Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தில் தப்பாத எம்.ஜி.ஆர் இல்லம்; வேதனையில் ரசிகர்கள்

Featured Replies

வெள்ளத்தில் தப்பாத எம்.ஜி.ஆர் இல்லம்; வேதனையில் ரசிகர்கள்

 

mgr%20250%201%281%29.jpgசென்னை; முன்னாள் முதல்வர், அமரர் எம்.ஜி.ஆர் வாழ்ந்து மறைந்த வீடு வெள்ளத்தில் சிக்கி, அவர் சேகரித்து வைத்திருந்த பரிசுப் பொருட்கள் பல வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தகவல் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளும் தண்ணீரில் மூழ்கி மக்கள் தத்தளிப்பில் உள்ளனர். இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியிருக்கிறது. கனமழையால் பாதிக்காதவர் எவருமில்லை என்ற அளவில் மழையின் பாதிப்பு தமிழகத்தை ஆட்டிப் படைத்திருக்கிறது. சென்னையில் பெய்த பேய் மழை காரணமாக இன்னும் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை.

இந்நிலையில் சென்னை ராமாவரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர் இல்லமும் மழை நீரால் சூழப்பட்டது. முன்பகுதியில் எம்.ஜி.ஆரின் உறவினர்களும் பின்புறம் உள்ள கட்டிடத்தில் எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளியும் இயங்கிவருகிறது.

மழை நீர் சூழ்ந்ததால் காது கேளாத பள்ளியில் படித்து வரும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் 2–வது மாடியில் தஞ்சம் அடைந்திருந்தனர். கடந்த சில தினங்களாக தத்தளித்த அவர்களை மீனவர்கள் குழு படகுடன் சென்று மீட்டது.

இந்நிலையில் நேற்று அங்கு வெள்ளம் நீர் வடிய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீட்டில் வசித்து வந்த எம்.ஜி.ஆரின் உறவினர்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் மீண்டும் இல்லம் திரும்பினர். இதையடுத்து உடனடியாக எம்.ஜி.ஆர். இல்லத்தை சுத்தப்படுத்தும் பணியும் தொடங்கியது.

mgr%20600%2011.jpg

அப்போது தரைதளத்தில் எம்.ஜி.ஆர். தம் காலத்தில் பயன்படுத்திய கிராமபோன், பரிசுப்பொருட்கள், எம்.ஜி.ஆர். தொடர்பான ஆவணங்கள், எம்.ஜி.ஆர்.–ஜானகி அம்மாள் பயன்படுத்திய பொருட்கள் பல சேதமடைந்தும் பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துச்சென்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் வீட்டின் முன்பகுதியும் பெரும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.

mgr%20600%201.jpg

இந்த தகவல் எம்.ஜி.ஆர் அபிமானிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டம் வெள்ளத்தில் மூழ்கியது இது முதன்முறையல்ல. கடந்த 82 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அவரது தோட்டம் மூழ்கியது.

அப்போது எம்.ஜி.ஆரும் அவரது மனைவி ஜானகி அம்மையாரும் மவுண்ட்ரோட்டில் உள்ள பிரபல ஹோட்டலில் தற்காலிகமாக சிலநாட்கள் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/55986-mgr-home-affected-by-chennai-flood.art

  • தொடங்கியவர்

சென்னை வெள்ளம்:எம்.ஜி.ஆரின் பல பொருட்கள் முற்றாகச் சேதம்

 

சென்னை வெள்ளத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய பல பொருட்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன.

151213154240_mgr_house_chennai_flood_512
 ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆரின் பல நினைவு பொருட்கள் இருந்தன

கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஏற்பட்ட கடும் மழையால் அவர் வாழ்ந்த ராமவரம் தோட்டத்திலும் வெள்ளம் புகுந்ததன் காரணமாக அங்கிருந்த அவரது ஏராளமான தனிப்பட்ட உடமைகள் நாசமாயின என்று அவரது வளர்ப்பு மகள்களில் ஒருவரான சுதா விஜயன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவரது ராமவரம் தோட்ட வீட்டுக்கு சென்றிருந்த பிபிசி தமிழோசையின் செய்தியாளர், அங்கிருந்த எம்.ஜி.ஆர் சிலையின் கை துண்டாகியுள்ளதையும், அவர் பயன்படுத்திய நீச்சல் குளம், வீட்டுக்கு பின்னாலிருந்த சிறிய திரையரங்கம் ஆகியவை முற்றும் சேதமடைந்துள்ளதையும் கண்டதாகக் கூறுகிறார்.

151213153813_mgr_photo_512x288_bbc_nocre

சென்னை வெள்ளத்தில் சேதமான எம்.ஜி.ஆர்-ஜானகி அம்மாள் ஓவியம்

 

இந்த ராமாவரம் வீட்டில்தான் நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜிஆர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். அந்த அறையில் இருந்த எம்.ஜி.ஆர் பயன்படுத்திய மேசை இந்த வெள்ளத்தில் முற்றிலும் நாசமாகியுள்ளது.

வீட்டின் முகப்புக்கு அருகில் இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையின் கை துண்டாகிக் கிடப்பதையும் காண முடிகிறது. எம்.ஜி.ஆர் பயன்படுத்திய நீச்சல் குளம், வீட்டிற்குப் பின்னால் அமைக்கப்பட்டிருந்த சிறிய திரையரங்கம் ஆகியவை இந்த வெள்ளத்தில் முற்றிலும் நாசமாகிவிட்டன.

151213154446_mgr_statue_chennai_512x288_  ராமாவரம் தோட்டத்தில் சேதமடைந்த நிலையிலுள்ள எம்.ஜி.ஆர் சிலை

எனினும் இந்த வீட்டிற்குப் பின்னால் இருந்த காது கேளாதோர் பள்ளியில் தங்கியிருந்த மாணவர்கள் அனைவரும் வெள்ளம் வருவதற்கு முன்னதாகவே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுவிட்டதாகவும் சுதா விஜயன் தெரிவித்தார்

எம்.ஜி.ஆர். கலந்துகொண்ட விழாக்களின் பல வீடியோ பதிவுகளும் இந்தவெள்ளத்தில் சேதமடைந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

151213154013_chennai_flood_mgr_house_512  எம்.ஜி.ஆரின் பயன்படுத்திய ஒரு அறை முற்றாக நாசமாகியுள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா துவங்குவதால் அதற்குள் ராமாவரம் வீட்டைப் புதுப்பிக்கும் முயற்சியில் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் சுதா விஜயம் கூறுகிறார்.

எம்.ஜி.ஆரின் பல முக்கிய நினைவுப் பொருட்கள், சென்னை நகரிலுள்ள அவரது அதிகாரபூர்வமான மற்றொரு இல்லத்தில் பாதுகாப்பாக உள்ளன.

எம்.ஜி.ஆரின் மனைவியும் முன்னாள் முதலமைச்சருமான ஜானகி ராமச்சந்திரனின் சமாதி, எம்.ஜி.ஆர், அவரது தாயார் சத்யபாமா ஆகியோருக்கு நினைவு மண்டபங்கள் ஆகியவையும் இந்தத் தோட்டத்தில்தான் அமைந்திருக்கின்றன.

http://www.bbc.com/tamil/india/2015/12/151213_chennaiflood_mgrhouse

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.