Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடிக்க பாய்ந்தார் காம்பிர்: அபராதத்துடன் தப்பினார்

Featured Replies

அடிக்க பாய்ந்தார் காம்பிர்: அபராதத்துடன் தப்பினார்

 

 

gambhir, cricket

புதுடில்லி: கிரிக்கெட் ஒரு ‘ஜென்டில்மேன்’ ஆட்டம் என்பர். இதற்கு, காம்பிரின் நடவடிக்கை கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாமல் உள்ளது. களத்தில் இவரது அடாவடி தொடர்கிறது. ரஞ்சிக் கோப்பை போட்டியில் பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றார். இதை தடுக்க வந்த அம்பயரையும் இடித்து தள்ளினார்.

ரஞ்சிக் கோப்பை தொடரின் நான்காவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. டில்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட்டியில் டில்லி, பெங்கால் அணிகள் மோதுகின்றன.

இதன் 3வது நாளான நேற்று பெங்கால் அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. சாட்டர்ஜி அவுட்டானதும், பெங்கால் அணி கேப்டன் மனோஜ் திவாரி தொப்பியுடன் களமிறங்கினார்.

அப்போது வேகப்பந்துவீச்சாளர் மனன் சர்மா தனது 8 வது ஓவரை வீசினார். இதை கவனித்த திவாரி, பவுலரைப் சற்று நிற்கும் படி கூறினார். பின் பெவிலியனை நோக்கி பாதுகாப்புக்காக  ‘ஹெல்மெட்’ கொண்டு வருமாறு ‘சிக்னல்’ செய்தார். 

இது நேரத்தை கடத்தும் செயல் என உணர்ந்து கொண்ட டில்லி வீரர்கள் கோபப்பட்டனர். திவாரியோ, மனன் சர்மாவை நோக்கி சற்று பொறுமையாக இருக்குமாறு தெரிவித்தார்.

அவ்வளவு தான், ‘ஸ்லிப்’ பகுதியில் நின்று கொண்டிருந்த டில்லி அணி கேப்டன் காம்பிருக்கு வழக்கம் போல கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

திவாரியை நோக்கி திட்டத்துவங்கினார். ஒரு கட்டத்தில் திடீரென,‘ போட்டி முடிந்ததும் மாலையில் வா, உன்னை அடிக்கிறேன்,’ என்றார். அதற்கு திவாரி,‘ ஏன் மாலை வரை காத்திருக்க வேண்டும், இப்போதே வா, ஒரு கை பார்த்து விடலாம்,’ என்றாராம்.

உடனே கையை குவித்துக் கொண்டு திவாரியை அடிக்கப் பாய்ந்திருக்கிறார் காம்பிர். இதைச் சற்றும் எதிர்பாராத அவர், அங்கிருந்து பின் வாங்கினார். அப்போது பவுலர் பகுதியில் நின்று கொண்டிருந்த அம்பயர் ஸ்ரீநாத், வேகமாக ஓடி வந்து இருவருக்கும் இடையில் புகுந்தார்.

இருப்பினும் கோபம் குறையாத காம்பிர், அம்பயர் ஸ்ரீநாத்தை பிடித்து தள்ளி விட்டார். 

இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு காம்பிர், திவாரிக்கு ‘மேட்ச் ரெப்ரி’ வால்மிக் பக் சம்மன் அனுப்பினார். 

கிரிக்கெட் விதிகளின் படி அம்பயர்களை தொடுவது மிகப் பெரும் குற்றம். நிலைமை இப்படி இருக்க அம்பயர் ஸ்ரீநாத்தை பிடித்து கீழே தள்ளிய காம்பிருக்கு பெரியளவில் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெறும் அபராதத்துடன் தப்பினார்.

70 சதவீதம் அபராதம்:

இதுதொடர்பான விசாரணைக்கு திவாரி ஆஜராகவில்லை. காம்பிரிடம் மட்டும் விளக்கம் கேட்ட ‘மேட்ச் ரெப்ரி’ வால்மிக் பக், போட்டி சம்பளத்தில் காம்பிருக்கு 70 சதவீதம், திவாரிக்கு 40 சதவீதம் அபராதமாக விதித்தார்.

‘வீடியோ’ பாருங்கள்

 

சம்பவம் குறித்து மனோஜ் திவாரி கூறுகையில்,‘‘ காம்பிர் மீது அதிக மரியாதை உள்ளது. ஆனால், இம்முறை எல்லை மீறிய இவர், தனிப்பட்ட முறையில் அதிகமாக விமர்சனம் செய்தார். இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இடையில் புகுந்த அம்பயரையும் தள்ளி விட்டார். மற்றபடி என்மீது எவ்வித தவறும் இல்லை. இதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது,’’ என்றார்.

காரணம் என்ன

மனோஜ் திவாரி கோல்கட்டாவை சேர்ந்தவர். பிரிமியர் தொடரில் 2008–09ல் டில்லி அணியில் இருந்தார். பின் 2010 முதல் 2013 வரை கோல்கட்டாவுக்கு விளையாடினார். 2014ல் அணி நிர்வாகம் கழற்றி விட, தற்போது மீண்டும் டில்லி அணியில் உள்ளார். இவ்விஷயத்தில் கோல்கட்டா கேப்டனாக உள்ள காம்பிர் மீது பகை இருக்கும் எனத் தெரிகிறது. இதை மனதில் கொண்டு தான் நேற்றைய மோதல் பெரிதாக வெடித்துள்ளது.

காம்பிர் மறுப்பு

 

டில்லி அணி கேப்டன் காம்பிர் கூறியது:

பெங்கால் அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. 2வது இன்னிங்சில் இக்கட்டான நேரத்தில் மனோஜ் திவாரி களமிறங்கினார். கூடுதல் நெருக்கடி தரும் வகையில் அவரை சுற்றி பீல்டர்களை நிறுத்தினோம். இதனால் அடுத்த பந்தை எதிர்கொள்ள சற்று நேரம் எடுத்துக் கொண்டார். நேரத்தை செலவிடாமல் விளையாட பாருங்கள் என, சக வீரர்கள் கூறினர்.

உடனே டில்லி வீரர்களை பார்த்து திட்டத் துவங்கினார். இதைப் பார்த்த நான், ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என கேட்டேன். அம்பயர்கள் உள்ளே புகுந்து விலக்கி விட்டனர். இது தான் நடந்தது. இதில் அம்பயர்களை தள்ளி விடவே இல்லை.

திவாரியை அடிக்கும் வகையில் மிரட்டவும் இல்லை. இதற்கான வீடியோ ஆதாரம் இல்லை. அதேநேரம் திவாரி தான் சங்வானை பிடித்துத்தள்ளினார். இதற்கு ஆதாரம் உள்ளது. இருப்பினும் நான் புகார் எதுவும் தரவில்லை.ஆனால், நான் தான் அம்பயரை தள்ளியதாக  ‘மீடியா’ செய்தி வெளியானது. இது தவறு.

இவ்வாறு காம்பிர் கூறினார்.

‘இவர் இப்படித் தான்’

காம்பிர் எல்லைமீறுவது இது முதல் முறையல்ல. இவரது சில மோதல்கள்...

அப்ரிதிக்கு ‘இடி’

கடந்த 2007 (‘டுவென்டி–20’) உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்ரிதியுடன் மோதலில் ஈடுபட்ட காம்பிர், ரன் எடுக்க ஓடிய போது, தனது வலது முழங்கையில் அப்ரிதியை இடித்தார். பின் இருவரும் வார்த்தைப் போரில் ஈடுபட அம்பயர்கள் தலையிட்டு பிரித்தனர்.

பின் 2012ல் இந்தியா வந்து போது நடந்த ஒருநாள் தொடரிலும் இவர்கள் மோதிக் கொண்டனர்.

வாட்சனுக்கு ‘குத்து’:

கடந்த 2008ல் இந்தியா வந்த ஆஸ்திரேலிய அணி டில்லி டெஸ்ட் போட்டியில் மோதியது. அப்போது வாட்சனுடன் தகராறு செய்த காம்பிர், தனது இடது முழங்கையினால் குத்தினார். இவ்விஷயத்தில் ஒரு டெஸ்டில் பங்கேற்க காம்பிருக்கு தடை விதிக்கப்பட்டது.

கோஹ்லியை நோக்கி...

கடந்த 2010ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், தனக்கு எதிராக ‘அவுட்’ கேட்ட கம்ரான் அக்மலுடன் சரிக்கு சரியாக மல்லுக்கட்ட தயாரானார் காம்பிர். ஒருவழியாக அம்பயர்கள் வந்து விலக்கி விட்டனர்.

ஆறாவது பிரிமியர் தொடரில் (2013) கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின. இதில் அவுட்டான கோஹ்லியை நோக்கி, களத்தில் இருந்த காம்பிர் ஏதோ சொல்ல, உடனே வேகமாகத் திரும்பி வந்தார் கோஹ்லி. இருவரும் ஆக்ரோஷமாக வார்த்தைகளை பரிமாற, சக வீரர்கள் வந்து பிரித்து விட்டனர்.

டிராவிட்டினை பார்த்து...

இதே ஆண்டில் மற்றொரு லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் மோதின. இதில் பேட்டிங் செய்த மன்விந்தர் பிஸ்லாவை நோக்கி, பந்தை எறிவது போல வாட்சன் (ராஜஸ்தான்) மிரட்ட, இருவருக்கும் வார்த்தைப் போர் ஏற்பட்டது. ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் தலையிட்டு சமாதானம் செய்ததை ஏற்காத பிஸ்லா, தொடர்ந்து வாதிட்டார். உடனே எதிர் முனையில் இருந்த காம்பிரும் ஓடிவந்து, டிராவிட்டுடன் மோத, அம்பயர்கள் பிரித்து வைத்தனர். 

கம்ரானுடன் மோதல்

மற்றொரு முறை தனக்கு எதிராக ‘பவுன்சர்’ வீசிய தென் ஆப்ரிக்க பவுலர் ஆந்த்ரே நெல்லுடன் மல்லுக்கு நின்றார்.

http://sports.dinamalar.com/2015/10/1445706402/gambhircricket.html

  • தொடங்கியவர்

அப்ரிடிக்கு' இடி' வாட்சனுக்கு 'குத்து ; கவுதம் கம்பிர் கிரிக்கெட்டின் நிஜ 'தாதா'!

 

ழக்கமாக கால்பந்து போட்டிகளில்தான் வீரர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. ஏனென்றால் அது 'பாடி காண்டக்ட் கேம்'. வீரர்கள் ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு விளையாடுதால் தள்ளு முள்ளு ஏற்படுவது கால்பந்து போட்டிகளில் வாடிக்கையானதுதான். 

kampi.jpg

இதனால் கால்பந்து போட்டிகளில் மோதல் நடந்தால் சகஜமாக எடுத்து கொள்ளவார்கள். ஆனால் இப்போது கால்பந்து போன்றே கிரிக்கெட்டும் மாறி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை கவுதம் காம்பீர் அனேக வீரர்களிடம் சண்டை போடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சர்வதேச அளவில் பல முன்னணி வீரர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ள, கம்பிர் நேற்று டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் பெங்கால் அணியின் கேப்டன் மனோஜ் திவாரியை தாக்க முயன்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மோதலை தடுக்க வந்த, நடுவர் ஸ்ரீநாத்தையும் தள்ளி விட்டார்.

அதோடு 'போட்டி முடிந்ததும் மாலையில் உன்னை அடிக்கிறேன்' என்று கவுதம் கம்பிர் கத்த, அதற்கு 'இப்போதே ஒரு கை பார்த்து விடலாம்' என்று மனோஜ் திவாரி ஆவேசமடைய நேற்று டெல்லி மைதானத்தில் பெரும் களேபரமே ஏற்பட்டது. இதனை பார்த்து பதற்றமடைந்த நடுவர் ஸ்ரீநாத் குறுக்கே வர, அவரை கீழே தள்ளினார் கம்பிர்.

ரஞ்சி கோப்பைக்கான போட்டியில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து போட்டி நடுவர் வால்மிக் பக், கவுதம் கம்பிருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 70 சதவீதத்தையும் மனோஜ் திவாரிக்கு 40 சதவீதத்தையும் அபராதமாக விதித்தார். ஆனால் நடுவரை தள்ளி விட்டதற்காக மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவுதம் கம்பிர் போட்டி கட்டணத்தில் 70 சதவீத அபராதத்துடன் தப்பித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மனோஜ் திவாரி ஐ.பி.எல். சீசனில் 2008மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் டெல்லி அணிக்காக விளையாடினார். தொடர்ந்து 2010 முதல் 3 ஆண்டுகள் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இந்த சமயத்தில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பிருடன் கருத்து வேறுபாடு இருந்திருக்கும் போலத் தெரிகிறது. அந்த பகைமைதான் இப்போது வெளிப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிகளில் விளைவுதான் களத்தில் இதுபோன்ற பகை உணர்வை ஏற்படுத்துவதான  இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பிஷன் சிங் பேடியும் கருத்து தெரிவித்துள்ளார்.

afri.jpg

கம்பிர் எதிரணி வீரர்களிடம் இது போன்று பல முறை மோதலில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அப்ரிடியுடன் கம்பிர் மோதலில் ஈடுபட்டார். பின்னர் ரன்னுக்கு ஓடும் போது, அப்ரிடியை முழங்கையால் இடித்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு  இந்தியாவுடன் ஆஸ்திரேலிய அணி டெல்லியில் டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது. இந்த போட்டியின் போது, வாட்சனுடன் தகராறு செய்த கம்பிர், அவரை முழங்கையால் குத்தினார். கவுதம் கம்பிருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு கொல்கத்தா, பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் விக்கெட்டை பறிகொடுத்த விராட் கோலியை பார்த்து கம்பிர் ஏதோ சொல்ல, அவரும் இவரை நோக்கி வர மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சகவீரர்கள் இருவரையும் பிரித்து விட்டனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=54194

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.