Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வை இராஜதந்திர ரீதியில் நகரும் போது பேரவை என்ற நச்சுமரம் முளைத்திருக்கிறது- ஜனா கண்டனம்.

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வை நோக்கி இராஜதந்திர ரீதியில் நகரும் போது எமது மக்களை பிளவு படுத்துவதற்காக தமிழ் மக்கள் பேரவை என்ற நச்சுமரம் முளைத்திருக்கிறது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் ( ஜனா ) தெரிவித்தார்.

திம்புப் பேச்சுவார்த்தை முதல் ரணில் காலத்தில் இருந்து சமாதான உடன்படிக்கை வரை கடந்த காலங்களிலே எங்களது பிரச்சினைகள் பூகம்பமாக வெடித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் பல தவறுகளை விட்டிருக்கிறோம். எங்களுக்கு ஏற்படவிருந்த சந்தர்ப்பங்களை அரசியல் ரீதியாகத் தவறவிட்டிருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர் நல்லையாவின் நினைவாக வெளியிடப்பட்ட வாழும் மனிதம் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அமரர் நல்லையா அவர்கள் எமது பிரதேசத்திற்கு, தனது பெயர் பதிக்கப்படாமலே ஆற்றிய சேவைகளை இங்கு குறிப்பிடும் போது உங்கள் முன் அரசியல்வாதியாக இருக்கும் நான் கூச்சப்படுகிறேன். இந்நாள் அரசியவ்வாதிகள் பற்றி வெட்கப்படுகிறேன். கூச்சப்படுகிறேன். அமரர் நல்லையா அவர்கள், 56ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்து அளப்பரிய சேவைகளை ஆற்றியிருந்தார். 56ஆம் ஆண்டிலே தோர்க்கடிக்கப்பட்டார்.

ஆனால் மக்களுக்காக சேவை செய்கின்ற அரசியல்வாதிகள் எமது பிரதேசத்திலே மக்களால் தோர்க்கடிக்கப்படுவது வளமையான விடயம் தான். பகட்டு அரசியல்வாதிகள், அறிக்கை அரசியல்லாதிகள் தற்போது வெற்றி ஈட்டும் கற்காலத்தில் நாங்கள் இருக்கிறோம். நல்லையா மாஸ்ரர் 56ஆம் ஆண்டு அவரது சேவையை நிறைவு செய்த வேளைதான் இந்த நாட்டிலே இன்றுவரை நடந்து கொண்டிருக்கும் துன்பச் செயல்கள் ஆரம்பித்திருந்தது. அந்த நிகழ்வுகளில் தான் பங்கெடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக இறைவன் அவர் செய்த சேவைகளுக்காக இறைவன் அவரை ஓய்வு பெறவைத்தானோ தெரியாது.

இருந்தும் அவரது நினைவை இன்றும் எம்மக்கள் பெறவேண்டும் அவரது சேவைகளை என்றும் நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அவரது வாரிசு திருமதி நளினி காசிநாதர் அவர்கள் எமது பிரதேச வறிய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை செய்து கொண்டிருப்பதையிட்டு நாறங்கள் சந்தோசப்படுகிறோம். இதே நிலையில் அரசியல்வாதிகளின் வாரிசுகளும் செய்திருந்தால் செய்தால் எமது பிரதேசத்தில் வறிய மாணவர்கள் இருக்கமாட்டார்கள். அந்த வகையில் அம்மணியை நாம் இதனை பாராட்டித்தான் ஆகவேண்டும்.

எமது நாட்டில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று பாருங்கள். பாராளுமன்றம் அரசியல் சபையாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த நாட்டில் கடந்த காலத்தில் இருந்த ஜனாதிபதிகளின் அதிகாரங்கள் ஒழிக்கப்பட இருக்கின்றது. ஒரு புதிய முறைத் தேர்தல் வரவிருக்கிறது. அது மட்டுமல்லாது அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கி நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

கடந்த காலங்களிலே எங்களது பிரச்சினைகள் பூகம்பமாக வெடித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் தவறுகளை விட்டிருக்கிறோம். எங்களுக்கு ஏற்படவிருந்த சந்தர்ப்பங்களை அரசியல் ரீதியாகத் தவறவிட்டிருக்கிறோம்.

திம்புப் பேச்சுவார்த்தை முறிவடைந்தது, இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்தது. நாங்கள் ஏற்றுக்கொள்ளாது விட்டோம், சந்திரிகா அம்மையாருடன் ஏற்பட்ட உடன்படிக்கை, ரணில் காலத்தில் இருந்து சமாதான உடன்படிக்கை, இவை அனைத்தையும் எமது மக்களும் அரசியல் தலைமைகளும் நிராகரித்தன. நிராகரிப்பதற்கான காரணங்கள் சில இருந்தன. எமக்குப்பின்னால் ஒன்று இல்லாவிட்டால் இன்னும் ஒன்று என்ற நிலைமை இருந்தது. அவற்றினை நிராகரித்தால் கடும் போக்கால் எமது தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நிலைமை இருந்த, ஆனால் ஒன்றை உணரவேண்டும்.

இத்தனைக்கும் பிறகு. போராட்டக்காலமாக இருந்தாலும் சரி, மிதவாத காலமாக இருந்தாலும் சரி. 76ல் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகும் போது தமிழரசுக்கட்சி , தொண்டமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜீ;ஜீ;பொன்னம்பலத்தின் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஒன்றிணைந்து உருவானது மக்களின் விடிவுக்காக. அதன் பின்னர் போராட்ட இயக்கங்கள் உருவாகி ஈஎன்.எல்.எவ் ஜ தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ விடுதலைப்புலிகள், ஈ.பி.ஆர்.எல்.எவ். ஈரோஸ் சேர்ந்து உருவாக்கின.

அதற்குப்பின்பாடு இந்த நாட்டில் எமது பிரதேசத்தில் நடந்த சகோதர யுத்தங்கள் அனைத்தையும் நாங்கள் அறிவோம். இருந்தும் அதற்கும் மேலாக 2001ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலகளின் அனுசரணையுடன் அனைத்துப் போராட்ட இயக்கங்களையும் மிதவாதக் கட்சியான தமிழரசுக்கட்சியையும் சேர்த்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று எமது பிரதேசத்தில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு ஒரு அரசியல் தீர்வை இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் பெற்றுக் கொள்ள முனைந்து கொண்டிருக்கும் நேரத்தில் எமது மக்கள் மத்தியில் ஒரு பிழவு படும் மனப்பான்மை உருவாகியிருக்கின்றது. ஒரு பேரவை உருவாகியிருக்கின்றது.

அதற்குப் பின்னால் ஒரு சில அரசியல் வாதிகள் நகரத் தொடங்கியிருக்கிறார்கள். ஒன்றை மட்டும் கூறுகின்றேன். அமரர் நல்லையா இருந்த காலத்தில் அரசியல்வாதிகள் அபிவிருத்தியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்தார்கள். அதற்குப்பிற்பட்ட காலத்தில் அரசியல் ரீதியாகப் போராடவேண்டி அபிவிருத்தியைச் செய்ய வேண்டிய காலகட்டத்தில் அரசியல்வாதிகள் இருந்தார்கள். சில காலகடகட்டத்தில் அபிவிருத்தியே செய்யமுடியாது போராடவேண்டிய காலகட்டத்தில் இருந்தார்கள். நான் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்.

எமது தமிழ் மக்களின் நிம்மதிக்காக எதிர்கால சுபீட்சத்துக்காக எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் பிரிவினை எம்மக்கள்மத்தியல் கூடாது. கழிந்த ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியதற்கு அமைவாக எமது மக்களுக்கான நிரந்தரத்தீர்வு உருவாகவேண்டும். அதன் பின்னர் ஒரு நல்லையா மாஸ்ரர் அல்ல 100 நல்லையா மாஸ்ரர்கள் அபிவிருத்தி ஒன்றையே செய்யவேண்டும் அவ்வாறானதொரு காலம் உருவாக வேண்டும்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

 

????????????????????????????????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.