Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது: மேற்கிந்திய தீவுகள் அணி குறித்து கேரி சோபர்ஸ் கண்ணீர்!

Featured Replies

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது: மேற்கிந்திய தீவுகள் அணி குறித்து கேரி சோபர்ஸ் கண்ணீர்!

 

மேற்கிந்திய தீவுகளில் கிரிக்கெட் விளையாட்டு அழிந்து வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேரி சோபர்ஸ் கண்ணீர் விட்டு அழுதார்.

kumar11.jpg

கடந்த 1970 முதல் 1980ஆம் ஆண்டுகளில் கிரிக்கெட் விளையாட்டில், மேற்கிந்திய தீவுகள் அணி அசைக்க முடியாத அணியாக  வலம் வந்தது.  இரு முறை உலகக் கோப்பையையும் கைப்பற்றியது. தொடர்ந்து 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னேறி இந்தியாவிடம் தோல்வி கண்டது. இத்தகைய கிரிக்கெட் பாரம்பரியம் கொண்ட, மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த 1995ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் கடும் சரிவை கண்டது.

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக ,டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் தற்போது 8வது இடத்தில் உள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு டெஸ்ட் தொடரை கூட மேற்கிந்திய தீவுகள் அணியால் வெல்ல முடியவில்லை.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலை குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டன் கேரி சோபர்ஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம்  கூறுகையில்,'' தாய்நாட்டுக்காக விளையாடுவது குறித்து நாங்கள் எப்போதும் பெருமிதம் கொண்டிருந்தோம்.அப்போதைய வீரர்கள் ஒரு போதும் தனிப்பட்ட சாதனைகளுக்காக விளையாடியதில்லை.

தற்போதுள்ள அணியில்,  அது போன்ற வீரர்களை காண முடியவில்லை. ஆனால் அதே வேளையில் மற்ற நாடுகள் இது போன்ற வீரர்களை கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்று வருகின்றன.  அணிக்காக எந்த தியாகத்தையும் செய்யக் கூடிய வீரர்கள் இப்போது மேற்கிந்திய தீவுகள் அணியில் இல்லை. அணிக்கு திறமையான வீரர்களை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தொய்வுதான் தற்போதைய பின்னடைவுக்கு காரணம் '' என்றார்.

கேரி சோபர்சின் இந்த பேட்டியின் போது, அவரது  கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது.

கேரி சோபர்ஸ் 1954 முதல் 1974ஆம் ஆண்டு வரை 20 ஆண்டுகள் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளையாடியுள்ளார். 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8 ஆயிரத்து 32 ரன்கள் எடுத்துள்ளார். அதோடு 235 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=54124

  • தொடங்கியவர்

http://www.espncricinfo.com/sri-lanka-v-west-indies-2015-16/content/story/931655.html

வீடியோவை இதில் பார்க்கலாம்

  • தொடங்கியவர்
‘‘எனக்காகவல்ல, தேசத்திற்காகவே ஓட்டங்களைப் பெற்றேன், சாதனைகள் ஒன்றும் பெரிதல்ல, அணிதான் முக்கியம்’’ – சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்
2015-10-23 14:37:45

(நெவில் அன்­தனி)

‘‘நான் ஒரு­போதும் எனக்­காக ஓட்­டங்­களைப் பெற்­ற­தில்லை. நான் எப்­போதும் மேற்­கிந்­தியத் தீவுகள் அணிக்­கா­கவே விளை­யா­டி­யுள்ளேன்.

 

என்னால் முடிந்­ததை செய்­த­தை­யிட்டு நான் மன­    நிறைவும் பூரிப்பும் அடை­கின்றேன்’’ என ஊட­க­வி­ய­லா­ளர்கள் முன்­னி­லையில் 79 வய­து­டைய சேர் கார்ஃபீல்ட் சோர்பஸ் தெரி­வித்தார்.

 

12886IMG_9458.jpg

 

தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் சிதத் வெத்­த­முனி, இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட்  அணித் தலைவர் மைக்கல் திசேரா, மேற்­கிந்தித் தீவு­களின் முன்னாள் தலைவர் சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வன செய­லானர் பிரகாஷ் ஷாவ்டர் ஆகி­யோரைப் படத்தில் காணலாம்.

..............................................................................................................................................................

சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ், - மைக்கல் திசேரா ஆகி­யோரை கௌர­விக்கும் பொருட்டு அவர்­க­ளது பெயர்­களைக் கொண்ட கிண்­ணத்­திற்­கான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்­டா­வது போட்­டியைக் கண்­டு­க­ளிக்கும் பொருட்டு மூன்று தினங்­க­ளுக்கு முன்னர் சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் இங்கு வருகை தந்தார்.

 

இதனை அடுத்து தாஜ்­ச­முத்ரா ஹோட்­டலில் நேற்­று­முன்­தினம் மாலை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­ட­னான சந்­திப்பில் மைக்கல் திசேரா சகிதம் கலந்­து ­கொண்டு கருத்து வெளி­யி­டு­கையில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 

தமிழர் ஒன்­றிய விளை­யாட்டுக் கழ­கத்தின் முன்னாள் தலைவர் டிலான் பிலிப்ஸின் யோச­னைக்கு அமை­யவே இலங்கை - – மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் தொட­ருக்­கான கிண்­ணத்­திற்கு சேர் கெறி சோபர்ஸ், மைக் திசேரா ஆகி­யோரின் பெயர் சூட்­டப்­பட்­டது எனவும் சிதத் குறிப்­பி­டத்­த­வ­ற­வில்லை.

 

அங்கு தொடர்ந்து பேசிய சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ், ‘‘சாத­னைகள் ஒன்றும் பெரி­தல்ல. அணிதான் முக்­கியம். அம்­மா­தி­ரி­யான வீரர்கள் தற்­கா­லத்தில் இருக்­கின்­றார்கள் என நான் எண்­ண­வில்லை.

 

அப்­ப­டி­யான வீரர்கள் இலங்­கையில் இருக்­கலாம், இங்­கி­லாந்தில் இருக்­கலாம், அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருக்­கலாம். ஆனால், மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்­கெட்­ து­றையில் அப்­ப­டி­யான வீரர்கள் இருக்­கின்­றார்கள் என என்னால் நினைத்­துப்­பார்க்க முடி­ய­வில்லை’’ என்றார்.

 

1954 முதல் 1974 வரை 93 டெஸ்ட் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டிய அவர், 26 சதங்கள், 30 அரைச் சதங்கள் அடங்­க­லாக 8,032 ஓட்­டங்­களை மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்­காக குவித்­த­துடன், 235 விக்கெட்­க­ளையும் கைப்­பற்றி தனது சக­ல­துறை ஆற்­றலை வெளிப்­ப­டுத்தி சாத­னைகள் அல்ல தேசத்­திற்­காக விளை­யா­டு­வதே முக்­கியம் என்­பதை நிரூ­பித்­தி­ருந்தார்.

 

மேற்­கிந்­தியத் தீவு­களின் முன்னாள் கிரிக்கெட் விற்­பன்னர் சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸை, பிர­மு­கர்கள் மற்றும் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்தின் தலைவர் சிதத் வெத்­த­முனி அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­போது, அவர் ஒரு மகோன்­னத சக­ல­துறை வீரர் மட்­டு­மல்­லாமல் கதைகள் சொல்­வ­திலும் வல்­லவர் என்று கூறினார். 

 

‘‘இங்­கி­லாந்தில் 1983 கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்­த­போது, ஓரி­டத்­தி­லி­ருந்து மற்­றோர் இடத்­திற்கு இலங்கை அணி­யினர் பயணம் செய்யும் நான்கு, ஐந்து மணித்­தி­யா­லங்கள் எடுக்கும். அப்­போ­தெல்லாம் எமது பயிற்­று­ந­ரான சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ், வீரர்கள் முன்னே தோன்றி கதை­களைக் கூறி எங்­களை உற்­சா­கப்­ப­டுத்­துவார்’’ என சிதத் வெத்­த­முனி தெரி­வித்தார்.

 

ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்கும் போதெல்லாம் தெளி­வான பதில்­களை வழங்­கிய சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ், கதை­க­ளையும் கூறி ஊட­க­வி­ய­லார்­களை வயிறு குலுங்க சிரிக்க வைத்­ததன் மூலம் சிதத்தின் கருத்தை மெய்ப்­பித்­துக்­காட்­டினார்.

 

கிரிக்­கெட்டில் முப்­பெரும் சக்­திகள் பற்றி தெரி­யு­மான என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேட்­ட­போது, முப்­பெரும் சக்தி என்றால் என்­ன­வென சேர் கறி பதில் கேள்வி தொடுத்தார்.

 

எனினும், சில நிமி­டங்கள் கழித்து சாது­ரி­ய­மாக பதி­ல­ளித்த அவர் தென் ஆபி­ரிக்­கா­வுக்கு ஆளுமைக் குழுவில் பெரும் பங்­கி­ருக்க வேண்டும் என்றார்.

 

இலங்கை அணிக்கு 1980களில் பயிற்சி அளித்­ததை நினை­வு­கூர்ந்த சேர் கார்ஃபீல்ட் சோபர்ஸ், ‘‘இன்னும் பத்து வரு­டங்­களில் உலக கிரிக்கெட் அரங்கில் இலங்கை பலம் வாய்ந்த அணி­யாக உயர்ந்து நிற்கும்’’ எனக் கூறி­யி­ருந்தார்.

 

1996 உலகக் கிண்ணப் போட்­டி­களில் இலங்கை சம்­பி­ய­னா­ன­போது சேர் கறியின் கருத்து சரி­யா­னது என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டது.

 

‘‘நான் இங்கு பயிற்சி அளிக்க 1982இல் வருகை தந்­த­போது இளம் வீரர் ஒரு­வரைப் பற்றி என்­னிடம் கூறப்­பட்­டது. அதன் பின்னர் மைதா­னத்­திற்கு சென்று வீரர்கள் ஓய்­வ­றை­யி­லி­ருந்து அந்த சிறு­வனின் துடுப்­பாட்ட ஆற்­றலை நேர­டி­யாக கண்டு ஆச்­ச­ரி­ய­ம­டைந்தேன்.

 

அவர் வேறு யாரு­மல்ல அர்­ஜுன ரண­துங்க ஆவார். அந்த சந்­தர்ப்­பத்தில் இலங்­கையில் அதி சிறந்த நுட்­பத்­தி­ற­னு­ட­னான பயிற்சி கட்­ட­மைப்பு இருந்­ததை நான் அவ­தா­னித்தேன்’’ என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

 

இலங்­கையின் முன்னாள் துடுப்­பாட்ட வீரர் மகா­தேவன் சதா­சிவம் என்­பரை அறி­வீர்­களா என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேட்­ட­போது, ‘‘நான் அவ­ருடன் ஒன்­றாக அமர்ந்து பானங்கள் பரு­கி­யுள்ளேன்’’ என பதி­ல­ளித்தார்.

 

இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் பற்றி கேட்­ட­போது, அவர் கண்­களை அகல விரித்து பின்­வ­ரு­மாறு கூறினார்,

 

‘‘இரு­பது 20 கிரிக்கெட் போட்­டிகள் எல்­லா­வற்­றையும் விழுங்­கி­விட்­டன. மற்­றைய நாடு­க­ளை­விட மேற்­கிந்­தியத் தீவுகள் கிரிக்கெட் து­றையை இவ் விளை­யாட்டு பெரிதும் பாதித்து விட்­டது.

 

மிகச் சாதா­ரண குடும்­பங்­களைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் தங்­க­ளது குடும்ப நல­னுக்­காக அவர்கள் இவ்­வகை கிரிக்கெட் விளையாட்டில் ஈடு­ப­டு­கின்­றனர். தனது வீரர்கள் ஐ. பி. எல்.லில் விளை­யா­டு­வதை இங்­கி­லாந்து கட்­டுப்­ப­டுத்தி வரு­கின்­றது.

 

ஆனால் எங்­களால் அதனை செய்ய முடி­யாமல் போயுள்­ளது. என்னைப் பொறுத்­த­மட்டில் கிரிக்கெட் என்­பது டெஸ்ட் கிரிக்­கெட்தான். அதற்குப் பின்­னர்தான் 50 ஓவர் கிரிக்கெட். 

 

இதே­வேளை, சேர் கார்ஃபீல்ட் சோபர்­ஸுடன் தனது பெய­ரையும் இணைத்து கிரிக்கெட் தொடர் நடத்­தப்­ப­டு­வ­தை­யிட்டு தான் பெருமை அடை­வ­தாக மைக்கல் திசேர குறிப்­பிட்டார்.

 

1967இல் இங்கு வருகை தந்த சேர். கறி தலை­மை­யி­லான மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ராக சரா ஓவலில் நடை­பெற்ற போட்­டியில் இயன் பீரிஸீம் நீல் சண்­மு­கமும் கடைசி விக்­கெட்டில் பகிர்ந்த 110 ஓட்­டங்­களை அவர் நினை­வு­கூர்ந்தார்.

 

1975 உலகக் கிண்ணப் போட்­டி­களில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு விடுத்த சவால் குறித்து ‘மெட்ரோ நியூஸ்’ நினை­வு­ப­டுத்­தி­ய­போது,

 

‘‘அந்தப் போட்டி மகத்­தா­னது. டெனிஸ் லில்லி, ஜெவ் தொம்சன் போன்ற வேகப்­பந்து வீச்­சா­ளர்­களைப் பொருட்­ப­டுத்­தாமல் எமது அணி துணிச்­ச­லுடன் விளை­யா­டி­யது.

 

அப் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லியா 5 விக்­கெட்­களை இழந்து 328 ஓட்­டங்­களைப் பெற்­றது. நாங்கள் 4 விக்­கெட்­களை இழந்து 276 ஓட்­டங்­களைக் குவித்தோம். அது ஒரு சிறப்­பான போட்­டி­யாகும்’’ என பதி­ல­ளித்தார்.

 

தங்­களைப் போன்று இப்­போது சிறந்த வீரர் யார் எனக் கரு­து­கின்­றீர்கள் என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் அவ­ரிடம் கேட்­ட­போது,

‘‘தற்­கால வீரர்­களை முற்­கால வீரர்­க­ளுடன் ஒப்­பி­ட­வேண்டாம், ஒப்­பி­டவும் முடி­யாது. ஏனெனில், அன்று நாங்கள் கையுறை, பாத காப்பு, ஆண் உறுப்பு காப்பு ஆகியவற்றை மாத்திரம் அணிந்து விளையாடினோம்.

 

ஆனால், இப்போது தலைக்கவசத்திலிருந்து பாதம்வரை எத்தனையோ காப்புகளுடன் வீரர்கள் விளையாடுகின்றனர்.

 

மேலும் எமது காலத்தில் நெஞ்சுக்கு நேரே பந்துவீச கட்டுப் பாடுகள் இருக்கவில்லை. ஆனால், இன்று இடுப்பளவுக்கு இரண்டு பந்துகளை வீசிவிட்டால் அந்த பந்து வீச்சாளருக்கு பந்து வீச தடை விதிக்கப் படுகின்றது. இப்படி இருக்கையில் தற்கால வீரர்களையும் முற்கால வீரர் களையும் ஒப்பிட முற்படாதீர்கள்’’ என பதிலளித்தார்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=12886#sthash.UU5N6Xfb.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.