Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முன்னிலை பெறும்: கருத்துக் கணிப்பு!

Featured Replies

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முன்னிலை பெறும்: கருத்துக் கணிப்பு!

 

மிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்திலில் தி.மு.க முன்னிலை பெறும் என லயோலா கல்லுாரியின் முன்னாள் மாணவர்களின் “பண்பாடு மக்கள் தொடர்பகம்” வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

layola%20600.jpg

பண்பாடு மக்கள் தொடர்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் சி.திருநாவுக்கரசு சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்துகணிப்புகளை வெளியிட்டார். அப்பொழுது அவர் “ தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் கிராமம், நகரம் என களப்பணியில் ஈடுபட்டு, மொத்தம் 5176 பேரிடம் இந்த கருத்துகணிப்பு நடத்தபட்டது.

அதில், 'தமிழகத்தில் பிரச்னைகளை தீர்க்கும் திறமையான கட்சியாக எந்த கட்சி வரும் தேர்தலில் ஆட்சிக்கு வரவேண்டும்?' என்ற மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,  தி.மு.க-விற்கு 33.9% மக்களும்,  அ.தி.மு.க விற்கு 31.5% மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ம.தி.மு.க விற்கு 8.%, தே.மு.தி.கவிற்கு 14.4% மக்களும், பா.ம.கவிற்கு 9.9% சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதே போல் கடந்த நான்கு ஆண்டுகளில் அ.தி.மு. க அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்த கேள்விக்கு “நன்று என 32.5% மக்களும், சொல்வதற்கு ஏதும் இல்லை என 25.8% மக்களும், மோசம் என 39.3% மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். நான்கு ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சி மோசம் என்றே பெரும்பாலான மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் அ.தி.மு.க - தி.மு.கவிற்கு மாற்றாக பிற கட்சிகளுக்கு ஆட்சியமைக்கும் திறமை கிடையாது என்று பெரும்பாலனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

11%281%29.jpg

அதேபோல் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களில் 15%  பேர் தி.மு.க, அ.தி.மு.க தவிர்த்து தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் ஆகிய 3 மதத்தினரிடமும் தி.மு.கதான் செல்வாக்குடன் திகழ்வதாக கருத்துகணிப்பில் தெரியவந்துள்ளது.

வரும் தேர்தலில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக தகுதி, திறமைகள் உடையவர்கள் யார்? என்ற பட்டியலில் முதல் இடத்தில் கருணாநிதியும், இரண்டாவது இடத்தில் ஜெயலலிதாவும், உள்ளனர். ஸ்டாலின், விஜயகாந்த், ராமதாஸ், வைகோ, அன்புமணி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளார்கள்.

யாருக்கு உங்கள் வாக்கு? என்ற கேள்விக்கு தி.மு.க விற்கு 35.6% பேரும், அ.தி.மு.க விற்கு 33.1% பேரும், தே.மு.தி.க விற்கு 6% பேரும், ம.தி.மு.க விற்கு 3.9% , பா.ம.க 3.9%, பா.ஜ.க 3.8%, காங்கிரஸ் 2.% பேரும் கருத்துகணிப்பில் ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/57171-dmk-will-lead-in-2016-assembly-polls-opinion-poll.art

  • தொடங்கியவர்

நான் அவனில்லை; அறிவாலயத்தை அலற வைத்த கருத்துக்கணிப்பு

 

karunanithi%20250.jpgரும் 2016- சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு தி.மு.க.வுக்கே என்றொரு தகவல் கருத்துக் கணிப்பு மூலம் தெரிவதாக வந்த தகவலால், பிற கட்சிகளை விட ஒரு படிமேலாக தி.மு.க. தலைமையே அதிக டென்ஷனுக்கு ஆளாகியிருக்கிறது என்கிறார்கள். சந்தோஷப்படவேண்டிய விஷயத்துக்கு ஏன் டென்ஷனாகிறார்கள் என்ற கேள்வியுடன் அறிவாலயத்தை வலம் வந்தோம்.

எந்த கல்லூரியும் இதுவரை  செய்ய முன்வராத 'கருத்துக் கணிப்பு' பணியை லயோலா கல்லூரி மட்டுமே செய்து வந்தது.  பல விஷயங்களை கருத்துக் கணிப்புக்காக லயோலா கையில் எடுத்தாலும், தேர்தல் கருத்துக் கணிப்பே பெரிய அளவில் பேசப்பட்டது. பிறவற்றிலான கருத்துக் கணிப்பு பிற்காலங்களில் விமர்சனத்துக்கு ஆளாகாமல் போனாலும் தேர்தல் கணிப்பு மட்டும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது, கணிப்பு பொய்த்த போதெல்லாம்.

பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மாணவர் குழுக்களே அப்போதெல்லாம், இந்தக் கருத்துக் கணிப்பில் ஈடுபட்டு வந்தன. இப்போது மீண்டும் சிக்கலில் லயோலா தலையை சிலர் உருட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். 'நாங்கள் செய்யாத ஒரு வேலையை யாரோ செய்து விட்டு, நாங்கள் கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக கதை கட்டியிருக்கிறார்கள்' என்றெல்லாம், ஒரிஜினல் கருத்துக் கணிப்புக்குழு தரப்பில் புலம்பல் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

இப்போது வெளியாகியுள்ள புதிய கருத்துக் கணிப்பு, முன்னாள் மாணவர்கள் குழு 'பண்பாட்டு மக்கள் தொடர்பகம்' என்ற பெயரில் வெளியிடப் பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும், 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் சுழன்று, 5176 பேரிடம் தாங்கள் கருத்துக் கணிப்பு நடத்தியதாக சொல்கிறது இந்த குழு.

கருத்துக் கணிப்பின் முடிவாக, 35.6% தி.மு.க.வுக்கும், 33.1% அ.தி.மு.க.வுக்கும் மக்கள் (செல்)வாக்கு இருப்பதாக சொல்லியுள்ளது. அதே கருத்துக் கணிப்பு முதல்வராகும் வாய்ப்பில் முதலிடம் கருணாநிதி, இரண்டாமிடம் ஸ்டாலின், மூன்றாமிடம் ஜெயலலிதா என்றும் சொல்லியிருக்கிறது.

stalin%20vote%20600.jpg

இந்தக் கருத்துக் கணிப்பு ஓப்பன் பிரஸ்மீட் வரை போய் விட்டதோடு, இதை கணித்தவர்கள் லயோலாவின் முன்னாள் மாணவர்கள் என்றும் தகவல் ஓட, வழக்கமாக கணிப்பை வெளியிடும், 'ரிசர்ச் அசோசியேட் பீப்புள் பவுண்டேசன்' சார்பில், கார்த்திக் என்பவர் மீடியாக்களுக்கு ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், "நாங்கள் அவர்களில்லை, இந்தக் கருத்துக் கணிப்பை செய்தது நாங்களல்ல" என்றிருக்கிறார்.

முதலில் வந்த கருத்துக் கணிப்பை விட, அந்தக் கணிப்பே தவறு அதைச் செய்தது நாங்களல்ல, என்ற இரண்டாவது தகவலே 'அறிவாலயம்' ஏரியாவை சூடாக்கி விட்டிருக்கிறதாம்.

சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்ட திமுக தலைமை, “இரண்டுவாரம் கூட ஆகலை, இப்படித்தான் ஒரு சூட்டை ஃபேஸ்-புக்கில் போட்டு விட்டுட்டீங்க... இப்போது மீண்டும் அதே மாதிரி ஒரு சூட்டை கிளப்பி இருக்கீங்க. உதவி செய்யலைன்னாக் கூட பரவாயில்லை ஃபாதர், சும்மா இருந்தா போதும்... நீங்க கட்சிக் காரர்னு எல்லோருக்குமே தெரியும். புரியுதா, புரியுதா என்று பலமுறை கோபமாகச் சொல்லி லைனை துண்டித்துவிட்டு சைலண்ட் ஆகி விட்டாராம் தலைவர்.

http://www.vikatan.com/news/tamilnadu/57197-dmk-cheif-got-anrgy-due-to-the-survey-contest-by.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.