Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இனப்படுகொலை நடைபெறவில்லை: விளக்கமளிக்க ரணில் தீவிர ஏற்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை நடைபெறவில்லை: விளக்கமளிக்க ரணில் தீவிர ஏற்பாடு

[ Sunday,29 November 2015, 02:01:19 ]   
Ranil.jpg

புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பாக அரசாங்கம் தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது. 

இனப்பிரச்சினை தீர்வுக்கான யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட வேண்டும் அல்லது அதுகுறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விட எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா அரசு என்ற கட்டமைப்புக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய யாப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்படுகின்றார் என்பதையே அவருடைய நகர்வுகள் எடுத்துக்காட்டுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் கொழும்புக்கு விஜயம் செய்தபோது பல சந்திப்புக்களில் ஈடுபட்டார். 

முக்கியமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருடனான சந்திப்பின் போது சமந்தா பவர் ஸ்ரீலங்காவின் எதிர்கால அமைதி குறித்து பேசியிருக்கின்றார்.  அந்த இடத்திலே தான் புதிய அரசியலமைப்பு தொடர்பான பேச்சை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கியுள்ளார். 

ஆனால் இனப்பிரச்சினை தீர்வுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்ற பேச்சை விட புதிய யாப்பின் மூலம் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வந்துவிடும் என்ற நம்பிக்கையை ரணில் விக்கிரமசிங்க கூறியதுடன், அந்த விடயத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒத்துழைக்கும் என்ற செய்தியையும் சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே சமந்தா பவரின் வருகையுடன் இரண்டு விடயங்கள் தெளிவாகியுள்ளன. ஒன்று தமிழ் மக்கள் எதிர்ப்பார்க்கும் வடக்கு கிழக்கு மாகாணம் இணைந்த சமஸ்டி ஆட்சி முறையிலான தீர்வு இல்லை என்பது.

இரண்டாவது சிங்கள அரசியல் கட்சிகளை திருப்திப்படுத்தி தமது புவிசார் அரசியல் பொருளாதார நலன்களை முன்கொண்டு செல்லும் அமெரிக்காவின் திட்டம். இந்த இரு விடயங்களும் தமிழ்த் தரப்பினுடைய அரசியல் நியாயப்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்தினால் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்ற முடிவுக்கு வரலாம். 

அதாவது முன்னைய அரசாங்கத்துடனும் நடைமுறை அரசியல் யாப்பில் உள்ள சட்ட திட்டங்களுடனும் இணைந்து போக வேண்டும் என்ற செய்தியை சமந்தா பவர் மூலமாக ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்குச் சொல்லியிருக்கினறார் என்றும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்த சமந்தா பவர், அரசாங்கத்துடன் இணங்கிச் செல்ல வேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கின்றார். 

அதேவேளை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தனது நண்பன் என்றும் புரிந்து செயற்படும் ஒருவர் என்றும் தனது டுவிட்டர் தளத்தில் கூறியிருக்கின்றார். ஏனைய அரசியல் கட்சிகளும் சமாதானத்தை விரும்புவதாகவும் சமந்தா பவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கின்றார். 

ஆக தமிழ்த்தரப்பு மாத்திரமே தற்போது பிரச்சினை என்ற தொனியில் அவருடைய பேச்சுக்கள் அமைந்துள்ளன. ஆகவே 30 ஆண்டுகால அஹிம்சை போராட்டமும் அதற்கு அடுத்த 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டமும் தேவையற்றவை. 

60 ஆண்டு கால அரசியல் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தின் அடிப்படையில் அமெரிக்கா செயற்படுகின்றது என்று கூறலாம். அத்துடன் இனப்படுகொலை என்ற விடயத்தை மூடி மறைக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது என்பதையும் சமந்தா பவருடைய வருகை நிரூபித்துள்ளது. 

தற்போதைய அரசியல் சூழலில் தென்பகுதி சிங்கள அரசியல் கட்சிகளை பொறுத்தவரை அரசியல் வேறுபாடுகளுக்கு மத்தியிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, படை உயர் அதிகாரிகள் ஆகியோரின் புலிகள் தொடர்பான வேலைத் திட்டங்களை தேசிய நடவடிக்கையாக கருதி நல்லாட்சி அரசாங்கம் செயற்பட வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. 

அத்துடன், சர்வதேச தலையீடுகளை முற்றாக தவிர்த்து போர்க்குற்ற விசாரணையையும் நிறுத்த வேண்டும் என்ற யோசனையும் சிங்கள அரசியல் கட்சிகளிடையே காணப்படுகின்றது. வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல புலிகள் தொடர்பான நிலைப்பாட்டில் மஹிந்த ராஜபக்ச பின்பற்றிய சில நடைமுறைகளை நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்சவுடன் அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் போர்க்குற்ற விசாரணை மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்ற விடயத்தில் சர்வதேச அணுகுமுறைகள் அவசியமற்றவை என்பதுதான் பௌத்த தேசியவாதத்தின் கருத்து. 

ஆகவே அந்த கண்ணோட்டத்தில் புதிய அரசாங்கம் செயற்படவேண்டிய கட்டாய நிலைமை. இதன் காரணமாகவே ஜெனீவா மனித உரிமைச் சபையின் விசாரணைகளை முற்றுமுழுதாக நிறுத்தக்கூடிய வல்லமை புதிய அரசாங்கத்திடம் வலிந்து உருவாக்கப்பட்டது எனலாம். 

பௌத்த மதகுருமாரின் யோசனைகளை ஏற்று செயற்பட வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு உண்டு என வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, சமந்தா பவருடன் நடத்திய சந்திப்பில் கூறியிருக்கின்றார். அத்துடன் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானத்தை சர்வதேச ஆதரவு இன்றி நடைமுறைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளியிட்டிருக்கின்றார். 

அதேவேளை ஜெனீவா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகள் அல்லது வேறு சர்வதேச பொது அமைப்புகள் இனப்படுகொலை என்பதை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் அந்த விடயத்தை எவ்வாறு நிறுத்துவது என்பது குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர சமந்தா பவருடன் பேசியதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.  

ஆகவே, சமந்தா பாவரின் வருகையின் பின்னர் இனப்படுகொலை என்பதை எற்றுக்கொள்ள தயாராகவுள்ள நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டு வருவதாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 

http://ibctamil.com/news/index/14119

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பந்தன் & சுமந்திரன் கொம்பனியை நாடுங்கள். சகலதும் சுபமே.

  • கருத்துக்கள உறவுகள்

58ஆயிரம் வாக்கு பெற்ற சுமந்திரனே சொல்லிபோட்டார் நாட்டில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று 

இவர் ஏன் இப்ப முதலில் இருந்து தொடங்கிறார் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

20 hours ago, Maruthankerny said:

58ஆயிரம் வாக்கு பெற்ற சுமந்திரனே சொல்லிபோட்டார் நாட்டில் அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று 

இவர் ஏன் இப்ப முதலில் இருந்து தொடங்கிறார் ?

தன்ரை சனத்தை இவர்தானே கவர் பண்ண வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.