Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

18 வடசெலவு (உத்தராயணம்) திருப்பமும் தைப்புத்தாண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் – 2015

18-ஆம் பதிவு

23.12.2015

    

                பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி, ஆங்கில ஆண்டு 2015-க்கு இணையான தமிழ் ஆண்டு கடந்த 14.12.2015 அன்றுடன் சரியாக 356 நாட்களில் முடிந்து விட்டது. அன்றுடன் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015 கலைக்கப்பட்டு விட்டது. அந்த நாள்வரையில் தமிழ்ப் புத்தாண்டு மீட்பு முயற்சியில் ஈடுபட்டு எதிரும் புதிருமான பார்வையில் பல புதிய புரிதல்களை ஏற்படுத்திய அனைவருக்கும் நன்றி.

     14.12.2015 மாலையில் வெளியிடப்படவிருந்த 18-ஆம் பதிவு அன்று வெளியிடப்படவில்லை. 15.12.2015-ல் வீட்டுப் பொங்கல் இடுவதில் உறுப்பினர்கள் அனைவரும் முனைப்புடன் ஈடுபட்டிருந்தபடியால் கலந்து பேசி முடிவு செய்ய ஒருவருக்கும் நேரம் இல்லை. அந்தப் பதிவு இன்று வெளி வருகிறது. இதுவரை வெளிவந்துள்ள 17 பதிவுகளின் பட்டியலில் இந்தப் 18-ஆம் பதிவையும் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். 1 முதல் 18 வரையிலான இப்பதிவுகள் அச்சு வடிவம் பெற்று அடுத்த ஆண்டில் திறனாய்வுக்கு உட்படுத்தப்படும். அடுத்த ஆண்டில் மரபு வழித் தமிழ் தேசியத் தக்கார் அவையம்-2016 புதிய உறுப்பினர்களுடன் பொலிவு பெற்று நாள் வரிசை மாறாமல் பல விளக்கச் செய்திகளை அறிவுலகில் எடுத்து வைக்கும்.

கதிரவனின் தென்செலவுத் திருப்பம்:-

     நிழலைத் தெளிவாகப் பார்த்தும், வெயில் முகத்தைக் கண்ணைச் சுருக்கி பார்த்தும் கதிரவன் வடக்கு நோக்கித் திரும்பி விட்டான் என்று எவரும் எளிதாகச் சொல்லிவிட இன்று இயலும். ஆனால் 14.12.2015 அன்று நண்பகல் வரையில் தான் கதிரவனின் தென்செலவு தெற்கு நோக்கிச் சீராகச் சென்றது என்று கூற, மரபறிவும் வல்லுநர் அறிவும் தேவைப்பட்டது.

     15.12.2015-ல் தான் மழை நீங்கி வெயில் தெரியத் தொடங்கியது. இன்று வரையில் ஆன கணிப்பில் திருப்பம் உறுதி செய்யப் படுகிறது.

சுவற்றில் அடித்த பந்து:-

     கதிரவனின் வடசெலவு, தென்செலவு என்பது சுவற்றில் அடித்த பந்து போலத் திரும்பி விட வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பும் ஆகும். வடக்கிலிருந்து தெற்கு நோக்கி விலகும் போது எந்தச் சிக்கலும் இல்லாமல் அது நிகழ்கிறது. அதிலும் கடந்த ஆண்டு ஒரு நாள் பின்னடைவு இருந்தது.

ஆனால்  தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பும் போது சிக்கல் ஏற்பட்டுப் பலநாள் போராட்டம் நடக்கிறது. அதன் விளைவு தான் ஆண்டு நாட்களில் ஏற்படும் குறைபாடு. அவ்வாறு இந்த ஆண்டும் சிக்கல் ஏற்பட்டது. சிக்கலில் இருந்து விடுபட்டு வடசெலவு மீண்டு விட்டது.

இது பற்றிய நுட்பங்களை அடுத்த ஆண்டில் புரியும் படி எடுத்துச் சொல்ல, ஆண்டு முழுவதும் நிழலைத் தொடரும் வல்லுநர்களை மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2016 கட்டமைக்கும்.

கடந்த ஆண்டு நடத்திய தேடலில் சில வல்லுநர்கள் அரிதாகக் கிடைத்துள்ளனர். தக்கார் சிலரும் தென்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் இன்னார் என்பதையும் அவர்கள் வசப்படுத்தியுள்ள அறிவுத்துறைகள் இன்னது என்பதையும் உரிய முறையில் அடுத்த ஆண்டில் வெளியிடும் திட்டம் உள்ளது.

அழகு, அருமை, ஏர்:-

      சுவற்றில் அடித்த பந்தைப் போல தெற்கில் இருந்தும் வடசெலவு மீண்டு விட்டால் அது அனைவருக்கும் மகிழ்ச்சி தரக் கூடியது தான். அதைத்தான் அழகு, அருமை, ஏர், திரு என்றெல்லாம் பழந்தமிழ் வியக்கிறது. அது எப்போது வாய்க்கும் எனில் 360 நாட்களில் ஆண்டு அமையும் போது வாய்க்கும் என்று நம்பலாம்.

என்றூழ்:-

     ஊழி என்ற சொல் கருக்கு வீச்சுப் போலவும் கள்ளியின் கிளை போலவும் உழவு மாட்டின் கொம்பு போலவும் தன் போக்கில் செல்லக் கூடியது. அது தடுமாறும் போது அன்றூழ் எனவும், அதுவும் யன்றூழ் ஆகி என்றூழ் எனவும் திரிந்திருக்கலாம். ‘சுடர் வழக்கற்றுத் தடுமாறு காலை’ என்றும் ‘தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்’ என்றும் மணிமேகலை குறிப்பிடும் செய்திகளின்படி தமிழ்த் தேசிய அரசுதான் அதன் மீது  அக்கறை எடுக்கும் என்ற வரலாற்று உண்மையை நன்கு விளங்கி கொள்ள வேண்டும்.

பஞ்சாங்க உத்தராயணம்:-

     15.01.2016 அன்று உத்தராயண புண்ணிய காலம் என்றும் அன்றுதான் தை முதல் நாள் என்றும், அன்றுதான் கதிரவன் மகர இராசிக்குள் நுழைகிறான் என்றும் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்.

     வானத்தை நிமிர்ந்து பார்த்து மாற்றங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் தமிழர்கள் மாற்றுப் பார்வையை முன்னெடுக்கிறார்கள். அவ்வளவே.

இனிய தமிழ்ப் புத்தாண்டு:-

     ‘ஓர் யாட்டுக்கு ஒருகால் வரவு’ என்ற புதிய செய்தியை அரிதாக ஒரு வல்லுநர் கடந்த ஆண்டில் பதிவு செய்துள்ளார். ஒரு புரிதல் என்பது பல ஆயிரம் ஆண்டுகட்கு ஒரு முறைதான் வரும். அப்போது அதனைத் தவற விட்டு விடக் கூடாது.

     பழந்தமிழின் ஊடாக ஏற்படும் தமிழ்ப் புத்தாண்டுப் புரிதல் என்பது தமிழ்த் தேசியக் கருத்தியலின் கடைகால் ஆகும்.

வருக நீ யாண்டும்:-

     எம் தமிழ் மொழி பேணி வருக நீ யாண்டும்! என்று பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் எழுதியுள்ளார். ஆனால் அவர் காலத்தில் தமிழ்ப் புத்தாண்டு பற்றிய புரிதல் கூர்மையடையவில்லை. இன்று அவர் நம்முடன் உடலால் இல்லை. ஆனால் வலிமையான நினைவு அலைகளைக் கிளப்பிக் கொண்டு கடுவிசை அவுணரில் அவுணராகித் தமிழின் உயிர்ப்பாற்றலாக விளங்கிக் கொண்டிருக்கிறார். பாவலர் ஏறு அவர்களின் வாழ்வும், தொண்டும், செய்தியும் அரிய வகை அளவு கோலாகச் செங்குத்தாகக் காலத்தால் ஊன்றி நிற்கிறது. அதனை எட்டித் தொடுவோரும், தாண்டுவோரும் ஐயா அவர்களைத் தகுந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டுப் புரிதலுக்குப் பங்களிப்புச் செய்திட வேண்டும். அதுவே 2016 ஆம் ஆண்டின் எதிர்பார்ப்பு.

அடுத்த முழுநிலவு:-

     ஆங்கில ஆண்டு 2016-க்கு இணையான தமிழ் ஆண்டின் முதல் முழுநிலவு நாளை வரும் 26.12.2015 அன்று மாலையில் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். அது இவ்வாண்டின் 12 வது நாள். தைப்பூச முழுநிலவு. ஆனால் எது நிகழ்ந்தாலும் உள்ளது உள்ளபடியே பதிவு செய்வோம்.

     ஆண்டுக்கு ஒரு முறை அறுமீன் அருகில் முழுநிலவு நள்ளிரவில் பொருந்திச்செல்லும் காலம் தான் முழுவெற்றி பெற்ற காலம் ஆகும். ஆயினும் அறுமீனுக்கு அருகில் இந்த முழுநிலவு நெருங்கித் தோன்றுவதும் சிலநாள் இடைவெளி இருப்பதும் வெறுங்கண்ணால் பார்க்கக் கிடைக்கிறது.

     பழந்தமிழ்ச் சான்றுகளை ஒப்பிட்டுப் பார்த்து நூல் மரபுகளைப் புதுப்பித்து வல்லுநர்களை வகைப்படுத்தும் முயற்சியில் தமிழ் இனம் தன்னைப் புத்தாண்டு மீட்பில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

 

இது மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-2015 இன் வெளியீடு

 

.....>>>ooo000ooo<<<....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.