Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலியில் ஹோட்டல் ஒன்றின் மீது ஆயுததாரிகள் தாக்குதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்பிரிக்க நாடான பமாக்கோவின் தலைநகர் மாலியில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஹோட்டலுக்குள்ளே தானியங்கி-துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன.

சிலரை ஆயுததாரிகள் பணயமாக பிடித்துவைத்துள்ளதாக செய்தி ஒன்று கூறுகின்றது.

நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்கு அருகே யாரையும் செல்ல முடியாதவாறு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு வலயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/global/2015/11/151120_mali_attack

180 பேர் பணய கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் 
அல்லாகு அக்பர் என்ற கோசத்துடன் ஆயுத தாரிகள் தாக்குதலை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.
https://uk.news.yahoo.com/gunmen-attack-hotel-mali-hostages-091144432.html#f81cc4v

கிளர்ச்சியாளர்கள் அட்டூழியம்: மாலி ஓட்டலில் 20 இந்தியர்கள் உட்பட 170 பேர் சிறைபிடிப்பு

 
பமாகோவில் ரேடிசன் புளூ ஹோட்டல் பகுதி. | படம்: ஏ.பி.
பமாகோவில் ரேடிசன் புளூ ஹோட்டல் பகுதி. | படம்: ஏ.பி.

ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள நட்சத்திர ஓட்டலை கிளர்ச்சியாளர்கள் சிலர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த ஓட்டலில் இருந்த 170 பேரை அவர்கள் சிறைபிடித்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட 170 பிணைக்கைதிகளில் 20 பேர் இந்தியர்கள் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துபாய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இந்தியர்கள் ரேடிசன் விடுதியில் நிரந்தரமாக தங்கியிருப்பவரகள் என்று வெளியுற்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

80 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தகவல்:

மாலியின் ரேடிசன் புளூ ஓட்டலில் 170 பிணைக்கைதிகளை கிளர்ச்சியாளர்கள் பிடித்து வைத்துள்ளதையடுத்து சிறப்புப் படையினர் ஓட்டலுக்குள் நுழைந்தனர்.

இதனையடுத்து, 80 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், மாலி அரசு ஒலிபரப்புத் துறையையும் பாதுகாப்பு படையினரையும் மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

கிளர்ச்சியாளர்கள் விடுதியின் தளத்தில் இடம்பெயர்ந்து வருகின்றனர். அவ்வப்போது துப்பாக்கி வெடிக்கும் சப்தம் எழுவதாக ரேடிசன் புளூ விடுதிக்கு வெளியே இருக்கும் நபர்கள் சிலர் கூறியுள்ளனர்.

முந்தைய செய்திப் பதிவுகள்

மாலி நாட்டுத் தலைநகர் பமாகோவில் உள்ளது ரேடிசன் ப்ளூ நட்சத்திர ஓட்டல். இந்த ஓட்டலில், வெளிநாட்டினர் ஏராளமானோர் தங்குவது வழக்கம்.

இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஓட்டலுக்குள் நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் ஓட்டலை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் விடுதியில் இருந்த 170 பேரை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. விடுதியின் பாதுகாப்புப் பணியிலிருந்தவர்கள் போலீஸாரிடம் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.

ஓட்டலில் அமைந்துள்ள பகுதியை தற்போது போலீஸார் சுற்றிவளைத்து சீல் வைத்துள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், லெப்டினன்ட் கர்னல் டியாரன் கோன் கூறும்போது, "ரேடிசன் பளூ விடுதியில் என்ன நடந்தது என்பது இன்னும் தெரியவில்லை" என்றார்.

வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கிகளுடன் நுழைந்த தீவிரவாதிகள் சுமார் 10 பேர் ’அல்லாஹு அக்பர்’ என்று கோஷமிட்ட படியே கிரெனேடு தாக்குதல் நடத்தி ரேடிசன் புளூ ஓட்டலுக்குள் புகுந்தனர்.

தற்போதைய நிலவரப்படி கிளர்ச்சியாளர்கள் ஓட்டலில் தளம் விட்டு தளம் இடம்பெயர்ந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது 7-வது தளத்தில் இருப்பதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஓட்டலுக்கு மாலியின் சிறப்புப் படையினர் வந்துள்ளனர், பிரான்ஸ் இவர்களுக்கு உதவி புரிகிறது.

குரானின் சில வரிகளை சரியாகக் கூறிய சில பிணைக்கைதிகளை விடுவித்ததாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் அதிகாரபூர்வமாக இந்தத் தகவல் உறுதி செய்யப்படவில்லை.

மாலி - ராணுவ கிளர்ச்சிக்குப் பின்..

2012-ல் மாலி ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வடக்கு மாலியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின.

2013-ல் பிரான்ஸ் ராணுவ உதவியுடன் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், மேற்கு பகுதியில் இயங்கிய இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் வலுவிழந்தன.

தற்போதும்கூட மாலியில் 1000-க்கும் மேற்பட்ட பிரான்ஸ் ராணுவ வீரர்கள் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கில் வலுவிழந்த பின்னர் இஸ்லாமிய இயக்கங்கள் மெல்ல மெல்ல தங்கள் ஆதிக்கத்தை தெற்கு நோக்கி திருப்பின.

கடந்த மார்ச் மாதம்கூட மாலி தலைநகர் பமாகோவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

http://tamil.thehindu.com/world/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-170-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7900009.ece?homepage=true

மாலி ஹோட்டலுக்குள் ஆயுததாரிகளின் பிடியில் 'யாரும் இல்லை'

151120134115_mali_hostages_512x288_afp_n

மாலியின் தலைநகர் பமாகோவில் ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருந்த இஸ்லாமியவாத ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுவோரின் பிடியில் 'இனி யாரும் இல்லை' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரடிஸ்ஸன் ப்ளூ ஹோட்டலுக்குள் நுழைந்த ஆயுததாரிகள்,'அல்லாஹு அக்பர்' என்று கோஷமிட்டபடி, உள்ளே 170 பேரை பிடித்து வைத்திருந்தனர்.

அதனையடுத்து, அதிரடியாக நுழைந்த சிறப்புப் படையினர் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இந்த சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் பலியாகியுள்ளதாகவும் இரண்டு படைவீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க உரிமையாளர்களைக் கொண்ட இந்த ஹோட்டலில் வெளிநாட்டு வணிக பிரமுகர்களும் விமானசேவைப் பணியாளர்களும் தங்குவது வழக்கம்.

http://www.bbc.com/tamil/global/2015/11/151120_mali_hotel

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.