Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் இருவர் வீரமரணம்

Featured Replies

பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் இருவர் வீரமரணம்

 
பஞ்சாபின் பதன்கோட் விமானப்படை தளத்தில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்: ஏஎன்ஐ.
பஞ்சாபின் பதன்கோட் விமானப்படை தளத்தில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். | படம்: ஏஎன்ஐ.

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் இருவர் வீரமரணம் அடைந்தனர்.

பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் முழுவீச்சில் தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதலில் இறங்கினர்.

இது குறித்து பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்குப் பிரிவு போலீஸார் எச்.எஸ். ஹில்டன் கூறும்போது, "இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தீவிரவாதிகள் அதிக அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களை தங்கள் வசம் வைத்திருந்தனர். விமானப் படைத்தளத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதி வழியாக அவர்கள் இங்கு ஊடுருவினர்" என்றார்.

இந்தக் கடும் சண்டையின் முடிவில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்கே பாக்‌ஷி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் மற்றும் 6 வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விமானப் படைத்தளத்தை குறிவைத்தது யார்?

விமானப் படைதளத்தை குறிவைத்தவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மாநிலமான ஹரியாணாவிலும் இரண்டுக்கும் பொதுவான தலைநகராக திகழும் சண்டிகரிலும் பலத்த தீவிர சோதனை நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமானப் படைத்தளம் சுற்றிலும் ரோந்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தளத்தின் தொழில்நுட்ப மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கடந்த 6 மாதத்தில் நடந்துள்ள இரண்டாவது மோசமான தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த ஜூலை 27-ம் தேதி பஞ்சாப்பின் குருதாஸ்பூரின் தினான்நகரில் 3 தீவிரவாதிகள் ராணுவ உடையில் நுழைந்து தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

என்ன சொல்கிறார் ராஜ்நாத்?

இதனிடையே, தீவிரவாதத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, "பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக அங்கிருந்து வரும் அனைத்து தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்காமல் இருக்க மாட்டோம். நம் படையினர் மிகச் சிறப்பாக பதில் தாக்குதல் நடத்தினர்" என்றார்.

மோடியின் பாக். பயணத்துக்கான பதில்: ஒமர் அப்துல்லா

இந்தத் தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முத்ல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். தீவிரவாதிகள் விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மட்டுமே ஊடுருவி இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான 'திடீர்' பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில்தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவால்தான் இந்தத் தாக்குதல்.

தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றோடு ஒன்றாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். தாக்குதல்களுக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/article8057734.ece?homepage=true
 
  • தொடங்கியவர்

பதன்கோட் தாக்குதல் முடிவுக்கு வந்தது; 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

 

ஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் தீவிரவாதிகளுக்கும்,  எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்குமிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து. இருதரப்புக்குமிடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. இந்த சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

pathancot%20600%20a.jpg

இன்று அதிகாலை 3.30 மணியளவில் பதன்கோட் விமானப் படைத்தளத்தின் பின்புறமாக சில தீவிரவாதிகள் ஊடுருவினர். ராணுவ வீரர்கள் உடையில் இருந்த அவர்களுக்கும்,  பாதுகாப்பு படையினருக்கும் கடும் சண்டை நடந்தது.  தீவிரவாதிகளிடம் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்களும் வைத்திருந்துள்ளனர்.

ஆனால் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் முதலில் 4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது பாதுகாப்பு படையை சேர்ந்த 3 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இத்துடன் தீவிரவாதிகளுடனான சண்டை முடிவுக்கு வந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மொத்தம் எத்தனை தீவிரவாதிகள் ஊடுருவினார்கள் என்பது சரிவர தெரியவில்லை என்பதால், பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெய்ஷ் இ முகமது

இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டது  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று  தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பேட்டியில், " பஞ்சாபில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததால் விமானப்படை தளத்திற்கு நிகழவிருந்த மாபெரும் அழிவு தடுக்கப்பட்டுள்ளது. இன்னும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனரா? என்பதை கண்டுபிடிக்க ராணுவம் மற்றும் விமானப்படை தீவிரமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெயிஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பு உள்ளதை மறுக்க முடியாது. இந்திய மண்ணில் தீவிரவாதிகளின் இதுபோன்ற தாக்குதல்களுக்கு இடம் கொடுக்க முடியாது. தீவிரவாதிகளுக்கு இந்திய பாதுகாப்பு படை தக்க பதிலடியை கொடுத்தே தீரும். இந்த தாக்குதலுக்கு தகுந்த பதிலடியை வழங்கிய பாதுகாப்பு படை வீரர்கள், துணை ராணுவப்படை வீரர்கள், பஞ்சாப் போலீஸ் ஆகியோரால் இந்தியா மிகுந்த பெருமை கொள்கிறது" என தெரிவித்தார்.

 

pathankot%20attack%20600.jpg

 

கால் டாக்ஸியில்  வந்த தீவிரவாதிகள்

இதனிடையே தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி மூலம் கால் டாக்சி வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பதன்கோட்டில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நேற்று டோயோடா இன்னோவா காரில் வந்துள்ளனர். அந்த கார் ஓட்டுநருக்கு பாகிஸ்தானில் இருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்து கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

அந்த கால் டாக்ஸி ஓட்டுநரிடம், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஓட்டுநர், பாகிஸ்தானில் இருந்து வரும் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்து வருகிறாரா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரா அல்லது அந்த எண் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறது என்பது தெரியாதவரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பஞ்சாப்பில் பலத்த பாதுகாப்பு

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மாநிலமான ஹரியானாவிலும்,  சண்டிகரிலும் பலத்த தீவிர சோதனை நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமானப் படைத்தளம் சுற்றிலும் ரோந்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தளத்தின் தொழில்நுட்ப மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

pathan%20600%282%29.jpg

பாகிஸ்தான் கண்டனம்

இந்த தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பதன்கோட் விமானப் படைத் தளத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் கண்டனத்துக்குரியது. விலைமதிப்பில்லா வீரர்களின் உயிர்கள் பலியாகியுள்ளது.

இந்திய அரசுக்கும், மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தாருக்கும் எங்களது இரங்கலை தெரிவிக்கிறோம். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமர் அப்துல்லா ட்வீட்
 
இந்தத் தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் , "எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். தீவிரவாதிகள் விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மட்டுமே ஊடுருவி இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான 'திடீர்' பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில்தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவால்தான் இந்தத் தாக்குதல்.

தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றோடு ஒன்றாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். தாக்குதல்களுக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.vikatan.com/news/india/57098-terror-attack-at-air-force-base-in-punjabs-pathan.art

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.