Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை இலங்கை வருகிறது உலகக் கிண்ணம்

Featured Replies

நாளை இலங்கை வருகிறது உலகக் கிண்ணம்

k2j9d.jpg

 

6 ஆவது இருபதுக்கு20 உலகக்கிண்ணம் இந்தியாவில் எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை 16 நாடுகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரின் உத்தியோகபூர்வ கிண்ணம் இலங்கை வரவுள்ளது.

உலகம் முழுவதும் வலம் வரும் இக்கிண்ணம், நாளை முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை இலங்கையில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக் கிண்ணமானது மக்கள் பார்வைக்காக எதிர்வரும் 17ஆம் திகதி காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2014 இல் பங்களாதேஷில் இடம்பெற்ற 5 ஆவது தொடரின் கிண்ணத்தை இலங்கை அணி தனதாக்கிக் கொண்டது.

இருபதுக்கு20 கிண்ணத்திற்கான தொடர் 2007 ஆம் முதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/2048

  • தொடங்கியவர்

12484666_1752215314809668_64766670492064

12487033_1752215444809655_35962668226778

 

  • தொடங்கியவர்
இலங்கையில் உலக இருபது 20 கிண்ணம் 'இன்று தற்காலிகம், ஏப்ரலில் நிரந்தரமாகும்' - திலங்க சும­தி­பால
2016-01-18 10:36:03

(நெவில் அன்­தனி)

 

சர்­வ­தேச கிரிக்கெட்  பேர­வை­யினால் இலங்­கையில் காட்­சிப்­ப­டுத்­தும் பொ­ருட்டு மூன்று தினங்­க­ளுக்கு தற்­கா­லி­க­மாக கொண்­டு­வந்து காட்­சிப்ப­டுத்­தப்­படும் ஐ.சி.சி. உலக இரு­பது 20 கிண்­ணத்தை, நடப்பு சம்­பியன் என்ற வகையில் இலங்கை அடுத்த ஏப்­ரலில் நிரந்­த­ர­மாக்­கிக்­கொள்ளும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர், பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார்.

 

14271_D4W3725x.jpg

 

 

நிசன் ரி 20 கிண்ணம் கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மும்­பை­யி­லி­ருந்து புறப்­பட்டு எட்டு நாடு­க­ளுக்கு கொண்டு செல்­லப்­பட்டு காட்­சிக்கு வைக்­கப்­பட்ட பின்னர் பங்­க­ளா­தே­ஷி­லி­ருந்து இலங்­கைக்கு கொண்டு வரப்­பட்டு கொழும்பு குதி­ரைப்­பந்­தயத் திடலில் காட்­சிக்கு வைக்­கப்­பட்­டது.

 

இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய திலங்க சும­தி­பால, ‘‘உலக இரு­பது 20 கிரிக்கெட் போட்­டி­களின் ஐந்து அத்­தி­யா­யங்கள் முடி­வ­டைந்­துள்­ளன. 

 

இதில் மூன்று இறுதி ஆட்­டங்­களில் இலங்கை விளை­யா­டி­யுள்­ளமை நம் நாட்­டிற்கு பெருமை தரு­கின்­றது. நடப்பு சம்­பியன் என்ற வகையில் இந்தக் கிண்­ணத்தை தக்­க­வைத்­துக் ­கொள்ளும் சவால் இலங்கை வீரர்கள் முன்னே இருக்­கின்­றது. இதனை வென்­றெ­டுப்­ப­தற்கு ஓரணி என்ற உணர்­வுடன் விளை­யாட வேண்டும். 

 

ஒரு­முறை கிண்­ணத்தை வென்­றெடுத்த வீரர்கள் முன்னே இன்னும் ஒரு வாய்ப்பு நிற்­கின்­றது. இந்தக் கிண்­ணத்தை வீரர்கள் மீண்டும் இலங்­கைக்கு கொண்டு வர­வேண்டும்’’ என்றார்.

 

இந்த நிகழ்வில் பேசிய விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, ‘‘கிரிக்கெட் விளை­யாட்­டின்­ மூ­லமே இலங்கை என்ற நாடு உல­கத்தில் பிர­சித்­தி­பெறத் தொடங்­கி­யது. உலகக் கிண்­ணத்தை (1996) வென்­று­கொ­டுத்த வீரர்­க­ளுக்கு எமது கௌர­வத்தை சமர்ப்­பிக்­கின்றோம்.

 

இப்­போது உலக ரி 20 நடப்பு சம்­பியன் என்ற வகையில் இலங்­கைக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உரு­வா­கி­யுள்­ளது.

 

14272_D4W3746x.jpg

 

இந்தக் கிண்­ணத்தை தக்­க­வைத்­துக்­கொள்ள வீரர்கள் முயற்­சிக்கும் அதே­வேளை இலங்கை பிர­ஜைகள் அனை­வரும் அவர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி, தைரி­ய­மூட்டி வெற்­றி­பெறச் செய்து தேசத்­திற்கு புக­ழீட்­டிக்­கொ­டுக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

 

இது இவ்­வா­றி­ருக்க, சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யுடன் கைகோர்த்­துள்­ள­தை­யிட்டு பெரு­மிதம் அடை­வ­தாக ஏ எம் டபிள்யூ நிறு­வ­னத்தின் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் சமன்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார்.

 

அடுத்த எட்டு வரு­டங்­க­ளுக்கு ஐ. சி. சி.யுடன் இணைந்து பிர­தான கிரிக்கெட் போட்­டி­க­ளுக்கு நிசன் அனு­ச­ரணை வழங்கும் என அவர் குறிப்­பிட்டார்.

 

இந்த வைப­வத்­தின்­போது ஐ.சி.சி. பிர­தி­நிதி ரேமண்ட் பாமர், உலக ரி 20 கிண்­ணத்தை விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­விடம் கைய­ளித்தார்.

 

14272catpion.jpg

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) உலக இரு­பது 20 கிண்ணம் இலங்­கையில் காட்சிப் படுத்­தப்­ப­டு­வ­தற்­காக கடந்த சனிக்­கி­ழமை சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை பிர­தி­நிதி ரேமண்ட் பாமரால் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்தக் கிண்ணம் கொழும்பு குதிரைப் பந்­தயத்திடலில் கண்­ணாடி பேழையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது. விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, ஐ.சி.சி. பிர­தி­நிதி ரேமண்ட் பாமர், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பால, இலங்கை இரு­பது 20 அணித்­த­லைவர் லசித் மாலிங்க, தினேஷ் சந்­திமால், ஏஞ்­சலோ மெத்யூஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.      

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14272#sthash.KxMfVuC8.dpuf

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.