Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை

Featured Replies

பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை

பிரான்ஸ் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி தற்கொலை

 
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து திட்டம் தீட்டியது, சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதக் குழுவிடம் பயிற்சி பெற்று பெல்ஜியம் நாட்டு போலீஸாரால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அப்துல் ஹமீது அபாவுத்(28) என்று அண்மையில் தெரியவந்தது.

மொராக்கோ வம்சாவளியைச் சேர்ந்த அபவுட், பெல்ஜியம் நாட்டு குடிமகனாவான்.

பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பதுங்கியிருந்த ஒரு வீட்டை இலக்குவைத்து பாரீஸின் வடக்கே பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து நேற்று அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையின் போது அப்துல் ஹமீது அபாவுத் தற்கொலை செய்து கொண்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

புலனாய்வு ஓட்டை! 

  • தொடங்கியவர்
பரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி கொல்லப்பட்டார்
 

article_1447938347-6kjzguc8.jpgசென்ற் டெனிஸில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையின் போது கொல்லப்பட்டவர்களில் ஒருவராக, பரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரி என நம்பப்படும் அப்டெல்ஹமிட் அபாவுட் இனங்காணப்பட்டுள்ளதாக பரிஸ் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இவரது உடலானது துப்பாக்கிச் சன்னங்களாலும் வெடிகுண்டுச் சிதறல்களாலும் துளைக்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு பரிஸ் புறநகர்ப் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் நேற்று கண்டெடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இருப்பதேழு வயதான பெல்ஜியப் பிரஜையான இவர், அவரது கைவிரல் அடையாளங்களின் மூலமே அடையாளங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரஞ்சுத் தலைநகர் இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டு, தற்கொலைத் குண்டுத்தாக்குதல்களில் 129 பேர் கொல்லப்பட்டும் 350க்கு மேற்பட்டோர் காயமடைந்தும் இருந்தனர்.

இதையடுத்து, அபாவுட், பரிஸில்தான் இருக்கின்றார் என்ற துப்பு பொலிஸாருக்கு கிடைத்தையடுத்து, அடுக்குமாடிக் குடியிருப்பொன்றில் பொலிஸார் நுழைந்தபோது, அபாவுட்டின் மைத்துனி எனக் கூறப்படுகின்ற பெண், தன்னை வெடிக்கவைத்தார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து, பெல்ஜியத்துக்கு பயணமாகி விட்டார் என்று நம்பப்படுகின்ற சாலா அப்டெஸ்லாம், இன்னும் தேடப்பட்டு வருகின்றார்.   

- See more at: http://www.tamilmirror.lk/159506/%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%9A-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%B2-%E0%AE%B2%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B0-#sthash.nWyFP20A.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பாரீஸ் தாக்குதல் தீவிரவாதி அப்துல் ஹமீது சுட்டுக் கொலை

 

 
  • பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதி அப்துல் ஹமீது அபோத் | படம்: ஏ.பி.
    பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதி அப்துல் ஹமீது அபோத் | படம்: ஏ.பி.
  • மானுவேல் வால்ஸ்
    மானுவேல் வால்ஸ்

ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் அபாயம்: பிரான்ஸ் பிரதமர் எச்சரிக்கை

*

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்துல் ஹமீது அபாவுத் (புதன்கிழமை) சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தகவலை அந்நாடு உறுதி செய்துள்ளது.

கடந்த 13-ம் தேதி இரவு பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 129 பேர் உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட் டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்தத் தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ். தீவிரவாதி சலா அப்சலாம் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாரீஸ் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட அப்துல் ஹமீது அபாவுத் பதுங்கியிருந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்தனர். அப்போது ஒரு பெண் தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்தார். தீவிரவாதி அபாவுத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவர்தான் அபாவுத் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் அவசர நிலை பிரகடனம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

விடையில்லாத வினாக்கள்:

அப்துல் ஹமீது அபாவுத் கொல்லப்பட்டதை பிரான்ஸ் உறுதி செய்திருந்தாலும், பல்வேறு கேள்விகள் விடையில்லாமல் இருக்கின்றன. பிரான்ஸில் தாக்குதல் நடத்தியதுபோல் ஐ.எஸ். தீவிரவாதிகள் சிரியா, இராக்குக்கு வெளியே வேறு எங்கும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனரா என்பதற்கு விடையில்லை. ஒருவேளை, அபாவுத் உயிருடன் சிக்கியிருந்தால் தீவிவராத சதித்திட்டம் குறித்த தகவல்கள் அம்பலமாகியிருக்கலாம். அதேபோல், அபாவுத்துடன் 2 தீவிரவாதிகள் பலியாகினர். அவர்கள் விவரம் ஏதும் இல்லை.

கொல்லப்பட்ட தீவிரவாதிகளுள் ஒருவரான பிலால் ஹட்பி பெல்ஜியத்தைச் சேர்ந்தவர். பெல்ஜியம் தலைநகர் புரஸ்ஸல்ஸில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். பிலால் ஹட்பி தொடர்பான தகவல்களைத் திரட்டும் வகையில் இச்சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பிரான்ஸ் அதிபர் மானுவேல் வால்ஸ் பாரீஸில் நேற்று பேசியதாவது:

பிரதமர் எச்சரிக்கை:

பிரான்ஸ் மீது ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளது என்று அந்த நாட்டு பிரதமர் மானுவேல் வால்ஸ் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் மீது ரசாயன ஆயுதம் அல்லது உயிரி ஆயுத தாக்குதல் நடத்தப்படுவதற்கான அபாயம் உள்ளது. பாதுகாப்பு கருதி பணி முடிந்த போலீஸாரும் ஆயுதங் களை உடன் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திடீர் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட் டால் அவர்கள் சுடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/article7899543.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.