Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கர்நாடக அரசின் ரூ. 5 கோடி நிதியுதவியை தமிழக அரசு மறுத்தது சரிதானா?

Featured Replies

கர்நாடக அரசின் ரூ. 5 கோடி நிதியுதவியை தமிழக அரசு மறுத்தது சரிதானா?

 

சென்னை/பெங்களூரு: ஒருபுறம் கனமழையால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 5,000 கோடி நிதியுதவி வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மறுபுறம் கர்நாடக அரசு அளிக்க முன்வந்த 5 கோடி ரூபாய் நிதியுதவியை பெற மறுத்துவிட்டதாக வெளியாகி உள்ள தகவல் பல்வேறு விமர்சனங்களை கிளப்பி உள்ளது.

relief%20material.jpg

கடந்த 10 தினங்களுக்கும் மேலாக பெய்து வந்த கனமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. சென்னையின் பல இடங்களில் மழை வெள்ளம் இன்னும் வடியாமல் பல்லாயிரக்கணக்கானோர் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பல்வேறு தன்னார்வலர்கள் மற்றும் தனிநபர்கள் அடங்கிய குழுவினர் மற்றும் அமைப்புகள் தங்களால் இயன்ற அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.  அதே சமயம் மீட்பு மற்றும் நிவாரண பொருட்களை வழங்குவதில் அரசு நிர்வாகம் போதிய முனைப்பு காட்டாமல் சுணங்கிப்போனதாக பொதுமக்களிடம் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மாநிலம் விட்டு மாநிலம் தாண்டியும்,  கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் உதவிக்கரங்கள் நீள்கின்றன. இன்னமும் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்களாகவோ அல்லது நிதியாகவோ உதவ தயாராக உள்ளபோதிலும், அதனை பெற்று ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகள் எதனையும் அரசு தரப்பில் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சினிமா நட்சத்திரங்கள், தொழில் நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட தரப்பிலிருந்து,  முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ( Chief Minister's Public Relief Fund of Tamil Nadu )  தங்களது நிதியுதவியை வழங்கி வருகின்றனர். அதனை தமிழக அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் அண்டை மாநிலமான கர்நாடக அரசு,  மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடுவதற்காக  அளிக்க முன்வந்த 5 கோடி ரூபாய் நிதியுதவியை பெற்றுக்கொள்ள தமிழக அரசு மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

 கடந்த புதன்கிழமையன்று தமிழகத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார் கர்நாடகjaya%20350%20a%281%29.jpg முதலமைச்சர் சித்தராமையா.  மேலும் கர்நாடக சுகாதாரத் துறை தமிழகத்திற்கு மருந்து பொருட்களை அனுப்ப ஆர்வமாக உள்ளதாகவும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகம் சார்பில் ஏற்கனவே ஏராளமான குடி நீர் பாட்டில்கள் அடங்கிய பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மில்க் ஃபெடரேசன் சார்பில் 3 டேங்கர் லாரிகளில் சென்னைக்கு பால் அனுப்பப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து மீள்வதற்கு தேவையான உதவிகளும், பொருட்கள் விநியோகமும் தமிழகத்திற்கு கிடைத்துக்கொண்டிருப்பதாகவும், எனவே இப்போதைக்கு உங்களது உதவி தேவை இல்லை; தேவைப்பட்டால் கேட்கிறோம் என்றும் கூறி, கர்நாடக அரசின் நிதியுதவியை ஏற்க  தமிழக அரசு உள்துறை செயலர் மறுப்பு தெரிவித்து விட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மழை வெள்ள பாதிப்பை சமாளிக்க எங்கோ இருக்கும் அமெரிக்க அரசின் உதவியைக் கூட ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்த தமிழக அரசு, அண்டை மாநிலமாக கர்நாடக அரசிடம் இருந்து உதவியை பெற்றுக்கொள்ள மறுப்பது சரிதானா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கர்நாடக அரசுடன் எவ்வித பிரச்னையும் இல்லை என தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளபோதிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு  எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது இந்த நிராகரிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளன.

சற்றுமுன் வந்த செய்தி:

தங்களது நிதியுதவியை ஏற்றுக்கொள்ள தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக கர்நாடக அரசின் தலைமைச் செயலர்  கவுசிக் முகர்ஜி சற்று முன் கர்நாடக பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/55959-tn-govt-refuses-rs-crore-assistance-karnataka.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.