Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இலங்கை'ஆண்டனியிடம் கருணாநிதி கேள்வி

Featured Replies

சென்னை: இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் இருந்து வெடி மருந்துகள் அனுப்பப்பட்டது குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை கடற்படைக்கு, மகாராஷ்டிர மாநிலம் நாக்பரிலிருந்து வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரியை மதுரை அருகே போலீஸார் மடக்கினர். ஆனால் உரிய ஆவணங்களுடன் அந்த வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதால், போலீஸார் அதை அனுமதித்தனர்.

தூத்துக்குடியிலிருந்து கடல் மார்க்கமாக இந்த வெடிபொருட்கள் இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையில் உள்ள ரக்சமாவல்சாரா கடற்படை வெடிபொருள் கிடங்கின் முகவரிக்கு இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இந்தியா எந்த ராணுவ உதவியும் செய்யாது என பிரதமர் மன்மோகன் சிங்கும் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் தமிழக முதல்வர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்களிடம் உறுதியளித்த நிலையில் இந்த வெடிகுண்டுகள் பிடிபட்டது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமரையும் பாதுகாப்பு அமைச்சரையும் மீறி வெளியுறவு, பாதுகாப்புத்துறை மற்றும் மத்திய உளவுப் பிரிவினர் இலங்கைக்கு உதவிகளை செய்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. கேரளத்தைச் சேர்ந்தர்களான தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகியோருக்குத் தெரியாமல் இந்த ஆயுத சப்ளை நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் வைகோ, ராமதாஸ், நெடுமாறன் உள்ளிட்டோர் இது குறித்து கண்னட அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து வெளியுறவுத்துத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடமும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியிடமும் கருணாநிதி பேசியுள்ளார்.

இந் நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை கடற்படைக்கு வெடி பொருட்களை இந்தியாவில் இருந்து கொண்டு செல்ல அனுமதி அளித்திருப்பதாகவும், இது வேதனை அளிப்பதாகவும் தமிழக தலைவர்கள் சிலர் அதிர்ச்சியுடன் அறிக்கை விட்டுள்ளனர்.

இதையடுத்து டெல்லியில் இருந்த முதல்வர் கருணாநிதி உடனடியாக அமைச்சர் தயாநிதி மாறன் மூலமாக நேற்றே வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் விசாரிக்கக் கூறியிருந்தார். அவரும் உடனடியாக முகர்ஜியிடம் பேசினார்.

அப்போது எனது அமைச்சகம் மூலம் அப்படி அதிகாரப்பூர்வமாக எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை, இருந்தாலும் இது குறித்து உடனே விசாரிப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணியிடமும் இது குறித்து கருணாநிதி நேரில் விசாரித்தபோது, அப்படி ஏதும் அனுமதி வழங்கவில்லை என்றும், விசாரணை நடத்துவதாகவும் அந்தோணி தெரிவித்தார்.

வியாபாரரீதியாக அரசுக்குத் தெரியாமல் ஏதாவது நடந்திருக்குமா என்பது குறித்து விசாரிக்குமாறு தமிழக காவல் துறைக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ராமதாஸ் கண்டனம்:

இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மோசமான அளவில் தொடர்வது குறித்து கவலை தெரிவிக்கும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே நாளில் இலங்கை கடற்படைக்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற லாரியை மதுரை அருகே காவல்துறையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பின்னர் உரிய ஆவணங்கள் இருந்ததால் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிகழ்வு நடந்துள்ளது.

இது தமிழக மக்களின் கவலையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை ராணுவத்திற்கு எத்தகைய உதவியையும் இந்தியா வழங்கக் கூடாது என ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்து வருகிறது.

ஆனாலும் அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, தளவாடங்கள் அல்லாத பிற ராணுவத் தேவைகளை நிறைவு செய்ய முன்வந்திருப்பதாகவும், ஏற்கனவே இத்தகைய உதவிகளைப் பெற்றுக் கொண்டு வருவதாகவும் கூறி விட்டுச் சென்றிருக்கிறார்.

இலங்கைக்கு வெடிபொருள் எடுத்துச் செல்லப்பட இருந்த வெடிபொருட்கள் மதுரை அருகே பிடிபட்டுள்ள நிகழ்வு இலங்கை அதிபரின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது.

இலங்கை ராணுவத்திற்கு எத்தகைய உதவி வழங்கினாலும் அது ஈழத் தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குத்தான் பயன்படுத்தப்படும். ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள் என்று தமிழக மக்கள் குரல் எழுப்பி வரும் நிலையில் அவர்களை மேலும் கொன்று குவிப்பதற்கு உதவும் வகையில், இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதித்திருப்பது வேதனை அளிக்கிறது.

தங்களது உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பு அளிக்கவில்லையோ என்கிற சந்தேகத்தை தமிழக மக்களிடையே இது ஏற்படுத்தி விடும். ஆபத்தான இந்தப் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். எனவே இலங்கைக்கு உதவும் இதுபோன்ற நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம் என்பதை உணர்த்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

நெடுமாறன் கண்டனம்:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனும் இலங்கை கடற்படைக்கு வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு இந்தியாவிலிருந்து வெடிபொருட்கள் அனுப்பப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி தருகிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இலங்கைக்கு வெடிபொருள் அனுப்பப்பட்டுள்ள விவகாரம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள

ஒரு பொம்மலாட்டம் நடக்குது

ரொம்ப புதுமையாக இருக்குது

நாலுபேரு நடுவிலே

நூலு ஒருத்தன் கையிலே.....!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.