Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்!

Featured Replies

திரண்ட அரசியல்வாதிகள்: அறைக்குள் வைத்து பூட்டப்பட்ட ஆயிரம் ரன்கள் அடித்த வீரர்!

 

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக ஆயிரம் ரன்களை அடித்து மும்பையை சேர்ந்த பள்ளி மாணவர் பிரணவ் தாணவாடே சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் உலக ஜாம்பவான் சச்சின் முதல் சாதாரண கிரிக்கெட் ரசிகர் வரை இன்று பிரணவ் பற்றிதான் பேச்சு. பிரணவ் படைத்த இந்த சாதனை பற்றி சில சுவாரஸ்யங்கள் இங்கே...

runs%20.jpg

கிரிக்கெட் உலகில் ஒரே இன்னிங்சில் 4 இலக்க ரன்களை எட்டிய முதல் வீரர் பிரணவ்.

ஆயிரம் ரன்களை அடித்த தகவல் மும்பையில் பரவியதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் போட்டி நடந்த மைதானத்திற்கு சென்றுள்ளனர். பல அரசியல்வாதிகள் கையில் பூங்கொத்துடன் மைதானத்தில் திரண்டனர். பொதுமக்களும் பரிசுளை வழங்கி பாராட்டினர்.

பிரணவின் ஆயிரம் ரன்களில் 59 சிக்சர்களும் அடங்கும். மைதானம் அருகில் இருந்த பல கட்டிடங்களில்  ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி போனவாம்.

pra.jpg

பிரணவுக்கு பிடித்த வீரர் சச்சின். ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், விராட் கோலி ஆகியோரும் ரோல் மாடல்கள். பிரணவும் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்தான்.
 

 

Congrats #PranavDhanawade on being the first ever to score 1000 runs in an innings. Well done and work hard. You need to scale new peaks!


ஆயிரம் ரன்களை அடிப்பதற்குள் பிரணவ் 9 முறை அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். இதில் 7 கேட்சுகளும் 2 ஸ்டம்பிங்களும் அடக்கம்.

இந்த போட்டியில் 15 வயது பிரணவ், ஆயிரம் ரன்களை அடிக்க பயன்படுத்திய பேட் ஒரு கிலோ 300 கிராம் எடை கொண்டது.

இந்த போட்டியின் போது 300 ரன்களை கடந்த பின் ஒரு முறை தனது பேட்டை மாற்றிக் கொண்டார் பிரணவ்.

Eingebetteter Bild-Link


இவரை எதிர்த்து பந்து வீசிய ஆர்ய குருகுல பள்ளியின் பந்துவீச்சாளர்கள் சர்த் சலுங்கே 20 ஓவர்களில் 284 ரன்களையும் பிரதிக் படேகர் 18 ஓவர்களில் 241 ரன்களையும் ஆயுஸ் டுயூபே 23 ஓவர்களில் 350 ரன்களையும் ஹர்சால் ஜாதவ் 18 ஓவர்களில் 281 ரன்களையும் விட்டுக் கொடுத்தனர். இதில் ஆயூஸ் டுயூபேவின் நிலைதான் ரொம்ப பரிதாபம்.

 

ஆயிரம் ரன்கள் அடித்தவுடன் பிரணவ் தாணவாடே  தனியாக ஒரு அறைக்குள் வைத்து பூட்டப்பட்டார். அந்த அறையை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பிரணவ் ஓய்வு எடுக்கட்டும் என்ற முடிவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் இது.

pti1.jpg


மும்பை கல்யாண் பகுதியை சேர்ந்த பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர். பிரணவ், ஆயிரம் ரன்கள் அடித்ததும் கல்யாண் பகுதியை சேர்ந்த ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் ஆட்டோவுடன் போட்டி நடந்த மைதானத்திற்கு வந்து விட்டனராம்.

தொடர்ந்து பிரணவின் தந்தையின் ஆட்டோ டிரெஸ்சிங் அறைக்கு கொண்டு வரப்பட்டது. வாழ்த்து கோஷங்கள் முழங்க அதில் ஏறி கல்யாணை நோக்கி புறப்பட்டார் பிரணவ். கிட்டத்தட்ட போட்டி நடந்த மைதானத்தில் இருந்து கல்யாண் வரை ஆட்டோ ஊர்வலம்தான்.

pra%20nav.jpg

''யாரை பார்த்தாலும் எப்படிப்பா இப்படி அடிச்சானு கேள்வி கேட்காங்க. எனக்கு பைத்தியமே பிடிச்சுரும் போலனு'' இப்போது பிரணவ் சொல்கிறார்

உங்களுக்கு பந்து வீசுனவங்களுக்குதான் இப்போ பைத்தியம் பிடிச்சிருக்கனும்னு  நமக்கு  சொல்லத் தோனுது!

http://www.vikatan.com/news/sports/57257-1000-runs-pranav-bats-his-way-into-record-book.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.