Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நடந்த இரண்டு நாள் விவாதம்

Featured Replies

ஜெனிவாத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நடந்த இரண்டு நாள் விவாதம்
ஜெனிவாத் தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் நடந்த  இரண்டு நாள் விவாதம்

மிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் சபை தீர்மானத்தின் மீதான நாடாளுமன்ற இரண்டு நாள் விவாதத்தின்போது பல உறுப்பினர்கள் தமது காத்திரமான கருத்துக்களை முன்வைத்திருந்தார்கள். என்றாலும் நாட்டின் மனித உரிமை மீறல் தொடர்பாக தயாரிக்கப்பட்டிருந்த இரண்டு உள்ளக விசாரணை அறிக்கைகள் விவாதத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதாக அமைந்திருந்ததோடு அறிக்கைகள் மறைத்து வைக்கப்படுவதற்கு இடம்தராமல் போர்க்காலத்தில் இடம்பெற்ற மீறல்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துவதாக இருந்தன.

போரின்போது நிகழ்ந்த செயற்பாடுகளின் உண்மையைக் கண்டறிவதற்கான வழிமுறைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிய போதிலும், மோதலினால் பல வகைகளிலும் தாக்கங்களுக்கு உள்ளானவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமானால் உண்மையைக் கண்டறிவது மிக மிக முக்கியம் என்ற கருத்தை அனேக உறுப்பினர்கள் ஆதரித்திருந்தார்கள்.

அரசால் ஜெனிவாத் தீர்மானம் கையாளப்பட்ட விதம் குறித்து எதிர்த்தரப்பில்  கூச்சலிடுபவர்களான ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் விமல் வீரவன்ச மற்றும் தினேஷ் குணவர்த்தன போன்றவர்களும் இந்த விடயம் தொடர்பாக விவாதம்  ஒன்றை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள். சபையில் ஒத்திவைப்புப் பிரேரணையை ஐ.தே.க. உறுப்பினர் அஜித் மனம்பெரும முன்மொழிந்தார். ஐ.தே.க. காலி உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட வழிமொழிந்தார்.

விவாதம் ஆரம்பித்தவுடனேயே காரசாரமாக சூடுபிடிக்க ஆரம்பித்தது. இரண்டு ஆரம்ப பேச்சாளர்கள் எதிர்த் தரப்பினரை கார்ட்போட்டு தேசியப் பற்றாளர்கள் என்றும் ஜெனிவாத் தீர்மானத்தின்  மீது மக்களை திசை திருப்ப முனைகிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால் முதல்நாள் விவாதத்தின்போது சபையில் அமளியை ஏற்படுத்துவதாய் இருந்தது அதுவல்ல. ராஜபக்ச விசுவாசிகளாகக் கருதப்படும் உறுப்பினர்கள்  சபையில் பேசுவதற்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டமுறை குறித்துத்தான் அவர்கள் பொறுமையின்மையை வெளிப்படுத்தினார்கள். முதல்நாள் முற்பகுதி முழுக்கவும் அரச தரப்பினருக்கு ஐ.தே.க. மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி, த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில் பிற்பகலில் சந்தர்ப்பம் வழங்கப்பட்ட முறையில் அவர்கள் சீற்றமுற்றிருந்தார்கள்.

இந்த விடயத்தை விமல் வீரவன்சவும் தினேஷ் குணவர்த்தனவும் சபையில் கிளப்பினார்கள். அப்போது சபைக்கு தலைமை வகித்துக் கொண்டிருந்த ஐ.தே.கவின் முஜிபுர் ரகுமான் தமக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலின்படிதான் தாம் உறுப்பினர்களை பேச அழைப்பதாக தெரிவித்தார். இந்தப் பதிலில் திருப்தி அடையாத முன்னாள் அரசுதரப்பு கொநடாலான தினேஷ் குணவர்த்தன  எச்சரிக்கை எதுவுமின்றி சபையின் பிரதான பகுதிக்கு விரைந்து சென்று செங்கோலை அகற்றினார். அந்தச் சமயம் அதிர்ச்சிக்குள்ளானவராக பிரதி படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ செங்கோல் சபையிலிருந்து அகற்றப்படுவதைத் தவிர்ப்பதற்கு விரைந்தார். சிறு அமளியின் பின்னர் அவர் செங்கோலை அதன் உரிய இடத்தில் சேர்ப்பதில் வெற்றி பெற்றார்.

அமளியின் போது சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டிருந்த சபை மீண்டும்  ஆரம்பமானபோது அமைதியடைந்திருந்த குணவர்த்தன நடந்த சம்பவத்துக்காக  வருத்தம் தெரிவித்தார். ஒரு தவறான  அபிப்பிராயத்தின் காரணமாகவே அது நடந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மன்னிப்புக் கேட்டமை ஒருபுறமிருக்க சிரேஷ்ட உறுப்பினர்களின் நடத்தையில் அது ஒரு களங்கமான பிரதிபலிப்பாகவே காணப்பட்டது.

பிரதமர் விடுத்த அழைப்பு

இரண்டாம் நாள் விவாதத்தைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தபோது உறுப்பினர்கள் வழக்கமான கடந்தகால அரசியல் நடத்தையிலிருந்து விடுபடுமாறு கேட்டுக்கொண்டார். மக்களின் பிரச்சினைகளை ஓர் ஒருமைப்பாட்டுமுறையில் எதிர்கொண்டு தீர்க்க முன்வருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தேசிய நல்லிணக்க செயற்பாடுகளாவன எவர் மீதும் வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையல்ல என்று அவர் கூறினார்.  மாறாக பல்வேறு சமூகங்களுக்கிடையிலும் காணப்படுகின்ற  பிரிவு மனப்பான்மைகளை அகற்றுவதே நோக்கம் என்றார். நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கு  மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின்போது எல்லாவித கருத்துக்களையும் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம் என்றார். புனுகு பூனை (இரவில் செயற்படும் ஒருவகைப் பூனை) ஆட்சி முறையை நாம் விரும்பவில்லை எனறு  பிரதமர் கூறினார். புனுகு பூனை இருளில்தான் செயற்படும். அது வெளியில் வந்தால் வெளிச்சத்தில் அதனால் அரசியல் நடத்த முடியாது. எனவே அவ்வாறு இல்லாமல் நாம் கைகளை இணைத்துக்கொண்டு ஒரு ஜனநாயக சமுதாயத்தைக் கட்டியெழுப்புவோம். அதன்மூலம் மக்களின் அபிலாசைகளை  நிறைவேற்றுவோம்-என்றார்.

பிரதமரின் இவ்வித நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டுக்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்றார். நாடு முன்னேற வேண்டுமானால் சகல மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு முன்செல்ல வேண்டும் என்று கூறிய சம்பந்தன் அதே சமயம் ஜெனிவாத் தீர்மானம் நேர்மையாகவும் முழுமையாகவும் செயற்றிறனோடும் செயற்படுத்தப்படுவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அந்தத் தீர்மானத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் போரின்போது நிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தீர்வு காண்பதற்கு நடுவுநிலை விசாரணை முறையை த.தே.கூட்டமைப்பு ஆதரிப்பதாகத் தெரிவித்த சம்பந்தன் மேலும் கூறுகையில், அது முற்றும் முழுதுமாக சர்வதேச விசாரணையாக இருக்குமானால் ஒரு பகுதியினர் தங்கள்  நலன்களுக்கு அல்லது தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்று அச்சம் கொள்வார்கள். அதேசமயம்  அது முழுக்கவும் உள்ளக விசாரணையால் இன்னொரு பகுதி மக்கள் தங்கள் நலன்களைப் பாதிப்பதாக  அமைந்துவிடும் என்று அஞ்சுவார்கள். இந்த நிலைமையில் நடுவுநிலை செயற்பாடே சிறப்பானதாக இருக்கும். சர்ச்சைக்கிடமில்லாததாக மட்டுமன்றி தவிர்க்க முடியாததாகவும் அமையும். இதில் முக்கியம் என்னவென்றால் மக்கள் மத்தியில் மோதல்களை  வளர்ப்பது எமது நோக்கமில்லை என்று கூறினார்.

திசாநாயக்கவின்  உணர்ச்சிமிக்க உரை

ஜே.வி.பி. குழுத்தலைவர் அனுரகுமார திசாநாயக்க உணர்ச்சி ததும்பும் உரையொன்றை நிகழ்த்தியபோது உறவினர்களை இழந்துள்ளவர்கள் அவர்கள் எங்குள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளும் உரிமை பற்றி குறிப்பிட்டார். இதில் ஒரு முடிவு ஏற்படுவதற்கு இது முக்கியமாகும்  என்றார்.

1989 - 1990 கால பயங்கரத்தின்போது எனது அண்ணன் காணாமற்போனார். இன்று வரைக்கும் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரியவரவில்லை. எனது தாயார் அவரைத் தேடி இடத்துக்கு இடம் திரிந்ததன் அங்கலாய்ப்பையும் விரக்தியையும் நான் நேரடியாகவே பார்த்து நேரடியாக அனுபவித்தேன். இன்றும்கூட பதாகைகளையும் சுவரொட்டிகளையும் சுமந்து கொண்டு தமது பிள்ளைகளின் விவரங்களை அறிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் தாய்மாரின் துன்பதுயரமும் அதே நிலையில்தான் காணப்படுகின்றன என்று கூறினார் ஜே.வி.பி தலைவர்.

இறைமைக்கு ஆபத்து

மகாஜன எக்சாத் பெரமுன தலைவர் தினேஷ் குணவர்த்தன பேசுகையில்; ஜெனிவாத் தீர்மானம் நாட்டின் இறைமைக்கு ஆபத்தானது. அதனை இணை அனுசரணையாளராக இலங்கை அரசு அங்கீகரித்திருப்பதானது ஐ.நா.மனித உரிமை ஆணையாளரால் தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளவைகள் உண்மையானவை என்று ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளது என்றார். ஆணையாளரின் அறிக்கையிலுள்ள உண்மைக்கு மாறானவைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதாகவே இது அமைந்துள்ளது என்றார்.

போரின்போது மக்களை பட்டினியில் போட்டது அரசு என்பதாக அறிக்கை கூறுகின்றது. இது முழுமையும் உண்மைக்கு மாறானது. ஏனென்றால் போர் உச்சநிலையை அடைந்திருந்த சமயத்திலும்கூட  மக்களுக்கு உணவு அனுப்பப்படுவதை அரசு உறுதி செய்திருந்தது.  அதேபோல் போரில் 40 ஆயிரம் சிவிலியன்கள் இறந்ததாக அறிக்கை பொய் கூறுகிறது. இந்த எண்ணிக்கையை பரணகம அறிக்கை முற்றாக மறுதலித்துள்ளது என்றார் குணவர்த்தன.

இந்த நிலையில் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைப்பாட்டுக்கு மேலும் சாதகமான ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திய நிலையில் அரசு தரப்பினர் விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச விவாதத்தின்போது பிரசன்னமாய் இல்லாமல் போனமை அவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஒன்றன்பின் ஒன்றாக ஐ.தே.கட்சியினர் அடுக்குவதற்கு வாய்ப்பாக இருந்தது. அவர் மீது அவர்கள் தெரிவித்த முக்கிய குற்றச்சாட்டுக்களில் இலங்கை அரசு மேற்கொண்ட பரணகம ஆணைக்குழு உட்பட விசாரணைக்கு ராஜபக்சவே முதன்முதலில் வெளிநாட்டு நீதிபதிகளை அழைத்திருந்தவர் என்பதும் ஒன்றாகும்.


 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.