளை மறைக்குமாறு சொல்லப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பெரும் கண்டனங்களைப் பெற்றது.

Former Senator Larissa Waters

கடத்த மே மாதம் ஆஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் தன் குழந்தைக்குப் பாலூட்டி முன்னாள் செனட்டர் லாரிஸ்ஸா வாட்டர்ஸ் வரலாறு படைத்தார்.

 

பொது இடங்களில் பாலூட்டும்போது தங்களுக்கு உண்டாகும் மன அழுத்தம் பற்றி இஸ்லாமியப் பெரும்பான்மை நாட்டுப் பெண்கள் பிபிசியிடம் இணையம் மூலம் அவர்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

"மக்கள் என்னை மிகவும் உற்றுப் பார்க்கின்றனர். என்னை முழுதாக நான் மறைத்துக்கொள்ள வேண்டும் அல்லது என் குழந்தையை பசியில் வாட விட வேண்டும்," என்று இரான் தலைநகர் தெஹ்ரான் நகரில் உள்ள ஒரு தாய் பிபிசிக்கு எழுதியுள்ளார்.

தெஹ்ரான் மெட்ரோ ரயில் நிலையங்களில் சமீபத்தில் பாலூட்டும் அறைகளை அமைக்கப்பட்டுள்ளதை சிலர் பாராட்டியுள்ளனர்.

ஆஃப்கன் தலைநகர் காபுலில் வசிக்கும் ஜரீஃபா கஃபாரி, "பிறர் முன்பு தாய்மார்கள் இங்கு பாலூட்ட முடியாது. மீறிச் செய்தால் பெரியவர்களின் கடுமையான எதிர்வினையைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இது மெதுவாக மாறி வருகிறது," என்கிறார்.

தன் அண்ணன் மனைவி, பாலூட்ட ஒரு மறைவான இடம் வேண்டுமென்பதற்காகவே, தேவைப்படாதபோதும் ஒரு கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி, அங்கு குழந்தைக்குப் பாலூட்டிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் இன்னொரு ஆஃப்கன் பெண்ணான நக்லீன்.ஆனால், இன்னும் சிலர் மார்பகங்களைப் பாலியல் கண்ணோட்டத்துடன் பார்ப்பதால், பாலூட்டும்போது அவற்றைத் தாமாகவே மறைக்க விரும்புவதாக துருக்கியைச் சேர்ந்த பேஸ்புக் பயன்பாட்டாளர் ஒருவர் கூறுகிறார்.

Tehran Metro

தெஹ்ரான் மெட்ரோ ஊழியர் ஒருவர் அனுப்பிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்காக அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள்.

டொரன்டோ பல்கலைக்கத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பாலின ஆய்வாளர் விக்டோரியா தமாசெபி, "முதலாளித்துவக் கண்ணோட்டத்தில், பெண்களின் மார்புகள் பாலியல் தன்மை உள்ளதாகக் காட்டப்படும் வரை அவை லாபம் ஈட்டும். ஆனால் பொது இடங்களில் பாலூட்டுவது மார்புகளின் கவர்ச்சியைக் குறைக்கும். அதனால் அதை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை," என்கிறார்.

பிரச்சனையை உண்டாக்கிய அலியா ஷகீயேவாவின் படத்தைப் பொறுத்தவரை, அப்படத்தால் உண்டாக்கிய கவனம், 'அவரின் இளம் குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும்' என்று அவரின் பெற்றோர் வருத்தப்பட்டதால் அவர் அதை நீக்கிவிட்டார். ஆனால், அதைப்பற்றி அவர் பேசுவதையோ, அது உண்டாக்கிய விவாதத்தையோ அது நிறுத்தவில்லை.

http://www.bbc.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
வரலாற்றில் இன்று: ஜூலை 31
 
 

22%2832%29.jpg1009: 142 ஆவது பாப்பரசராக சேர்ஜியஸ் தெரிவானார்.

1498: கிறிஸ்டோபர் கொலம்பஸ் ட்ரினிடாட்டில் தரையிறங்கிய முதல் ஐரோப்பியரானார்.

1588: ஆங்கிலேயர்களுக்கும் ஸ்பானியர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது கடற்படைச் சமரில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.

1655: உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.

1658: ஒளரங்கசீப் இந்தியாவின் முகலாய பேரரசரானார்.

1741: புனித ரோமப் பேரரசன் ஏழாம் சார்ல்ஸ் ஆஸ்திரியா மீது படையெடுத்தான்.

1805: இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865: உலகின் முதலாவது குறுகிய அகல ரயில் பாதை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1932: ஜேர்மனியில் தேர்லில் வென்ற நாஸி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

1938: கிரேக்கம், துருக்கி, ருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகளுடன் பல்கேரியா அமைதி உடன்பாட்டிற்கு வந்தது.

1954: ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே௨ கொடுமுடியை எட்டியது.

1964: சந்திரனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1973: அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 73 பேர் பலி.

1976: வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.

1987: ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988: மலேசியாவில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டு 1,674 பேர் படுகாயமடைந்தனர்.

1992: நேபாளத் தலைநகர் காட்மண்டுவில், தாய்லாந்து விமானம் ஒன்று வீழ்ந்ததில் 113 பேர் கொல்லப்பட்டனர்.

2006: கியூபாவில் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோ ஆட்சிப்பொறுப்பை தற்காலிகமாக தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிடம் கையளித்தார்.

2007: வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

  •  

http://www.tamilmirror.lk/

  • தொடங்கியவர்

சைக்கிள், ஜெயில், பஸ், ஏரி... இந்தியாவின் 10 வித்தியாசமான தீம் உணவகங்கள்!

 

உலகின் இரண்டாவது பெரிய வணிக நிறுவனமான வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் ஓர் அங்கமாக இருந்து வரும் ‘டிஸ்னி ரசிகர் கிளப்’ என்ற அமைப்பானது ஒவ்வோர் ஆண்டும் D23 எக்ஸ்போவை நடத்தி வருகிறது. இதன் நோக்கம் பிரத்யேக வர்த்தக வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாகும். இதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டிற்கான எக்ஸ்போ சில தினங்களுக்கு முன் நடந்தது. இந்த எக்ஸ்போவில் இடம்பெற்ற Space Restaurant And Mission என்ற கான்செப்ட் கொண்ட உணவகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Space Restaurant

இதன் சிறப்பு என்னவென்றால் உணவு உண்ண விண்வெளிக்குச் சென்று வரவேண்டுமாம். பொழுதுபோக்கு மற்றும் உற்சாகத்தை கருப்பொருளாகக் கொண்டு இயங்கினால் வணிக ரீதியாக வெற்றி பெறுவது சுலபம் என்பதையே இந்த எக்ஸ்போ பலருக்கு உணர்த்தியது. 

ஒரு கருப்பொருளை மையமாக வைத்து வடிவமைக்கப்படும் உணவகங்களுக்கு மக்களிடம் எப்போதுமே ஒருவித வரவேற்பு இருந்து வருகிறது. இதோ இந்தியாவின் டாப் தீம் உணவகங்களைப் பற்றி பார்ப்போம்!

குன்சம் டிராவல் கஃபே, “Pay What You Like”, புது டெல்லி

தீம் உணவகம்

டீ, காபி, பிஸ்கட் போன்ற எதற்கும் இங்கு விலை இல்லை, உங்களுக்கு என்ன விருப்பமோ அதைக் கொடுக்கலாம். இப்படி ஒரு கஃபே ஷாபை நீங்கள் கேள்விபட்டதுண்டா? குன்சம் டிராவல் கஃபே ஷாப் 2010ஆம் ஆண்டு புதுடெல்லியில் அஜய் ஜெயின் என்பவரால் தொடங்கப்பட்டது. பயணிகளையும், புத்தக வாசகர்களையும் குறி வைத்து நடத்தப்படும் இந்த கஃபே ஷாப்பில், வாடிக்கையாளர்கள் தங்களின் பயண அனுபவங்களை அனைவரோடும் பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள். அதாவது, பயணிகளுக்கு ஏதுவாக பொது ஹால் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹாலில் வாடிக்கையாளர்கள் கூட்டாக அமர்ந்து மணிக்கணக்கில் தங்களின் பயண அனுபவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிரலாம். பயணிகள் விரும்பும் நேரத்தில் டீ, காபி மற்றும் முழு தானிய பிஸ்கட்கள் வழங்கப்படும். இதுமட்டுமல்லாது குன்சம் டிராவல் கஃபே வழங்கும் புத்தகங்களை வாசிக்கலாம், பல அரிய பயண புகைப்படங்களை ரசிக்கலாம், அனைவரும் ஒன்று சேர்ந்து பாடல்கள் பாடலாம், இசைக் கருவிகளை வாசிக்கலாம். ஒத்த கருத்துடைய நட்பு வட்டாரத்தைப் பெருக்கிக்கொள்ளலாம். ஒரு கஃபே ஷாப்பில் இவ்வளவு சலுகைகளா என்றுதானே நினைக்கிறீர்கள்?. குன்சம் டிராவல் கஃபேவை நிறுவிய அஜய் ஜெயின் அடிப்படையில் ஊர்சுற்றி. பயணங்களை அதிகம் நேசித்து அது தொடர்பான பல கட்டுரைகளை எழுதிவந்தார். புத்தகங்களை மட்டும் விற்பனை செய்து வந்த அஜய், தனது தனித்துவமான வியாபார யுக்தியால் இன்று உலகம் முழுவதும் அறியப்படுகிறார்.

 தீஹார் சிறைச்சாலை உணவகம் , புது டெல்லி

திகார் உணவகம்

வாழ்க்கையில் தவறுகள் நடக்கும், அதிலிருந்தே நாம் பக்குவப்பட முடியும். ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுவிட்டால் அது நிரந்தரமானது அல்ல. மிகப்பெரிய குற்றங்கள் செய்த பலரும் இரண்டாவது வாய்ப்புக்குத் தகுதியுடையவர்களாகவே இருக்கிறார்கள். இப்படியான விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது Tihar Jail food court. தெற்காசியாவின் மிகப்பெரிய சிறைச்சாலை வளாகமான திகார் சிறைச்சாலை போலவே அமைந்திருக்கிறது இந்த உணவகத்தின் அமைப்பு. ‘உணவகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் குற்றவாளிகள்’ என்ற வாசகங்களுடன் மக்கள் இங்கு வரவேற்கப்படுகின்றனர். தனது சிறப்பான உணவு சேவையால் பலரின் பாராட்டைப் பெற்றுவருகிறது திஹார் சிறைச்சாலை உணவகம்.

‘வேலி ஏரி’ மிதக்கும் உணவகம், திருவனந்தபுரம்

Veli Lake Hotel

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேலி சுற்றுலா கிராமம், ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகும். குழந்தைகளுக்கான பார்க், நீச்சல் குளம், மற்றும் குதிரை சவாரி, ஷாப்பிங் ஸ்டால் போன்ற பல இடங்கள் இருந்தாலும், பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது மிதக்கும் பாலமும், மிதக்கும் உணவகமும். வேலி ஏரியின் தெற்கு கரையில் உள்ள இந்த ஒட்டுமொத்த தோட்டத்தை வேலி கடற்கரையோடு இணைக்கிறது மிதக்கும் பாலம். கடற்கரையோடு இணைக்கும் இந்த மிதக்கும் பாலத்தின் வழியாகத்தான் மிதக்கும் உணவகத்திற்கு செல்ல வேண்டும். இங்கு தயாரிக்கப்படும் உணவுகள் அனைத்தும் அதே பகுதியின் சுவையை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்துகிறது.

கைதி கிச்சன், சென்னை

kaidhi kitchen

உங்களுக்குச் சிறை செல்ல ஆசையா? சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள கைதி கிச்சனுக்கு சென்றாலே போதும், உங்களுக்கு சிறைக்கு சென்றுவிட்ட உணர்வே கிடைக்கும். முழுக்க முழுக்க சிறை அமைப்பை கொண்டு இந்த உணவகம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஊழியர்கள் கைதிகள் போல ஆடை அணிந்திருப்பார்கள். உங்களுக்கும் ஏதோ சிறையில் உணவு சாப்பிடுவது போல உணர்வே கிடைக்கும். இந்த உணவகத்தின் கூடுதல் சிறப்பு மெக்சிகன், இத்தாலிய, தாய், சீன மற்றும் இந்திய உணவு வகைகளை அனைத்தும் கிடைக்கும்.

11 ஈஸ்ட் ஸ்ட்ரீட் கஃபே, புனே

East Street Cafe

இந்த உணவகத்திற்குள் நுழைந்தால், பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் தலைமையிடமான லண்டன் நகருக்குள் நுழைந்தது போன்றதொரு உணர்வு  கிடைக்கும். 11 ஈஸ்ட் ஸ்ட்ரீட் கஃபேவிற்கு வரும் வாடிக்கையாளர்கள், பிரிட்டிஷாரின் உணவு கலாசாரத்தை நேரடியாக அனுபவிக்கலாம், பிரிட்டிஷாரின் உணவு அறை, பாத்திரங்கள், மரச்சாமான்கள் போன்ற அனைத்தும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். வாடிக்கையாளர்களும் தாங்கள் ஏதோ எலிசபெதின் பேரப்பிள்ளைகள் என்று நினைத்துக்கொண்டே உணவருந்தலாம். இந்த இடத்தின் வேடிக்கை என்னவென்றால், இங்கு 3D எஃபெக்ட்டில் பிரிட்டிஷாரின் சில உருவங்களையும் ரசிக்கலாம். 

‘ஓரி'ஸ் 70 mm, ஹைதராபாத்

Ohris 70 mm

சென்னையில் தொடங்கப்பட்ட சூப்பர் ஸ்டார் பீட்சாவிற்கு முன்னோடி இந்த ஓரிஸ் 70 mm உணவகம். பாலிவுட் ரசிகர்களுக்கு இதைவிட ஒரு சிறப்பான உணவகம் இருக்க முடியாது. ஒட்டுமொத்த பாலிவுட் திரைத்துறையின் வளர்ச்சியை இந்த உணவகம் நமக்கு உணர்த்துகிறது. நீங்கள் சிறுவயதில் பார்த்த படங்களையும், பாடிய பாடல்களை இந்த இடம் உங்களுக்கு நினைவுபடுத்தும். பாலிவுட்டின் பசுமையான நினைவுகளை ஏந்திவரும் திரைப்படங்கள், நடிகர்கள், பற்றிய புகைப்படங்களும், முன்னாள் நடிகர்களின் சிலைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ஓரிஸ் 70 mm உணவகத்தில் நீங்கள் உண்ணும் உணவின் சுவையோடு இந்த நினைவுகளும் உங்களை விட்டு எப்போதும் நீங்காது.

டேஸ்ட் ஆஃப் டார்க்னஸ் , ஹைதராபாத்

taste of Darkness

இங்கு விளக்குகள் கிடையாது, முழுக்க முழுக்க இருளில் நடத்தப்படுகிறது Taste of Darkness உணவகம். வேண்டும் என்றால் மெழுகுவத்தி தருவார்கள், முகமூடி அணிந்து கொண்டுதான் உணவு சேவை வழங்கப்படும். உங்களின் பக்கத்து டேபிளில் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது. இப்படி ஓர் உணவகத்திற்கு என்ன அவசியம் என்று பார்த்தால், பார்வை குறைபாடுள்ளவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மக்களுக்கு உணர்த்தவே இப்படி ஓர்  உணவகம் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த உணவகத்தில் குலுங்கும் பாலமும், பூங்காவும் இருக்கிறது. இதுவும் முழுக்க இருளில்தான் உள்ளது. வாடிக்கையாளர்கள் இருளில் அந்த குலுங்கும் பாலத்தில் நடந்து சென்றுதான் உணவருந்த வேண்டும்.

ஹைஜாக் கஃபே, அஹமதாபாத்

Hijack Cafe

இது புதுமாதிரியான மொபைல் கஃபே ஷாப். இந்த உணவகம் ஒரே இடத்தில் இருக்காது, ஊர் முழுவதும் சுற்றிக்கொண்டே இருக்கும். அதாவது Double Decker பஸ் உணவகம். உணவக அமைப்புடைய இந்தப் பேருந்தில் நீங்கள் ஏறியபின் குறைந்தது 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் அஹமதாபாத் பகுதியில் இந்தப் பேருந்து சுற்றிவரும். இந்தப் பயணத்தை ரசித்தபடியே நீங்கள் ஆர்டர் செய்த உணவையும் ரசிக்கலாம். 

நேச்சர்ஸ் டாய்லட் கஃபே, அகமதாபாத்

Toilet Cafe

பொதுவாக உணவு உண்ணும்போது கழிப்பறைகளைப் பற்றி யோசிப்பது கடினமான ஒன்றுதான். ஆனால், ஒர் உணவகமே கழிப்பறை வடிவங்களால் ஆனது என்றால் நம்புவீர்களா? Nature's toilet cafe இந்தியாவின் முதல் கழிப்பறை பின்னணியிலான உணவகம். இந்த உணவகத்தில் பலவித கழிப்பறை சாதனங்களை நீங்கள் பார்க்கலாம், உணவகத்தின் டேபிள், நாற்காலி, உணவு உண்ணும் பாத்திரங்கள், வாஷ் பேஸின் இப்படி அமைத்தும் கழிப்பறை வடிவங்களால் ஆனது. மட்டுமல்லாது 1950 களுக்குப் பின்னால்  பயன்பாட்டிற்கு வந்த மழைநீர் சேகரிப்புகள் மற்றும் கழிவறைகளின் தொகுப்புகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்கு செல்வது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சிக்லொ கஃபே , சென்னை

சிக்லோ கஃபே

 

சிறுவயதில் நீங்கள் அதிகம் விரும்பிய பொருள்களில் ஒன்று சைக்கிள். உங்களின் நண்பர்களோடு சேர்ந்து பல கி.மீ தூரம் நீங்கள் சைக்கிளில் பயணித்து இருப்பீர்கள். இப்படி உங்களின் ஆழ்மனதிற்கு நெருக்கமான சைக்கிளை நினைவுபடுத்துகிறது Ciclo Cafe. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள இந்த உணவகத்திற்குள் நுழைந்ததும், உங்களின் சிறுவயது சைக்கிள் நினைவுகள் உங்களுக்கு வந்துவிடும். காரணம் உணவகம் முழுக்க பல வகையான சைக்கிள்களைப் பார்க்கலாம். இதுமட்டுமல்ல உணவகத்திற்குள்ளே இருக்கும் பல பொருள்கள் பழைமையான சைக்கிள் பாகங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

மதர் தெரசாவின் சிஸ்டர்ஸ் சாரிக்கு ட்ரேட்மார்க்!

கொல்கத்தாவை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அறக்கட்டளை, 120 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. கத்தோலிக்க மதத்தின் தலைமையகமான வாடிகன் நகரிலும்கூட இந்த அமைப்பு சேவையாற்றுகிறது. அமைப்பைத் தோற்றுவித்த மதர் தெரசா, வெள்ளை நிறத்தில் நீல நிற பார்டருடன்கூடிய சேலை அணிவார். 1948-ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள கடை ஒன்றில், மதர் இதுபோன்ற மூன்று சேலைகளை வாங்கியுள்ளார். பின்னர்,  தன் அறக்கட்டளையில் பணிபுரியும் கன்னியாஸ்திரீகள் அனைவரும் இதே போன்ற சேலையை அணிய உத்தரவிட்டார். 

மதர் தெரசாவின் சிஸ்டர்ஸ் சாரி

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு மேக்னஸ் மாவட்டத்தில், இந்த ரக கைத்தறி சேலைகளைத் தயாரிக்க, கைத்தறி நெசவாலையை மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி நடத்திவருகிறது. 'சிஸ்டர்ஸ் சாரி'  என்று அழைக்கப்படும் இந்தச் சேலை ரகத்திற்கு என்று மத்திய அரசு ட்ரேட் மார்க் வழங்கியுள்ளது. இனிமேல், மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி அமைப்பின் அனுமதியில்லாமல் இந்த ரக சேலைகளை வேறு நிறுவனங்கள் உற்பத்திசெய்ய முடியாது. தொழு நோயாளிகள் உற்பத்திசெய்யும் இந்த ரக சேலைகளைத்தான் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டியைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் அணிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

தொழுநோயாளிகளுக்காக மதர் தெரசா தொடங்கிய நெசவாலையில்தான் இந்த ரக சேலைகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இவர்களுக்கு உணவு, உறைவிடம், மருந்து மாத்திரைகள் அனைத்தும் இலவசம். மாதம் ரூ. 6 ஆயிரம் சம்பளமும் வழங்கப்படும். கூடுதலாக சேலை உற்பத்திசெய்தால், போனஸ் உண்டு. வெளி விற்பனைக்கு அனுமதியில்லை. இங்குள்ள 50 கைத்தறிகளில், ஏழு தறிகளில் மட்டுமே சிஸ்டர்ஸ் சாரிகள் உற்பத்தியாகின்றன. மற்றவைகளில் பெட்சீட், தொழு நோயாளிகளுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கரூரில் வைரலாகும் ‘காக்கா முட்டை’ பீட்சா!

 
 

  Pizza shop at karur

பீட்சா சாப்பிடுவதையே தன் லட்சியக் கனவாக வைத்து, அதற்காக கரி பொறுக்கி விற்று, சிறுகச் சிறுகக் காசு சேர்த்து, பீட்சா சாப்பிட கடைக்குப் போகும் சிறுவர்களை அடித்து விரட்டும் கடை முதலாளியின் அரக்கத்தனம், அதைச் சுற்றிய அரசியல் என உலகத்தரத்தில் `காக்கா முட்டை'  என்ற படத்தைக் கொடுத்தார் இயக்குநர் மணிகண்டன். அந்தப் படம் தந்த பாதிப்பில், கரூரில்  `காக்கா முட்டை' என்ற பெயரிலான பீட்சா கடை ஆரம்பிக்கப்பட்டது. இருபது ரூபாயிலிருந்து பீட்சா விற்கும் இவர்கள், பீட்சா நன்றாக இருந்தால் கடைக்குள் கட்டிவைத்துள்ள மணியை அடிக்கச் சொல்வது, ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்குப் பிறகு வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்காமலிருப்பது, முக்கிய தினங்களில் மரக்கன்றுகள் கொடுப்பது எனப் புதுமையான விஷயங்களையும் செய்கிறார்கள். கரூர் பேருந்து நிலையத்தையொட்டி இருக்கிறது இந்த `அடடே' பீட்சா கடை!


 Karur restaurants

நாம் அந்தக் கடைக்குப் போன நேரம் பார்த்து அருண், வருண் என்கிற இரண்டு சகோதரர்கள் கையில் ஐம்பது ரூபாயை வைத்துக்கொண்டு, `கடைக்குள் போகலாமா... வேண்டாமா?' எனத் தயங்கியபடி நின்றார்கள். அவர்களைப் பார்த்த கடை முதலாளிகளில் ஒருவரான பாக்யராஜ், `உள்ளே வாங்கப்பா.  ரெண்டு பேரும் பீட்சா சாப்பிடலாம்' என்று அழைத்தார். தயங்கியபடியே உள்ளே வந்த அவர்களுக்கு, ஆளுக்கு ஒரு பீட்சா சப்ளை செய்யப்பட, ஆர்வமாகச் சாப்பிட ஆரம்பித்தார்கள் அந்தச் சகோதரர்கள். அந்த இடைவெளியில் `காக்கா முட்டை' கடை முதலாளிகளில் ஒருவரான பாக்யராஜிடம் பேசினோம். 

 Kakka muttai pizza shop

``என் பார்ட்னர் கிருஷ்ணன்தான் இந்தக் கடை ஆரம்பிக்க முழுக்காரணம். கிருஷ்ணன், கேட்டரிங் டெக்னாலஜி முடிச்சுட்டு, மும்பை தாஜ் ஹோட்டல், ஷிப், டெல்லின்னு வேலைபார்த்துட்டு, நாலு வருஷங்களுக்கு முன்பு அமெரிக்காவுல வேலை கிடைச்சுப் போயிட்டார். இருந்தாலும். அவருக்கு சொந்த ஊர்ல கடை வெக்கணும்னு ஆசை. மூலைக்கு மூலைதான் சாப்பாடு, டிபன் ஹோட்டல்கள் இருக்கே! அதனால வித்தியாசமா பீட்சா கடை ஆரம்பிக்கலாம்னு முடிவுபண்ணினார். `பீட்சா'னா நானூறு, ஐந்நூறு ரூபாய்க்கு விற்கப்படும் காஸ்ட்லி அயிட்டம்'ங்கிற எண்ணம் நடுத்தர மக்கள்கிட்ட இருக்கு. அதை உடைச்சு, எளிய மக்களும் வந்து பீட்சா சாப்பிட வசதியா இந்தக் கடையை அவர் ஆரம்பிக்க விரும்பினார். அவர் அமெரிக்காவுல இருக்கிறதால, என்னை பார்ட்னரா சேர்த்துக்கிட்டு, அவரோட தம்பி நாராயணனைத் துணைக்கு இருக்கச் சொன்னார். கடந்த வருடம் ஜூன் மாசம் ஆரம்பிச்சதுதான் இந்த பீட்சா கடை.

கடை வைக்க, இந்த இடத்தைப் பார்த்துட்டோம். ஆனா, கடைக்கு என்ன பெயர் வைக்கிறதுன்னு ஒரு மாசமா குழம்பினோம். அப்போதான், டிவி-யில் `காக்கா முட்டை' படம் ஓடிட்டிருந்துச்சு. உடனே, `காக்கா முட்டை'னு வைக்கலாம்னு முடிவுபண்ணி, கிருஷ்ணன்கிட்ட சொன்னோம். அவரும், அவங்க பெற்றோரும் `இந்தப் பெயர் வேண்டாம்'னுட்டாங்க. ஆனா, விடாமப் போராடி அவரையும் அவர் குடும்பத்தாரையும் `காக்கா முட்டை' படத்தைப் பார்க்கவெச்சு, ஒருவழியா இந்தப் பெயரை ஒப்புக்கவெச்சேன்.

நாங்க வெஜ்ல எட்டு வகை பீட்சாக்களும், சிக்கன்ல எட்டு வகை பீட்சாக்களும் தர்றோம். அதுவும், இருபது ரூபாயில் தொடங்கி அதிகபட்சம் 360 ரூபாய் வரையிலான விலையில் பீட்சா விற்கிறோம். அதோட, பீட்சா தயாரிப்பை ரூமுக்குள் செய்யாமல், கஸ்டமர்கள் பார்வையிலேயே செய்றோம். அதேபோல், என்னென்ன பொருள்கள் சேர்க்கப்படுத்துன்னு கஸ்டமர்கள் பார்க்க வசதி பண்ணியிருக்கோம். `காக்கா முட்டை'னு பெயர் வெச்சதால், `வித்தியாசமான பேரா இருக்கே'ன்னு எல்லோரும் வர ஆரம்பிச்சாங்க. அந்தப் பெயர் தந்த பலனால் கடை ஓரளவுக்கு பிக்கப் ஆகிடுச்சு. ஆரம்பத்தில் மக்கள் வரவு குறைவாத்தான் இருந்துச்சு. இங்கே சாப்பிட்டவங்க பீட்சா விலை கம்மியா இருப்பதைப் பரப்ப, அதன் பிறகுதான் சாமான்ய மக்களும் வர ஆரம்பிச்சாங்க.

Karur Pizza shop

சாப்பிட வருபவர்களின் ஃபீட்பேக்கைத் தெரிஞ்சுக்க, கடை முகப்பிலேயே ஒரு மணியைக் கட்டித் தொங்கவிட்டிருக்கோம். `பீட்சா சுவையாக இருந்தால் அந்த மணியை அடிக்கவும்'னு எழுதியிருக்கோம். அப்படி அடிக்கும்போது, எங்களுக்கு இன்னும் தரமா தரணும்கிற ஆர்வம் ஏற்படும். அதேபோல், இங்கு ஐந்நூறு ரூபாய்க்கு மேல பீட்சா சாப்பிடுபவர்களுக்கு ஐம்பது ரூபாய் கேஷ்கார்டு தருவோம். அதை வெச்சு அடுத்த முறை வரும்போது, அந்த ஐம்பது ரூபாய் மதிப்புள்ள பீட்சாவைச் சாப்பிடலாம். அதேபோல், சுதந்திர தினம், குடியரசு தினம் மாதிரியான முக்கிய தினங்கள்ல இங்கே   சாப்பிட வர்றவங்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்தோம். இங்கே தங்கள் பிறந்த நாள்களைக் கொண்டாடுபவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்குறோம். அதோடு, ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிந்த மறுநாளிலிருந்தே வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்பதில்லை. `வெளிநாட்டுக் குளிர்பானங்களை விற்காமல், வெளிநாட்டு பீட்சாவை மட்டும் விற்கலாமா?'ன்னு நீங்க கேட்கலாம். `பீட்சா ஏதோ பணக்காரர்கள் அயிட்டம்'னு சாதாரண மக்கள் ஏங்குவதைத் தடுக்கத்தான் பீட்சா கடை ஆரம்பிச்சோம். பீட்சாவைக் கண்டுபிடித்தது வெளிநாட்டுக்காரன்னாலும், அதை நம்ம ஊர் டேஸ்ட்டுக்கு மாத்தி தர்றோம். அதனால, அது  தமிழ்நாட்டுச் சாப்பாடு அயிட்டம்தான் . இந்தக் கடையை விரிவுப்படுத்தி, குறைந்த விலையில் தரமான சாப்பாடு, டிபன் கொடுக்கணும்கிறதுதான் எங்க அடுத்த இலக்கு" என்றார்.


 காக்கா முட்டை பீட்சா கடை

 

அதற்குள், பீட்சாவைக் கபளீகரம் செய்துவிட்ட அந்தச் சிறுவர்கள், குஷியாகி மணியை பலமாக அடித்தனர். அவர்களிடம் பேசினோம்.
``எங்களுக்கு ரொம்ப நாளா பீட்சா சாப்பிடணும்னு ஆசை. வீட்டுல சொன்னதுக்கு, `அதெல்லாம் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய்னு சொல்வாங்க. வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. நாங்களும் விலை ஜாஸ்தின்னு நினைச்சு ஏக்கத்தோடு இருந்தோம். அப்பதான், இங்கே வந்து பீட்சா சாப்பிட்ட எங்க நண்பன் ஒருத்தன், இருபது ரூபாய்க்கு பீட்சா கிடைப்பதைச் சொன்னான். அதான், ஒரு வாரமா மல்லுக்கட்டி, ஐம்பது ரூபாயைச் சேமிச்சு, இன்னிக்கு வந்து பீட்சா சாப்பிட்டோம். பல நாள் கனவு நிறைவேறிட்டு" என்றார்கள் சந்தோஷம் மேலிட!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

500 ரூபாய் செலவில் ஒருநாள் சிறைவாசம்

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள இந்த 220 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

கணிதத்துக்கான நோபல் பரிசு… மரியம் மிர்ஸாகனி என்ற ஜீனியஸ் பற்றித் தெரியுமா?

 
 

மரியம் மிர்ஸாகனி

 

1994-ம் வருடம். வருடா வருடம் நடக்கும் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பள்ளிப் படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கும் பலர் கலந்துகொள்ளும் இப்போட்டி, மிகவும் பாரம்பர்யமான கணிதப் போட்டிகளில் ஒன்று. இதில் பதக்கம் வென்றுவிட்டால் ஒருவரின் வாழ்க்கையே மாறிவிடும். அவர் எதிர்காலத்தில் தலைசிறந்த கணிதவியலாளராக எல்லாத் தகுதியும் உடையவர் என்பது பொதுவான கருத்து. அந்த வருடம் நடந்த போட்டியில் பலருக்கும் ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. 17 வயதே ஆன ஈரானைச் சேர்ந்த மரியம் மிர்ஸாகனி என்ற அந்தப் பெண் பல ஆண் போட்டியாளர்களை அலற விட்டுக்கொண்டிருந்தார். பொதுவாக, அந்தப் போட்டிகளில் ஆண்களே அதிகம் சாதிப்பார்கள். அதுவும் ஈரானில் இருந்து ஒரு பெண் வந்து அதை வெல்வது எல்லாம், அந்தப் போட்டியை நடத்தும் அமைப்பாளர்களே கூட கனவிலும் நினைத்திடாத ஒன்று. ஆனால், அன்று சரித்திரத்தை மாற்றி அமைக்கத்தான் அங்கே அமர்ந்திருந்தார் மரியம். தங்கப் பதக்கத்தை எவ்வித சிரமும் இன்றி தட்டிச்சென்றார். அடுத்த வருடமும் கலந்துகொண்டார். அதிலும் தங்க மெடல் மரியத்தை தேடி வந்தது. ‘தங்கல்’ படத்தில் கீதா எப்படி அந்த இளம் வயதில் மல்யுத்தத்தில் ஆண் போட்டியாளர்களை புழுதியில் புரட்டி எடுத்து கோப்பையுடன் வெற்றி நடை போட்டு வருவாரோ, அதே காட்சிதான் இங்கேயும். களம் மட்டும் தான் வேறு! 

எண்களே எண்ணங்களாக ஒரு பயணம்...

மரியம் மிர்ஸாகனி

மே 3, 1977-ம் வருடம் ஈரானில் இருக்கும் டெஹ்ரான் என்னும் இடத்தில் பிறந்தார் மரியம் மிர்ஸாகனி. தந்தை அஹ்மத் ஒரு மின் பொறியாளர். சிறுவயதிலேயே மரியத்தின் அசாத்திய திறனைக் கண்டு வியந்த அவர், மரியம் ஒரு மேதை என்பதை புரிந்துகொள்கிறார். டெஹ்ரான் ஃபர்சனகன் பள்ளியில் அவரைச் சேர்த்து விடுகிறார். அது மரியம் போல கிஃப்டட் குழந்தைகள் படிக்கும் பள்ளி. சிறுவயதில், மரியத்தை கேட்டால், “நான் நாவலாசிரியர் ஆக வேண்டும்” என்றுதான் கூறுவார். ஆனால், அது அவர் கணிதத்தின் மீது காதல் கொள்ளும் வரை தான்! 1999 வருடம் தன் இளங்கலை பட்டத்தை கணிதத்தில் பெறுகிறார். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்திய அவர் 2004-ம் வருடம் தன் பி.ஹெச்.டி பட்டத்தைப் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பெறுகிறார். அங்கே இவருக்கு வழிகாட்டியாக இருந்தது கணிதத்தில் நோபல் பரிசு என்றழைக்கப்படும் உயரிய ஃபீல்ட்ஸ் மெடல் பெற்ற அமெரிக்க கணித பேராசிரியர் கர்டிஸ் டி. மெக்குல்லன். அதன் பிறகு ப்ரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகம், கிளே மாத்தமெட்டிக்ஸ் நிறுவனம் என்று பயணித்தவர் இறுதியாக 31 வயதில் வந்தடைந்தது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம். 40 வயதில் கேன்சர் அவரைக் கொண்டுசெல்லும் வரை அங்கேயே இருந்தார். 

வடிவியல் களம் 

பல கணித மேதைகளும் மிகுந்த குடைச்சலை கொடுக்கும் வடிவியல்தான் மரியம் அவர்களின் பாசத்திற்குரிய சப்ஜெக்ட். அவரின் பெரும்பாலான பணிகள் வடிவங்கள், ஒழுங்கற்ற வடிவங்கள், உயர் பரிமாண இடைவெளிகளின் கட்டமைப்புகள் போன்றவற்றைச் சுற்றியே இருந்தது. ரிமேன் மேற்பரப்புகளின் வடிவியல், இடவியல் மற்றும் சிதைப்பு கோட்பாடு போன்றவற்றை தொட்டு ஒளியியல், ஒலியியல், கிளாசிக்கல் மெக்கானிக்ஸ், புள்ளியியல் மெக்கானிக்ஸ், பிரதம எண்கள் மற்றும் குறியாக்கவியல் போன்றவற்றில் பல சாதனைகள் புரிந்தார். 

குவிந்த விருதுகள் 

பல கணிதவியலாளர்கள் கனவில் மட்டுமே காணும் பல விருதுகளை கைகளில் ஏந்திய சாதனையாளர் மரியம். அமெரிக்க கணிதவியல் சங்கம் வழங்கும் ப்ளூமெண்டல் விருதை (Blumenthal Award) 2009ஆம் வருடமும், கணிதத்திற்கான ரூத் லிட்டில் சேட்டர் பரிசை (the Ruth Lyttle Satter Prize) 2013-ம் வருடமும் வென்றார். வெற்றிப் பாதையில் சென்ற அவரின் பயணம், 2014-ம் ஆண்டு யாரும் தொடாத ஓர் அசாத்திய மைல்கல்லைத் தொட்டது. கணிதத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ஃபீல்ட்ஸ் மெடலை வென்றார். இது உலக அரங்கில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசுக்கு நிகரான ஓர் அங்கீகாரம்! அதே வருடம், புகழ்பெற்ற பிரிட்டிஷ் அறிவியல் இதழான ‘நேச்சர்’ உலகின் தலைசிறந்த 10 ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக அம்மையாரைத் தேர்ந்தெடுத்து தனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டது. 

 

பாலின சமத்துவமின்மையை சாடிய ஒரு வாழ்க்கை 

பெண்ணாகப் பிறந்தாலே அவள் வீட்டு வேலை செய்தும், கணவனுக்குப் பணிவிடைகள் செய்தும் காலத்தை ஓட்ட வேண்டும். அவளுக்கென்று இருக்கும் ஆசைகள், இலட்சியங்கள், கனவுகள் அனைத்தும் குப்பைக்குச் சென்றுவிடு. மிகவும் சிரமத்துடன் சாதிக்கக் களம் இறங்கும் பெண்களுக்கோ களத்திலே ஏமாற்றமே மிஞ்சும். ஒரு நிறுவனத்தில் அந்த ஆணுக்கும், இவளுக்கும் ஒரே வேலை, ஒரே டார்கெட், ஆனால் இவளுக்கு மட்டும் சம்பளம் குறைவு. காரணம் கேட்டல், பெண்களுக்கான ஸ்லாப் இவ்வளவுதான். எப்படி இருந்தாலும் சீக்கிரம் திருமணமாகி வேலையை விட்டுவிட்டுப் போய்விடுவீர்கள், நாங்கள் என்ன பண்ண என்று மேலிடமும் கை விரிக்கும். இது உலகம் முழுவதும் இருக்கும் இன்றைய நிலை. அதுவும் ஈரான் போன்ற நாடுகளில் பெண்கள் ஒரு வேலைக்கென்று போவதே சாதனை தான். 

அமெரிக்காவில் குடிபுகுந்த மரியம் அங்கிருக்கும் பல பாலின வேறுபாடுகளைக் கலைந்தார். வேறு நிறம் கொண்ட அவர், வெள்ளையர்கள் கூடாரத்தில் அவர்களை விடவும் ஜொலித்தார். பெண் என்றால் இப்படித்தான் வாழ வேண்டும் போன்ற கோட்பாடுகளைக் கேள்வி கேட்டு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் பெண்களால் சோபிக்க இயலாது என்ற பொதுவான கருத்தை உடைத்தார். கண்ணுக்குத் தெரிந்த வேறுபாடுகளையும், பிரச்னைகளையும் சுலபமாக வெற்றி கொண்டவரை, தோற்கடித்தது என்னவோ கண்ணுக்குத் தெரியாத அந்த மார்பக புற்று நோய். அவர் இவ்வுலகை விட்டு இந்த வருடம் ஜூலை 14-ம் தேதி மறைந்தார். கனவோடு வாழ்க்கையைத் தொடங்கும் பல பெண்களுக்கு, நீங்கள் கனவு மட்டும் காணாதீர்கள், அதை நிறைவேற்றவும் களமிறங்குங்கள் என்று சொல்லாமல் சொல்கிறது அவரது வாழ்க்கை! 

 

மேத்ஸ் என்றாலே ஒரு காத தூரம் ஓடுபவர்கள்தான் இங்கே அதிகம். இதனாலே என்னவோ, கணிதத்தில் சாதிப்பவர்களை நாம் அவ்வளவாகக் கொண்டாடுவதில்லை. மரியம் மிர்ஸாகனி போன்றவர்கள் என்றுமே கொண்டாடப்பட வேண்டியவர்கள். விரைவில் அவரின் வாழ்க்கை ஒரு உலக சினிமாவாகலாம். அப்போது அவரைப் பற்றித் தெரிந்துகொள்ளும் உலகம் நிச்சயம் அவரைக் கொண்டாடும். அந்த நாள் மிக அருகில் இருந்தால் மகிழ்ச்சி!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கேம்பிரிட்ஜில் முதல்வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற கண்பார்வையரற்ற மாணவன்

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெறுவதே பெரும் சாதனை. ஆனால் கண்பார்வையில்லாமல் பிறந்து, இராக்கிய போரிலிருந்து தப்பி, பிரிட்டன் வந்த ஒரு அகதி அப்படி தேர்ச்சி பெறுவது ஒரு பெரிய சாதனை தான். உயர்ந்த மதிப்பெண்கள் பெற்ற அல்லன் ஹென்னஸியின் கதை இது.

BBC

  • தொடங்கியவர்

 

சீனாவில் 55 வயது மேற்பட்டவர்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக அழகு போட்டி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

 

சீனாவில் 55 வயது மேற்பட்டவர்களுக்காக நடத்தப்படும் பிரத்யேக அழகு போட்டி.

போற போக்கிலை நாங்களும் உப்புடியான பங்சனை வைச்சு சந்தோசப்படோணும் கண்டியளோ.....
வயித்தை எக்கினாலும் உள்ளுக்கு  போகுதில்லை....எண்டாலும் பாப்பம்..

  • தொடங்கியவர்
‘கடவுளைக்காண மதம் தேவையில்லை’
 

image_c18f65ef56.jpgகடவுளைக்காண மதம் தேவையில்லை. மனுஷத்தன்மைதான் அவசியமானது. 

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதலே ஆன்மீகம் ஆகும். எனவே, எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராயினும் தங்களது ஆன்மாவைத் தூய்மையுடன் வைத்திருந்தால் அவர்களே உண்மையான ஆன்மீகவாதியாகின்றார்கள். இவர்களே மேலான இறைவனுடன் இணைபவர்களுமாகின்றனர்.  

மானுட நேயம் அற்றவர்கள் கடவுளுக்கும் எதிரானவர்கள் தான். பணமும் படையும் வீடும் சொத்தும் அவற்றைப் பெரிது எனக் கொள்பவர்களுக்கே பெரிதெனப்படும்; கடவுளுக்கு அல்ல! 

அன்பானவர்களை ஈசன் நேசிக்கிறான். நல்லோரின் சின்ன இதயத்தில் சிங்காரமாகக் குடிகொண்டிருக்கிறார். எனவே, இத்தகையோருக்குத் துயர் ஏது? சதா சந்தோசம்தான். 

கடவுளின் வீடு நல்லோர் உள்ளம்தான்.  

  • தொடங்கியவர்

சுயமாக சிந்திக்கத் தொடங்கிய ரோபோக்கள்… பதறிய ஃபேஸ்புக்..! - நிஜ ’சிட்டி’ கதை

 
 

ரோபோ

புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கிற்கும், ஃபேஸ்புக்கின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கும் ஏழாம் பொருத்தமாகவே இருக்கிறது. சமீபத்தில், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் மனித இனத்திற்கு ஆபத்துதான் என்று கருத்து தெரிவித்திருந்தார் எலான். இதை மறுத்த மார்க், “இந்தத் துறையை பொறுத்தவரை, நன்னம்பிக்கை இருந்தால் மட்டுமே முன்னே செல்ல முடியும். இதை எதிர்த்து விமர்சனம் செய்வது பொறுப்பில்லாத ஒரு செயல்” என்று சற்று காரசாரமாகக் கூறி விட, இதை வைத்து எலானை ட்விட்டரில் சீண்டியிருக்கிறார்கள். “இதைப் பற்றி நான் மார்க்கிடம் அப்போதே பேசிவிட்டேன். இந்த AI தொழில்நுட்பத்தைப் பற்றிய விழிப்புஉணர்வு மார்க்கிற்கு சற்று குறைவுதான்” என்று கலாய்த்திருக்கிறார். இப்போது எலானின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் ரோபோக்கள் குறித்து ஒரு அதிர்ச்சித் தகவல் கசிந்துள்ளது.

பாப்: “I can can I I everything else.”

அலைஸ்: “Balls have zero to me to me to me to me to me to me to me to me to.”

மேலே இருக்கும் இரண்டு வாக்கியங்களும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் நடத்தப்படும் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு AI பாட்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக்கொண்டவை. அர்த்தமில்லாத ஆங்கிலம் ஆகத் தெரிந்தாலும், அது AI பாட்கள் மட்டுமே புரிந்து கொள்ளக்கூடிய சங்கேத மொழி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மனிதன் - ரோபோ மொழி

பேரம் பேசுவது மற்றும் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற திறன்களைக் கொண்ட ரோபோக்களில், இவை இரண்டும்தான் அதிநவீனமானவை. சரியான முறையில் மென்பொருளில் எல்லைகள் வரையறுக்கப்படாததால் யாரும் எதிர்பாரா வண்ணம் இவ்விரண்டும் தன்னிச்சையாக செயல்படத் தொடங்கியுள்ளன. நேரத்தை மிச்சப்படுத்தவும், வேகத்தை அதிகப்படுத்தவும், திறனை மேம்படுத்தவும், தாங்கள் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒரு மொழியில் பேசிக்கொண்டு முடிவுகளை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. பொதுவாக, இவ்வகை ரோபோக்கள் பேசிக்கொள்வது மனிதர்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காகவே ஆங்கிலத்தில் பேசுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இவை இரண்டும் ஏதோ பாகுபலியின் காளகேலயர்கள் போல் தன்னிச்சையாக ஒரு புதிய மொழியை எழுதத் தொடங்க, இது என்னடா வம்பு என்று பதறிப் போய் ரோபோக்களை ஷட்டவுன் செய்திருக்கிறார்கள்!

என்ன பொருள்?

எந்திரன் படத்தில் ஒரு காட்சி…

நம் ‘சிட்டி’ ரோபோவை ஆபத்தானதா இல்லையா என்ற பரிசோதனை செய்து சான்று பெற Artificial Intelligence Research and Development (AIRD) நிறுவனத்திற்கு அழைத்துச் செல்வார் வசீகரன். அங்கே நிறங்களையும், வடிவங்களையும் சிட்டி புரிந்து கொண்டதா, இல்லையா என்று கண்டுபிடிக்க அங்கிருக்கும் முக்கோண, செவ்வக, சதுர வடிவத்தில் இருக்கும் பொருள்களைக் கட்டளையின்படி கையாளச் சொல்வார்கள். கிட்டத்தட்ட அதே முயற்சிதான் இங்கேயும், வித விதமான பொருள்கள் குவிக்கப்பட்டிருக்கும். இரண்டு ரோபோக்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு, ஒரு புரிதல் ஏற்பட்ட பின் அந்தப் பொருள்களை அதன் தன்மைக்கு ஏற்ப ஒன்றின் பின் ஒன்றாகப் பிரித்து அடுக்க வேண்டும். இப்போது அந்த இரண்டு வாக்கியங்களை மீண்டும் பார்ப்போம்.

பாப்: “I can can I I everything else.”

அலைஸ்: “Balls have zero to me to me to me to me to me to me to me to me to.”

ஃபேஸ்புக் ரோபோக்களின் உரையாடல்

ஏதோ உளறலாகத் தோன்றும் அந்த இரு வாக்கியங்களுக்குள் புதைந்து கிடக்கும் பொருளை AI ஏஜெண்டுகளை வைத்துக் கண்டறிந்திருக்கிறார்கள். இதில் ‘I’ மற்றும் ‘to me’ என்ற வார்த்தைகள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன. வார்த்தைகளை அதன் உண்மையான பொருளை வைத்து உபயோகிக்காமல், ஒரு சில வார்த்தைகளுக்கு அந்த இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் ஒரு பொருளை ஒதுக்கிக் கொண்டு அதன்படி பேசத் தொடங்கியுள்ளன. அதன் படி இங்கே முதல் வாக்கியத்திற்கான விளக்கம்: "I'll have three and you have everything else" (நான் மூன்று பொருள்களை எடுத்துக் கொள்கிறேன். மீதி அனைத்தையும் நீ எடுத்துக் கொள்) என்பதுதான்.

என்ன காரணம்?

இது பற்றி மேலும் விளக்கிய விஞ்ஞானி துருவ் பத்ரா (Dhruv Batra), “இந்தப் பரிசோதனையானது முழுக்க முழுக்க ரீவார்டு பாயின்ட்களை வைத்து நடத்தப்படுவது. ஒரு புரிதல் ஏற்படுவதற்காக ரோபோக்கள் பகிர்ந்து கொள்ளும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் வெகுமதி உண்டு. ஆனால், இந்தப் பகிரப்படும் வாக்கியங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்கவேண்டும் என்ற கட்டளையை நாங்கள் கொடுக்காமல் விட்டுவிட்டோம். இதனால், சுலபமாகச் செயல்பட, தங்களுக்கு உள்ளாகவே ஒரு புது மொழியை இரண்டு ரோபோக்களும் உருவாக்கிக் கொண்டுள்ளன. உதாரணமாக, ஐந்து முறை ‘I’ என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டால், மேசையில் இருக்கும் இந்தப் பொருள் 5 வேண்டும் என்று அர்த்தம் கொள்கிறது. அதற்கு ஏற்றவாறு செயல்படவும் தொடங்குகிறது” என்று விவரித்தார்.

ரோபோ

இதை எப்படித் தவிர்ப்பது?

இது நிகழ்ந்தவுடன் உடனே அந்த ரோபோக்களை நிறுத்தி வைத்த ஃபேஸ்புக் நிறுவனம் அதைச் சரி செய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. “கம்ப்யூட்டரின் பாஷை மனிதர்களுக்குப் புரிவதில்லை. அதிலும் இங்கே இரண்டு கம்ப்யூட்டர்களை பேசவைக்கும் போது, என்ன பேசிக் கொள்கின்றன என்பதை மனிதன் சுலபமாகக் கண்டறிய முடியாது. ஆங்கில மொழி பயன்படுத்தினால் மட்டுமே ரீவார்ட் பாயின்ட்டுகள் வழங்கப்படும் என்ற கட்டளை கொடுக்கப்பட்டால் இப்படி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார் துருவ் பத்ரா.

 

செயற்கை நுண்ணறிவு கொண்டு செயல்படும் அனைத்து ரோபோக்களும் தங்களுக்கென்று ஒரு மொழியை உருவாக்கி தங்களுக்குள் பேசத் தொடங்கினால், மனிதனின் பாடு திண்டாட்டமே! நம் சிம்மாசனத்தில் AIகள் அமர்ந்து ஆட்சி செய்யத் தொடங்கி விடும். எத்தனை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம்? உஷாரா இருங்க மார்க்!

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

’இன்னும் நாலு தம்பி, தங்கை வேண்டும்’ - அடம் பிடிக்கும் ரொனால்டோவின் மூத்த மகன்!

 
 

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ இன்னும் திருமணம் புரிந்து கொள்ளவில்லை. எனினும் இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். முதல் மகன் கிறிஸ்டியானோ ஜுனியர் மட்டுமே அவரின் காதலிக்குப் பிறந்தவர். கிறிஸ்டியானோ ஜூனியரின் தாயார் பெயர் வெளியிடப்படவில்லை. ரொனால்டோவுக்கு அண்மையில் பிறந்த இரட்டைக்குழந்தைகள் அமெரிக்காவைச் சேர்ந்தவர் வாடகைத் தாய்.

ரொனால்டோவுடன் மூத்த மகன்

போர்ச்சுகல் மற்றும் ரியல்மாட்ரிட் அணிகளுக்காக விளையாடும் போது, ஏழாம் எண் ஜெர்சி அணிந்துதான் ரொனால்டோ விளையாடுவார். ஏழாம் எண் அவரின் லக்கி நம்பர். கால்பந்து உலகில் ரொனால்டோவை 'CR7 ' என்பார்கள். ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ, ஜெர்சி எண்ணுக்குப் பொருத்தமாக வீட்டில் 7 சகோதர- சகோதரிகள் வேண்டுமென்று ஆசைப்படுகிறாராம். அதனால், மகனின் ஆசையைப் பூர்த்தி செய்யும்விதத்தில் தன் குழந்தைகளின் எண்ணிக்கையை ஏழாக உயர்த்த ரொனால்டோ திட்டமிட்டுள்ளார். 

ரொனால்டோவின் தற்போதையை காதலி ஜார்ஜினியா ரோட்ரிகஸ் கர்ப்பமாகியிருக்கிறார். விரைவில் ரொனால்டோவின் வீட்டில் 4வது குழந்தை தவழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே ரொனால்டோவின் விருப்பம் என்று போர்ச்சுகல் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரொனால்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ ‘எனக்குமொத்தம் ஏழு சிப்லிங்ஸ்(தம்பி/ தங்கை) வேண்டும். ஏழு தான் மேஜிக் நம்பர்’ என்று அடம்பிடிப்பதாக நாளிதழ் ஒன்றுக்கு ரொனால்டோ பேட்டியளித்துள்ளார். 

 

ஏழு கூட இன்னும் நாலு சேர்த்தா வீட்டுலயே ஒரு கால்பந்து டீம் உருவாகிடுமே Mr.CR7!

http://www.vikatan.com/

  • தொடங்கியவர்

தாங்கள் குளிப்பதற்காக குழந்தையை லாக்கரில் பூட்டி வைத்த பெற்றோர் - நெஞ்சைப் பதற வைக்கும் வீடியோ!

 

சீனப் பெற்றோர்


சீனாவைச் சேர்ந்த பெற்றோர் பொதுக்குளியலைறையில் குளிப்பதற்காக தங்கள் கைக்குழந்தையை லாக்கரில் வைத்துவிட்டுச் சென்ற வீடியோ பலரையும் பதைபதைக்க வைக்கிறது. தாங்கள் குளிப்பதற்கு குழந்தை இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக லாக்கரில் குழந்தையை அடைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர் அந்தத் தம்பதியினர். குளித்து முடித்துவிட்டு வந்தப் பிறகு குழந்தையை லாக்கரில் இருந்து வெளியில் எடுக்கின்றனர். குழந்தை கத்தியவாறே பயந்து அழுவதைப் பார்க்கும் யாருக்கும் கண்கள் கலங்கும். 


அந்த வீடியோ காட்சியில், லாக்கர் அறையின் காவலராக இருக்கும் பெண்மணியை அழைத்து லாக்கரை திறந்துவிடும்படி அந்தக் குழந்தையின் பெற்றோர் கேட்கிறார்கள். லாக்கரைத் திறந்தவுடன், குழந்தை இருப்பதைக் கண்டு அந்தக் காவல் பெண்மணி பயந்து பதறுகிறார். ஆனால், அந்த வீடியோவில் இருப்பது ஆண் குழந்தையா, பெண்குழந்தையா என்பது தெளிவாக தெரியவில்லை.  
இதற்கு சமூகவலைதளங்களில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பலரும், அந்தக் குழந்தையின் பெற்றோரை, 'சுயநலக்காரர்கள்', 'கேர்லஸ்', 'பொறுப்பில்லாதவர்கள்' என்று திட்டிவரும் அதே நேரத்தில், 

சீனப் பெற்றோர்


'இருட்டாக இருந்திருக்கும் அந்த லாக்கரில் அடைபட்டுக் கிடைக்கும் குழந்தை எப்படி பயந்திருக்கும். பாவம் அந்த சின்ன லாக்கரில் எப்படி இருந்ததோ' என்றும், 


'எப்படி இவ்வளவு பொறுப்பில்லாதவர்களாக இருக்கிறார்கள் அந்த பெற்றோர். குழந்தைகள் போகப்பொருள்கள் அல்ல. குழந்தையை விட்டுவிட்டு அப்படி என்ன குளிக்க வேண்டியிருக்கிறது' என்றும்,


'எதிர்காலத்தில் அந்த குழந்தைக்கு, கிளாஸ்ட்ரோஃபோபியா(claustrophobia), அதாவது குழந்தை தனது வாழ்க்கையில் அதீத பயத்தோடு வாழும் சூழல் ஏற்படும்' எனவும்  வருத்தத்துடன் எச்சரித்துள்ளனர். 


 

 

 

http://www.vikatan.com

  • தொடங்கியவர்

கலாம் மீதான அன்பை தூரிகையில் காட்டிய ராஜேஷ்

இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்று ஓயாமல் சொல்லி வந்தவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்.

நாட்டின் ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய அஞ்சலியையும், அன்பையும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் தன்னுடைய அன்பை தன் தூரிகையின் கைவண்ணத்தால் காட்டினார் ராஜேஷ் 

தன்னுடைய ஆறாம் விரலுக்கு தன் அன்பை அழுத்தமாக கொடுத்து கலாமின் சாதனைகளை வரைந்து சமூக வலைதளங்களில் டிரண்ட் அடித்து இருக்கிறார் ராஜேஷ்.

அவரது ஓவிய படைப்புகளை பற்றி அவரிடம் கேட்ட போது பல சுவாரஸ்ய தகவல்களை நம்மிடையே பகிர்ந்தார்.

kalam2999_09139.jpg

நீங்கள் எத்தனை வயதில் இருந்து வரைய ஆரம்பித்தீர்கள்?

நான் சிறு வயதில் இருந்தே வரைய ஆரம்பித்தேன். 1998ல் 12ம் வகுப்பு படிக்கும் போது செயல்முறை நோட்டில் வரையும் போது அதன் மீதான ஆர்வம் அதிகமானது.

அப்துல் கலாம் மீதான உங்கள் படைப்பு என்பது மிகவும் அழகாக இருக்கிறதே? 

சிறு வயதில் இருந்தே அப்துல் கலாம் மீது அதிக ஈர்ப்பு. 15வருடமாக அவரை கவனித்து வருகிறேன். அவரது முகத்தின் எல்லா அசைவுகளையும் ரசித்து வருகிறேன். அவரது மகிழ்ச்சி, கவலை, சிந்தனை, அறிவு கூர்மை இவைகளெல்லாம் முகத்தில் தெரியும்படி வரைவேன்.

இதுவரை நீங்கள் வரைந்த மொத்த படங்கள் எத்தனை? யாரையெல்லாம் வரைந்து இருக்குறீர்கள்? 

நான் 3000க்கும் மேற்பட்ட பல படங்களை வரைந்திருக்கிறேன். முக்கியமாக நாட்டின் பல தலைவர்களையும், எழுத்தாளர்களையும் வரைந்திருக்கிறேன். இதில் அப்துல் கலாம் படம் மொத்தம் 18 வரைந்திருக்கிறேன்.

தொடர்ந்து வரைகிறீர்கள் அதற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எவை?

சிறு வயதி்ல் இருந்தே வரைவது பிடிக்கும். மேலும் தொடர்ந்து வரையும் போது கண்ணெரிச்சல் ஏற்படும். அப்துல் கலாமின் படங்களை வரையும் போது அது பெரிதாக தெரிவதில்லை.

கலாம் ஓவியம்

ராஜேஷ் வரைந்திருக்கும் அனைத்து படங்களும் அசல் வடிவத்தையே பெற்றிருக்கிறது. குறிப்பாக அப்துல் கலாம் படங்களில் அவர் பேசுவது போன்றும், சிந்திப்பது போன்றும், எழுதுவது போன்றும், மாணவர்களோடு விளையாடுவது போன்றும், அவர் வடிவமைத்த ராக்கெட்டின் படத்தையும் கதை சொல்லும் வண்ணம் வரைந்து இருக்கிறார். 

http://www.vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.