Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊரைக் காலி செய்தனர்!!!!

Featured Replies

5,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊரைக் காலி செய்தனர்.

----------------------------------------------------------------------------

திரிகோணமலை வட்டாரத் தின் வடகிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் சனிக்கிழமை இரவு கடுமையாக மாறி மாறித் தாக்கிக்கொண்டனர்.

இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களில் ஐயாயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்ட அந்த வட்டாரத்தைக் காலி செய்து வேறு பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டனர். இவர்களில் அதிக மானோர் சிங்கள மக்கள் என்று கூறப்படுகிறது.

மூன்று கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த 800 குடும்பங்கள் தற்போது திரிகோணமலையின் தென்மேற்கில் அமைந்துள்ள கந்தலே என்னும் கிராமத்தில் உள்ள இரண்டு புத்த கோயிலில் களிலும் பள்ளிகளிலும் அடைக் கலமாகியுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைப் படைக்கும் இடையே நடந்த கடும் மோதலில் மொத்தம் 45 பேர் இறந்துள்ளதாகவும் அதில் 15 பேர் பொது மக்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவர் உட்பட மொத்தம் 30 இராணு வத்தினர் எங்கள் தாக்குதலில் பலியாகியுள்ளனர் என்றும் இதுவரையிலும் இறந்தவர்களில் ஐவரின் உடல்களை மட்டும் நாங்கள் அடையாளம் கண்டுள் ளோம் என்றும் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் இரண்டு வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 30 வீரர்கள் காயமடைந்துள் ளனர் என்றும் விடுதலைப்புலிகள் கூறியுள்ளதை இலங்கை இராணுவத் தினர் மறுத்துள் ளனர்.

இரு தரப்பிலுமே இறந்தவர் களும் காயமடைந்தவர்களும் மக்கள்தான் என்று கூறப்பட்டுள் ளது.

விடுதலைப் புலிகளின் எல் லைப்பகுதியான ஈச்சிலம்பற்று இராணுவம் நுழைந்ததையடுத்து புலிகள் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களது எல்லைப் பகுதி வரை அவர் களைத் துரத்தியடித்ததாகப் புலிகளின் பேச்சாளர் ராசைய்யா இளந்திரையன் கூறியுள்ளார்.

இறந்தவர்கள் எத்தனை பேர் காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்று யாராலும் சரியாகக் கணிப்பது என்பது இயலாத ஒன்று என்று செய்தியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

இதற்கிடையே மின்மடல் வாயிலாகத் தொடர்புகொண்ட விடுதலைப் புலிகள், இராணு வத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி இறந்த 15 பேரும் தமிழ் அகதிகள் என்று கூறியுள் ளனர்.

மேலும் ஒரு சம்பவத்தில் மட்டக்களப்பில் உள்ள வாகரை என்னும் கிராமத்தில் 35 பேர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலளித்த பாது காவல் தகவல் தொடர்பு மையத் தின் பேச்சாளர், இந்தத் தாக்கு தலில் அகதிகள் தாக்குதலுக் குள்ளானது பற்றி எதுவும் எங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொருவரையும் தனிமென்பொருள் இல்லாமல் தமிழ் தட்டச்சு செய்வதற்கு இலவசமென்பொருள் www.tamil.sg

11-12-2006

உயிரைக் கொடுத்து மகனைக் காத்தார்

உல்லாசப் பயணம் தீரா சோகத் தில் முடிந்தது.

ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் நேற்று காலை மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்கச் சென்ற 15 குடும்ப உறுப்பினர்கள் தங்களுடன் வந்த 45 வயது முகமது அயூப்பை பறிகொடுத்தனர்.

பொருட்கள் விநோகிப்பவராகப் பணியாற்றி திரு அயூப் சம்பவம் நடந்த பிற்பகல் வேளையில் கடலோரத்தில் நடந்து கொண்டிருந்தார் என்று கூறப் படுகிறது.

நீந்தத் தெரியாத இந்தத் தந்தை, கடலில் விளையாடிக் கொண்டிருந்த தனது கடைசி மகன் 10 வயது முகமது முனீரை திடீரென்று அலை அடித்துச் சென்றதும் பாய்ந்து சென்று காப்பாற்ற கடலில் குதித்தார். கடல் அலை வேகமாக முனீரை அடித்துச் சென்றதும் தந்தையும் மகனும் கடலில் சிக்கிக்கொண்டனர் என்று இறந்தவரின் மருமகன் திரு லத்தீப் தமிழ் முரசிடம் சொன்னார்.

என் அப்பாவும் (அவருக்கு வயது 60) 30 வயதுகளில் இருந்த என் மைத்துனரும் நன்றாக நீந்தக் கூடிய வர்கள். அவர்கள் இருவரும் உடை மாற்றிக்கொண்டு உணவு உண்டு கொண்டிருந்தனர்.

அப்போது திரு அயூப்பையும் அவருடைய மகனையும் கடல் அலை இழுத்துச் சென்றதை அவர்கள் பார்த் தனர். உடனே கடலில் குதித்தனர்.

ஆனால் வயதான என் தந்தையி னால் இருவரையும் காப்பாற்ற முடிய வில்லை. சிறுவன¬ன் கையை மட்டுமே இழுத்து காப்பாற்ற முடிந் தது. களைத்துப் போன என் மைத்து னர் என் அப்பாவையும் சிறுவனை யும் பிடித்துக்கொள்ள அங்கிருந்த ரப்பர் மிதவையை எடுத்துப்போட்டு விட்டுத் திரும்பிப் பார்த்தபோது அங்கே திரு திரு அயூப் இல்லை அவர் கடலுக்குள் மூழ்கிவிட்டார் என்று சொன்னார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கடற்படையின் முக்குளிப்பு அதிகாரிகள் திரு அயூப்பின் உடலைக் கண்டு பிடித்து சாங்கி பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற னர். அவர் நேற்று மாலை 4.30 மணிக்கு மரணமடைந்தார்.

தமிழ் முரசு சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்ற போது திருமதி அயூப் மயக்கமடைந்திருந்தார். அவரையும் ஆம்புலன்ஸ் வண்டி சாங்கி பொது மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது.

இதை நாங்கள் யாருமே எதிர் பார்க்கவில்லை என்று திரு லத்தீப் கூறினார்.

குடும்பத்திற்காக தன் வாழ் நாளைச் செலவிட்டவர், என்றுமே மகிழ்ச்சியுடன் காணப்படுபவர் திரு அயூப் அவருக்கு 19 வயது மற்றும் 11 வயதில் மேலும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

திரு அயூப் இறந்ததை நாங்கள் அவருடைய குழந்தைகளுக்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை.

தன் தந்தை இறந்துவிட்டது முகமது முனீர்கு இன்னும் தெரியாது. திரு அயூப்பின் மனைவி இன்னும் தம் கணவர் இறந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்றும் திரு லத்தீப் கூறினார். திரு அயூப்பின் இறுதிச் சடங் குகள் இன்று நடைபெறும்.

--------------------------------------------------------------------------------

5,000க்கும் மேற்பட்ட மக்கள் ஊரைக் காலி செய்தனர்

திரிகோணமலை வட்டாரத் தின் வடகிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளும் இலங்கை இராணுவத்தினரும் சனிக்கிழமை இரவு கடுமையாக மாறி மாறித் தாக்கிக்கொண்டனர்.

இந்த வட்டாரத்தில் வசிக்கும் மக்களில் ஐயாயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்ட அந்த வட்டாரத்தைக் காலி செய்து வேறு பாதுகாப்பான இடம் நோக்கிச் செல்லத் தொடங்கி விட்டனர். இவர்களில் அதிக மானோர் சிங்கள மக்கள் என்று கூறப்படுகிறது.

மூன்று கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த 800 குடும்பங்கள் தற்போது திரிகோணமலையின் தென்மேற்கில் அமைந்துள்ள கந்தலே என்னும் கிராமத்தில் உள்ள இரண்டு புத்த கோயிலில் களிலும் பள்ளிகளிலும் அடைக் கலமாகியுள்ளனர்.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கைப் படைக்கும் இடையே நடந்த கடும் மோதலில் மொத்தம் 45 பேர் இறந்துள்ளதாகவும் அதில் 15 பேர் பொது மக்கள் என்றும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவர் உட்பட மொத்தம் 30 இராணு வத்தினர் எங்கள் தாக்குதலில் பலியாகியுள்ளனர் என்றும் இதுவரையிலும் இறந்தவர்களில் ஐவரின் உடல்களை மட்டும் நாங்கள் அடையாளம் கண்டுள் ளோம் என்றும் கூறியுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் இரண்டு வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 30 வீரர்கள் காயமடைந்துள் ளனர் என்றும் விடுதலைப்புலிகள் கூறியுள்ளதை இலங்கை இராணுவத் தினர் மறுத்துள் ளனர்.

இரு தரப்பிலுமே இறந்தவர் களும் காயமடைந்தவர்களும் மக்கள்தான் என்று கூறப்பட்டுள் ளது.

விடுதலைப் புலிகளின் எல் லைப்பகுதியான ஈச்சிலம்பற்று இராணுவம் நுழைந்ததையடுத்து புலிகள் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களது எல்லைப் பகுதி வரை அவர் களைத் துரத்தியடித்ததாகப் புலிகளின் பேச்சாளர் ராசைய்யா இளந்திரையன் கூறியுள்ளார்.

இறந்தவர்கள் எத்தனை பேர் காயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்று யாராலும் சரியாகக் கணிப்பது என்பது இயலாத ஒன்று என்று செய்தியாளர்கள் தெரி வித்துள்ளனர்.

இதற்கிடையே மின்மடல் வாயிலாகத் தொடர்புகொண்ட விடுதலைப் புலிகள், இராணு வத்தினரின் தாக்குதலுக்கு இலக்காகி இறந்த 15 பேரும் தமிழ் அகதிகள் என்று கூறியுள் ளனர்.

மேலும் ஒரு சம்பவத்தில் மட்டக்களப்பில் உள்ள வாகரை என்னும் கிராமத்தில் 35 பேர் காயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகளின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலளித்த பாது காவல் தகவல் தொடர்பு மையத் தின் பேச்சாளர், இந்தத் தாக்கு தலில் அகதிகள் தாக்குதலுக் குள்ளானது பற்றி எதுவும் எங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஒவ்வொருவரையும் தனிப் பட்ட முறையில் செய்தியாளர் கள் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

மேலும் தொண்டூழியர்களுக் கும் அவ்விடத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இரு தரப்பினர் மேற் கொண்ட தாக்குதலிலும் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

ஆனால் அதற்கு இரு தரப்பின ரும் பொறுப்பேற்கவில்லை.

இன்று அதிகாலை 4.00 மணி முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி ஊரெழு மற்றும் வரணிப் படைத்தளங்களில் இருந்து இராணுவத்தினர் தொடர்ச்சி யாக எறிகணைத் தாக்குதல் களைத் தமிழர்கள் வாழும் வன்னி பெரு நிலப்பரப்பின் மீது மேற்கொண் டுள்ளார்கள்.

இதனால் வன்னிப் பகுதியில் பள்ளிகளில் நடக்கவிருக்கும் தேர்வுக்குத் தயாராகும் மாண வர்கள் அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று வன்னியில் இருந்து வந்த தகவல்கள் கூறு கின்றனர்.

------TAMILMURASU-SINGAPORE

(11-12-2006)

தமிழர் 200 000 மேல் மாதக்கணக்காக இடம்பெயர்ந்திருக்கிறார்கள் அதுபற்றி வராத தலையங்கம் 3000 .... 5000 சிங்களவர் இடம்பெயர்ந்து 2 நாட்களில் வந்து விட்டது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வைத்து சிங்கள அரசு பிரச்சாரம் செய்யத்தான்...எல்லாம் மூடிமறைப்புவேலைதானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.