Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விகடன் இதழ், முரசொலி, கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

Featured Replies

விகடன் இதழ், முரசொலி, கருணாநிதி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

 

தமிழில் வெளிவரும் பிரபல வாரப் பத்திரிகையான ஆனந்த விகடன், தி.மு.கவின் அதிகாரபூர்வ இதழான முரசொலி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோர் மீது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சார்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

151124120555_vikatanjayacartoon_976x549_
                                                             பிரச்சனையில் சிக்கிய விகடன் கட்டுரை

சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இது தொடர்பாக இரண்டு வழக்குகளை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார்.

கடந்த வாரம் வெளிவந்த நவம்பர் 25ஆம் தேதியிட்ட இதழில், 'என்ன செய்தார் ஜெயலலிதா' என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியானது.

இந்தக் கட்டுரையில் தமிழக அரசுக்கும், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி வெளியாகி உள்ளது என்றும் இதனை வெளியிட்ட ஆனந்த விகடன் ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ஒரு வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக, இந்தக் கட்டுரையின் விவரங்களைத் தனது கலைஞர் பதில் பகுதியில் வெளியிட்டதற்காக தி.மு.க தலைவர் கருணாநிதி மீதும், அந்த கேள்வி - பதில் பகுதியில் இடம்பெற்ற விவரங்கள சரிபார்க்காமல் வெளியிட்ட முரசொலி இதழின் ஆசிரியர் செல்வம் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த இரு வழக்குகளும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்னிலையில் விரைவில் விசாரணைக்கு வருமென நம்பப்படுகிறது.

இதற்கிடையில், தங்களுடைய ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் முடக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக ஃபேஸ்புக் நிர்வாகத்திடமிருந்து தங்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லையென்றும் மேற்குறிப்பிட்ட கட்டுரைக்கும் இந்த முடக்கத்திற்கும் தொடர்பு இருக்குமோ என தாங்கள் கருதுவதாகவும் ஆனந்த விகடன் தனது இணைய தளத்தில் கூறியுள்ளது.

http://www.bbc.com/tamil/india/2015/11/151124_vikatanjaya

  • தொடங்கியவர்

ஆனந்த விகடன் மீது தமிழக முதல்வர் வழக்கு!

 

ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு,  தனது ஐந்து ஆண்டுகால பதவிக்காலத்தைத் தொட்டு, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் ஆகி வருகிறது. இந்த நிலையில் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் தமிழக அமைச்சர்கள் செயல்பாடுகள் குறித்த ஸ்கேன் ரிப்போட்டுகளை கடந்த 30 வாரங்களாக ஆனந்த விகடன் வெளியிட்டு வந்தது. 'மந்திரி தந்திரி' என்ற பெயரில் வெளியான இத்தொடர் கட்டுரைகள் வாசகர்களுக்கு புதிதானது அல்ல. கடந்த தி.மு.க. ஆட்சியின் போதும் கருணாநிதி தலைமையில் இருந்த அமைச்சர்கள் அனைவரைப் பற்றியும் இதேபோல் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம்.
 

jaya%20cortoon.jpg

அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ரிப்போர்ட்டுகளின் ஸ்பெஷல் கட்டுரையாக, முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை விமர்சனம் செய்து, 'என்ன செய்தார் ஜெயலலிதா?' என்ற தலைப்பில் நவம்பர் 25 தேதியிட்ட இதழில் வெளியிட்டோம்.

அது முதல் விகடன் மீது வழக்கம்போல அவதூறுகள், களங்கங்கள் ஆளும்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான 'நமது எம்.ஜி.ஆர்' இதழில் எழுதப்பட்டு வருகிறது. இவை நான்கைந்து நாட்களாகத் தொடர்ந்து வருகிறது. முதல்வர் ஜெயலலிதா, சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆனந்தவிகடன் ஆசிரியர், வெளியிட்டாளர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார். அந்த வழக்கை விகடன் நிறுவனம் சட்டரீதியாக எதிர்கொள்ளும்.
 

jaya%20cortoon%202.jpg

இந்த சூழ்நிலையில் ஆனந்த விகடனின் ஃபேஸ்புக் பக்கம் நேற்று முதல் முடக்கப்பட்டு இருக்கிறது. எந்த ஒரு அறிவிப்பும் ஃபேஸ்புக் நிர்வாகத்திடம் இருந்து விகடனுக்கு வரவில்லை. விகடன் தரப்பில் மேற்கொண்ட விசாரணைக்கும் இதுவரை பதில் இல்லை. ஃபேஸ்புக் பக்கம் முடக்கத்துக்கும் இந்த நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

எத்தகைய இடையூறுகள் வந்தாலும், வாசகர்களுக்கு உண்மையைக் எடுத்துச் சொல்லும் விகடனின் பணி அனைத்து தளங்களிலும் தடையின்றி தொடரும். ஆனந்த விகடனுக்கு பக்கபலமாக இலட்சக்கணக்கான வாசகர்கள் எப்போதும் இருந்து வந்துள்ளார்கள். அதற்காக இத்தருணத்தில் வாசகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

http://www.vikatan.com/news/article.php?aid=55515

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.