Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டி20 உலகக் கோப்பையில் இந்த 4 சவால்களை இந்தியா முறியடிக்குமா?

Featured Replies

டி20 உலகக் கோப்பையில் இந்த 4 சவால்களை இந்தியா முறியடிக்குமா?

 

ந்தாண்டுகளுக்கு பிறகு  மீண்டும் உலகக்கோப்பை ஜூரம் களைகட்ட தொடங்கியிருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பையை பொறுத்தவரையில், அத்தொடரை நடத்தும் நாடு உலகக் கோப்பையை வென்றதில்லை  என்ற சென்டிமென்ட்டை உடைத்து, தோனி தலைமையில் 2011-ல் இந்திய அணி உலகக் கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இருபது ஓவர் போட்டிகளை பொறுத்தவரையிலும், இதுவரை உலகக்கோப்பையை நடத்திய நாடு, சொந்த மண்ணில் சாம்பியன் ஆனது கிடையாது. இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், இதுவரை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம் ஆகிய ஐந்து நாடுகளில் உலகக் கோப்பை நடந்திருக்கிறது, இதில் இலங்கை தவிர மற்ற அணிகள், சொந்த மண்ணில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறவில்லை. இப்படிப்பட்ட மோசமான சென்டிமென்டில்தான் இந்தியா,  மார்ச் மாதம் உலகக்கோப்பை விளையாடவுள்ளது.
 
இந்த உலகக்கோப்பையில்  வலுவான டி-20 அணியை தயார் செய்ய வேண்டும் என்பதில் பி.சி.சி  முனைப்பு காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாகதான், 2011 உலகக் கோப்பையை போல சீனியர், ஜூனியர் வீரர்கள் கலந்த அணியை உருவாக்கும் முன்னோட்டமாக, ஆஸ்திரேலிய தொடரில் யுவராஜ், ஹர்பஜன், நெஹ்ரா ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கவுள்ள இந்திய  டி-20 அணி  மற்ற நாட்டின் அணிகளை காட்டிலும் மிகவும் வலிமையானது. இந்திய மண்ணில் நெஹ்ரா, தவான், ஹர்பஜன், அஷ்வின்  ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடுவார்கள் என்பதால்,  இந்த  முறை உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு மிக அதிகம். அதே சமயம் தொடரை நடத்திய நாடு கோப்பையை வென்றதில்லை என்ற சென்டிமென்ட்டையும் தாண்டி, இந்தியாவுக்கு சில சவால்கள்  இருக்கிறது.

அது என்ன ?

slideimage1.jpg?t=1450706527&v=13

கம்பீரமான கங்காரு அணி!

ஆஸ்திரேலிய அணியில் வார்னர், வாட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மேக்ஸ்வெல் என டி-20 ஸ்பேஷலிஸ்டுகள் வரிசை கட்டி நிற்கின்றார்கள். இந்த ஐவரும் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில்  ஐந்து நட்சத்திர குறியீடு கொண்ட ஸ்டார் ப்ளேயர்ஸ். இந்திய மண்ணில் இருக்கும் மைதானங்களில் டி-20 எப்படி விளையாட வேண்டும் என்பதில்  அனுபவ அறிவால் தேர்ந்தவர்கள். இந்தியா- ஆஸ்திரேலிய போட்டி மொஹாலியில் மார்ச் 27 ஆம் தேதி நடக்கவுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பில் விளையாடிய மேக்ஸ்வெல், ஜார்ஜ் பெய்லிக்கு  மொகாலி ஆடுகளம் கைகொடுக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசியாக நடந்த ஐந்து உலககோப்பையில் நான்கு முறை கோப்பையை கைப்பற்றி "சாம்பியன்" அணியாக கம்பீர நடை போடும் ஆஸ்திரேலியா,  இதுவரை டி-20 உலககோப்பையை ஒருமுறை கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

slideimage2.jpg?t=1450706528&v=13

மோக்கா! மோக்கா! பாகிஸ்தான்!

இதுவரை நடந்துள்ள ஐந்து உலககோப்பையில் நான்கு முறை தொடர்ந்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் இரண்டு தான். அதில் ஒன்று இலங்கை மற்றொரு அணி பாகிஸ்தான். பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய பலமே அதன் பவுலிங் தான். டி-20 போட்டியில் முதலில் களமிறங்கி,  பாகிஸ்தான் அணிக்கு எதிராக 160 ரன்களுக்கு மேல் குவித்து விட்டால் இந்தியாவுக்கு வெற்றி எளிதாகிவிடும். பாகிஸ்தான் அணி இருபது ஓவர் கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும், இந்தியாவை தவிர. ஏனெனில், இதுவரை இந்தியாவும் - பாகிஸ்தானும்  ஆறு முறை டி-20 போட்டிகளில் மோதினாலும், ஒரே ஒரு முறை மட்டுமே பாகிஸ்தான் வெற்றியை சுவைத்திருக்கிறது. உலககோப்பை போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான "கன்னி" வெற்றி இன்னும் கனவாகவே இருக்கிறது. இம்முறை நிச்சயம் வெற்றி  பெறுவோம் என சூளுரைத்திருக்கிறார் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி.
உலககோப்பைக்கு முன்னர் ஐ.பி.எல் போலவே  பி.எஸ்.எல் என்ற புதிய டி-20 தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடவுள்ளனர். இத்தொடரின் மூலமாக பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் பார்முக்கு திரும்பி உலககோப்பையில் சொல்லி அடிக்க வாய்ப்பிருக்கிறது.

slideimage3.jpg?t=1450706528&v=13
 

கிலி தரும் கிவி!

ஆச்சர்யம்! இந்தியா இதுவரை ஒரு முறை கூட நியூசிலாந்து அணியை டி-20 போட்டியில் தோற்கடித்ததே இல்லை. எப்போதும்  நியூசிலாந்துக்கே ஜெயம். இந்த புள்ளிவிவரம் ஒரு பக்கம் பயமுறுத்துவது இருக்கட்டும், நியூசிலாந்து டி-20 அணியும் தற்போது வலுவாக இருக்கிறது. பிரண்டன் மெக்கல்லம், கேன் வில்லியம்சன், ராஸ் டைலர்,  டிரெண்ட் போல்ட் என அபாயகரமான் வீரர்கள் அந்த அணி பக்கம் இருக்கிறார்கள். உலககோப்பையில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான மோதல் தான் முதல் போட்டி என்பதால் மூன்றரை மணிநேரமும் அனல் தெறிக்கும் விருந்து காத்திருக்கிறது.

slideimage4.jpg?t=1450706528&v=13

 
அஜின்க்யா ரஹானே, ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ்சிங் , கேப்டன் தோனி, அஷ்வின், ஜடேஜா, ஹர்பஜன், முகமது  ஷமி, ஆஷிஷ் நெஹ்ரா, புவனேஸ்வர் குமார் முதலான வீரர்கள் உலககோப்பை அணியில் இடம்பெற வாய்ப்பு உண்டு. இவர்கள் அனைவருமே டி-20 ஸ்பெஷலிஸ்ட் தான். புள்ளிவிவரங்கள், சாதனைகள், சென்டிமென்ட்கள் எல்லாம் தாண்டி இந்தியாவின் பலம் அணி வீரர்களும், கேப்டன் தோனியுமே.கடந்த ஆண்டு ரன்னர் அப்பாக இருந்த இந்திய அணி அடுத்த ஆண்டு வின்னராகும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

பிரிவு "பி" போலவே பிரிவு "ஏ" போட்டிகளிலும் அதிரடி களைகட்டும். அந்த பிரிவில் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இதில் தென்னாபிரிக்க அணியை தவிர மற்ற மூன்று அணிகளுமே உலககோப்பையை  வென்ற அணிகள். தென்னாப்பிரிக்கா  சமீபத்தில் தான் இந்திய மண்ணிலேயே, இந்திய அணியை டி-20 போட்டிகளில் கபளீகரம் செய்தது. தவிர டிவில்லியர்ஸ், மில்லர், டுமினி, டுபிலசிஸ், டி- காக் என நட்சத்திர பட்டாளம் அணி வகுக்கிறது. இந்த ஆண்டு ஒருதின போட்டியில் கடைசி நேர டென்ஷனில் கோட்டை விட்டதை டி-20 போட்டிகளில் சரிகட்ட முயலும் தென்னாப்பிரிக்கா. ஆக , உலகக் கோப்பை  கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.