Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகரை வீழ்ச்சியுறுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த சில வாரங்களாக சிறிலங்கா படையினர் வாகைரையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். ஏ15 பாதையை மூடி வாகரைப் பிரதேசத்தில் வாழும் மக்களை பட்டினி போட்டும், தொடர்ச்சியான எறிகணை, விமானக் குண்டு வீச்சுக்களில் ஈடுபட்டும், அதே நேரம் மெதுமெதுமாகவ ஊடுருவுவதுமாக சிறிலங்கா படையினர் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

முகமாலை, கிளாலி போன்ற இடங்களில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட பேரழிவை அடுத்து, வட போர்முனையில் தன்னுடைய போர்திட்டத்தை சிறிலங்கா அரசு ஒத்தி வைத்துள்ளது. ஆயினும் வட போர்முனையில் ஏற்பட்ட தோல்வியை சமன் செய்யும் விதமாக, தனக்கு சாதகம் என்று கருதும் கிழக்குப் போர்முனையில் வெற்றி ஒன்றை பெறுவதற்கு சிறிலங்கா அரசு பெரும் ஆவலாக உள்ளது. இதன் மூலம் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை மாற்ற முடியும் என்று சிறிலங்கா அரசு நம்புகிறது.

கிழக்கில் விடுதலைப்புலிகள் நிரந்தரமான உறுதியான தளப் பிரதேசங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதை சிறிலங்கா அரசு அறிந்தே உள்ளது. விடுதலைப்புலிகள் தொடர்ச்சியான கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கொண்டிருக்காததும், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அனைத்தும் சிறிலங்கா படைகளின் எறிகணை வீச்செல்லைக்கு உட்பட்டிருப்பதும், ஒரு நிரந்தர தளப்பிரதேசம் உருவாவதற்கு பாதகமான அம்சங்களாக இருக்கின்றன.

ஆயினும் இந்த பாதகங்களையும் மீறி கிழக்கில் விடுதலைப்புலிகள் ஈழப் போர் 3இல் இருந்ததை விட பல மடங்கு பலம் பெற்றிருக்கிறார்கள். முப்படைகளையும் ஈடுபத்தி மேற்கொள்ளப்பட்ட மாவிலாறு, சாம்பூர் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் வாரக் கணக்கில் தாக்குப்பிடித்ததை இதற்கு உதாரணம் சொல்ல முடியும். விடுதலைப்புலிகளாக விலகிச் சென்ற பின்னரே அப் பகுதிகளை சிறிலங்காப் படைகளால் கைப்பற்ற முடிந்தது. விடுதலைப்புலிகள் விலகிச் சென்றது கூட சிறிலங்காப் படைகளுக்கு அடுத்த நாள்தான் தெரிய வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அதே போன்று வாகரைப் பிரதேசம் நோக்கி நடைபெற்ற வலிந்த நடவடிக்கைகளையும் விடுதலைப்புலிகள் கடும் பதிலடி கொடுத்து முறியடித்துள்ளார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்து சண்டையில் 50இற்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டும் இருந்தார்கள்.

விடுதலைப்புலிகளின் பலம் பல மடங்கு அதிகரித்துள்ளதை உணர்ந்து கொண்ட சிறிலங்கா படையினர் தற்பொழுது புதிய முறைகளை கையாளத் தொடங்கியுள்ளனர். இதன்படி தொடர்ச்சியான எறிகணை, விமானக் குண்டு வீச்சுக்களை நடத்தியபடி வாகரைப் பிரதேசத்தின் பக்கவாட்டாக ஊடுருவி, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை அரிக்கத் தொடங்கி உள்ளார்கள். அத்துடன் வாகரைப்பிரதேசத்தின் மும்முனைகளிலும் உள்ள முன்னரங்கப் பகுதிகளிலும் தினமும் விடுதலைப்புலிகளுடன் மோதல்களை நடத்தி வருகிறார்கள்.

இவைகள் அனைத்தும் பெரும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியான முறையில் நடந்து வருகின்றன. மூன்று வாரங்களுக்கு முன்னர் வாகரைப் பிரதேசத்தின் தென்மேற்குப்புறமாக மதுரங்குளத்தில் சிறிலங்கா படைகள் முன்னேறி நிலைகொண்டன. தற்பொழுது அப் பகுதியின் மேற்பக்கத்தில் உள்ள கட்டுமுறிவுக்குளப் பகுதியிலும் முன்னேறி நிலைகொண்டுள்ளன. இந்த மூன்னேற்ற முயற்சிகள் மக்கள் மிகக் குறைவாக உள்ள கிராமங்களிலும், காட்டுப்பகுதிகளிலும் நடப்பதால், அது பற்றி பெரியளவில் செய்திகள் கவனத்தை பெறவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களை வாகரைப் பிரதேசத்தின் மேற்குப் பக்கத்தில் சிறிலங்காப் படைகள் அரிக்கத் தொடங்கி உள்ளன என்பது உண்மை.

இதே வேளை வாகரையின் வடக்குப் பக்கமாக ஈச்சலம்பற்றை பகுதிகளிலும் சிறிலங்காப் படைகள் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விடுதலைப்புலிகள் பல இடங்களில் சிறிலங்காப் படைகளை தடுத்து சண்டை செய்த வண்ணம் உள்ளனர். சில நேரங்களில் ஓய்ந்து காணப்படும் இச் சண்டைகள் சில நேரம் கழித்து மீண்டும் தீவிரம் அடைகின்றன.

மெதுமெதுவாக வாகரையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே சிறிலங்காப் படைகளின் திட்டமாக இருக்கிறது. விடுதலைப்புலிகள் இழப்புக்களை தவிர்த்துக் கொண்டு விலகிச் செல்லக்கூடும். ஆனால் நூறு சதுரகிலோமீட்டருக்கும் மேற்பட்ட பரப்பளவைக் கொண்டிருக்கும் வாகரைப் பிரதேசத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு சிறிலங்கா படைகளால் ஒரு போதும் முடியாது. அதையும் மீறி வாகரைப் பிரதேசத்தை சிறிலங்காப் படைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனையுமானால் சிறிலங்காப் படைகள் பேரழிவைச் சந்திக்க வேண்டி வரும்.

அவ்வாறான ஒரு பேரழிவு விடுதலைப்புலிகள் தீர்மானிக்கும் களம் ஒன்றில்தான் நடைபெறும்.

thanks: www.webeelam.com and Member: Puthalvan for the link

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்கனவே வாகரைப்பிரதேசம் சிலதடவைகள் இருதரப்பினரிடமும் கைமாறியுள்ளது.

வாழைச்சேனையிலுள்ள இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வடக்காக சம்பூர்வரை கடற்கரையை அண்டிய ஒடுங்கிய நிலப்பரப்பே புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதில் சம்பூர்ப்பகுதி விடுபட்டுவிட்டது.

இப்போது இருக்கும் ஈச்சிலம்பற்று, வெருகல், வாகரைப் பகுதிகள்கூட கடற்கரையை அண்டிய கரையோர நிலப்பரப்புக்களே.

இப்பகுதிகளைப் பாதுகாக்கும் முன்னணிப் பாதுகாப்பரண் என்பது மிக நீளமானது.

அந்நீளமான எல்லைப்பகுதியில் எங்குவேண்டுமானாலும் படையினர் கடற்கரையை நோக்கி முன்னேற்றமுயற்சி மேற்கொள்ளலாம். அதேநேரம் மீகநீண்ட கடற்பிரதேசத்தைக் கொண்டிருப்பதால் கடல்வழியான தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டும்.

இதை எதிர்கொள்ளவும் முறியடிக்கவும் மிகப்பெரிய ஆள்வலு தேவை.

அதைவிட பின்னணித் தளப்பிரதேசமென்பது மிகவும் சிறியது.

நூறு சதுர கிலோமீற்றர் என்பது பெரிய பிரதேசமில்லை, மிகச்சிறிய பிரதேசமே.

ஏதாவதோர் இடத்தில் உடைத்து, கடற்கரைவரை இராணுவம் கைப்பற்றினால் தமிழர்களின் கட்டுப்பாட்டுப்பிரதேசம் துண்டாடப்படுவதோடு மிகப்பெரிய இக்கட்டுக்குள் தமிழர்கள் தள்ளப்படுவார்கள்.

இப்போது வாகரை மட்டும்தான் படையினரின் குறிக்கோள் என்றில்லை. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஏதாவது ஓரிடத்தில் ஊடுருவி கடற்கரை வரை கைப்பற்றி நிலப்பகுதியைத் துண்டாடுவதே.

இன்றைய சூழ்நிலையில் தனியே மறிப்புச்சமர் மட்டும் நடத்திக்கொண்டிருந்தால் இடங்கள் இழக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.

விரைவில் மாற்றுவழி நடைமுறைப்படுத்தப்படுமென்று நம்புவோம்.

இடையில் மக்கள் சிக்கி சின்னாபின்னமாகாமல், ராணுவ மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு மேலாக மக்களின் பாதுகாப்பை கருதி விரைந்து செயற்பட்டு பாரிய மனிதஅழிவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள தாழ்மையுடன் வேண்டுகின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.