Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.பி.எல். தொடரில் சென்னை இருக்காது தோனி இருப்பார்!

Featured Replies

ஐ.பி.எல். தொடரில் சென்னை இருக்காது தோனி இருப்பார்!

 

சென்னை அணியின் நிர்வாகியாக இருந்த குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், சென்னை அணிக்கும் 2 ஆண்டுகள் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

doni.jpg

வரும் 2016, 17ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி இடம் பெறாது. அதே போல் ராஜஸ்தான் அணிக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், அந்த அணியில் இரு ஆண்டுகள் ஐ.பி.எல். தொடரில் தலை காட்ட முடியாது. இந்த இரு அணிகளுக்கும் பதிலாக மாற்று இரு அணிகளை உருவாக்க ஐ.பி.எல். நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் , சென்னை அணியின் கேப்டன் தோனி நேற்று  இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரும் சென்னை அணியின் முன்னாள் நிர்வாகியுமான ஸ்ரீநிவாசனின் பங்களாவுக்கு சென்றார். அவரது வீட்டில் காலை உணவு அருந்திய தோனி, சில முக்கியமான விவகாரங்களை ஸ்ரீநிவாசனுடன் பேசியதாகத் தெரிகிறது. சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பின் போது,  தற்போதையை நிலையில் தோனி சென்னை அணியை விட்டு விலகி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வேறு ஐ.பி.எல். அணியில் விளையாட முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்து நேரில் பேசவே ஸ்ரீநிவாசனை அவர் நேரில் சந்தித்தாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டு காலம் சென்னை அணி விளையாட முடியாமல் போனால், தோனி மட்டுமல்ல அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே பாதிக்கப்படுவார்கள்.

 சென்னை அணியில் பிரன்டென் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா, அஸ்வின் போன்ற இன்னும் பல நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையுமே விடுவிப்பது குறித்து தோனியிடம் ஸ்ரீநிவாசன் விவாதித்தாகத் தெரிகிறது.  ஆனால் அதே வேளையில் தடை காலம் முடிந்த பின்னர்,விடுவித்த வீரர்களை  மீண்டும் அணிக்கு கொண்டு வருவது, அதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும் தோனியுடன் ஸ்ரீநிவாசன் விவாதித்துள்ளார்.

இரு ஆண்டு காலத்திற்கு தோனி, மெக்கல்லம் உள்ளிட்ட வீரர்களை விடுவிப்பதுதான் நல்லது என்பதை ஸ்ரீநிவாசன் உணர்ந்திருப்பதாகவே தெரிகிறது. ஏனென்றால் தோனி, மெக்கல்லம் போன்றவர்கள் விளையாட முடியாத பட்சத்தில் ஐ.பி.எல். தொடரே சுவாரஸ்யத்தை இழந்து விட வாய்ப்பிருக்கிறது என்பதையும் அவர் உணர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/article.php?aid=54165

  • தொடங்கியவர்

எங்கே செல்வார் தோனி

dhoni, chennai

பிரிமியர் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் நீக்கம் உறுதி செய்யப்பட்டதால், தோனி, அஷ்வின் போன்றோரின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

ஆறாவது பிரிமியர் தொடரில் சூதாட்ட பிரச்னை வெடித்தாலும் வெடித்தது, இன்னும் ஓய்ந்த பாடில்லை. மாறாக புகைந்து கொண்டு தான் உள்ளது. 

இந்த சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக இருந்த சீனிவாசன் பதவி விலக நேரிட்டது. இவருக்குப் பதில் வந்த டால்மியா மரணம் அடைய, புதியதாக வந்த ஷசாங்க் மனோகர் கிரிக்கெட்டை சுத்தப்படுத்துகிறேன் என களமிறங்கி விட்டார்.

இதன் ஒரு பகுதியாக சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு ஆர்.எம்.லோதா கமிட்டி விதித்த 2 ஆண்டு தடையை அமல்படுத்த முடிவு செய்தார்.

இதையடுத்து வரும் 2016, 17 பிரிமியர் தொடரில் இந்த இரு அணிகள் பங்கேற்க முடியாது.

வலுவான சென்னை:

கடந்த 2010, 2011ல் சாம்பியன், 2008, 2012, 2013, 2015 என, நான்கு தொடர்களில் பைனலுக்கு முன்னேறிய பலமான அணி சென்னை. 

கேப்டனாக தோனி, தமிழகத்தின் அஷ்வின், ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட இந்திய வீரர்கள், டுபிளசி எந்த நேரத்திலும் கைகொடுக்கும் ‘ஆல் ரவுண்டர்’ பிராவோ என, அசத்தலான ‘செட்டப்பில்’ உள்ளது.

வரவேற்பு இருக்குமா:

இப்போது இதற்கு வேட்டு வைத்து விட்டனர். சென்னை அணி இல்லாத பிரிமியர் தொடர் எப்படி ரசிகர்களிடம் வரவேற்பு பெறப் போகிறது எனத் தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க அடுத்த இரு தொடரில் தோனி, ரெய்னா புதிய அணியில் விளையாடுவார்களா அல்லது இரு ஆண்டுகள் ‘பிரேக்’ எடுப்பார்களா, ஒருவேளை ஏலத்தில் பங்கேற்கும் நிலை ஏற்படுமா என, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

புதிய திட்டம்:

இதனிடையே வரும் தொடரில் புதியதாக இரு அணிகள் இரு ஆண்டுக்கு மட்டும் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்நிலையில் சென்னை, ராஜஸ்தான் அணியில் உள்ள தோனி, ரெய்னா, அஷ்வின், ரகானே, ஜடேஜா உள்ளிட்ட ‘டாப்–5’ முன்னணி வீரர்களை சரியான அளவில் பிரித்துக் கொள்ள பி.சி.சி.ஐ., சார்பில் புதிய திட்டம் செயல்படுத்த உள்ளனர்.

மற்றபடி இரு அணியிலும் மீதமுள்ள வீரர்கள் அனைவரும் ஏலத்துக்கு வருவர் எனத் தெரிகிறது. அதேநேரம், இந்த புதிய அணிகள் 2 ஆண்டுக்கு மட்டும் தான் பங்கேற்கும். 

மீண்டும் ‘8’:

ஏனெனில், 2018 தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் திரும்பும் பட்சத்தில் 10 அணிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். இதற்கு பி.சி.சி.ஐ., தலைவர் ஷசாங்க் மனோகர், எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

எது எப்படி இருந்தாலும் 8 அணிகள் மட்டும் தொடரில் பங்கேற்றால் போதும் என எண்ணுகிறார்.

அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் புதிய அணியில் இடம் பெறும் தோனி, ரெய்னா உள்ளிட்டோர் மீண்டும் சென்னை அணிக்கு திரும்புவார்களா எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. 

http://sports.dinamalar.com/2015/10/1445707402/dhonichennai.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.