Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலை வாயை மூடினாலும்....!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலை வாயை மூடினாலும்....!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத் தும்போது, பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படமாட் டாது. இவ்வாறு உறுதி அளித்திருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை ஒன்றில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீதிச் சேவை அதிகாரிகள் சங்கத்தினரும் பிரதம நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தினரும் ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர். அப்போதே இந்த உறுதிமொழி தரப்பட்டிருக்கிறது.

இம்மாத முற்பகுதியில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதச் சட்டத்திற்கெனத் துணைவிதிகள் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டன. அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அவர் திருவாய் மலர்ந்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமானாலும் சரி, அதற்குக் கொண்டுவரப்படும் துணை விதிகளானாலும் சரி, அவை மனித உரிமைகளை மீறுவதற்கு மறைமுகமாக உதவுபவை என்ற கருத்தே பொதுவாக மக்கள் மத்தியில் நிலவுகிறது. அதனால் பாதிப்புறாத ஒரு சில வீதத்தினரை விட.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை அதன் விதிமுறைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரமும் பொறுப்பும் முப்படையினருக்கும் பொலீஸாருக்குமே வழங்கப்படுகிறது. எனவே அவற்றைச் செயற்படுத்தும்போது மனித உரிமைகளை மனதிற்கொண்டு அவற்றைப் பேணியவாறே அவர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று இலங்கையில் எதிர்பார்ப்பது எட் டாப் பழத்துக்கு கொட்டாவி விட்ட கதைதான்!

சாதாரண சிவில் சட்டங்களுடன் தொடர்புடைய அலுவல்களை அல்லது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதே, பொலீஸாரும் படையினரும் எவ்வாறு தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு முரணாகவும் அவற்றை மீறியும் செயற்படுகிறார்கள் என்பது சாதாரண பிரஜைகளுக்கும் தெரியும். அவர்களில் ஒவ்வொருவரையும் கேட்டால் அல்லது உத்தியோகப்பற்றற்ற முறையில் விசாரித்தால் கதை கதையாகச் சொல்லுவார்கள்! இது இந்நாட்டு அரசியல்வாதிகளுக்கு ஒன்றும் தெரியாதது அல்ல. மூடிமறைக்கக் கூடியதும் அல்ல.

இலங்கைப் பொலீஸார் மற்றும் படையினரின் அதிகார துஷ்பிரயோகத்தின் லட்சணத்தில், பயங்காரவாதத் தடைச் சட்ட விதிகள் நடைமுறை செய்யப்படும்போது பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படமாட்டாது என்று ஜனாதிபதி என்ன, கடவுளே நேரில் வந்து உறுதிமொழி வழங்கினாலும் இந்நாட்டு மக்கள் நம்பப்போவதில்லை. மிகக் குறிப்பாகத் தமிழ்மக்கள் இத்தகைய உறுதிமொழிகளைக் காதில் போட்டுக்கொள்ளவே மாட்டார்கள்.

அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பயங்கரவாதத் தடைச் சட்டம் எத்தகைய கொடிய பற்களைக் கொண்டிருக்கிறது. அது மக்களின் மனித உரிமைகளை மட்டுமன்றி மனிதனாக வாழும் உரிமைகளையும் பறிப்பதற்கு அரச அதிகாரிகளுக்கு வசதி செய்து வழங்குகிறது என்று நீண்ட நெடுங்காலமாக கடந்த முப்பது வருடங்களாக அனுபவித்ததில் கண்டவர்கள் தமிழ்மக்கள். சிங்கள மக்களுக்கு இந்த அனுபவம் ஒப்பீட்டளவில் மிகச் சிறிது; எள்ளளவு என்றே கூறலாம்.

எழுபதுகளின் பிற்பகுதியில் நவாலியைச் சேர்ந்த இன்பம், செல்வம் ஆகியோரில் தொடங்கி, செம்மணியில் கிருஷாந்தி என்று உயர்ந்துகொண்டே சென்று, இன்று அளவிட்டுக் கூறமுடியாத கொலைகள் உட்பட மனித உரிமை மீறல்கள் தமிழ்ப்பிரதேசங்களில் வரம்பு மீறிய அளவுக்கு வழிந்தோடுகின்றன.

இத்தகைய பின்னணியில், பயங்கவரவாதத் தடைச் சட் டத்தை மேலும் பலமாக்கி, வலுப்படுத்தி, ஒன்றுக்குப் பல தடவைகள் தீட்டி தீட்டிக் கூராக்கிய பின்னர், அது மனித உரிமைகளை மீறாத வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறுவது மக்களை அதனால் பாதிப்புற்றவர்களான தமிழர்களை முட்டாள்களாக்க முனையும் அபத்தம் நிறைந்த ஒன்றாகும்.

ஆனாலும் பயங்கரவாதச் சட்டத் துணைவிதிகளை அவசர அவசரமாக அமுலுக்குக் கொண்டு வந்திருக்கும் ஜனாதிபதிக்கோ துணை விதிகள் மனித உரிமைகளை மீறாத விதத்தில் நடை முறைப்படுத்தப்படும் என்று உறுதியளிக்கவேண்டிய தேவை உண்டு!

ஏனெனில்

ஐ.நா. மனித உரிமை சாசனத்துக்கும் ஏனைய சர்வதேச விதிகள் மற்றும் ஒழுங்குகளுக்கும் முரணாக மனித உரிமைகள் மீறப்படும் நாடுகளில் இலங்கை உலகத்திலேயே முன்னணி வகிக்கிறது. அந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் ஒன்றை இலங்கை வெகு "சுலபமாகப்" பிடித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆகப்பிந்திய அறிக்கையில் இலங்கையில் மனித உரிமைகள் மிகப் பாரதூரமாக மீறப்படுவது குறித்தே முக்கியத்துவமும் முதன்மைத்துவமும் கொடுத்து விவரிக்கப்பட்டிருக்கிறது.

  • வடக்கு கிழக்கில் வாழும் மக்களுக்கு போதுமான அளவில் உணவுப் பொருள்கள் கிடைக்காமை.
  • இந்த ஆண்டில் மட்டும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இரண்டு லட் சத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளார்கள்.
  • அரசியல் படுகொலைகள் மற்றும் ஆள்கடத்தல் சம்பவங்கள் மிக அதிக அளவில் இடம்பெற்றுவருகின்றன. அவற்றைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு இலங்கையில் என்னென்ன விதங்களில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்பதை மிக நீண்ட பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறது சர்வதேச மன்னிப்புச் சபை.

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதை சர்வதேசமும், மனித உரிமை அமைப்புக்களும் விழிகளை அகலத் திறந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன.

கடந்த நவம்பர் 27ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகப் பிரேரணைகளைக் கொண்டுவர இருந்த ஐரோப்பிய ஒன்றியத்திடம், கால அவ காசம் கேட்டு அரசு, தப்பிக்கொண்டது குறித்து முன்னர் இப்பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இத்தகைய சூழ்நிலையில் மனித உரிமைகள் மீறப்படமாட் டாது என்று அடிக்கடி கூறிக்கொண்டிருக்கவேண்டிய தேவை ஒன்று மஹிந்த அரசுக்கு உண்டு.

உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட இயலாது என்பது சந்திரிகா விடயத்தில் உண்மையாகி இருப்பது ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. முந்திய காலங்களைப் போன்று, சர்வதேசத்திடம் இருந்து எதனையும் மூடிமறைக்க முடியாது என்பதனையும் கால அவகாசம் வழங்க இயலாது என்பதனையும் இலங்கை அரசும் அதன் ஆட்சியாளர்களும் உணர்ந்து தங்களைத் திருத்திக் கொள்வது எப்போது?

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.