Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நம்பிக்கைதானே வாழ்க்கை... விஜயகாந்த் வருவார்!' - வைகோ

Featured Replies

'நம்பிக்கைதானே வாழ்க்கை... விஜயகாந்த் வருவார்!' - வைகோ

 

VAIKO%20250%201.jpgதிருப்பூர்: "மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த், வாசன் ஆகியோரை அழைத்திருக்கிறோம்.  அவர்கள் வருவார்கள் என நம்புகிறோம். அரசியலில் நம்பிக்கைதானே வாழ்க்கை" என திருப்பூரில் வைகோ தெரிவித்தார்.

கொங்கு மண்டல ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் திருப்பூரில் இன்று நடந்தது. கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழகம் முழுவதும் இளம் பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்துத்தரப்பு மக்களிடமும் பேரழுச்சி ஏற்பட்டு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிற இயக்கமாய் மக்கள் நலக்கூட்டணி முன்னேறிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இரண்டு காரணங்களுக்காக மக்கள் மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். முதலாவது, தமிழக அரசுத்துறையில் மலிந்துகிடக்கும் ஊழல்கள். இரண்டாவது கோடிக்கணக்கான தாய்மார்களை வேதனையில் ஆழ்த்தியுள்ள மது. இதற்காகவே, இந்த ஆட்சியை வேரோடு அகற்ற மக்கள் தீர்மானித்திருக்கிறார்கள்.
 
2011ல் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் எந்த மனநிலையில் இருந்தார்களோ அந்த வெறுப்பு தி.மு.க.வின் மீது இன்று வரை நீங்கவில்லை. அதிமுக, திமுக என மாறி மாறி வாக்களித்த மக்கள் முதல்முறையாக மாற்றத்தை எதிர்ப்பார்க்கிறார்கள். எந்த கட்சியையும் சாராத 65 சதவிதமான மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த உணர்வை புரிந்து கொண்டு நாங்கள் செயல்படுகிறோம். மத்தியில் ஆட்சியில் உள்ள இந்துத்துவா சக்தியான பாஜக எப்படி சகிப்பின்மையோடு செயல்படுகிறதோ, ஜெயலலிதாவும் சகிப்புத்தன்மையற்றவராக இருக்கிறார். அதன்காரணமாக பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு தொடுக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிப்பிரச்னையில், மூத்த நீதிபதிகளைக்கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும். கிரானைட் ஊழல் தொடர்பாக சகாயம் அறிக்கையின் மீது நடவடிக்கை இல்லை. இதில் அதிமுக, திமுக  இரண்டும் வாய் திறக்காமல் உள்ளன. ஆகவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் மீத்தேன் திட்டம் கொண்டுவந்தபோது, துணைமுதல்வராக இருந்த ஸ்டாலின் ஆதரித்தார். ஆனால், இன்றைக்கு ஏதோ அரசியலுக்கு புதிதாக வந்ததுபோல், நல்லாட்சி தருவோம் என்று நாடகம் ஆடுகிறார். ஏன் கையெழுத்து போட்டேன் என்று ஸ்டாலின் சொல்ல முடியுமா? 

vaiko-%20vijayakanth%20plane.jpg

காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது திமுகதான். இதையெல்லாம் புரிந்து கொண்டு குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்கி மக்கள் நலக்கூட்டணி செயல்படுகிறது. முதலில் அணி சேர மாட்டார்கள் என்றார்கள். பின்னர் அணி தேர்தல் வரை நீடிக்காது என்றார்கள். இப்போது வாக்குகளை பெறமாட்டார்கள் என்கிறார்கள். மக்கள் நலக்கூட்டணி வாக்குகளை பெறும். 2016 தேர்தலில் வென்று மக்கள் நலக் கூட்டணியே ஆட்சியமைக்கும்.

மக்கள் நலக்கூட்டணி திறந்தவெளி மாநாடு வரும் ஜனவரி 26- ம் தேதி, மதுரையில் நடக்கிறது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் தேசிய செயலாளர் டி.ராஜா,  மதிமுக சார்பில் நான், சிபிஎம் சார்பில் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ சார்பில் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருமாவளவளவன் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.

மக்கள் நலக்கூட்டணிக்குள் விஜயகாந்த், வாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியலில் நம்பிக்கைதானே எல்லாமே. அவர்கள் கூட்டணிக்குள் வருவார்கள் என்கிற நம்புகிறோம். கூட்டணிக்கு வர வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருக்கிறோம். முடிவெடுக்க வேண்டியது அவர்கள்தான்" என்றார்.

http://www.vikatan.com/news/politics/57243-vaiko-hopes-vijayakanth-join-makkal-nala-kootani.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.