Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் மூளுவதைத் தடுக்க தெற்கில் புதிய கூட்டணி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர் மூளுவதைத் தடுக்க தெற்கில் புதிய கூட்டணி?

தேசியப் பிரச்சினைக்குப் பேச்சு மூலமே தீர்வு காணப்பட முடியும் என்று நம்புகிற அந்நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கு கின்ற மிதவாதப் போக்குடைய அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக் கப்படுகிறது.

நாட்டில் மீண்டும் முழு அளவிலான யுத்தம் ஒன்று வெடிக்கலாம். மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படலாம் என்று உணர்ந்த சில மிதவாத அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் அந்நிலைமை உருவாவதைத் தவிர்ப்பதற்காகக் கூட்டணி ஒன்றை உருவாக்குவது தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர் எனத் தெரிய வருகின்றது.

தற்போது அரசில் இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சிகளின் பிரமுகர்களால் உரு வாக்கப்படவிருக்கும் புதிய கூட்ட ணிக்கு அவர்களே முதுகெலும்பாக இருப்பர் எனத் தெரிகிறது. யுத்தமொன்றைத் தொடங்கக் கூடிய வகையில் செயற்படும் அரசின் நடவடிக்கை மீது அதிருப்தி கொண்டே இவர் கள் இக்கூட்டணிக்கு பக்கபலமாக இருக்க முடிவெடுத்துள்ளனராம்.

அரசில் இணைந்திருக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக் கள் முன்னணி, தேசிய ஐக்கிய முன்னணி, அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மையினக் கட்சிகளின் முக்கி யஸ்தர்கள், அரசால் புதிதாக நடைமுறைப் படுத்தப்படவிருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் துணை விதிகள் தொடர்பாக வும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசு மீண்டும் முழுமையாக நடைமுறைப்படுத்த முயற்சிப்பது தொடர்பாகவும் அதிருப்தியடைந்துள்ளதோடு இந்த விடயத் தில் மிகவும் எச்சரிக்கையாகவும் உள்ளனர்.

இவர்களும் இந்தப் புதிய கூட்டணியில் பெரும்பாலும் இணைவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

1994 இல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையின் கீழ் இதே நோக்கை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறானதொரு கூட்டணி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- ஈழநாதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை ஆதரிக்கும் சில அமைப்புக்கள் விரைவில் இதன் பாதகமான விளைவை சந்திக்கநேரலாம் - ராஜித சேனாரட்ன எச்சரிக்கை

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு இன்று ஆதரவு வழங்கும் சில அமைப்புக்கள் விரைவில் இந்த தடைச்சட்டத்தின் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். இந்த தடைச்சட்டத்தின் வரையறைகளை என்னால் புரிந்துகொள்ள முடியõமல் உள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

அரசாங்கம் மிகவும் பொறுப்புடன் இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தவேண்டும். 1980 களில் இந்த சட்டத்தை புலிகளுக்கு எதிராக அப்போதையஅரசாங்கம் அமுல்படுத்தியபோது ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாககருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது.

விடுதலை புலிகளை ஒடுக்குவதற்காக அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்தியுள்ளது.

-வீரகேசரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.