Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை விமான நிலையம் பகுதி அளவில் திறக்கப்படுகிறது

Featured Replies

சென்னை விமான நிலையம் பகுதி அளவில் திறக்கப்படுகிறது

கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த சென்னை விமான நிலையம், பகுதி அளவில் சனிக்கிழமை(5.12.15) முதல் செயல்படத் தொடங்கும் என தேசிய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைவர் ஆர்.கே.ஸ்ரீவத்ஸா கூறியதாக பிடிஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.

151201184024_chennaiairportrains_512x288
 வெள்ளத்தால் சென்னை விமான நிலையம் சுமார் ஒரு வாரம் மூடப்பட்டது

சனிக்கிழமை காலை முதல், சென்னை விமான நிலையத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சோதனை முறையில் விமானப் புறப்பாடு மற்றும் தரையிறக்கம் ஆகியவை முன்னெடுக்கப்படும் எனவும், முதல் கட்டமாக நிவாரண உதவிகளை கொண்டு வரும் விமானங்களே தரையிறக்கப்படும் எனவும் தேசிய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விமான நிலையத்தின் செயல்பாடுகள் இடைநிறுத்தப்பட்டன. இம்மாதம் ஆறாம் தேதிவரை விமான நிலையம் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு சென்னை விமான நிலையம் மீண்டும் திறக்கப்படும் எனவும், பகல் வெளிச்சம் இருக்கும்வரை விமான சேவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது எனவும் ஸ்ரீவத்ஸா தெரிவித்துள்ளார்.

அங்கு நிலைமை மேம்படுவதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை 5.30 நிலவரப்படி விமான ஓடுபாதையில் இருந்த நீர் வடிந்து விட்டது என்றும், குப்பைக் கூளங்கள் அகற்றப்பட்டன எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள், இதர பணிகள் பரிசோதிக்கப்படுகின்றன எனவும் கூறியுள்ளனர்.

http://www.bbc.com/tamil/india/2015/12/151204_chennaiairport_open

  • தொடங்கியவர்

கட்டுப்பாட்டு அறைக்குள் மழை நீர்... விமான போக்குவரத்து தொடங்குவதில் சிக்கல்!

 

சென்னை: சென்னை விமான நிலைய மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறைக்குள் மழைநீர் புகுந்துள்ளதால் விமான போக்குவரத்தை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

5.jpg

தமிழகத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக சென்னை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. கனமழையால் சென்னை விமான நிலைய ஓடு பாதையிலும், மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால், விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தற்காலிகமாக அரக்கோணம் ராஜாளி விமானப்படை விமான தளத்தில் இருந்து சில விமானங்கள் இயக்கப்பட்டன.

4.jpg

மழைநீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், தற்காலிகமாக மூடப்பட்ட சென்னை விமான நிலைய சேவை இன்று முதல் தொடங்கப்படும் என விமான போக்குவரத்துதுறை அதிகாரிகள் நேற்று தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், சென்னையில் தற்போது உள்ள சூழ்நிலையில் விமான சேவையை இயக்க முடியாது என்றும், விமான நிலையத்தில் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்ட பின் விமானங்கள் இயக்கப்படும் என்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

3.jpg

விமான நிலையத்தில், மின்சார கேபிள்கள் இருந்த கட்டுப்பாட்டு அறையில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் விமான சேவை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே சென்னை விமான நிலையத்தில், கடந்த 4 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 விமானங்களும் டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இன்று அதிகாலை அனுப்பி வைக்கப்பட்டன.

http://www.vikatan.com/news/tamilnadu/55951-commercial-flights-wont-resume-at-chennai-airport.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.