Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மருத்துவரின் அலட்சியம்: பிரசவத்தின்போது தனியாக பிய்ந்து வந்த குழந்தையின் தலை!

Featured Replies

மருத்துவரின் அலட்சியம்: பிரசவத்தின்போது தனியாக பிய்ந்து வந்த குழந்தையின் தலை!

 

த்தரப்பிரதேச மாநிலம், ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கடந்த 15-ம் தேதி, 32 வயதுடைய நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அன்று மாலை அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, மருத்துவரும் சில நர்சுகளும் பிரசவம் பார்த்து உள்ளனர்.

8.jpg

அப்போது, அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வர சிரமப்பட்டிருக்கிறது. இதையடுத்து, மருத்துவர் அந்த குழந்தையை தாயின் வயிற்றில் இருந்து பலமாக இழுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, அந்த குழந்தையின் தலை மட்டும்  பிய்ந்து  தனியாக வந்திருக்கிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவரும், நர்சுகளும், பதறிப்போய் குழந்தையின் தலையையும், சிதைந்த உடல் பாகங்களையும் தாயின் வயிற்றில் இருந்து வெளியே எடுத்து அங்கிருந்த ஒரு குப்பைத் தொட்டியில் வீசியுள்ளனர். பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய உறவினர்களும் பிறந்த குழந்தையை பற்றி கேட்டபோது, அவர்கள் முன்னுக்கு பின்னாக பேசி இருக்கிறார்கள்.

இதில் சந்தேகம் அடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் மேலும் விசாரித்தபோது, அந்த மருத்துவரும், நர்சுகளும் சேர்ந்து குழந்தையின் தலையை தனியாக எடுத்ததும், பின்னர் குழந்தையின் உடல் பாகங்களை  குப்பைத் தொட்டியில் வீசியதும் தெரிய வந்திருக்கிறது.

இதில் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், மருத்துவமனையில் நேற்று கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்த அம்மாவட்ட ஆட்சியர் ராகேஷ்குமார் சிங், அந்த மருத்துவமனைக்கு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்தி உள்ளார்.

இந்த சம்பவம் பற்றி மருத்துவமனையின் சார்பில் கூறும்போது, ''இந்த சம்பவம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் யாராவது தவறு செய்திருப்பது தெரியவந்தால், அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=55195

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.