Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை வழங்கும் திட்டம் அவசியம் தேவை

Featured Replies

8082.jpg

கடலில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி மரணம்; குளத்தில் நீராடிய இளைஞன் பலி; கிணற்றில் வீழ்ந்த சிறுவன் பரிதாப மரணம் இப்படியான துன்பம் மிகு செய்திகள் நாளாந்தம் ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன. 

இத்தகைய இழப்புகள் குறித்து நாம் கரிசனை கொள்ள வேண்டியது கட்டாயமானதாகும். நீச்சல் தெரிந்திருந்தால் இத்தகைய மரணங்களை தவிர்க்க முடியும் என்பது நிறுதிட்டமான உண்மை.
எனினும் பொதுவில் நீச்சல் பயிற்சி பற்றி நாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஆனால் மேலை நாட்டவர்கள் பிள்ளை பிறந்து ஒரு வருடத்தை நெருங்குகின்ற போதே பிள்ளைக்கு நீச்சல் பயிற்சி கொடு க்க ஆரம்பித்து விடுவர். மேலை நாட்டில் நீச்சல் பயிற்சி என்பது கட்டாயமானது. ஒவ்வொரு பிள்ளையும் நீச்சல் பயிற்சியை கட்டாயம் கற்றிருக்க வேண்டும்.

நீச்சல் பயிற்சி என்பது உயிர் ஆபத்தில் இருந்து பாதுகாப்பதுடன் உடல் ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சியாகக் கருதப்படுகின்றது. எனி னும் நீச்சல் பயிற்சி குறித்து நாங்கள் கரிசனை கொள்வதேயில்லை. இதனால் விபரீதமான சம்பவங்கள் நடந்து விடுகின்றன.
எங்கள் மண்ணில் நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட 90 வீதமான மரணங்களுக்கான காரணம் நீச்சல் தெரியாமையாகும். 

எனவே, எமது பிள்ளைகளுக்கு நீச்சல் பயிற்சியை வழங்குவதன் ஊடாக உயிராபத்துக்களில் இருந்து எங்கள் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியும். 
நீச்சல் பயிற்சி என்பது சிறுபராயத்தில் வழங்கப்படுவதும் முக்கியமானது என்பதால் பாடசாலை மட்டங்களில் நீச்சல் பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 
ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகளுக்கு நீச்சல் பயிற்சியை கற்றுக் கொடுப்பது என்பது நடை முறைச்சாத்தியமாகாது என்பதால், பாடசாலைகள் இது விடயத்தில் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகியுள்ளது. 

அதே சமயம் மாணவர்களுக்கான நீச்சல் பயிற்சியை வழங்குவதற்கு தேவையான நீச்சல் தடாகங்கள் உரிய பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட வளங்களை மாகாணக் கல்வி அமைச்சு வழங்குவது குறித்தும் ஆராயப்பட வேண்டும். 

யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நீச்சல் தடாகம் யாழ்ப்பாணத்து மாணவர்கள் நீச்சல் பயிற்சியை பெற்றுக் கொள்வதற்கான சிறந்த வளமாக இருந்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக அந்த நீச்சல் தடாகம் இயங்குநிலையில் இல்லாமல் போயுள்ளது. 
ஆகவே, காலத்தின் தேவை கருதி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மீளவும் புனரமைத்து மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்வது மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
இவை யாவற்றுக்கும் அப்பால் ஒவ்வொரு பெற்றோரும் தம் பிள்ளைகள் மீது அதீத கவனம் செலுத்துவது அவசியம்.

ஒரு குறிப்பிட வயதுப் பிரிவினர் ஒன்று சேர்ந்து குளத்திலும் கடலிலும் நீராடச் சென்று விபரிதமான சம்பவங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். 
எனவே, இது விடயங்களில் பெற்றோர்கள் தம் கவனிப்பை அகலப்படுத்துவது அவசியம். இதன் மூலம் விபரிதமான விளைவுகளை-மரணங்களை தவிர்க்க முடியும்.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=8082&ctype=news

மனித வாழ்விற்கு உணவு எப்படி முக்கியமோ அதே போல் மிகவும் முக்கியமானது உடற்பயிற்சி. நீச்சல் உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் சிறந்த பயிற்சியாகும். நாலாபக்கமும் கடலால் சூழப்பட்ட எமது நாட்டில் நீச்சலில் கவனம் செலுத்தாமை குறித்து நாம் வெட்கபடவேண்டும். கடலில் நீந்துவதற்காக கோடைகாலத்தில் பல நூற்றுகணக்கான தூரத்திற்கு மக்கள்  பயணம் செய்யும் நிலையில் கூப்பிடு தூரத்தில் இருக்கும் கடலை நீந்துவதற்கு ஏற்றவகையில் அழகுபடுத்தி அதனை பயன்படுத்துவதில் எமது மக்களின் மனோபாவம் ஏனொ இடம் கொடுக்கவில்லை. மிக அழகான கடற்கரைகளை கொண்ட எமது பிரதேசம் கவனிப்பாரற்று கிடக்கிறது. எமது பாட்டன், பூட்டன் காலத்தில் எதை செய்தோமோ அதை மட்டும் தான் செய்வோம் என்று அடம் பிடிக்கும் ரீதியில் கீரிமலைக்கும் மட்டும் நீந்துவதற்கு செல்லும் எமது மக்கள் நீச்சல் தடாகங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டாமை கவலைக்குரியது.  எமது தமிழ்  மக்கள் பழமை பேண்  நிலையில் இன்றும்  இருப்பதால் அரச நிர்வாகமும் அதே நிலையில் எந்து அறிவுசார் விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் காலம் கடத்துகிறது.  என்பது தான் தமிழ் மக்களின் நிலை. மாகாணசபைகளில் உள்ள அறிவார்ந்த அமைச்சர்கள்  இந்த விடயத்தலி்ல் காத்திரமான நடவடிக்கை எடுப்பதன் மூலம் சிறந்த ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.