Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்!

Featured Replies

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்!

 

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில்  சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் சற்று முன் ஆஜராகினர். இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

rahul%20-%20sonia%20600.jpg

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு ரூ.90 கோடி கடன் இருந்தது. இந்த தொகையை காங்கிரஸ் கட்சியின் பணத்தில் இருந்து வட்டியின்றி கொடுத்து, விதிமுறைகளை மீறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் அடைத்தனர். அதற்கு பதிலாக நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக்களை அபகரித்துள்ளனர்.

மேலும், ஹெரால்டு நிறுவனத்தின் ஒரு பகுதியை பாஸ்போர்ட் நிறுவனத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதன்மூலம் குத்தகை நிபந்தனைகளை அவர்கள் மீறியதுடன், நேஷனல் ஹெரால்டுக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அபகரிக்க திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது'' என கூறியிருந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகனும் காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல் காந்தி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அண்மையில் நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றம்,  டிசம்பர் 19-ம் தேதியன்று ( இன்று ) இருவரும் டெல்லி பாட்டியாலா விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தொடர்ந்து, இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 

raghul_vc1.jpg


இந்நிலையில் இவ்வழக்கில்  எத்தகைய அணுகுமுறையை மேற்கொள்வது என்பது குறித்த ஆலோசனைகள் காங்கிரஸ் தலைமையகத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் கோருவது என முடிவெடுக்கப்பட்டது.  அதன்படி சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் பிற்பகல் 2.45 மணி அளவில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அதனைத் தொடர்ந்து இருவர் சார்பிலும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி,  சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் தலா 50,000 ரூபாய் தனிநபர் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டதோடு, வழக்கை வருகிற பிப்ரவரி மாதம் 20 -ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக சோனியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் ஜாமீன் மனு வழங்க எதிர்ப்பு தெரிவித்த சுப்ரமணியன் சுவாமி, ஜாமீன் வழங்கினால் இருவரும் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவர் எனக் கூறினர்.

சோனியாவுடன் அவரது மகள் பிரியங்கா காந்தி மற்றும் மருமகன் ராபர்ட் வதேதரா உடன் வந்திருந்தனர்.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, சோனியா மற்றும் ராகுலுக்காக ஜாமீன் கோருவது உட்பட அனைத்து சட்ட வாய்ப்புகளையும் தயார் செய்து வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

மற்றொரு காங்கிரஸ் தலைவரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பா.ஜனதா சில்லறைத்தனமான அரசியலில் ஈடுபடுவதாகவும், நீதித்துறை மீது தாங்கள் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே சோனியா, ராகுல் ஆகியோர் நீதிமன்ற வருகையையொட்டி, விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 700 பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இப்பிரச்னையில் சோனியா மற்றும் ராகுலுக்கு கட்சியின் வலுவான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் நீதிமன்றம் வந்தனர்.

http://www.vikatan.com/news/india/56561-sonia-gandhi-rahul-gandhi-granted-bail.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.