Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். - கருணாநிதி.

Featured Replies

தமிழீழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். - கலைஞர்.கருணாநிதி.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று வியாழக்கிழமை நிறைவேறியது. முதல்வர் கருணாநிதி முன்மொழிந்த இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே. மணி இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறி முதல்வர் கருணாநிதி தாமே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:

கடந்த சில நாள்களுக்கு முன்பு டில்லி சென்றிருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஈழத்தமிழர்களின் நிலை காரணமாக உலகத் தமிழர்களின் ஆதங்கம் குறித்து நான் எடுத்துக் கூறியிருக்கிறேன்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் டில்லியில் இருப்பவர்களைச் சந்தித்தாலும் அல்லது அவர்கள் இங்கே வரும்போது சந்தித்தாலும் இதை விளக்கிக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் பிறகு சட்டசபையிலேயே ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் என்ன என்ற அந்தத் துடிப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

மணி இதை அணுகுகின்ற அதே கோணத்தில் சுதர்சனம் அணுகுவாரா என்றால் இல்லை. உணர்வைப் பொறுத்த வரையில் ஒன்றுதான். ஆனால் வேறு சில பிரச்சினைகளில், விஷயங்களில் எல்லோரும் ஒரே மாதிரி அணுக முடியாது. அதைப் போல நம்முடைய கோவிந்தசாமி அணுக முடியாது. இவர்கள் அணுகுவதை விட வேகமாக அணுகக் கூடியவர்கள் நம்முடைய விடுதலை சிறுத்தைகள். எனவே பேரவை உறுப்பினர்களிடையிலேயே, இதை அணுகுகின்ற முறையில் வேறுபடுகின்றோம். மாறுபடவில்லை வேறுபடுகிறோம்.

ஆனால் இலங்கைத் தமிழர்களை எப்படி வாழவைப்பது எப்படி காப்பாற்றுவது என்பதில் தான் வேறுபட்ட எண்ணங்கள் இருக்கின்றன. ஆற, அமர யோசித்துப் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். நாளைக்கு ஆட்சியை விட்டு விட்டு வந்தால் மறு நாள் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். வந்தாலும் கிடைக்காதென்றால் இதை விட்டு என்ன பலன்?

ஆகவே எதைச் செய்தால் தமிழ் ஈழம் கிடைக்கும் அல்லது அங்கே இருக்கின்ற தமிழ் மக்கள் அமைதியாக வாழ முடியும் என்று நாம் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆகவே இங்கே நாம் தனியாக ஒரு தீர்மானத்தைப் போட்டு மத்தியில் இருப்பவர்களுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்க வேண்டிய அவசியமில்லை. நாமும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய தேவையில்லை. ஆகவே ஒரு தீர்மான வாசகமாகவே சொல்கிறேன். அதை தீர்மானமாக ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தீர்மான வாசகம்: "இலங்கையில் தமிழ் மக்களின் உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மேலும் மோசமான அளவில் தொடர்வதற்கு இச் சட்டப்பேரவை ஆழ்ந்த வேதனையைத் தெரிவிப்பதோடு, இதற்கோர் முடிவினைக் காண இலங்கைத் தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று அமைதியாக வாழ்ந்திட இந்தியப் பேரரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இப் பேரவை, இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இத் தீர்மானம் பின்னர் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

www.sankathi.com

அதுக்கு தானே சொல்லுகிறோம் மத்திய அரசின் கொள்கையை விட்டு ஈழத்தமிழர் பிரச்சனையில் உங்கள் கொள்கையை வெளிப்படுத்துங்கள் என்று................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமைச்சு வச்சா சாப்பிடுவம் என்டுறார்.

அதுக்குப் பிறகு தமிழீழத்திற்கு தன்னை முதலைமைச்சாராக்குங்கள் தலைவனாக்கு என்று ஒற்றைக்காலில் நின்றாலும் நிற்பார் உந்த ஐயா. யார் குத்தினால் என்ன நெல் அரிசியானால் சரி.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா, முதல்வரே தாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும். தமிழீழம் பிறப்பதைக் உங்கள் கண்களால் காணவேண்டும். அதை ஏற்று சட்டசபையில் தீர்மானம் முழங்க வேண்டும். அதுவே உலகத் தமிழரின் அவா! இப்போதைக்கு கனிமொழி அக்காவிற்கு பேச்சுச் சுதந்திரம் கொடுத்தால் அதுவே போதும்.

  • தொடங்கியவர்

தமிழ் ஈழம் கிடைப்பதற்காக ஆட்சியை கைவிடவும் தயார் முதல்வர் கருணாநிதி தெரிவிப்பு.

Sunday, 10 December 2006.

தமிழ் ஈழம் கிடைக்குமென்றால் தமிழக ஆட்சியை நாளையே கைவிடத் தயாரென தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, இலங்கைத் தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று அமைதியாக வாழ்ந்திட மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சட்ட சபை மூலம் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார்.

இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது குறித்து சட்ட சபையில் பா.ம.க. உறுப்பினர் ஜி.கே.மணி தனி கவன ஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வந்து பேசினார். அதன் மீது விவாதம் நடந்தது.

ஜி.கே.மணி

இலங்கையின் பாதுகாப்புப் படை வீரர்கள், விமானப் படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவருக்கு வேண்டுமானால், மகிழ்ச்சியை அளிக்கலாம். நமக்கு வேதனையைத் தருகிறது. தமிழர்களை கொன்று குவிப்பதற்காக இலங்கை வீரர்களுக்கு நாம் பயிற்சி கொடுக்க வேண்டுமா?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் கடலூருக்கு வந்து சென்றார். அவர் கூட `இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனே தீர்வு காண வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றார்.

சுதர்சனம் (காங்கிரஸ்)

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பது போல ஜி.கே.மணி பேசினார். அப்பிரச்சினையில் தமிழர்களுக்கு உதவி செய்ய வேண்டும், அவர்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு உள்ளது. இப் பிரச்சினையில் தலையிட்டதால் தான் எங்கள் கட்சித் தலைவர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

மத்திய அரசுக்கு உதவும் எண்ணம் இருப்பதால் தான், அங்குள்ள தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள், பால் பொருட்கள் அனுப்பி வைத்துள்ளது. இப்பிரச்சினையை எப்படி அணுகுவது என்ற முடிவை முதல்வரிடம் விட்டு விடுவோம் என்றார்.

சிவபுண்ணியம் (இ.கம்யூனிஸ்ட் ,)

இலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட வேண்டும். உலக நாடுகளில் மனித உயிர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால், கண்டிக்கும் மத்திய அரசு இலங்கை பிரச்சினையிலும் தலையிட வேண்டும் என்று மக்கள் கருதுகின்றனர் என்றார்.

முதல்வர் கருணாநிதி

"இலங்கைப் பிரச்சினையை முதல்வரால் தான் முடிக்க முடியும் என்று ஜி.கே.மணியும் அவரது கட்சி நிறுவனரும் சொல்கின்றனர். முதலமைச்சர் பதவி இருக்கிற காரணத்தால் முடியும் என்று அவர்கள் கருதுகிறார்களா அல்லது கருணாநிதியாலேயே முடியும் என்று அவர்கள் கருதுகிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

கிளின்டன் இங்கே வந்து பேசியதை கூட ஜி.கே. மணி குறிப்பிட்டார். கிளின்டன் எப்போது பேசுகிறார்? அமெரிக்க ஜனாதிபதியாக இல்லாத போது பேசுகிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது அமெரிக்க ஏகாதிபத்தியம் அவரை பேசவிட்டதா? அதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஒரு பொறுப்பு கிளின்டனுக்கு இருந்தபோது அதைப் பற்றி அவர் பேசவில்லை. பேசாததற்குக் காரணம், அவருடைய மனதிலே தயவு தாட்சண்யம் இல்லை, இரக்கம் இல்லை என்று யாரும் கருதக் கூடாது. எல்லாம் இருந்தது. இருந்தாலும், எந்த அளவில் பயன்படுத்த வேண்டுமென்ற ஒரு நெருக்கடியும் அவருக்கு இருந்த காரணத்தால், அப்போது பேசவில்லை.

இப்போது புஷ் இருக்கிறார்; பேசவில்லை. இன்னும் இரண்டு ஆண்டு காலத்திற்கு பிறகு அவர் இந்தியாவிற்கு வந்தால் பேசுவார். ஆனால், இரண்டாண்டு காலம் இலங்கைப் பிரச்சினை நீடிக்க வேண்டுமென்று நினைப்பவன் அல்ல நான். இங்கு நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் மத்தியிலே இருப்பவர்களுக்கு தெரியாமல் இல்லை.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம், டில்லியில் இருப்பவர்களை சந்தித்தாலும் அல்லது அவர்கள் இங்கே வரும்போது சந்தித்தாலும் இதை விளக்கிக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் பிறகு சட்ட சபையிலே தீர்மானம் நிறைவேற்றினால் என்ன என்ற துடிப்பு ஜி.கே.மணிக்கும் மற்றவர்களுக்கும் இருக்கிறது.

இந்தப் பிரச்சினையை சட்ட சபையில் இருப்பவர்களால் ஒரே மாதிரி அணுக முடியாது. இந்த சபையில் அமர்ந்திருக்கின்ற நாமே இதை அணுகுகின்ற முறையில் வேறுபடுகின்றோம். இலங்கையில் இருக்கின்ற தமிழர்கள் வாழக் கூடாது என்ற மாறுபாடான எண்ணம் கிடையாது. அவர்களை எப்படி வாழ வைப்பது, எப்படி காப்பாற்றுவது என்பதிலே வேறுபட்ட எண்ணங்கள் இருக்கின்றன. அவைகளை எல்லாம் நாம் ஆற அமர யோசித்துத் தான் முடிவுக்கு வர வேண்டும்.

ஆளும் கட்சியில் நாங்கள் இருக்கின்றோம். நாளைக்கே விட்டு விட்டு வரச் சொல்கிறீர்களா... வருகிறோம். வந்தால் மறு நாள் தமிழ் ஈழம் கிடைத்து விடும் வாருங்கள் என்று சொன்னால் நாங்கள் வருவதற்கு தயாராக இருக்கிறோம். வந்தாலும் கிடைக்காதென்றால் என்ன பலன்?

சில பேருக்கு பலனாக இருக்கலாம். தொலைந்தார்கள் என்று சிலர் நினைக்கலாம். எனவே, எதைச் செய்தால் தமிழ் ஈழம் கிடைக்கும் என்றோ அல்லது அங்கே இருக்கிற தமிழ் மக்கள் வாழ முடியுமென்றோ நாம் எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

அதற்காக நாம் தனியாக ஒரு தீர்மானமாக போட்டு மத்தியிலே இருப்பவர்களுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்க வேண்டிய அவசியமில்லை. நாமும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய தேவையில்லை. நான் சொல்லும் வாசகத்தையே தீர்மானமாக ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இலங்கையிலே தமிழ் மக்களின் உயிர், உடைமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, மேலும் மோசமான அளவில் தொடர்வதற்காக இந்த சட்ட சபை ஆழ்ந்த வேதனையைத் தெரிவிப்பதோடு, இதற்கோர் முடிவினைக் காண இலங்கைத் தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று அமைதியாக வாழ்ந்திட மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இந்திய அரசை சட்ட சபை கேட்டுக் கொள்கிறது.

இந்தத் தீர்மானம் அனைவருக்கும் பொதுவான தீர்மானமாக அமையும் என்று கருதி, இதை சபாநாயகர் மூலமாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

இதன் பின்னர் முதல்வரின் வாசகத்தை தீர்மானமாக சபாநாயகர் வாசித்தார். அத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேறியது.

www.tamiloosai.com

ஆளும் கட்சியில் நாங்கள் இருக்கின்றோம். நாளைக்கே விட்டு விட்டு வரச் சொல்கிறீர்களா... வருகிறோம். வந்தால் மறு நாள் தமிழ் ஈழம் கிடைத்து விடும் வாருங்கள் என்று சொன்னால் நாங்கள் வருவதற்கு தயாராக இருக்கிறோம். வந்தாலும் கிடைக்காதென்றால் என்ன பலன்?

ஆகவே இங்கே நாம் தனியாக ஒரு தீர்மானத்தைப் போட்டு மத்தியில் இருப்பவர்களுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்க வேண்டிய அவசியமில்லை. நாமும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய தேவையில்லை. ஆகவே ஒரு தீர்மான வாசகமாகவே சொல்கிறேன். அதை தீர்மானமாக ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.