Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உதயன்' பணிமனைக்குள் புகுந்துபொலிஸ் அலுவலர் மீது சூடு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதயன்' பணிமனைக்குள் புகுந்துபொலிஸ் அலுவலர் மீது சூடு!

ஆயுதபாணிகள் இருவர் நேற்றுக்காலை கைவரிசை

யாழ். நகரில் கஸ்தூரியார் வீதியில் அமைந்திருக்கும் "உதயன் சஞ்சீவி' பத்திரிகை நிறுவன வளாகத்தினுள் நேற்றுக்காலை தீடீரெனப் பிரவேசித்த ஆயுதபாணிகள் இருவர் அங்கு காவல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைச் சுட்டு விட்டுத் தப்பிச்சென்றனர்.

பத்திரிகை நிறுவனத்தில் கடமையில் இருந்த பணியாளர்கள் வேட்டுச் சத்தங்க ளால் பீதியடைந்து பாதுகாப்புத்தேடி ஓடினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட் டது.

முற்பகல் 10.50 மணியளவில், அலு வலகத்தின் நுழைவாயில் வழியாக திடீ ரெனப் பிரவேசித்த அடையாளம் தெரியாத இந்த இரு நபர்களும் அலுவலகத்தின் பாது காப்புப் பிரிவில் காவல் கடமையில் ஈடு பட்டிருந்த பொலிஸ் அலுவலர் மீது வேட் டுக்களைத் தீர்த்தனர். கை, வயிறு, நெஞ்சு ஆகிய இடங்களில் குண்டு பாய்ந்த நிலை யில் அந்தப் பொலிஸ் அலுவலர் தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழுந்து ஆயுதபாணிகள் தப்பிச்சென்ற திசையை நோக்கி வேட் டுக்களைத் தீர்த்தார். இதனால் அப்பகுதி வேட்டுச் சத்தங்களால் சிறிதுநேரம் அதிர்ந் தது.

படுகாயங்களுக்கு உள்ளான இர்ஷாட் (வயது24) என்ற அந்தப் பொலிஸ் அலு வலர் பின்னர் "உதயன்' நிறுவன வாகனத் தில் ஏற்றப்பட்டு யாழ். வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாகச் சத்திரசிகிச்சை மேற்கொள் ளப்பட்டது.

ஆயுதபாணிகள் இருவரும் கைத்துப் பாக்கிகளை வைத்திருந்தனர் என்று கூறப் படுகிறது. அவர்கள் துப்பாக்கிப் பிரயோ கம் மேற்கொண்டபோது "உதயன்' நிறுவன பாதுகாப்பு ஊழியர்கள் இருவரும் அங்கு கடமையில் இருந்தனர். எனினும் தெய்வா தீனமாக அவர்களுக்கு காயங்கள் ஏற்பட வில்லை.

இந்தச் சம்பவத்தையடுத்து "உதயன்' நிறு வனத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதி காரி ஜபார் தலைமையிலான பொலிஸ் குழு ஒன்று அங்கு வந்து விசாரணைகளை நடத்தியது.

யாழ். நகரிலுள்ள 512 ஆவது படைப் பிரிவில் இருந்து மேஜர் தர அதிகாரி ஒரு வர் தலைமையில் இராணுவத்தினரும் அங்கு வந்து தகவல்களைச் சேகரித்தனர்.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வின் யாழ். மாவட்ட அதிகாரி அப்டெல் எவ் புர்கனும் (அஞஞீஞுடூ ஊ ஆதணூடுச்ண) "உதயன்' நிறுவனத்துக்கு வந்து பிரதம ஆசிரியருட னும் நிறுவன அதிகாரிகளுடனும் உரையாடி விவரங்களைச் சேகரித்தார்.

"உதயன்' நிறுவனத்தில் இரு பணியா ளர்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்த கடந்த மே மாதம் நடத்தப்பட்ட கொடூ ரத் தாக்குதலின் பின்னர் நிறுவனத்தின் பாதுகாப்புத் தொடர்பில் தங்களது கண்காணிப்பை அதிகரித்திருந்ததாக கண் காணிப்புக் குழுவின் பிரதிநிதி அப்போது தெரிவித்தார்.

நேற்றைய சம்பவம் நடப்பதற்கு சற்று முன்பாக "உதயன்' நிறுவனப் பகுதி ஊடாக தாங்கள் தமது வாகனத்தில் கடந்து சென் றனர் என்ற தகவலையும் அப்போது அவர் வெளியிட்டார்.

"உதயன்' நிறுவனம் மீது தொடராக நடத்தப்பட்டு வரும் வன்முறைத் தாக்கு தல்களில் நேற்று நடந்திருக்கும் இந்தச் சம் பவம் தொடர்பாக நோர்வே அனுசரணையாளர்களுக்கும், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கும் தெரி யப்படுத்தப்படும் என்றும் கண்காணிப் புக் குழுப் பிரதிநிதி தெரிவித்தார்.

யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் சுப்பிரிண்டென்ட் அதிபர் எரிக் பெரேரா தலை மையில் விசேட பொலிஸ் குழு ஒன்றும் நேற்று "உதயன்' பணிமனைக்கு வந்து தாக்குதல் தொடர்பாக விசாரித்தது.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.