Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிசில் உலக தலைவர்கள் குவிகின்றனர்: உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு

Featured Replies

பாரிசில் உலக தலைவர்கள் குவிகின்றனர்: உச்சக்கட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு
 
Tamil_News_large_1398710.jpg
 
Share this video : facebooktop.jpgtwittertop.jpg
 

புதுடில்லி: பருவகால மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐக்கியநாடு சபை சார்பில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பாரிஸ் புறப்பட்டு சென்றார். உலக தலைவர்கள் பலர் வரவுள்ளதால் இங்கு உச்சக்கட்ட பாதுகாப்புக்கு பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பருவகால மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு நடக்கிறது. உலக அளவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு, மற்றும் நாடுகள் இடையிலான உறவு ஆகியன குறித்து விவாதிக்கப்படுகிறது . இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜப்பான், சீனா , இந்தியா பிரதமர்கள் உள்பட 140 க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர் .டிசம்பர் 11ம் தேதி வரை நடக்கும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கென அவர் டில்லியில் இருந்து பாரிஸ் புறப்பட்டு சென்றார். நாளை அங்கு போய்ச்சேரும் அவர் மாநாட்டின் இடையே ஒபாமா, ஜிங்பிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை தனியாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோடி டுவீட்: பாரிஸ் புறப்படும் முன்னதாக பிரதமர் மோடி தனது டுவீட்டரில் ; நான் பாரிஸ் புறப்பட்டு செல்கிறேன். அங்கு நடக்கும் மாநாட்டில் பருவ கால மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் காத்தல் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளேன் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பிரான்சில் பலத்த பாதுகாப்பு: மாநாடு நடக்கும் பாரிசில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதில் 120 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் பாரிசுக்கு உலக தலைவர்கள் பலர் வரவிருப்பதால் அங்கு பாதுகாப்பு முழு அளவில் உஷார் படுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் ராணுவம் மற்றும் போலீசார் உள்பட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1398710

  • தொடங்கியவர்

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பாரிஸில் கால நிலை மாநாடு

 

காலநிலை மாற்றம் தொடர்பான, ஐக்கிய நாடுகள் சபையின் உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக சுமார் 150 நாடுகளின் தலைவர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பலத்த பாதுகாப்பு மத்தியில் ஒன்றுக்கூடியுள்ளனர்.

                         151128042448_paris_512x288__nocredit.jpg
 மாநாட்டுக்கு மிக அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள்

கோப் 21 என்றழைக்கப்படும், இந்த உச்சிமாநாடு திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துதற்கான நீண்ட கால ஒப்பந்தமொன்று இம்முறை எட்டுப்படும் என எதிர்பார்க்கப்பகிறது.

இம்முறை சட்டரீதியாக அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் எனும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

                         151129024907_paris_eiffel_tower_climate_  ஈஃபில் கோபுரம் அருகே கவனத்தை ஈர்க்கும் செய்தி

2009ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கொப்ஹேகனில் நடந்த காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாட்டை விட, இம்முறை மாநாடு மிக பிரமாண்டமாக இருக்கின்ற நிலையில், நீண்ட கால நிலையான தீர்வு இந்த மாநாட்டில் எட்டப்படலாம் ஆர்வலர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

எனினும், இந்த உச்சிமாநாட்டில் முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்களைவிட, புவி வெப்பமடைதல் உட்பட காலநிலை மாற்றங்களை கட்டுப்படுத்த கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு நாடுகளில் ஆர்ப்பாட்ட பேரணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

                                           151129062050__people_hold_placards_and_b

கால நிலை மாற்றம் பிரச்சினை குறித்து பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள்

பிரான்ஸ், ஆஸ்திரேலியா, தென் கொரியா உட்பட பல நாடுகளில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இம்முறை மாநாட்டில் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் ஒருங்கிணைந்த தீர்மானத்திற்கு வர வேண்டும் என ஆர்ப்பாட்டங்ளில் கலந்துக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பங்கரவாதிகளால் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ள நிலையில், நாளை காலநிலை மாற்றத்திற்கான இந்த உச்சி மாநாடு ஆரம்பமாகிறது.

இதனால் அங்கு பாதுகாப்பு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தததைவிட பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பொலிஸார், தலைநகர் பாரிஸ் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர். எரிவாயு சிலிண்டர்கள், பட்டாசு போன்றவற்றை விற்பனை செய்வதற்கும், வாகனங்ளில் கொண்டுச் செல்வதற்கும் டிசம்பர் 13ஆம் தேதி வரை அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/global/2015/11/151129_unclimateconf_paris

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

kinderarmut_lexikon.jpg

 

இவர்களுக்கு விடை சொல்லுங்கள். உங்களுக்கான உச்சகட்ட பாதுகாப்புகளுக்கு தேவையே இருக்காது.

இவர்களின் கண்ணீர் உங்களுக்கு தேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.